Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி நாளேடு - கிழக்கு மாகாணத்தினை மீட்ட எமது படையினர் வடக்கினையும் மீட்கும் திட்டத்தினை வேகப்படுத்தியுள்ளனர். வடக்கினை மீட்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்த தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புத்திசாதுரியத்துடன் மக்கள் நடந்து கொள்வதன் மூலமே இத்தகைய சதித் திட்டங்களை முறியடிக்க முடியும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.எரி பொருள் விலையேற்றத்தை முதன்மைப்படுத்தி நாட்டில் குழப்பகரமான சூழலை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயல்கின்றன. உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் பல டொலர்களால் அதிகரித்தாலும் வடக்கினை மீட்பதற்கான நடவடிக்கை கைவிடப்படமாட்டா…

    • 2 replies
    • 1.6k views
  2. சம்பூர் அனல்மின் திட்டத்தின் பின்னணியில் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களும் இந்தியாவின் இராஜதந்திரமும்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:41 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான சம்பூரில் இந்தியா உதவியுடன் சிறிலங்கா அரசாங்கமானது அனல் மின் திட்டத்தை அமைப்பதன் பின்னணி குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. "லக்பிம" ஏட்டில் வெளியாகியுள்ள அக்கட்டுரையின் தமிழ் வடிவம்: சம்பூர் அனல் மின் திட்டம் உத்தேசிக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பாரியளவிலான பொதும…

    • 4 replies
    • 1.2k views
  3. பேரெழுச்சியுடன் நடைபெற்ற புலிகளின் குரலின் அக்கராயன் கோட்ட முத்தமிழ் கலையரங்க நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 07:21 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அக்கராயன் கோட்ட முத்தமிழ் கலையரங்க நிகழ்வு நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை 7:30 மணியளவில் தொடங்கியது. நிகழ்வின் தொடக்கத்தில் அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்களின் தமிழ் இன்னியத்தினால் அனைவரும் நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பொதுச்சுடரினை அக்கராயன் கோட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கானகன் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஆகியோர் ஏற்றினர். - மாவீரர் …

    • 0 replies
    • 1.1k views
  4. களமுனைப் போராளிகளுக்கிடையே தடகள விளையாட்டுப் போட்டி [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 06:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்ட கட்டளைப் பணியகப் போராளிகள் இடையே தடகள விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் வவுனியா கட்டளைதளபதி வேலவன் கலந்து கொண்டு பரிசில்கள் வழங்கி ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது: போராளிகளின் மகிழ்ச்சியே போராளிகளின் வளர்ச்சி. களமுனையில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போராளிகள் அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். உங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் களமுனையில் அதாவது பாலமோட்டைப் பகுதியில் எதிரியோடு பல களங்களை சந்தித்து எதிரிக்கு பல இழப்புக்களை அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளீர்கள். பல இ…

    • 0 replies
    • 1.1k views
  5. மோதல்களில் 4 படையினர் பலி- 10 படையினர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 06:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான வெவ்வேறு மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 4 படையினர் கொல்லப்பட்டனர். 10 படையினர் படுகாயமடைந்தனர். மணலாறு ஆண்டான்குளத்தில் நேற்று நிகழ்ந்த மோதலில் சிறிலங்காப் படையினர் 3 பேர் கொல்லப்பட்டனர். இம் மோதல் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 12:10 மணிக்கு நிகழ்ந்தது. கிளாலி களமுனையில் நேற்று காலை 7:30 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு ஆண்டான்குளத்தில் நடந்த மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர…

    • 0 replies
    • 914 views
  6. இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் குற்றவாளிகளுக்கு உதவும் செயற்பாடுகளை கைவிடவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேச நீதி விசாரணையாளர், பிலிப் அல்ஸ்டன் கோரியுள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி ஜெனீவாவில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவுள்ளது. அரசாங்கமும் அதிகாரிகளும் இராணுவத்தினருடனும் ஆயுதக்குழுக்களுடனும் தொடர்புகளை கொண்டிருப்பது குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் என அல்ஸ்டனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணா குழுவினருடன் தொடர்புகளை கொண்டிருந்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதி நடைமுறையை முழுமையாக மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஒத்துழைப்பு காரணமாக கிழக்கிலும் வடக்கிலும் ஆயுதக்குழுக்களின் …

    • 0 replies
    • 994 views
  7. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்றிவிட்டு, எஸ்.பி.திசாநாயக்கவை அந்த பதவியில் அமர்த்தும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும், கரு ஜயசூரிய தரப்பை சேர்ந்த சிலரும் இந்த நடவடிக்கைகயின் பின்னனியல் இருப்பதாக கூறப்படுகிறது. முதன் முதற்கட்டமாக கடந்த புதன் கிழமை சுவரொட்டி பிரசாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுரொட்டியில் தோற்றது போதும் புதிய தலைவர் ஒருவரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்புவோம் என அச்சிடப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பி போது, அவர் பார்வையில் படும்படியாக கட்…

    • 1 reply
    • 946 views
  8. அரசுக்கு எதிராக பாரிய கூட்டணி: ரணில் தலைமையில் அமைக்கப்படுகின்றது Sunday, 01 June 2008 அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த கூட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது. இத்திட்டத்தின்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., சுதந்திரக் கட்சியின் மங்கள பிரிவு என்பவற்றுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பாரிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில் ருக்மன் சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தலைமை தாங்குவார். இதுவரைகாலமும்…

  9. வெள்ளப் பெருக்கினால் ஐவர் பலி: 40000 பேர் இடப்பெயர்வு ஞாயிறு, 01 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] சிறீலங்காவில் பெய்துவரும் கடும்மழையினையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் இருந்து சுமார் 40 000 ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இவ்வெள்ளப்பெருக்கினால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா வான்படையின் உலங்கு வானூர்திகளும் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=797

  10. மட்டக்களப்பு கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் 38 வயதான அப்துல் ரசாக் பாரூக் என்ற மரக்கறி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து விபுலாநந்தா இசை நடனக்கல்லூரிக்கு அருகில் இருந்து தமிழ் மக்கள் பயம் காரணமாக மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தநிலையில் மட்டக்களப்பிலும் காத்தான்குடியிலும் தமிழ் முஸ்லிம் மத்தியில் பதட்ட நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 979 views
  11. துணைப்படை டக்ளசின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன?: பட்டியலை வெளியிட்டார் ஆனந்தசங்கரி [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 01:20 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் குழுவின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன என்பதனை சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றொரு ஆதரவாளரான வீ.ஆனந்தசங்கரி அம்பலப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளார். தமிழர் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கு - கிழக்கைப் பிரித்த மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள இருவரும் சிங்களவரிடம் விசுவாசமாக இருந்தமைக்காக "அதிகாரம்" தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் மோதிக்கொண்டு வருகின்றனர். இம் மோதலின் ஒரு பகுதியாக டக்ளசின் தமிழின விரோத நடவடிக்கைகளை ப…

    • 10 replies
    • 2k views
  12. குடாநாடு மீது புலிகள் கடல்வழி முற்றுகையா? [01 - June - 2008] விதுரன் யாழ்.குடாநாட்டை கடல் வழியால் பாதுகாக்கும் படையினரின் முயற்சிக்கு தொடர்ந்தும் அடிவிழுகிறது. வன்னியில் பலமுனைகளிலும் பாரிய படை நடவடிக்கைகள் தொடர்கையில் விடுதலைப்புலிகளின் பார்வை யாழ்.குடாவின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் குடாநாட்டின் மீதான நெருக்குதலை புலிகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. யாழ்.குடாநாட்டின் மீது தரைவழியால் மேற்கொள்ளப்படும் நெருக்குதலில் புலிகள் சில நெருக்கடிகளை எதிர்கொள்கையில் கடல் வழியால் நெருக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குடாநாட்டுக்கு இரு வழிக் கடல் பாதைகளுள்ளன. இந்தக் கடல்வழிப் பாதைகளூடான நெருக்குதல்களையே புலிகள் தற்போது தீவிரப…

  13. மூன்று தமிழ் நீதியாளர்கள் மேல்நீதி மன்ற நீதிபதியாக பதவிஉயர்வு ஞாயிறு, 01 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] மாவட்ட நீதியாளர்களாக கடமையாற்றிய மூன்று தமிழ் நீதியாளர்கள், சிறீலங்கா மேல்நீதிமன்ற நீதியாளர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட நீதியாளர் இ.த.விக்னராஜா, வவுனியா மாவட்ட நீதியாளர் மா.இளஞ்செழியன், திருமலை மாவட்ட நீதியாளர் சந்திரமணி சிவபாலன் ஆகியோரே, இவ்வாறு சிறீலங்கா மேல்நீதிமன்ற நீதியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களை விட, கல்முனையை சேர்ந்த மூத்த சட்டவாளர் ஜமீல் அவர்களும், சிறீலங்கா மேல்நீதிமன்ற நீதியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/?p=795

  14. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் சீருடை ஆயுததாரிகள் விசாரணை வீரகேசரி வாரவெளியீடு 6/1/2008 9:23:50 AM - இராணுவ உடையுடன் ஆயுதம் தாங்கிய சிலர் தமது தலைமை அலவலகத்துள் அத்துமீறிப் பிரவேசித்து விசாரணை நடத்தியதாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் விசனமுற்றுள்ளதுடன் கடும் ஆட்சேபத்தை தெரிவிப்பதாகவும் அந்த ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இராணுவ உடையில் ஆயுதம் தரித்த சிலர் கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைமைக் காரியாலயத்துக்குள் வந்துள்ளனர். ஸ்தாப…

  15. குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்விக்குறியாகியுள்ள அமைதி -இலட்சுமணன்- மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் மத்திய பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளர் சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து உருவான சூழல் காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் கொல்லப்படுவதற்கும் மேலும் 6 பேர் படுகாயம் அடைவதற்கும் 4 பேர் கடத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. மட்டக்களப்பு - கல்லடியில் வைத்துப் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களையும் விடுவிக்கக்கோரி ஏறாவூரில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 முஸ்லிம் இளைஞர்கள் கைதாகித் தடுத்தும் வ…

  16. போர்அரங்குகளில் படைத் தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங் கியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பிரதேசங் களைப் பாதுகாப்பது பெரும் சிரமமான காரியமாகி வருகிறது. இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கும் நோக்கில் அவசர அவசரமாக புதிய டிவிசன் (படைப்பிரிவு) ஒன்றை உரு வாக்கும் நடவடிக்கைகளை இராணுவத் தலைமை மேற் கொண்டிருக்கிறது. 61ஆவது டிவிசன் என்ற குறியீட்டுப் பெய?ல் அமைக்கப்படவுள்ள இந்த டிவிசன் இலங்கை இராணுவத்தின் 13ஆவது டிவினாகும். பனாகொடவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் 11ஆவது டிவிசன் தென் னிலங்கையின் பாதுகாப்பைக் கவனிக்கிறது. அனுராதபுரம், மன்னார், வவுனியா மாவட் டங்களின் பின்னிலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 21 ஆவது டிவிசன் இயங் குகிறது. திருகோணமலையை மையமாகக் கொண்டு வடக்கே மணலாற…

    • 1 reply
    • 1.2k views
  17. நாட்டை முழுமையாக போருக்குள் தள்ளுங்கள்: கெல உறுமய கோரிக்கை [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:59 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கொண்டாட்டங்களை நிறுத்தி நாட்டை முழுமையாக போருக்குள் தள்ளுமாறு சிறிலங்காவின் சிங்களப் பேரினவாதக் கட்சியான ஹெல உறுமய அந்நாட்டு அரசாங்கத்தினைக் கோரியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளதாவது: இந்த வருடத்தின் எஞ்சிய பகுதிகள் முழுவதையும் நாட்டையும் முழுமையான போருக்குள் அரசு ஈடுபடுத்த வேண்டும். எல்லா விழாக்களும் நிறுத்தப்பட வேண்டும். வன்னி மீதான படை நடவடிக்கையின் போது படையினருக்கான ஊக்கங்களை அதிகம் வழங்க வேண்டும். உள்ளூர் மற்றும் அனைத்துலக எதிரிகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும், அதனை …

    • 2 replies
    • 1.1k views
  18. யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் மீது கடந்த கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலை நோக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மருதானை - பாணந்துறை தொடருந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள அதேவேளை, வில்பத்து சரணாலயப்பகுதியில் உள்ள இராஜாங்கன பகுதியில் உள்ள ஜாயா 18 பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் ஊர்காவல் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில…

    • 4 replies
    • 1.6k views
  19. அரசுக்கு எதிராக பெரும் கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி திட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:38 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பலமான பெரிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சிகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அரசுக்கு எதிராக அமைக்கப்படவுள்ள இந்த கூட்டணியில் ஐ.தே.க., ஜே.வி.பி., சுதந்திரக்கட்சியின் மங்கள பிரிவு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரணதுங்க உட்பட அரசுக்கு எதிரான பல கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட உள்ளன. இந்த கூட்டணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் எனவும், ருக்மன் சேனாநா…

    • 0 replies
    • 632 views
  20. பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த முறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும். மேலும் இலங்கையில் நடைபெறும் போரில் மக்கள் பெருமளவில் கொல்…

    • 4 replies
    • 2.1k views
  21. இலங்கை அரசாங்கத்தால் ஒவ்வொன்றும் தலா 267 மில்லியன் ரூபா பெறுமதியான 8 ஆடம்பர பென்ஸ் கார்கள் இறக்குமதி எரிபொருளுக்கான விலைகள் மலை போல் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், மகிந்த அரசு தனது பாவனைக்கென ஒவ்வொன்றும் தலா 267 மில்லியன் ரூபா ( 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ) பெறுமதியான 8 அதி பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆடம்பர பென்ஸ் கார்களை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. எரிபொருள் பாவனையைக் குறைக்கவென மகிந்த அறிவித்திருக்கும் நடவடிக்கைகளான 4 நாள் பாடசாலைகள், வாகன இறக்குமதிக்கான தடை, புகையிரதக் கட்டணம் 90 வீதத்தால் அதிகரிப்பு, பஸ் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிப்பு....போன்ற இன்னோரென்ன சிந்தனைகளுக்கும் பிறகு மகிந்த இந்த ஆடம்பரக் கார்களை இறக்குமதி செய்திருப்பது தெற்கில…

  22. வா.கி.குமார் 31. மே 2008 20:01 நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். இதுகால வரையுள்ள நிலமையை மாற்றியமைக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகமே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை ஆகியவையே பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்குமெனத் தெரிவித்துள்ளனர். கொழும்பின் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பி.நடேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை "தமிழ்…

    • 0 replies
    • 620 views
  23. மூதூரில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: வன்முறைச் சம்பவங்களில் பொதுமகன் சுட்டுக்கொலை- 4 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 06:43 மு.ப ஈழம்] [க.நித்தியா] திருகோணமலை மாவட்டம் மூதூர் நிலாப்பொலவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து அங்குள்ள தமிழ்க் கிராமமான கங்குவேலிக்குள் நடைபெற்ற கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் வன்முறையிலும் 4 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் நேற்று பிற்பகல் கிளிவெட்டிப் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டும் உள்ளார். இந்த இரு சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. …

    • 1 reply
    • 590 views
  24. கருணாவை நாடு கடத்தும் நடவடிக்கையினை துரிதப்படும் பிரித்தானியா [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 07:29 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முன்னாள் தலைவரான கருணாவை சிறிலங்காவிற்கு நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கருணாவை நாடு கடத்தும் திட்டத்தின் முதற்படியாக கருணாவை நாடு கடத்துவதற்கு தேவையான பத்திரங்களை பிரித்தானியா அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், அவருக்கான பயண ஆவணத்தையும் கோரியுள்ளனர். இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பிரித்தானியாவுக்கான சிறில…

  25. அம்பாறை தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் இருக்கும் மக்களுடைய வீடுகளை உடைத்து நிலைகள், கதவுகள், ஓடுகள் என்பவற்றை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் எடுத்துச்சென்றுள்ளனர். இந்த மக்களினுடைய உடைமைகள் உடைத்து எடுக்கப்பட்டு தாண்டியடி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் உழவு இயந்திரங்களை பலவந்தமாகப் பறித்து அவ் உழவு இயந்திரங்களிலே ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலைமை தோன்றியுள்ளது. 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் இப்படியான அடாவடித்தனத்தினால் தங்கவேலாயுதபுரம் கிராமத்திலிருந்து வெளியேறி விநாயகபுரம், திருக்கோவில் ஆகிய பகுதிகளில் வசித்துவந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.