ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையைச் சேர்ந்த கருணா, சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டதாக நேற்று இரவு செய்திகள் பரவின. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது. 09.05.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு தேத்தாதீவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குடும்பப்பெண் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணவனை இழந்த இந்தப்பெண்ணுக்கு கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் மறுமணம் நடைபெற்றநிலையிலேயே அவரைப் பயங்கரவாதத் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சண்முகநாதன் கலைவாணி (அகவை-32) என்ற ஒருபிள்ளையின் தாயாரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளே இந்தப் பெண்ணை கைதுசெய்ததாக பிரதி …
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம் -ரணில் எச்சரிக்கை;கோட்டா முறையை கைகோர்க்குமாறும் அழைப்பு வீரகேசரி நாளேடு 5/9/2008 8:36:16 AM - சர்வதேச சந்தைகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கான கோட்டா முறை நவம்பர் மாதத்திற்குள் காலாவதியாகவுள்ள நிலையில் சர்வதேச ஒப்பந்தங்கள் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகள் மூலமாக பாதுகாக்கப்படல் வேண்டும். அவ்வாறு சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படாவிடின் வருட இறுதிக்குள் இலங்கைக்கான சர்வதேச பொருளாதார உதவிகள் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பு அதிகாரத்தின் மூலமாக உயர்நீதிமன…
-
- 0 replies
- 1k views
-
-
நாளை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிரதான எதிர்க் கட்சியின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாகவே தேசிய அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படக் கூடிய சூழல் கருக்கட்டியிருப்பதாகத தெரிகின்றது. தேசிய மட்டத்தில் ஐ.தே.கட்சி தலைமையில் புதிய எதிரணிக் கூட்டமைப்பு ஒன்று உடனடியாகவே உருவாகும் என்றும், ஏற்கனவே அரசுப் பக்கம் தாவி அமைச்சுப் பதவிகளோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சில அரசில் தலைவர்களும் அவர்களது கட்சியினரும் மீண்டும் எதிரணிக் கூட்டமைப்புக்குப் பாய்வர் என்றும் கூறப்படுகின்றது.இது தொடர்பான திரைமறைவுப பேச்சுகள் தலைவர்கள் மட்டத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருக்கின்றன என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கி
-
- 0 replies
- 972 views
-
-
சிறீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடையே பெரும் நிதியைச் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. லண்டனில் உள்ள சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்தில் இதற்கான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டதை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் வாழும் சிங்கள மக்கள் மற்றும் வணிகர்கள் இணைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஒரு இலட்சம் பவுண்ஸ் நிதி முதற்கட்டமாக சேகரிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட இந்த நிதியை சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் கையளித்துள்ளனர். இந்த நிதி சிறீலங்காப் தரைப்படையினர், கடற்படையினர் மற்றும் வான்படையினரின் வீடமைப்புத் திட்டத்திற்கு பயனபடும் எனக் கூறியே நிதிகேரிப்பு நடத்தப்பட்டுள்ள…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காப் படை நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்ற புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று களமுனைகளில் உள்ள படை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 765 views
-
-
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்த்தான் அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 854 views
-
-
எரிபொருள் நிலையத்தில் கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முன்னாள் கடற்படைச்சிப்பாய் உயிரிழந்துள்ளார். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார். மாத்தறை கேக்கனதுர என்ற பிரதேசத்தில் இன்று எரிபொருள் நிலையம் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் தொடர்புடைய மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளார். முன்னாள் கடற்படை சிப்பாயிடம் இருந்து கொள்ளையிட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாத்தறை காவல்துறையினர் தெரிவித்தனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கு சிறிலங்காவை தெரிவு செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கடிதம் அனுப்பியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 567 views
-
-
சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி தொழிலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க விரைவில் பிரசெல்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 840 views
-
-
வட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து புததளம் மற்றும் மதவாச்சி பகுதியில் தங்கியிருந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம்களை திருகோணமலை மாவட்டத்திற்கு அனுப்புவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதன் ............. தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_2082.html
-
- 0 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற அனைத்துலக செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவர் அங்கிருந்து சிறிலங்காப் படையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 734 views
-
-
பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதன் மூலம் தமக்குக் கிடைக்கக் கூடிய தரகுப் பணம் பற்றி மட்டும் அமைச்சர் பந்துல குணவர்தன கவலைப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் பர்மாவைத் தாக்கிய நர்கீஸ் புயற் காற்றினால் சுமார் 20,000ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித கதியில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த நிலைமையின் கீழ் பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என்ற நுகர்வோர் விவகார அமைச்சரின் கூற்று நியாயமற்றதென தெரிவித்துள்ளார். இவ்வாற…
-
- 0 replies
- 936 views
-
-
அப்பாவி பொதுமக்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் இலக்கு வைத்துக் கொல்லாமல் முடிந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதிப்பார் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். Rajapaksa challenges Prabhakaran to direct clash Irish Sun Wednesday 7th May, 2008 (IANS) Sri Lankan President Mahinda Rajapaksa Tuesday challenged the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Velupillai Prabhakaran to 'clash with him directly' and declared that his government would continue in its bid to flush rebels out of their stronghold in the north. 'I will challenge Prabhakaran to clash …
-
- 25 replies
- 3.4k views
-
-
கிளிநொச்சி பொது மருத்துவமனை மேம்பாட்டுப் பேரவையின் மதியாபரணம் நம்பிக்கை நிதியத்தின் உறுதுணையுடன் மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கல் தொடக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவினால் பொதுமக்கள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 584 views
-
-
மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கிழக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் ஏனைய கட்சிகளுக்கு முகம் கொடுக்க அஞ்சியே அரசு பாரளுமன்றை ஒத்திவைத்திருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. த.தே.கூட்டமைப்பின் யாழ். பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பில் தெரிவிக்கையில் : கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய மோசடிகளை அரசு செய்யவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. எனவே, நடக்கப் போகின்ற மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றில் குரல் எழுப்புவதை தடுப்பற்கும், தாம் மோசடிகளை செய்வதற்கு வசதியாகவும பாராளுமன்றை ஒத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் தாம் படுதோல்வி அடைவோம் என்பது அரசுக்கு நன்கு தெரியும். …
-
- 7 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு தேத்தாதீவில் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குடும்பப்பெண் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 750 views
-
-
மன்னார் மக்கள் படையினரின் இரும்புக்கரங்கள் கொண்ட கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 734 views
-
-
வீரகேசரி இணையம் - எமது படைவீரர்களுடன் இணைந்து மிக விரைவில் நாடு முழுவதும் சமாதானத்தையும் மக்களின் நல்வாழ்வுக்குமான வழியையும் ஏற்படுத்துவேன். கிழக்கை மீட்டு அப்பகுதி மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழிவகுத்த பெருமை எமது படையினரையே சாரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முதல் ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரையான கால எல்லை, படையினருக்கான மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட தேசிய படை நினைவுக் கொடியின் முதலாவது கொடி நேற்று ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது நாட்டின் இறைமையையும் சுயாதிபத…
-
- 4 replies
- 1.3k views
-
-
தாங்கள் ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே பகிரங்கமாகக் கூறும் போது அரசு மட்டும் பிள்ளையானிடம் ஆயுதங்கள் இல்லையென கூறி வருகிறது. கிழக்கிலிருந்து புலிகளை விரட்டிவிட்டதாக கூறும் அரசாங்கம், ஏன் தற்போது பூனைகளுக்கு பயப்படுகிறதென ஐ.தே.க. ................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_3367.html
-
- 0 replies
- 775 views
-
-
பிள்ளையான் குழுவைச் சார்ந்த சிலர் பாணம பிரதேசத்தில் ஓகந்த தேவலயத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் இரு முகாம்களை அமைத்துள்ளதாக அறியவருகின்றது. நேற்று இரு பேருந்து வண்டிகளிலும் சில சிற்றூர்தி வண்டியிலும் வந்த இவர்கள் முகாமமைப்பதற்குத் தேவையான பொருட்களை வண்டிகளில் எடுத்து வந்துள்ளனர். இம் முகாமமைப்பதற்கு பதினைந்த வயதிற்குக் குறைவான சிறுவர்களை ஈடுபடுத்தியதுடன், பிரதேசத்தில் வாழும் மக்களை முகாம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு நுழையவிடாமல் பிள்ளையானின் ஆயுதக் கும்பல் தடுத்து வருவதாகவும் இரவு வேளைகளில் துப்பாக்கி வெடி ஓசைகள் கேட்பதாகவும் இங்குள்ள காட்டு மிருகங்களை இவர்கள் வேட்டையாடி வருவதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இச் செய்தியை ஜே.வி.பி யின் பா.உ. வசந்த பியதிஸ்ஸ 'லங…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளின் விமான ரகசியங்கள்! - அதிர்ச்சியில் இலங்கை ராணுவம் ஏப்ரல் 25, 2008. நள்ளிரவு நேரம். மணி 1.25 ஆகியிருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் இருந்து இரண்டு சிறிய ரக போர் விமானங்கள் புறப்பட்டு, வானத்தில் மிதக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரணமேடு என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வானத்தை நோக்கிக் கிளம்பியது. சரியாக 1.32 ஆனபோது மணலாறு பகுதியை ஒரு விமானம் நெருங்கியிருந்தது. சில நொடிகள் இடைவெளியில் இரண்டு குண்டுகள் விமானத்தில் இருந்து தரையை நோக்கி வீசப்பட்டன. குண்டுகள் தாக்கிய இடம், இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான மணலாறு முன்னரங்கு நிலையம் (யீஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ பீமீயீமீஸீநீமீ றீவீஸீமீ). அதற்குள் இன்னொரு வ…
-
- 4 replies
- 3.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கத்துடன் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடவேண்டும் - பகவதி Thursday, 08 May 2008 தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் தலையிடலாம் என இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் என்.கே.பகவதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த முனைப்புகள் தமிழ்நாட்டின் எண்ணங்களுடன் இணைந்து செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் டெய்லி மிரர் ஆங்கில செய்திதாளுக்கு தொலைபேசி மூலம் அவர் செவ்வியளித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கம் இல்லாமல் இந்தியா இலங்கை விடயத்தில் தலையிட்டால்,அது இந்தியாவுக்கு பாரிய பாதகங்களை ஏற்படுத்தும். தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழர்கள் அத்துடன், தம…
-
- 2 replies
- 1.2k views
-