ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
சிறிலங்காவின் பேதுருதாலகல மலையில் பழுதடைந்த ராடாரை சீரமைக்க போதுமான நிதி இல்லை என்று சிறிலங்கா வானூர்தித்துறையினர் புலம்புவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 747 views
-
-
ஞாயிறு 14-10-2007 17:54 மணி தமிழீழம் [மதுசன்] மன்னார் விடத்தல் தீவை நோக்கி படைநடவடிக்கையை மேற்கொள்ளலாம்-ஆங்கில நாளேடு. மன்னார் விடத்தல் தீவைநோக்கி படையினர் பாரிய படைநடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் என ஆங்கில நாளேடான தநேசன் நாளிதழ் தனது ஆய்வில் எதிர்வு கூறியுள்ளது. நீண்ட கால நோக்கில் அடிப்படையில் மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ்.குடா நாட்டிற்கான பாதையைத் திறப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாகவும் இதன் மூலம் தென்மேற்கு கடற்பகுதியூடான புலிகளின் விநியோகத்தை முடக்கலாம் என சிறீலங்கா அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மன்னார் விடத்தல் தீவைநோக்கி படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் எனவும் இதற்கான ஏற்பாடுகளை கவனிக்கவே சிறீலங்கா தரைப…
-
- 0 replies
- 855 views
-
-
ஞாயிறு 14-10-2007 17:38 மணி தமிழீழம் [மதுசன்] மண்டைதீவு கடற்பகுதியை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதல். மண்டைதீவு கடற்பகுதியை நோக்கி சிறீலங்காப் படையினர் கடுமையான எறிகணைத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடக்கம் சரமாரியான ஆட்லறித் தாக்குதலை இக் கடற்பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு தொடக்கம் யாழ்.கோட்டை,குருநகர் படைமுகாமில் இருந்து பூநகரி பகுதியை நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதனிடையே இன்று காலை தொடக்கம் மண்டைதீவிற்கான வெளித்தொடர்புகள் யாவும் படையினரால் துண்டிக்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 863 views
-
-
ஞாயிறு 14-10-2007 17:27 மணி தமிழீழம் [மதுசன்] களமுனைக்கேற்ப பொதுமக்கள் விழிப்புடன் செயற்பாடவேண்டும்-தளபதி கலையழகன். தற்போதுள்ள களயதார்தத்தைப் புரிந்து கொண்டு பின்கள மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் என வட களமுனைத் தளபதிகளில் ஒருவரான கலையழகன் தெரிவித்துள்ளார். நேற்று வடபோர்முனை கட்டளைப் பணியகத்தில் விசுவமடு கோட்ட மக்கள் களமுனைப் போராளிகளை சந்தித்து போராளிகளிற்கு உலர் உணவுகளை வழங்கிய போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். களமுனையில் போராளிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்குடன் எதிரியுடன் பெரும் போர் புரிவதைப் போன்று பின்கள மக்கள் விடுதலைப்பற்றுடன் செயற்பாடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.களமுனையில் பொது…
-
- 0 replies
- 902 views
-
-
தமிழீழம் பெரும் போரை சந்திக்கத் தயாராகி வருகின்ற இவ்வேளையில் தமிழீழத்திலேயே வாழ்ந்து தங்கள் மண்ணின் விடிவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள போராளிகளின் மக்களின் மன மகிழ்வுக்காக போர்க்கால இசை விருந்து என்ற கலை கலாசார நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. அந்த நிகழ்வில் சங்கிலியன் என்ற வரலாற்று நாடகமும் மேடையேற்றப்பட்டது. அந்த நிகழ்வின் மேடையமைப்பில் சிவபெருமான் நடனமாடும் பின்னணி ஓவியமும் வைக்கப்பட்டிருந்தது தமிழர்களின் கலாசார வெளிப்பாட்டோடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை புலிகளின் குரல் ஏற்பாடு செய்திருந்தது. எமது விடுதலைப் போராட்டம் எந்த மத உணர்வாளர்களையும் மிதித்துக் கொண்டு மக்களின் மத உணர்வுகளை கிழித்தெறிந்து கொண்டு நடை போட முனையாமல்.. கலை கலாசார பி…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஞாயிறு 14-10-2007 02:36 மணி தமிழீழம் [சிறீதரன்] கருணாவின் வீடு ஹாட்போட்சியரில் சிறீலங்காவின் கருணா கூலிக்குழுவின் தலைவர் கருணா பிரித்தானியாவில் தங்கியுள்ளதாக கொழும்பு நாளிதல் தகவல் வெளியிட்டுள்ளது. ஈ.பி.டி.பி யின் தலைவர் டக்லஸ் தேவானந்தா அவர்களால் சிறீலங்கா அரசாங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட அழுத்தத்தையடுத்தே கருணா பிரித்தானியாவில் ஹாட்போட்சியரில் தங்கியுள்ளதாக தெரியவருகிறது. இக்கூலிக்குழுவுக்கு மற்றொரு வீடு சிறீலங்கா அரசாங்கத்தால் கிழக்கு இலண்டனில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 1 reply
- 2.1k views
-
-
மனித உரிமைகளுக்கான காவல்துறை அதிகாரியாக செயற்படாதீர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பருக்கு மகிந்தவின் இளைய சகோதரரும் அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச "அறிவுரை" கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 762 views
-
-
இந்தியா சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அந்நாட்டு பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 580 views
-
-
வெலிக்கடைச் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் இன்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 796 views
-
-
32 மீனவர்கள் கடற்படையினரால் கைது Written by Seran - Oct 14, 2007 at 02:23 PM யாழில் நேற்று சந்தேகத்தின் பேரில் மீனவர்கள் 32பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கடல் நீரேரியில் நேற்று சனிக்கிழமை காலை கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் திடீரென்று இடம்பெற்ற கடற்சமரையடுத்து அங்கு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குருநகரைச் சேர்ந்த 32 கடற் தொழிலாளர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றுக் காலை 7 மணிக்கு உரிய அனுமதியைப்பெற்று கடலுக்கு சென்ற குறிப்பிட்ட கடற்தொழிலாளர்களைக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்த கடற்படையினர் குருநகர் இறங்குதுறைக் கடற்படை முகாமில் தடுத்துவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரஸ்தாப…
-
- 0 replies
- 718 views
-
-
லூயிஸ் ஆர்பரின் வருகையால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை Written by Seran - Oct 14, 2007 at 11:47 AM ஐ.நாவின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதி லூயிஸ் ஆர்பரின் வருகையால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவனேசன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் வருகையின் மூலம் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவனேசன் கிளிநொச்சியில் வைத்து வீரகேசரிக்கு தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை படுகொலைகளை நிறுத்துமாறு முதலில் அரசுக்க…
-
- 0 replies
- 620 views
-
-
http://www.glumbert.com/media/battlespecies Thanks: http://www.sangam.org/discuss/2572 காட்டின் ராஜா தலைவன் என்று எங்களுக்கு ஊட்டிவழக்கப்பட்ட perception எப்படி உடைகிறது 1 நிகழ்வை பார்க்கும் போது? சிங்கம் கூட தனிய இல்லை எண்ணிக்கை குறைவு என்றாலும் கூட்டமாகத்தான் நிக்கிறது. 1 சிங்கம் கொம்பில் அகப்பட்டு காற்றில் தூக்கி வீசப்படுகிறது. கிட்டத்தட்ட சுற்றி வளைக்கப்படுகிறது ஆனால் தப்பியோட வழிவிடப்படுகிறது கன்று மீட்கப்படுகிறது இறுதியில் சிங்கங்கள் துரத்தப்படுகிறது.
-
- 6 replies
- 2.9k views
-
-
Posted on : 2007-10-14 அதி அவசரம்தான் ஏனோ? வடக்கில் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் களை நடத்துவதற்கென நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட சட்ட மூலம் அரசமைப் புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள 33 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக இந்த விசேட சட்டமூலம் அண்மையில் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, உயர் நீதிமன் றத்தின் கருத்தைப்பெறுவதற்காக சபாநாயகர் அதனை அங்கு அனுப்பி வைத்திருந்தார். குறிப்பிட்ட திருத்தச் சட்ட மூலம் விசேட ஏற்பாடுகள் அரசமைப்புக்கு முரணானவை அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது உள்ளுராட்சி அதிகாரசபையின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இனி நாடாளு மன்றத்தில் விவாத…
-
- 0 replies
- 1.2k views
-
-
வானுக்குள் இருந்த இருவர் சந்தேகத்தில் கைது வீரகேசரி வாரவெளியீடு சந்தேகத்திற்கிடமான "வான்' ஒன்றினை சோதனையிட்ட வத்தேகம பொலிஸார் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளன
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளும், அரசும் பெரும் சமருக்கு தயாராகி வருகின்றனர்: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும் பெரும் சமர் ஒன்றிற்கு தம்மை திரைமறைவில் தயார்படுத்தி வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டின் பாதுகாப்பு நிலவரத்தின் ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விபரங்களுக்கு
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் அட்டூழியத்தால் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 895 views
-
-
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.6k views
-
-
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கு கூட்டுதாபனத்துக்கு பேட்டி வழங்கிய உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக பேசிய மனோ என்னும் உறவு சொன்னார் அதிலும் கிசோர் எம்பி அவர்கள் மோசமாக நடந்ததாகவும் உண்ணாவிரதிகளின் மனநிலையை குழப்பும் விதமாக கருத்துகளை சொன்னதாகவும் அவர் சொன்னார் அண்மைகாலமாக கிசோர் எம்பி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவதும் கவனிக்கதக்கது பேட்டியை கேட்க இங்கே அழுத்துங்கள்
-
- 7 replies
- 3.6k views
-
-
சனி 13-10-2007 23:59 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் மணலாறு மாவட்டத்தில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், 2ஆம் லெப்ரினட் சதீஸ்குமார் என்றழைக்கப்படும் கொக்குத்தொடுவாய் கயாட்டிக்குளத்தை நிலையான முகவரியாகவும், புதுக்குடியிருப்பு சின்னக் கைவேலியை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த, வேலு சதீஸ்குமார் என்ற தமிழீழ தேசிய துணைப்படைப் போராளி, வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளார். மன்னார் கட்டையடம்பன் பகுதியில், நேற்று சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில், வீரவேங்கை சந்தனச்சுடர் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த, தில்லைநாதன் ரமேஸ் என்ற போராளி களப்பலியா…
-
- 0 replies
- 1.7k views
-
-
சனி 13-10-2007 13:57 மணி தமிழீழம் [மயூரன்] வன்னி முன்னரங்க நிலைகளின் மோதல்: படைத்தரப்பில் இருவர் பலி! நான்கு பேர் காயம் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்க நிலைகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு மோதலின் போது சிறீலங்காப் படைகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டு மேலும் நான்கு பேர் காயங்களுக்க உள்ளாகியதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 947 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....dca429e7d70bc6c
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட லூயிஸ் ஆர்பர் இன்று வெலிக்கடை செல்கிறார் 13 - October - 2007 ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் இன்று சனிக் கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடவுள்ளார். கடந்த 9 ஆம் திகதி இலங்கை வந்த லூயிஸ் ஆர்பர் ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசியிருந்தார். அத்துடன் கடத்தப்பட்டோர், காணாமல் போனோரின் உறவினர்களை வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்திருந்த ஆர்பர் நேற்று யாழ். குடா நாட்டுக்கும் சென்றிருந்தார். இதேநேரம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய வந்த லூயிஸ் ஆர்பர் எவ்வித வி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பேரினவாத சக்திகளினால் விரும்பப்படாத லூயிஸ் ஆர்பரின் இலங்கை வருகை [13 - October - 2007] காலகண்டன் * மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனை நியாயப்படுத்தியே ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் பேரினவாதப் புத்தி ஜீவிகளும் பரப்புரை செய்து வருகின்றனர். அரசாங்க சார்பு பேரினவாத ஊடகங்களும் அதனைப் பிரசாரப்படுத்தியும் வருகின்றன. அரசாங்கப்படையினரால் அல்லது அவர்களது முகவர்களால் அடையாளம் காட்டப்படாத விதத்தில் கொலைகள் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றை எல்லாம் மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே அவர்களது நியாயமாக உள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் அ…
-
- 0 replies
- 831 views
-
-
ஏ9 பாதையைத் திறக்க வேண்டும்- யாழ் பிரஜைகள் பிரமுகர்கள் Written by Seran - Oct 13, 2007 at 09:30 AM யாழ்ப்பாணத்தின் பொருளாதார நிலைமை மற்றும் மனித உரிமை விடயம் ஆகியன மிகவும் மோசமடைந்தது, சிறிலங்கா அரசால் ஏ9 பாதை மூடப் பட்ட பின்னர்தான். மீண்டும் குடாநாடு வழமை நிலைக்கு திரும்புவதற்கு ஏ9 பாதை யைத் திறப்பதே ஒரே வழியென தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வந்த ஐ.நாவின் மனித உரிமை களுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர் பரிடம் மேற்கண்டவாறு எடுத்துரைக்கப் பட்டது. யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று நண் பகல் 12.30 மணிக்கு யாழ். பிரசைகளின் பிர முகர்கள் ஐ.நா. ஆணையாளரைச் சந்தித்துப் பேசினர். அப்போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் இ.…
-
- 0 replies
- 707 views
-
-
Posted on : 2007-10-13 இலங்கையில் அமைதி திரும்ப மேற்குலகப் பங்களிப்பு அவசியம் மோசமடைந்துவரும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுவரும் பல்வேறு தரப்புகளும் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அசிரத்தைப் போக்கை உதாசீன செயற்பாட்டை தொடர்ந்தும் கண்டித்தும், விமர்சித்தும், ஆதங்கம் தெரிவித்தும் வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இலங்கை நிலைமை தொடர்பாக சர்வதேச பிரசித்திபெற்ற அமைப்பான "றோய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனமும் அதன் அண்மைய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 548 views
-