ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
விவசாயம்,அபிவிருத்திக்கு இலங்கைக்கு உதவ தயார் - உலக வங்கி தெரிவிப்பு வீரகேசரி இணையம் 5/28/2008 11:37:12 PM - விவசாயம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்காக இலங்கைக்கு உதவ உலக வங்கி தயாராக உள்ளது. அணைக்கட்டுகளை பாதுகாத்தல் மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் நாக்கோ இஷி தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாக்கோ இஷி மேலும் கூறியதாவது: 350 நடுத்தர மற்றும் பாரிய அணைகளிலேயே இலங்கையின் விவசாயம் தங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
வவுனியா செல்வநகரில் குடும்பப்பெண் சுட்டுக்கொலை வவனியா மன்னார; வீதி செக்கடிபிலவு பகுதியில் உள்ள செல்வநகர; குடியேற்றத்திட்டத்தில் ரதியக்கா என்றழைக்கப்படும் பாஸ்கரன் மேரி ஜோசப்பின் (52) இனந்தெரியாதவர;களினால் நேற்று இரவு 7.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர் கணவன் கொல்லப்பட்ட 20 நாட்களின் பின்னர; இவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர;. இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகள், இவரை அழைத்து வீட்டிற்கு வெளியே வைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவரின் கணவன் சின்னத்தம்பி பாஸ்கரன் கடந்த 8 ஆம் திகதி பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் வந்தவர;களினால் சுட்டுக்கொல்லப்பட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
'மஹிந்த சிந்தனை' ஆட்சியில் தகிக்கின்றது இலங்கைத் தீவு 29.05.2008 "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதையாக' இருக்கிறது ஜே.வி.பி. இப்போது மேற்கொள்ளும் பிரசாரமும் சூளுரையும். தற்போது ஆட்சியிலிருக்கும் அரசை வீழ்த்தி விரைவில் நாட்டுக்குப் பொருத்தமான மக்களின் விருப்பை நிறைவேற்றக்கூடிய அரசை ஆட்சியில் அமர்த்துவோம் என்றும் அது பிரதிக்ஞை செய்திருக்கின்றது. கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதன் ஐந்தாவது தேசிய மாநாட்டிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா இவ்வாறு சபதம் செய்திருக்கின்றார். நல்லது. இன்று தான் சூளுரைக்கும் விவகாரத்தைத் தன்னால் செய்யக்கூடியதாக இருந்தபோது, "மஹிந்த சிந்தனை'யைத் தூக்கிப்பிடித்து, அந்த வாய்ப்பைக் கோட்டை விட்ட ஜே.வி.பி., இப…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வு ஒளித்தொகுப்பு
-
- 1 reply
- 2.2k views
-
-
முல்லைத்தீவு கிளிநொச்சி,மன்னார் ஆகிய பகுதிகளில் விமானத்தாக்குதல் முல்லைத்தீவும்,கிளிநொச்சி,மன னார் பகுதிகளில் இன்று காலை Mi-24 ஹெலிகப்டர்கள் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை 6.15 மணியளவில் முல்லைத்தீவு முல்லியவெலி பகுதியில் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இவ் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாககவும் மற்றும் காலை 5.45 மணியளவில் மன்னார் புளியங்குளம் பகுதியிலும், காலை 6.10 மணியளவில் கிளிநொச்சி கோகாவில் பகுதியிலும் நடத்தப்பட்டதாக விமானப்படைப்பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார். -வீரகேசரி
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை உட்பட பல நாடுகளில் நடைபெற்று வரும் போரில் மக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தனது கவலையை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 685 views
-
-
யாழ். உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் காரணமாக அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை அங்கு மீளக்குடியமர்த்துவது தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்வதற்கு உரிய உயர் குழுவை உடனடியாக அமைத்து, அது குறித்து அடுத்த வாரத்துக்குள் மன்றுக்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்பட்டமையை ஆட்சேபித்து மாவை சேனாதிராஜா எம்.பியும் மற்றும் யாழ். வலிகாமம் வாசிகள் சிலரும் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஷிராணி திலகவர்த்தனா, கே.ஸ்ரீ பவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு விடுக்கப்பட்டது. ஏற்கனவே இந்த விடயத்தைக் கையாள்வதற்காக பாதுகாப…
-
- 0 replies
- 812 views
-
-
மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ள நாடுகளில் இலங்கையயும் அடங்குவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 609 views
-
-
ஆயுதங்களை இலங்கை வாங்கிக்குவிக்க இந்தியா ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் திடுக்கிடும் தகவல் "இராணுவத் தளபாடங்களை வாங்குவதற்காக இலங்கைக்கு இந்திய அரசு நூறு கோடி டொலர் (இலங்கைப்பணத்தில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா) நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிதியின் மூலம் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளது.'' இவ்வாறு பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் குற்றம்சாட்டியிருக்கின்றார
-
- 0 replies
- 1.5k views
-
-
27.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்.
-
- 0 replies
- 1.9k views
-
-
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் முனைப்புகளை தீவிரப்படுத்தலாம் என லண்டனில் உள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு யுத்தக்களத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிநோக்கி படையினர் தாக்குதலை மேற்கொண்டாலும் விடுதலைப்புலிகளால் நாடுமுழுவதும் தாக்குதல் நடத்தும் வல்லமை உள்ளதாகவும் அந்த மையத்தின் புலனாய்வுதுறை ஆய்வாளரான ஜோன் டிரக் தெரிவித்துள்ளார். http://www.swissmurasam.info
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரது தலைமையிலான கையாலாகாத அமைச்சர்களும் தேசத்துரோகிகள் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 826 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, சனத் பாலசூரிய, போத்தல ஜெயந்த ஆகிய ஊடகவியலாளர்களை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணிப்புரியும் இவர்கள் இருவரையும், நிறுவனத்தின் பணிப்பாளர் ஊடாக கடந்த திங்கட் கிழமை அழைத்துள்ளார். பேச்சுவார்த்தை என தாம் அழைக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு செயலாளர் கட்டளையிடுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தது என தொழில்சார் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊடக நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, அரச படையினருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் விமர்ச்சிக்க வேண்டாம் எனவும் இராணுவத்தை நேசிக்கும் மக்கள் நாட்டில் இருப்பதாகவும் அவர்களினால் இந்த ஊடகவியலாளர்களுக்கு …
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். நகருக்கு அண்மையில் உள்ள நாவாந்துறையில் ஊடகவியலாளர் ஒருவரும் கணினி தொழில்நுட்பப் பணியாளர் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 873 views
-
-
கிழக்கில் இனக்கலவரத்திற்கு காரணமான சக்திகளை விரைவில் அம்பலப்படுத்தப்போவதாக சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 746 views
-
-
யாழ். நகரப் பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 823 views
-
-
யாழ். மாவட்டம் மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 946 views
-
-
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்காணிப்பு பொறிமுறை ஒன்று இலங்கையில் அவசியம் நிறுவப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரெரா வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 633 views
-
-
கிழக்கில் தற்போது நிலவிவரும் பதட்ட நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சியொன்றும் சதித் திட்டம் தீட்டிவருவதாக தேசிய பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புலனாய்வுத் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் இன்று (மே28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கிழக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, மக்களுக்கு ஜனநாயக ரீதியான வெற்றியை???? பெற்றுக் கொடுத்துள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த நிலைமை…
-
- 2 replies
- 889 views
-
-
கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாம் 26ம் திகதி வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 475 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் அமைச்சர்களான த.மு. தஸாநாயக்க மற்றும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதலின் காரணமாக 24 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 629 views
-
-
புலனாய்வுத் தகவல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் பகிர்ந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் இலங்கை கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் வசந்த கருணாகொட, மோசமான ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயணப் பொருள்களை திறந்த கடல்மார்க்கமாக தேவையான துறைமுகத்துக்கு அவர்கள் எடுத்துச்சென்று தாக்குதல்களை நடத்தும் சக்தியைக் கொண்டிருப்பதாகக் கூறினார். தென்மேற்கு அரேபியாவின் துறைமுக நகரமான அடனில் கோல் கப்பல், ஜோர்தானில் அமெரிக்காவின் போர்க்கப்பல் மற்றும் பிரான்சின் லிம்பேர்க் கப்பல் தாக்கப்பட்டவற்றை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும் என அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் தாக்குதல்களைப் போலவே இந்தத் தாக்குதல்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்…
-
- 0 replies
- 939 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் சின்ன ஊரணியில் இன்று அதிகாலை 2 தமிழ் மீனவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 703 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் கடந்த மூன்று நாட்களாக நடைமுறையில் இருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதையடுத்து அங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் வசந்த பெரேராவிற்கு 15,000 ரூபாவை அபராதப் பணமாக வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு கொழும்பு நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 610 views
-
-
கொழும்பு தெஹிவலையில் தொடருந்து வண்டியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ளது. எனினும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா
-
- 61 replies
- 7.3k views
-