ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
திங்கள் 10-12-2007 15:36 மணி தமிழீழம் [சிறீதரன்] மணலாறு களமுனையில் மோதல்: 3 படையினர் காயம் கொக்குத் தொடுவாய் மணலாறு களமுனைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இம்மோதல்களில் சிறீலங்கா படையினர் தரப்பில் 3 படையினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.4k views
-
-
தனது அரசு மனித உரிமைகளுக்கு ஆதரவளி(ழி)ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என மஹிந்த தெரிவித்திருக்கிறார். மனித உரிமைகள் தினத்தை ஒட்டி தாம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலே அவர் இப்படித் தெரிவித்திருக்கின்றார். அந்தச் செய்தியின் முழு வடிவம் வருமாறு :- இவ்வருட மனித உரிமைகள் தினமானது மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டதன் 60வது ஆண்டு பூர்த்தியைக் குறித்து நிற்கின்றது. இது உலகின் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றின் அடிப்படையாக மனித உரிiமைகள் மற்றும் மனித கௌரவம் என்பவற்றுக்கான மதிப்புக் காணப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. மனித உரிமை மீறல்களில் காரணியாகவும் வெளியீடாகவும் வறுமை காணப்படுகிறது என்பதை அங்கீகரிப்பது ம…
-
- 1 reply
- 742 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள முழுமையான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார் என்றும் அதற்கான அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.5k views
-
-
09.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....6874902f0737800
-
- 0 replies
- 1.5k views
-
-
மனித உரிமை மீறல்கள் விசாரணையின் இலட்சணம் [10 - December - 2007] இலங்கையில் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஐக்கியநாடுகள் அனுசரணையுடனான சர்வதேச கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளினால் நீண்டகாலமாகவே வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்ற போதிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அது விடயத்தில் கிஞ்சித்தும் விட்டுக்கொடுப்பதற்குத் தயாராயில்லை. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்கு சர்வதேச ஈடுபாட்டுடனான எந்தவொரு கட்டமைப்பையும் அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த அக்டோப…
-
- 0 replies
- 763 views
-
-
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். கடத்தப்படுகின்றனர். இவற்றுக்கு அரசுதான் பொறுப்புக் கூற வேண்டும். அங்கு ஒவ்வொரு மணித்தியாலமும் தமிழ் மக்கள் கொல்ப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். இது குறித்து, அரசோ அல்லது ஜே.வி.பியோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், கொழும்பில் குண்டு வெடித்தால் மாத்திரம் கொதித்தெழுகின்றனர். அதையே காரணம் காட்டி எமது மக்களைக் கைது செய்து, கூட்டில் அடைக்கிறது அரசு. எங்களைக் கொழும்பில் இருந்து முற்றாக விரட்டியடிக்கவா இந்த அரசு திட்டமிட்டுள்ளது.? யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இந்த அரசிடமில்லை. இந்த நிலையில் தேசியப் பிரச்சினையின் தீர்வாக இடைக்கால நிர்வாகத்தை வழங்குமாறு அமைச்சன் டக்ளசும், …
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரிட்டனில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த அமைப்புக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியொன்றில் அந்நாட்டின் தொழில் கட்சியைச்சோந்த 3 பா.உக்கள் கலந்து கொண்டமைக்கு லண்டனிலுள்ள இலங்கை உயாஸ்தானிகராலயம் தனது கடும் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஆசியாவைச் சேர்ந்தத கீத் வாஸ், வீரேந்திர சர்மா மற்றும் அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை மறைமுகமாக விமர்சித்த வரும் ஜோன் றியான் ஆகிய 3 எம்.பிக்களும் கலந்து கொண்டனர். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக இலங்கை அரசை அடிக்கடி விமர்சித்த வருபவர் கீத்வாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவீரர் தினத்தையொட்டி தமிழ் தேசிய ஞாபகார்த்த அமைப்பின…
-
- 0 replies
- 1.6k views
-
-
3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள். [ஸுன்டய் Dஎcஎம்பெர் 09 2007 08:33:17 ஆM GMT] [யாழ் வாணன்] மன்னார் மாவட்ட யுத்த களமுனைகளில், சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்புச் சமரில் 3 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று தம்பனை களமுனையில் நிகழ்ந்த மோதல்களின் பொழுது, வீரவேங்கை கலைக்குமரன் என்றழைக்கப்படும், வவுனியா வடக்கு கனகராயன்குளம் கரப்புக்குத்திப் பகுதியை சேர்ந்த, சிவஞானசுந்தரம் விஜயானந்தம் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். அதே களமுனையில், கடந்த 3ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களில் விழுப்புண்ணெய்திய, 2ஆம் லெப்ரினன்ட் பொற்கோ என்றழைக்கப்படும், முல்லைத்தீவு வற்றாப்பளையை சேர்ந்த, மோகனதாஸ் திவாகரன் …
-
- 1 reply
- 957 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் நிர்வாகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுகள் அனைத்துமே தோல்வியைத் தழுவியதால் புதிய உத்திகளை சிறிலங்காப் படையினர் வகுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
புதுடெல்லி, டிச.9- விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொல்ல தூதர் உத்தரவிட்டார் என்று அமைதிப்படை தளபதி கூறியதை, ராஜீவ்காந்தியின் செயலாளராக இருந்த ஜி.பார்த்தசாரதி மறுத்து உள்ளார். அமைதிப்படை தளபதி சொல்வதில் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்தார். தளபதி திடுக்கிடும் தகவல் மறைந்த ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது இந்திய அமைதிப்படை தளபதியாக மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் இருந்தார். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில் ஹர்கிரத் சிங், "இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா'' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதில், கடந்த 1987-ம் ஆண்டில் இந்திய அமைதிப்படைக்கு நான் தலைமை…
-
- 3 replies
- 2k views
-
-
ஈழத்தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு கனடா முன்வர வேண்டும் கனேடிய அரசியல் தலைவர்களிடம் ஈழவேந்தன் எம்.பி.கோரிக்கை வீரகேசரி நாளேடு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கனடாவின் அரசியல் அமைப்பினை ஒத்த தீர்வினை ஏற்க நாம் தயாராகவுள்ளோம். ஆனால் இத்தகைய தீர்வினை வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. எனவே ஈழத்தமிழ் மக்களுக்கு உதவ கனடா முன்வர வேண்டும் என்று அந்த நாட்டின் அரசியல் தலைவர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஈழவேந்தன் கோரியுள்ளார். கனடாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட அவர் அந்நாட்டின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின்போதே ஈழவேந்தன் எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார். கனடாவ…
-
- 0 replies
- 819 views
-
-
ஞாயிறு 09-12-2007 23:41 மணி தமிழீழம் [மகான்] வவுனியா ஈச்சம்குளம் மாவீரர் துயிலுமில்லம் சேதமாக்கப்பட்டுள்ளது வவுனியா ஈச்சம் குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல மதில்கள் சிறீலங்காப் படையினரால் உடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாவீரர் துயிலுமில்ல சமாதிகளும் சிதைவடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
மகனின் பட்டமளிப்பில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த லண்டன் செல்வார் வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய றோயல் கடற்படை கல்லூரியில் நடைபெறவுள்ள மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 12 ஆம் திகதியளவில் லண்டன் செல்லவுள்ளார். மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் ஜப்பானை சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு லண்டன் செல்லவுள்ளார். பிரித்தானிய றோயல் கடற்படை கல்லூரியில் ஒருவருட பயிற்சியை பூர்த்தி செய்துகொண்டு வெளியேறும் ஜனாதிபதியின் மகன் யொசித்த ராஜபக்ஷவின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணா…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் அரசின் துணை ராணுவக் குழுவான "துரோகி பிள்ளையான் குழு" நாளை மட்டக்களப்பில் ஊர்வலம் ஒன்றை நடத்தப் போகிறதாம். புலிகளை கண்டிக்கும் மகஜர் ஒன்றை அரச செயலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல். இதற்காக துப்பாக்கி முனையிலும், துன்புறுத்தல்களினூடாகவும் சில பொதுமக்களை திரட்டி வருவதாக அதன் பேச்சாளர் என்று கூறிக்கொள்ளும் ஒரு வால் கூறியிருக்கிறது. நன்றி-பதிவு.
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது வேண்டுமென்றே சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வடக்கில் போரைத் தீவிரப்படுத்துவதா? தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதா? [09 - December - 2007] -விதுரன்- தெற்கில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அரசை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. வடக்கில் புலிகளின் கடும் சவால்களை படையினர் சந்தித்து வருகையில் கொழும்பிலும் தெற்கிலும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலானது வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகளை பெரிதும் பாதித்து விடலாமென்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கில் தனது முழுப் பலத்தையும் பிரயோகிக்க முனைகிறது. விமானக் குண்டுவீச்சுக்கள், பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள், ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களென வடபகுதி தினமும் சின்னாபின்னமாகின்றது. அச்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னி மீதான இராணுவ முற்றுகையும் தெற்கில் அதிகரிக்கும் நெருக்கடிகளும் -அருஸ் (வேல்ஸ்)- கொழும்பில் தங்கியிருந்த தமிழ் மக்களை இலங்கைப் படையினர் ஆயிரக்கணக்கில் கைது செய்ததும், நூற்றுக்கணக்கில் தடுத்து வைத்திருப்பதும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகள் கூட மதிக்கப்படாத இந்த நடவடிக்கை குறித்து தங்களை ஜனநாயகத்தின் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதனை உலகில் வாழும் தமிழ் இனம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. கண்டனங்கள், கவலைகள் ஒரு போதும் அரசின் இதே போன்ற எதிர்கால நடவடிக்கைகளை தடுக்கப் போவதில்லை. இலங்கை அரசைப் பொறுத்த வரையிலும் த…
-
- 0 replies
- 991 views
-
-
பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற நிலைப்பாட்டில் அனைத்துலகத்தின் முன் சந்தி சிரித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இப்போது உள்நாட்டில் ஊடகங்களால் "வறுத்தெடுக்கப்பட்டு"க் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 977 views
-
-
சிறிலங்காவின் பொலநறுவப் பிரதேசம் கதிரவெளியில் சிறிலங்கா இராணுவத்தினரால் 122 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 914 views
-
-
துடுப்பாட்டத்தில் அனைத்துலக சாதனை புரிந்த முத்தையா முரளிதரன் என்ற முரளிக்கு சிறிலங்கா அரச தலைவரான மகிந்த ராஜபக்ச அன்பளிப்பாக வாகனத்தின் சாவியை வழங்கும் புகைப்படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.6k views
-
-
லண்டனிலிருந்து வந்தவரை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு வவுனியா சென்ற வான் மூவருடன் கடந்த வியாழக்கிழமை இரவு காணாமல் போய் உள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியான பிரசாத் காரியவம்சம் நியமிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 874 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலமானது சிறிலங்காவின் சிறுபான்மை கட்சிகளிடம் உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 785 views
-
-
மாத்தரை கப்புறுப்பிட்டி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் 12:15 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரால் தீயை கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியாததனால் கடற்படை ,வான்படை தீயணைப்புப் படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவும் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தவித உயிர்ச் சேதமும் இல்லை எனவும் அறியப்படுகின்றது. ஆயினும் அருகிலிருந்த கடைத் தொகுதிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது. சூரிய கிரகணமா? விபத்தா என்பது இன்னும் தெரியவரவில்லை. ஜானா
-
- 2 replies
- 2.5k views
-
-
கெப்பிட்டிகொல்லாவ மற்றும் வெலி ஓயாவிற்கு இடையில் இயக்கப்படும் பயணிகள் பேரூந்துகளை கிளேமோர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பேரூந்துகளுக்கு இரும்புக் கவசங்களைப் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.7k views
-