ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் டிசம்பர் 31 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரது கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எதுவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அவல நிலையை மட்டக்களப்பு சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதியான ஜெயக்குமார் விவரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 851 views
-
-
யாழ். முகமாலை கண்டல் பகுதியில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்துடன் மேலும் 5 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 858 views
-
-
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை இன்று முற்பகல் அங்கிருந்த துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கைதிகள் கொடூரமாகத் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
26.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....f55d4182bf88826
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டு. மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான திகதியை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளன் ரி.சிவானந்தராஜா ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு ஏனைய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை சனியன்று மட்டு. ஈ.பி.டி.பி காரியாலயத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு புளொட், ரி.எம்.வி.பி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய அமைப்புகளுக்கும் ஈ.பி.டி.பி அழைப்பு விடுத்துள்ளது. கிழக்கு மாகாண மக்களுக்கான இந்த உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் ஐக்கியப்பட்டு ஒருங்கிணைந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் குடாநாடடில் இதுவரை காலமும் கடத்தப்பட்வர்கள் எங்கே? தினமும் இடம்பெற்று வரும் கொலைகளுக்கெதிராக படையினர் மேற்கொண்ட நடவடிக்ககைள் என்னவென யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியிடம் கேள்வியெழுப்பயுள்ள யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் அராஜகங்கள் முடிவுக்கு வராவிட்டால் புதிய ஆண்டுத் தொடக்கத்திலிருந்து போரட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 'யாழ் குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் படையினரும் அவர்களுடன் சோந்தியங்கும் ஆயுதக்குழுக்களுமே காரணம் என்பதை அனைவரும் நன்கற…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 3.4k views
-
-
கிழக்கைப் போன்று வடக்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்போம் சார்க் சாசனம் வெளியிடும் நிகழ்வில் பிரதமர் சூளுரை கிழக்கைப் போன்று வடக்கினையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்போம். கிழக்கின் உதயம் திட்டத்தை போன்று மிக விரைவில் வடக்கிலும் மேற்கொள்ளப்படும். இதற்கான காலம் வெகு தொலைவிலில்லை என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். பயங்கரவாதத்தின் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கு, கிழக்கு மக்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். நாட்டில் யுத்தமின்றேல் மக்களுக்கான அடிப்படை ????? முழுமையாக முன்னெடுக்க முடிந்திருக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கான சார்க் சமூக சாசனத்தை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள கதிர்காமர் கற்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" நிறுவனம் மீது சிறிலங்கா வான்படை நடத்திய அழிப்புத் தாக்குதலில் மானச்சாவைத் தழுவியோரின் 31 ஆம் நாள் நினைவாக "புலிகளின் குரலின் சிறப்பு ஒலிபரப்பும் மற்றும் காட்சி நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். முகமாலை மற்றும் மன்னார்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வு வானொலியான "புலிகளின் குரல்" நிறுவனம் மீதான சிறிலங்காப் படையினரின் வான் தாக்குதல் மற்றும் ஜயன்கன்குளத்தில் மாணவிகள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று கண்டனப்பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 732 views
-
-
வவுனியா குருமண்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
சிறீலங்கா இனப்பிரச்சனை இந்தியாவிற்கு ஒரு பாடம் சிறீலங்கா இனப்பிரச்சனை தென் கிழக்காசிய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு ஒரு சிறந்த பாடத்தை புகட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரசியல்வாதிகள் ஒரு போதும் இனவாதத்தை தம் இனத்திற்குள்ளே வளர்க்கக் கூடாது. அதன் விளைவு அந்நாட்டை நிரந்தர கண்ணீரில் மூழ்க வைக்கும் என சிறீலங்கா இனப்பிரச்சனையின் அறிவுசார்புடைய எஸ்.டி.முனி அவர்கள் தெரிவித்துள்ளார். பல் இனக் குழுமங்களைக் கொண்டதொரு நாடு இந்தியா. இந்தியாவிலும் ஆங்காங்கே பிரிவினைவாதங்கள் அதிகரித்துள்ளன. அவ்வகையில் சிறீலங்காவின் இனப்பிரச்சனை உலக சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது எனவும், இந்தியாவுக்கு நற்பாடத்தை புகட்டியிருப்பத…
-
- 2 replies
- 2k views
-
-
இன்று காலை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வாவும் அவரது குண்டர்களும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த செய்திப் பணிப்பாளரை தாக்கி விட்டு கூட்டுத்தாபனத் தலைவரின் அறைக்குள் அடாவடியாக நுழைந்துள்ளார். செய்தி அறிந்த ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் அவ் வறை சுற்றி வளைத்த மேவின் சில்வாவை வெளியே செல்ல விடாது தடுத்தனர். நேற்று மாத்தரையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்த்தில் மேர்வினின் பேச்சை நேற்றைய செய்தியில் இடம் பெறச் செய்யாமையே இந்த அடாவடித்தனத்திற்குக் காரணம் என அறியவருகின்றது. பொலிஸார் வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முனைந்த போது ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் மேர்வினைக் கைது செய்யும் படியும் பக்கச் சார்பற்ற விசாரனை ந…
-
- 29 replies
- 5k views
-
-
களுவாஞ்சிக்குடியில் கிளேமோர் தாக்குதல் அதிரடிப்படை வீரர் பலி வீரகேசரி இணையம் இன்று காலை களுவாஞ்சிக்குடி பகுதியில் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பலியானதுடன் 15 வயது சிறுவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. களுவாஞ்சிக்குடி பொது வைத்தியசாலை முன்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டே வெடித்துள்ளது. குறித்த வீதி சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ்,விசேட அதிரடிப்படையினரை இலக்கு வைத்து துவிச்சக்கர வண்டியொன்றில் இக்கிலேமோர் குண்டு பொருத்தி வைக்கப்பட்டிருந்தாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இக்கிளேமோர் தாக்குதலையடுத்து குறித்த பகுதியில் ப…
-
- 0 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு வடக்கே விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் முல்லைத்தீவு வடக்கு வேல் அமுழுவைக்கல் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்ரு காலை 6.10 மணியளவில் ஸ்ரீ லங்கா விமானப்படையினரின் சுப்பர் சோனிக் மிக் ரக மற்றும் கிபிர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் இனங்காணப்பாட இலக்குகுகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.. இன்று காலை விமானத்தாக்குல் நடத்தப்பட்ட பகுதியிலேயே விடுதலைப்புலிகள் போரிற்க்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதகவும் இவ் இலக்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.. இவ் விமானத்தாக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யின் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டி ருந்த பாதுகாப்பும் நேற்று திடீரென வாபஸ் பெறப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாணப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்ட போது, தங்களுக்குக் கிடைத்த மேலிடத்து உத்தரவின் பேரிலேயே இந்தப் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்ததாக என மு.கா. வட்டாரங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான 3ஆம் கட்ட விவாத நேரத்தில் ரவூப் ஹக்கீமுடன், கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் அதிலிருந்து எதிரணிப் பக்கத்திற்குத் தாவியிருந்தனர். அதன் பின்னர் கொழும்பில் மு.காவினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை அரசு உடனடியாக வாபஸ்பெற்ற பின்னர் இப்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள …
-
- 0 replies
- 993 views
-
-
யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தின் ஆறா வது துணைவேந்தராக பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன் நேற்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். கடந்த 17 ஆம் திகதி துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரி யர் சண்முகலிங்கன் நேற்று சமய வழிபாடு களின் பின்னர் துணைவேந்தராக பதவி ஏற்றார். நேற்றுக்காலையில் நல்லூர்க் கந்த சுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட புதிய துணைவேந்தர் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளிடம் ஆசி பெற்றுக் கொண்டார் அதன்பின் முற்பகல் 11.30 மணிக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரன் ஆலயத்தில் நடந்த விசேட பூஜைகளில் பங்குபற்றினார். ஆல யப் பிரதம குருவான சிவஸ்ரீ சோ. இ.பிரண தாத்திகரக் குருக்கள் மாலை சூட்டி ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிழக்கு மாகாணத்தை தன்னுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவுக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டுச் செயற்படும் மஹிந்த அரசு, அதன் முதற்கட்டமாக உள்ளுராட்சித் தேர்தலை அவசர அவசரமாக அங்கு நடத்தத் திட்டமிட்டடுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளது த.தே.கூட்டமைப்பு. அரசின் இந்தச் சதித்திட்டத்திற்கு எதிராக விரைவில் நீதிமன்றம் செல்லத் மதீர்மானித்திருக்கும் கூட்டமைப்பு, அது தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசகைனைகளை நடத்தி வருகின்றது என தெரிய வருகின்றது. 'மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் ஒத்திவைக்கப்ட்டுவந்த 9 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை அரசு கோரியுள்ளது. 'கிழக்கில் அரச துணையுடன் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் கேட்பாரற்று அரங்கேறிவரும் நிலையில் நீதியான - நியாய…
-
- 2 replies
- 1.6k views
-
-
முல்லையில் சிறிலங்கா கடற்படையினர் தொடர் பீரங்கித் தாக்குதல் முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளனர். கடலில் வலைகளை கடற்றொழிலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 6:00 மணிக்கு விடச் சென்றபோது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதலை நடத்தினர். அதேபோல் நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் கரையோரப் பகுதி மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 6:00 மணி முதல் 8:00 மணிவரையும் கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீதும் கடற்படையினர் தாக்குதலை நடத்தினர். http://www.tamilwin.net/
-
- 0 replies
- 1.1k views
-
-
கருணாவின் அக்கரைப்பற்று முகாம் வெடி வைக்கப்பட்டு தகர்ப்பு அம்பாறை அக்கரைப்பற்றில் உள்ள கருணாவின் பிரதான முகாம் ஒன்று வெடிவைக்கப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் முகாமிற்குள் நுழைந்த ஆயுததாரிகள், கருணா குழுவினால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட வயோதிபரை வெளியே செல்லவிட்டு பின்னர் முகாமினுள் குண்டை வெடிக்க வைத்து முகாமை தகர்த்துள்ளனர். குண்டு வெடிப்பினால் முகாம் தகர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
குடத்தனையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படை அதிகாரியின் சடலம் மீட்பு வடமராட்சி கிழக்கில் சிறீலங்கா படை அதிகாரி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி குடத்தனையில் இன்று காலை இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குடத்தனைக் கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரை கண்காணிப்பு காவலரண் அருகே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட படை அதிகாரி லெப்ரினட் பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் கொழும்பு கொண்டு செல்லப்படுகின்றது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகளைக் கண்காணிக்க புதிய விமான தளம் புதன்கிழமை, டிசம்பர் 26, 2007 ராமநாதபுரம்: விடுதலைப் புலிகளின் விமான பலத்தால், தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு தமிழகம் அல்லது புதுவையில் விமான தளத்தை அமைக்க இந்திய கடலோரக் காவல் படை திட்டமிட்டுள்ளது. கிழக்குப் பிராந்திய இந்திய கடலோரக் காவல் படை ஐஜி ராஜேந்திர சிங் ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். பின்னர் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். கடலோரப் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் ராமநாதபுரம் திரும்பிய அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சையில் உள்ள விமானப்படை அதிகாரிகள், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள இந்திய விம…
-
- 3 replies
- 2.8k views
-
-
-
- 5 replies
- 2.7k views
-