Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் இருந்து 5 மாடுகளை கடத்தி வந்த மூவர் கைது ; மாடொன்று இறந்த நிலையில் மீட்பு! Published By: NANTHINI 12 MAR, 2023 | 07:50 PM யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்ட விரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்புவாசிகள் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும், ஏனைய நான்கு மாடுகள் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளன. பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை இரவு வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பலாலி பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான பட்டா ரக வாகனமொன்றினை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். அதன்போது அந்த சிறிய வ…

  2. மஹிந்தானந்த வெளிநாடு செல்ல தடைவிதித்து செயற்பட்ட இரு அதிகாரிகளை பணி இடைநிறுத்த தீர்மானம் ! Published By: NANTHINI 12 MAR, 2023 | 05:07 PM நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக நேற்று முன்தினம் (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக மத்துகம நீதிமன்றில் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வெளிநாட்டுப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  3. வவுனியாவில் கடந்த 5 நாட்களில் 6 அகால மரணங்கள்; நால்வர் கைது! - அதிர்ச்சிப் பதிவு Published By: NANTHINI 12 MAR, 2023 | 05:03 PM (பாஸ்கரன் கதீஷன்) வவுனியா மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 6 அகால மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்கிற விடயம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மார்ச் 7 - வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு வவுனியா, குட்செட் வீதியிலுள்ள உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் கடந்த 7ஆம் திகதி காலை மீட்கப்பட்டன. இச்சம்பவத்…

  4. எல்லை தாண்டிய 16 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது! Published By: NANTHINI 12 MAR, 2023 | 01:08 PM யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகம் - புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இரு படகுகளில் எல்லை தாண்டி, கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் நான்கு கடற்றொழிலாளர்களும், பருத்தித்துறை கடற்பரப்பில் 12 கடற்றொழிலாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் படகுகளும் கை…

  5. கடற்கரையை சுத்தம் செய்ய புதிய இயந்திரங்கள் ! இலங்கையின் கரையோரப் பகுதியில் சுற்றாடல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்று (12) உத்தியோகபூர்வமாக ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். கரையோரங்களில் இருந்து குப்பைகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவதையும் இந்த வேலைத்திட்டம் உள்ளடக்கியது, மேலும் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்குளியில் உள்ள காக்கை தீவு கடற்கரையில் நடைபெற்றது. கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார …

    • 0 replies
    • 555 views
  6. இரண்டு அமைச்சர்களுக்கு நிகழ்ந்த அவமானம் ! குருநாகல், பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரை அப்பகுதி மக்கள் சிலர் கேலி கிண்டல் செய்துள்ளனர். அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஆகியோர் பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அங்கிருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கேலி கிண்டல் செய்தும் அவமானப்படுத்தினர். எனினும் எதிர்ப்பையும் மீறி அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர். இந்த …

    • 0 replies
    • 246 views
  7. முட்டை இறக்குதியில் என்னதான் பிரச்சினை? - இந்தியா சென்ற தலைவர்! இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரிப்பதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தியா சென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள் தொடர்பான அறிக்கை மற்றும் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய்வது இந்த விஜயத்தின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதன் முதல் தொகுதியாக 02 மில்லியன் முட்டைகள…

    • 0 replies
    • 457 views
  8. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பிடம் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி! மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம், நெல் விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு தனிப்பட்ட திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறான உறுதியளிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் …

    • 0 replies
    • 600 views
  9. நாமலுக்கும் சமலுக்கும் புதிய பதவிகள்: நன்றி தெரிவித்து நாமல் டுவீட்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனத…

  10. நான்கு வருடங்களில் 08 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருடங்களில் 08 தடவைகளில் 03 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை பெறப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பாக பொருளாதாரப் பேராசிரியர் ஒருவர் வாரப் பத்திரிகையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் அதற்கான கடன் தொகைக்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதனை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்…

  11. ஜனாதிபதியின் செயற்படுகள் வெறுக்கத்தக்கவை – வாசுதேவ குற்றச்சாட்டு தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை தற்போது சவாலுக்கு உட்படுத்த முயற்சிப்பது தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நாடாளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்படுகள் வெறுக்கத்தக்கவை என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஆளும் தரப்பினர் நாட்டு மக்கள…

  12. இலங்கைக்கு வரவுள்ள வட இந்திய தொழிலதிபர்கள் குழு Published By: NANTHINI 12 MAR, 2023 | 11:12 AM வட இந்திய தொழிலதிபர்கள் சுமார் 92 பேர் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத் தலைவர் சுலானி தலைமையில் இந்த குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இலங்கையின் தொழிலதிபர்களை சந்திக்கவுள்ளனர். இந்த தொழிலதிபர்களின் வருகை மற்றும் சந்திப்பு ஏற்பாடுகளை இலங்கை - இந்திய தொடர்பாளர் மனவை அசோகன் மேற்கொண்டு வருகிறார். https://www.virakesari.lk/article/15029…

  13. நியாயமற்ற உயர் வரியறவீட்டு வீதம் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் - நிபுணர்கள், புத்திஜீவிகள் எச்சரிக்கை Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 07:31 PM (நா.தனுஜா) நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், ஒரே தடவையில் வரிவருமானத்தை 200 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு முற்படுவது பொருத்தமற்றதாகும். வரியறவீட்டு வீதம் நியாயமற்றவகையில் மிகவும் உயர்வாகக் காணப்படும்போது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது பல்வேறு வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர். இலங்கைக்கு ஏற்றவாறான நியாயமானதும், வ…

  14. தமிழ் கட்சிகள் ஒருமித்து செயற்பட முஸ்தீபு : ஆரம்பகட்ட பேச்சுக்களில் 4 தரப்பிடையே கொள்கையளவில் இணக்கம் Published By: Nanthini 11 Mar, 2023 | 06:41 PM (ஆர்.ராம்) பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்து வருகின்ற நிலையில் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள புளொட், ரெலோ, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுக்கிடையில் முதற்கட்ட ப…

  15. ஜெனிவா செல்கிறார் கஜேந்திரகுமார்! இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற பிற்போக்குத் தனமான ஜனநாயக விரேத செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளதாகவும் இதன்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தவுள்ளதாக கூறியுள்ளார். தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை சர்வாதிகாரத்தினை நோக்கி நகர்த்திச் செல்லும் அதேவேளை ச…

  16. பழி வாங்கும் எண்ணங்களே தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளரை ஏனைய கட்சியினர் நிராகரிக்க காரணம் - சிறீதரன் Published By: Digital Desk 5 10 Mar, 2023 | 04:58 PM ( எம்.நியூட்டன்) 70 வருட வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவு கோரமின்மையால் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கைய…

    • 2 replies
    • 620 views
  17. ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையா ? - பொலிஸார் விளக்கம் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 12:18 PM (எம்.மனோசித்ரா) காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் செயலிழந்தவையாகவும் , செறிவு குறைந்தவையாகவுமே காணப்படும். அவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சில தரப்பினரால் தெரிவிக்கப்படுவதைப் போன்று கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையல்ல என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பிலு…

  18. யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை! வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார். பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம் எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின்…

  19. உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா விருது வழங்கி கௌரவிப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகில் துணிச்சலான பெண்களாக 2023 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு வௌ்ளை மாளிகையில் நடைபெற்றது வருடாந்தம் இந்த நிகழ்வு நடத்தப்படுவதுடன், 2021 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டவர்களும் இம்முறை கௌரவிக்கப்பட்டனர். COVID பெருந்தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு இந்நிகழ்வு நடத்தப்படவில்லை. இதன்போது, 2021 ஆம் ஆண்டு உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. …

    • 6 replies
    • 906 views
  20. 1894 சுற்றுலாப்பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்த அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பல் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 03:41 PM (எம்.மனோசித்ரா) சுற்றுலாப்பயணிகள் 1894 பேர் மற்றும் 906 ஊழியர்களுடன் பிரின்ஸஸ் குரூஸ் அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பலொன்று சனிக்கிழமை (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் தாய்லாந்திலிருந்து வருகை தந்துள்ளது. இக்கப்பலில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதோடு , அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர். குறித்த கப்பல் சனிக்கிழமை மாலை கொழும்பு துறைமுகத்திலிருந்து ட…

  21. வர்த்தகர்கள், பல்துறைசார்ந்த கடன்பெறுநர்களுக்குப் புதிய சலுகைகள் - இலங்கை மத்திய வங்கி Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 01:12 PM (நா.தனுஜா) பல்துறைசார்ந்த வர்த்தகர்கள் மற்றும் தனியார்துறையினர் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், அவர்களின் கடன்மீள்செலுத்துகை செயன்முறையை இலகுபடுத்தும் நோக்கில் மேலதிக சலுகைகளை வழங்குமாறு நிதியியல் கட்டமைப்புக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாம் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதில் வர்த்தகர்கள் மற்றும் பல்துறைசார்ந்தோர் பலதர…

  22. முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தல் - இது தான் காரணம் ! Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 03:34 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள பல மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பில் காற்று தரக்குறியீடு 712 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் ஊதா நிறத்தில் அடையாளப்படுத்தப்படும் இக்குறியீட்டு எண் கடும் சுகாதாரமற்ற நிலையைக் காண்பிக்கின்றது. இதே வேளை மன்னார் மாவட்டத்தில் காற்றின் தரக் குறியீடுகள் 103 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு , சுகாதாரமற்ற நிலையைக் காண்பிக்கின்றது. …

  23. எரிபொருளுக்கான QR கோட்டா முறைமை தொடர்பில் இன்று வெளியான அறிவித்தல்! Published By: VISHNU 08 MAR, 2023 | 06:22 PM இன்று (08) முதல் அமுலுக்குவரும் வகையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (QR) கோட்டா முறைமை புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவிடட்டுள்ளதாவது, (QR) கோட்டாவின் ஊடாக வாரத்துக்குப் பெறப்படும் எரிபொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. இதற்கு முன்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் எரிபொருள் (QR) கோட்டா புதுப்பிக்கப்பட்டது என்றும் அவர் கூற…

  24. சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது – அருட்தந்தை மா.சக்திவேல்! சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் …

  25. மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்! வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டரீதியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தொழிலாளி இலங்கைக்கு அனுப்பப்பட்ட ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.