ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
லண்டனில் அனைத்துலக மனித உரிமைகள் நாளையொட்டி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 788 views
-
-
[11-12-2007 3.00pm] வடக்கு கிழக்கு மக்களுக்கு தமது அடிப்படை மனித உரிமை கிடைக்காதன் காரணமாக, அதனைப் பெற்றுக்கொள்ளவே அவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்ததாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (டிச.10) அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதம நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார். ''வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தமக்குள்ள அடிப்படை மனித உரிமை அற்றுபோனதை அடுத்தே அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள். யுத்தம் குறையும் அளவிற்கு சமாதானம் அதிகரிக்கும். அடிப்படை மனித உரிமைகள் காக்கப்பட்டாலே அபிவிருத்திகள்…
-
- 2 replies
- 991 views
-
-
செவ்வாய் 11-12-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] யாலவில் விடுதலைப் புலிகளின் தங்குமிடங்கள் யால சரணாலயப் பகுதியில் இன்று காலை சிறீலங்காப் படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் தங்குமிடங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்டதாக படையினர் நம்பும் இந்த தற்காலிக தங்குமிடங்களில் மருந்துப் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர். யாலவில் பல்லாயிரக்கணக்கான படையினர் முடக்கப்பட்டு தொடர் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் காரணமின்றி கைது செய்யப்பட்ட 361 தமிழர்களையும் உடனே பிணையிலிருந்து விடுதலை செய்ய சிறிலங்கா தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 990 views
-
-
யாழ்ப்பாணத்தில் புதன், வியாழனில் சர்வமதத் தலைவர்களின் உயர் மாநாடு விசேட தூதுவர் யசூசி அகாஷியும் வருகிறார் சமாதானத்தைக் கட்டி எழுப்பும் நோக்குடன் சர்வமதத் தலைவர்களின் உயர்மாநாடு எதிர்வரும் புதன், வியாழக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.யாழ். பொதுநூலக கேட்போர் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி கலந்துகொண்டு உரை நிகழ்த்துவார். ஏழு நாடுகளைச் சேர்ந்த மூத்த சமயத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றுவர். மாநாட்டில் பங்குபற்றும் சமயத் தலைவர்கள் இலங்கையில் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்முறைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் சமாதான வழிமுறைகள் மூலம் எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்தும், இதற்கு சர்வதேச ரீதியில் சமயங்களின் நல்…
-
- 3 replies
- 1.3k views
-
-
முழு அளவு யுத்தத்துக்கான முன்னறிவிப்புகள் வருகின்றன 11.12.5007 இக்கட்டான கட்டத்தில் சிக்கியிருக்கும் இலங்கையின் எதிர்காலம் எத்திசை நோக்கியதாக அமையப் போகின்றது? ஓராண்டுக்கு முன் மறைந்த புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தமது கடைசி நூலின் கடைசி அந்தமாக எழுதிய வார்த்தைகள் மேற்படி கேள்விக்கு ஓரளவு பதிலை ஊகிக்கக் கூடிய வாய்ப்பை நமக்குத் தந்திருக்கின்றன. ""இலங்கைத் தீவில் சமாதானத்துக்கு விரோதமாக இயங்கும் சக்திகள் எவை என்பதைச் சர்வதேச உலகம் இன்று நன்கறியும். இந்தச் சக்திகள் பல முனைகளில் இருந்து, பல வழிகளைக் கையாண்டு, அமைதியைக் குலைக்க முனைகின்றன. சமாதானத்திற்கு விரோதமாக இந்தச் சக்திகள் ஏவிவிடும் வன்முறைப் புயலுக்கும் நிழல் யுத்தத்திற்கும் முகம் கொடுத்து, பொறுமைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
செவ்வாய் 11-12-2007 07:20 மணி தமிழீழம் [சிறீதரன்] மருதானையில் 50 மேற்பட்ட நகருக்கு அப்பாலுள்ள வீடுகள் தீயில் நாசம் இன்று காலை மகாவத்தை மருதானை பகுதியில் 50ற்கு மேற்பட்ட நகருக்கு அப்பாலுள்ள வீடுகள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. தற்காலிக எண்ணெய் விளக்கே இத்தீவிபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 09-12-2007 23:41 மணி தமிழீழம் [மகான்] கண்டியில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் நிர்வாணமாக ஓடிய ஆங்கிலேயர் கைது கண்டியில் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டியில் ஆங்கிலேயர் ஒருவர் நிர்வாணமாக ஓடியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ் துடுப்பாட்டப் போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலேயர் தனது ஆடையைக் களைந்து மைதானத்தைச் சுற்றி ஓடியபின்னர் தனது இருக்கையில் இருக்கச் சென்றபோது சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வெளியேற்றப்பட்டதாக கண்டிச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 9 replies
- 2.2k views
-
-
சீனாவிலிருந்து 10 ஆயிரம் மெற்றிக்தொன் கோதுமை மா இறக்குமதி செய்யப்படவுள்ளது. வீரகேசரி இணையம் சீனாவிலிருந்து 10 ஆயிரம் மெற்றிக் தொன் கோதுமை மா அடுத்த வாரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இதனை தற்போதுள்ள விலையைவிட 10 ரூபா குறைவாக விற்பனை செய்யக்கூடியதாக இருக்குமெனவும் வர்த்தக நுகர்வோர் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.கே ரட்னாயக்கா தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியா நிறுவனமும், சீன நிறுவனமும் மிகக் குறைந்த விலையில் பால்மாவை இலங்கைக்கு வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அவுஸ்திரேலியா பால்மா நிறுவனப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமையையடுத்து, மிகக் குறைந்த வி…
-
- 2 replies
- 1.1k views
-
-
அனைத்துலக மனிதஉரிமைகள் தினம் 2007 - சிறீலங்கா இன்று மனிதஉரிமைகள தினம் அரைநூற்றாண்டுகளுக்கு முன்னர் போரின் அழிவுகள் தந்த படிப்பினைகளிலிருந்தும் மற்றும் மனிதநாகரீக வளர்ச்சியின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட அனைத்துலக மனிதஉரிமைகள் சாதசனத்தினை கௌரவித்துப் பிரகடனப்படுத்த மனிதஉரிமைகள் நாள் இது. மிகக் கொடுங்கோன்மையான சிங்கள பேரினவாத அரசினதும், படைகளினதும் ஆக்கிரமிப்பின் கீழ் திட்டமிடப்பட்ட இனஅழிப்பினை எதிர்கொண்டு போராடும் தமிழ் மக்களிற்கு இந்த நாளின் முக்கியத்துவம் அளவற்றது. சர்வதேச சமூகம் தான் ஏற்றுக்கொண்ட மனித விழுமியங்களையும், நாகரீகத்தினையும் கௌரவிக்கும் இன்றைய நாளில் எவ்வாறு சிறீலங்காவின் இனஅழிப்பினை தடுத்துநிறுத்தும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கப் போ…
-
- 0 replies
- 1k views
-
-
வன்னியில் மருந்துக்கு தட்டுப்பாடு வன்னி மாவட்டத்திலுள்ள வவுனியா, மன்னார், புதுக்குடியிருப்பு வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. வைத்திய நிபுணர்களும் இல்லை. ஆகவே, உடனடியாக கவனம் செலுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் சபையில் வேண்டுகோள் விடுத்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் சுகாதாரத்திட்ட குழு நிலை விவாதத்தில் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டபோதும் வசதிகள் இல்லை. குறிப்பாக வைத்தியர்கள் மற்றும் சிற்×ழியர்கள் அங்கு இல்லை. வவுனியா…
-
- 0 replies
- 854 views
-
-
ஐ.நா.வும் ஆர்பரும் இலங்கையை வழிநடத்த வேண்டியதில்லை மன்றில் அமைச்சர் ஜெயராஜ் அறிவிப்பு வீரகேசரி நாளேடு ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பரும் இலங்கையை வழிநடத்த வேண்டியதில்லை. அதற்கான உரிமையும் அவர்களுக்கு கிடையாது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு கூடியதும் வழமையான தின பணிகளின் பின்னர் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகள் குறித்த சர்ச்சையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக யுனிசெப் இன்று (நேற்று) அறிக்கையை வெளியிடவுள்ளது…
-
- 0 replies
- 1.1k views
-
-
யார் இந்த தயான் ஜெயதிலக? -அன்பரசு- அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில் பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்த…
-
- 2 replies
- 2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ஜப்பானுக்கு விஜயம் வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.ஜப்பானிய பிரதமர் யூசுவேக புக்குடாவின் அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி இவ்விஜயத்தினை மேற்கொள்கிறார். இதன்போது இலங்கைக்கும், ஜப்பானுக்குமிடையேயான வரலாற்று உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதோடு ஜப்பானிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அத்தோடு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் இலங்கைக்கு ஜப்பõன் பாரிய அளவில் நிதியுதவி செய்து வருகிறது. இது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளது. 200 இலங்கையர…
-
- 6 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில், யுத்த சூழ்நிழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியமர்த்தப் பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியிடுத்தும் வகையில் திங்கட்கிழமை பேரணி ஒன்று நடந்துள்ளது. இந்தப் பேரணிகளிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திலும், பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்திருந்த மற்றும் மீள்குடியமர்த்தப் பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையிலும் பேரணிகளில் கலந்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை -ஜனாதிபதி வீரகேசரி இணையம் எவ்வறான இடையூறுகள் வந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டோக்யோவிலுள்ள சிக்காவா பிரின்ஸ் ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றதென, சுயலாபம் தேடும் கட்சிகள் பரப்புரை செய்து வருகிறது. மக்கள்…
-
- 0 replies
- 801 views
-
-
Tamil people are facing genocide while the world watches - LTTE Spokesperson for Human Rights and Humanitarian Affairs On this international human rights day, we like to draw the attention of the people of the world to the genocide facing the Tamil people by the Sri Lanka State. Almost every grave human rights violations, described in the human rights instruments of the United Nations, are being violated against the Tamil people by this State. Tamil National Leader, V Pirapaharan, also noted in his annual 2007 Heroes Day speech, “The Sinhala State’s war of genocide destroyed the peaceful life of the Tamils. It turned the Tamils into refugees in their own…
-
- 0 replies
- 927 views
-
-
சிறிலங்காவினால் நாள்தோறும் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றன. எமது விடுதலைப் போராட்டம் கூட தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்ட சூழலிலேயே தொடங்கப்பட்டது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 816 views
-
-
மக்கள் காணாமல் போதலில் சிறீலங்கா முதலிடம் - ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு [Monday December 10 2007 04:34:43 PM GMT] [யாழினி] அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று வெளியிட்ட அறிக்கையில், உலகில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் முதன்மை நாடாக சிறீலங்கா திகழ்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட வேண்டும் எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் பொதுமக்களைப் படுகொலை செய்தல், கடத்திச் செல்லுதல் போன்ற செயற்பாடுகளை அரச படைகளும், ஆயுதக் குழுக்களுமம் மேற்கொண்டு வருவது…
-
- 0 replies
- 739 views
-
-
ஞாயிறு 09-12-2007 23:14 மணி தமிழீழம் [மகான்] தமிழ்நாட்டில் படகு கொள்வனவு முயற்சியில் ஈடுபட்ட மூன்று தமிழர்கள் கைது தமிழ்நாடு மயிலிட்டிபட்டினத்தில் வைத்து ஈழத் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் இரகசிய புலனாய்வுப் பிரிவான கியூ பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஈழத்தமிழரான ஜெயக்குமார் அல்லது கெளரிசங்கர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்கள் படகுகள் கொள்வனவில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இருவர் ஈழத்தமிழர்கள் எனவும் மற்றவர் சென்னையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடம் 4 இலட்சம் ரூபாக்கள் வைத்திருந்தாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?suba…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த் தமிழக உறவுகள் கிளர்ந்தெழுவதை சகிக்க முடியாத இந்திய மத்திய உளவுத்துறை, தமிழக காங்கிரஸ் கட்சியினரை தூண்டிவிட்டு வருவதை தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் பிரபல ஏடான "ஜூனியர் விகடன்" அம்பலப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பலத்தை முழுமையாக அழித்து விடுவதற்காக யுத்த தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பயிற்சி வழங்க செக் குடியரசு தமது படையினரை அனுப்ப முன்வந்துள்ளதாக "லக்பிம" சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.7k views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்காது ஜெயராஜ் பெர்னாண்டோ [sunday December 09 2007 08:27:53 PM GMT] [யாழினி] ஆளும் தரப்பிலிருந்து எவர் எதிர்த்தரப்புக்கு மாறினாலும் வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெறுவது உறுதி. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்காது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை எவராலும் அசைக்க முடியாது. வரவு செலவு திட்டத்தை வெற்றி கொண்டு எமது ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் கூறினார். வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எத…
-
- 2 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு நகரப்பகுதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் சிறார்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும் கடத்திச் சென்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
காங்கிரஸ் கட்சியினரை திகைக்க வைத்த எஸ்.ஆர்.பி.யின் புதிய காய் நகர்த்தல் -கலைஞன்- இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அரசபடைகளால் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகள் போல் சிறைகளிலடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோதும் அதன் வலி தமிழகத்தில் உணரப்படாதது தமிழக அரசியலின் சந்தர்ப்பவாதத்தை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கெதிராக அங்குள்ள இந்தியத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 38 பேர் கைதுசெய்யப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழகமும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் மலேசியாவை விட அருகிலுள்ள இலங்கையில் இந்தியவம்சாவளித் தமிழரும் தமது இரத்த உறவுகளும் ஆயிரக்கணக்கில் ஆண் பெண் பேதமின்றி வயதுவித்தியாசமின்றி கைது …
-
- 4 replies
- 2.1k views
-