Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தல் நாள் அன்று வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்சிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள என கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான பொறுப்பான உதவி காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு என 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு தேர்தல் சாவடியிலும் 5 சிறீலங்கா காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நாளன்று அரச வாகனங்கள் இலக்கத் தகடு அற்ற வாகனங்கள் தேர்தல் தொகுதிகளில் நடமாடினால் அவற்றைக் கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்ப…

  2. முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர் - இலங்கை அகதிகள் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 5/6/2008 7:40:52 PM - இலங்கையில் இருந்து இராமேஸ்வரம் வந்தடைந்த அகதிகளில் ஒருவர் முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் இளம் பெண்கள் கடத்தப்படுவதாகக் கூறி விசனம் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 8 பெண்கள் 14 குழந்தைகள் உட்பட 40 அகதிகள் மன்னாரிலிருந்து புறப்பட்டு தனுஷ்கோடிக் கரையைச் சென்றடைந்துள்ளனர். விசாரணைகளையடுத்து இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் அமலன் (வயது22) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் நள்ளிரவு வேளைகளில் முகமூடி அணிந்த ஆயுததாரிகள் துப்பாக்கி முனையில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கடத்திச் செல்கின்றனர். பின்னர் இவர்கள…

  3. பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்படுவோர் அல்லது காணாமல் போவோர் தொடர்பான தகவல்களை அவர்களது உறவினர்களுக்கு வழங்கும் வகையில் விசேட தொலைபேசி சேவையொன்றை மனித உரிமைகள் அமைச்சு நாளை (மே 7) முதல் ஆரம்பிக்கவுள்ளது. இந்த சேவையின் முதல் கட்டம் எட்டு மாதங்கள் வரை செயற்படுத்தப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடன் கடந்த 5ம் திகதி விசேட பேச்சுவார்த்தையொன்றை அமைச்சர் நடாத்தியுள்ளார். 011 2676513 மற்றும் 060 2119246 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மூன்று மொழிகளிலும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 850 views
  4. கிழக்கில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு 12 முகாம்கள் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இந்த முகாம்கள் அமைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஏறாவூர், வாழைச்சேனை பகுதிகளில் இரண்டு முகாம்களும், செங்கலடி, மட்டக்களப்பு, கல்லடி, ஆராயம்பதி, கொக்கட்டிச்சோலை, தொப்பிகலை, மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் பிள்ளையான் குழுவின் ஏனைய முகாம்கள் அமைந்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  5. சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைந்து கிழக்குத் தேர்தலை நியாயமாக நடத்துமாறு வலியுறுத்தி சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 685 views
  6. வவுனியா பூந்தோட்டம் சந்தியில் செல்வராசா பவான் என்பவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதில் மற்றொருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 783 views
  7. அம்பாறை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குடா தாமரைக்குளம் பகுதியில் வேட்டைக்குச் சென்ற மூவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 780 views
  8. போராளிக் குழுக்களின் மோதலுக்கு இந்திய அரசே காரணம் உண்மைகளை மறைக்க முயல வேண்டாம் முதல்வருக்கு வேண்டுகோள் - பழ. நெடுமாறன் தமிழக சட்டமன்றத்தில் இலங்கை இனப் பிரச்னை குறித்து பா. ம. க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளி களுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இடைக்காலத்திலே நான் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை சகோதர யுத்தத்தை நிறுத…

    • 4 replies
    • 1.8k views
  9. திருகோணமலை எல்ல கந்தளாய் பிரதேசத்தில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் தேடுதலை மேற்கொண்ட படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சுமார் 20 நிமிடங்கள் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். புலிகளுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அரசாங்கத் தரப்பினர் கூறுகின்றனர். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  10. யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒருவர் சரணடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 664 views
  11. திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் நிகழ்ந்த மோதலில் 3 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 535 views
  12. "கிழக்கு மாகாண சபைத் தேர்தல்" என்கின்ற சிறிலங்கா அரசின் தேர்தலானது தமிழீழத் தாயகக் கோட்பாட்டினை சிதைக்கும் ஒரு சதிமுயற்சியே- அதனை முற்றாகப் புறக்கணிப்போம் என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 525 views
  13. கிழக்கில் உள்ள துணைப்படை ஆயுதக்குழுக்களின் துப்பாக்கிகள் அரசாங்கத்திற்கு எதிராக என்றோ ஒருநாள் திரும்பும் என்பதனை உறுதியுடன் கூறுகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 756 views
  14. கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினருடன் இணைந்தியங்கும் துணைப் படைக் குழுக்கள் தமது பாதுகாப்பிற்காகவே ஆயுதங்களை வைத்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். அப்படியானால் சிறிலங்கா அரசாங்கம் கிழக்கை இன்னமும் ஆயுதக்குழுக்களிடமிருந்து முழுமையாக மீட்கவில்லையா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியிருக்கின்கிறார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 703 views
  15. கடந்த மாதம் இடம்பெற்ற மோதல்களில் 120 படையினர் பலி! 745 படையினர் காயம் - பிரதமர் கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு இடம்பெறும் முன்னரங்க நிலைகளில் இடம்பெற்ற மோதல்களில் மட்டும் 120 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டும் 745 படையினர் காயமடைந்தும் உள்ளனர் என சிறீலங்காப் பிரதமர் ரண்டசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகால சட்டம் மேலும் ஒருமாதம் நீடிப்பு விவாத வாக்கெடுப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 5 replies
    • 1.5k views
  16. மடு தேவாலயப் திருத்தலப் பகுதியை போர் சூன்யப் பிரதேசமாக- சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 737 views
  17. கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஜே.வீ.பீயினர் தாக்கப்பட்டதாக கூறி ஜே.வீ.பீ இன்று அம்பாறை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அக்கரைப்பற்று திருகோயில் பிரதேசத்தில் ஜே.வீ.பீயின் உறுப்பினர்கள் மீது நேற்று மாலை 3.30 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதம் தாங்கிய பிள்ளையான் குழுவின் ஆதரவாளர்கள் தமது உறுப்பினர்களை தாக்கியதாக ஜே.வீ.பீயின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி தெரிவித்தார். ஜே.வீ.பீ உறுப்பினர்கள் நேற்று திருகோயில் பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற பிள்ளையான் குழுவினர் தமது உறுப்பினர்களை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். ஜே.வீ.பீயின் பிரசார துண்டு பிரசுர…

  18. வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தேர்தலையொட்டிய வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 740 views
  19. வடக்கு கிழக்கை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இளைய சகோதரரான பசில் ராஜபக்ஷவிடம் கையளித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, பசிலிடம் வட கிழக்கு பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராகக் கொண்ட வடக்கிற்கான விசேட செயலணிக் குழுவின் உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிராந்தியத் தலைவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத் த…

    • 0 replies
    • 1k views
  20. வீரகேசரி இணையம் - இலங்கை அரசு பல்வேறு வழிகளிலும்,உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்து வரும் நிலையில்,விடுதலை புலிகளும் வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெரிமளவில் வாங்கி வருவதாக தெரிவிக்கபடுகிறது. அண்மையில் கூட 3, கப்பல்கள் ஆயுதங்களை விடுதலை புலிகள் வடக்கில் உள்ள தமது முக்கிய கடற்தளங்களில் இறக்கி உள்ளதாக கொழும்பு தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன. இராணுவத்திற்கும்,புலிகளுக்க

    • 3 replies
    • 2.6k views
  21. புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை வீரகேசரி இணையம் 5/5/2008 11:47:01 PM - விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ தளபாடங்கள் கிடைப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என அராசங்கம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாயுதங்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், சிவிலியன்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிறிய ஆயுதங்கள் தொடர்பான ஐ.நா.வின் கூட்டத்தில் ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளையும் தாக்குதல்களையும் கட்டுப்படுத்த வேண்டுமானல் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள…

    • 6 replies
    • 2.3k views
  22. ஜனநாயகத்தை ஏற்படுத்தினால் அதன்மூலம் தனது இருப்பு இல்லாமல்போய்விடுமென்ற அச்சம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால்தான் ஜனநாயத்தை ஏற்படுத்தும் நோக்கமின்றி கிழக்கு மாகாணசபையில் ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களைக் களையாமல் விட்டுவைத்திருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதாகக் கூறிக்கொண்டு பிறிதொரு பயங்கரவாத அமைப்பையே அரசா…

    • 0 replies
    • 1k views
  23. காரைதீவில் வாக்களர் அட்டை பறிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தரப்பு அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மட்டக்களப்பு காரைதீவு கிராமத்தில் உள்ள மக்களிடம் வாக்காளர் அட்டைகளை பறித்து வருவதாக தேர்தல் திணைக்களத்தில் முறையிடப்பட்டுள்ளது. நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். காரைதீவு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று, வாக்களர் அட்டைகள் பறித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை அம்பாறையில் ஒரே இலக்க தகடுகள் பொறித்த இரண்டு வாகனங்கள் சுற்றித்தி திரிவதாக ஜே.வீ.பீயும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்த…

    • 0 replies
    • 863 views
  24. மடு தேவாலயத்தை மையமாகக் கொண்டு சுயாதீனமான மதவலயமொன்றை அமைக்க மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் எத்தனிப்பதாக ஜாதிக ஹெல உறுமக குற்றஞ்சாட்டியுள்ளது. திருச்சொரூபம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இராணுவப்படையினர் மடு தேவாலப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாகவும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட படையினருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்…

    • 2 replies
    • 1.4k views
  25. அனுராதபுரம் மஹாவிலாச்சியவில் கிளைமோர் தாக்குதல்! வீரகேசரி இணையம் 5/6/2008 11:11:03 AM - அனுராதபுரம் மஹாவிலாச்சிய வீதியில், நேற்றிரவு கிளைமோர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை விடுதலை புலிகள், வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த பெளத்த துறவி ஒருவரை இலக்கு வைத்து மேற்கொண்டுள்ளதாகவும்,தாக்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.