ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
புலிகளுக்கு இன்னும் பாடம் புகட்டுவோம் என்கிறார் கோதாபய ராஜபக்ஷ `எந்தவிதமான கலாசாரமும் தெரியாதவர்களிடம் மனித உரிமைகள் தொடர்பாக கற்க வேண்டிய தேவை தமக்கில்லையெனத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 4, 5 மணித்தியாலங்கள் மட்டும் இலங்கையில் இருந்துவிட்டு மனித உரிமைகள் மீறப்படுகின்றன, அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட முடியாதுள்ளதென கூறும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை' என்றும் கூறினார். தனியார் தொலைக்காட்சி சேவையான `தெரண'வுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியதாவது; "எமது நாட்டில் ஒரு பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினைகளினால்…
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை இந்தியா தடுத்து நிறுத்தவேண்டும் * தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது -பி.ரவிவர்மன் - இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணத்தை தனித்தனியாக பிரித்து கிழக்கு மாகாணத்தில் தேர்தலொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அர சாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியாவை வலியுறுத்திக் கோரப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பின…
-
- 3 replies
- 1.2k views
-
-
மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு விசனம் யுத்தத்தால் இலங்கைக்குள் இடம் பெயர்துள்ள ஆயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் அவல வாழ்வில் உழன்று கொண்டிருக்கின்றனர். இதே தருணத்தில் முன்னைய வதிவிடங்களுக்குச் செல்லுமாறு தமது விருப்பத்துக்கு மாறாக இம்மக்கள் நிர்ப்பந்திக்கபட்டு வருகின்றனர். இவ்வாறு மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளளது இந்த அகதிகள் உள்நாட்டுக்குள் இம் பெயர்ந்த நபர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளளார்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் பிரத்தியேக செய்தியுடன் வன்னி செல்கிறார் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்: கொழும்பு இணையத்தளம் [திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007, 18:57 ஈழம்] [க.திருக்குமார்] இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான ஜெகத் அபயசிங்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்புச் செய்தியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்திக்க வன்னிக்கு இன்று செல்வதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் ஜெகத் அபயசிங்க, அனுராதபுரத்தில் உள்ள தமது கிளை அலுவலகத்திற்கு இன்று திங்கட்கிழமை சென்றுள்ளதாகவும், ஆனால் அவர் அங்கிருந்து வவுனியா செல்வாரா என்பது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மகேஸ் ஜெயசிங்க தெரிவித்துள்ளார் …
-
- 1 reply
- 1.5k views
-
-
பொருளாதார நெருக்கடியால் சிறிலங்கா அரசின் படை நடவடிக்கை பாதிப்பு: "லக்பிம" வார ஏடு பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மூத்த படை அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம் போன்ற காரணிகள் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமற்ற போர் நிறுத்தத்திற்கு இணங்கியதனால் கடந்த வாரம் வன்னி களமுனை அமைதியாக இருந்தது. எனினும் இந்த அமைதி ஆபத்தானதாக இருக்கலாம். இரு தரப்பும் தாக்குதலுக்கு தயாராக உள்ளபோதும் யார் முதலில் தாக்குதலை ஆரம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ், முஸ்லிம்களை பொலிஸ் புலனாய்வு பிரிவில் இணைக்க செங்கலடியில் நேர்முக பரீட்சை - நியமனம் பெற்றதும் யாழ்பாணத்தின் யுத்த முனையில் வேலை. ஜ செவ்வாய்கிழமைஇ 21 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் இழைஞர்களை இனைத்து காவல்துறை நிர்வாக சேவையினை மேலும் உளவுத்துறை தொடர்பில் வினைத்திறன் மிக்கதாக மாற்றும் விதத்தில் காவல் திணைக்களம் நடவடிக்கைகள் பலவற்றினை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்புப் பிரதேச உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் பொருட்டு தமிழ் - முஸ்லிம் காவல் உத்தியோகத்தர்களை புதிதாக உளவுத்துறைப் பிரிவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளை காவல் சேவையில் சேர்த்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கள் 20-08-2007 20:50 மணி தமிழீழம் மயூரன் தாய்லாந்திருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் சிறீலங்காப் படையினரால் சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் சிறீலங்கா விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா குற்றத் தடுப்பு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவேவேளை இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாய்லாந்தில் ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஸ்தாபனத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த போதும் இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பபதாகத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஓமந்தை மேற்கு மோதலில் 8 புலிகள் பலி- ஊடக மத்திய நிலையம் நிஷாந்தி வவுனியா ஓமந்தை மேற்கே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரகேசரி
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 5 replies
- 1.9k views
-
-
புதிய உலக ஒழுங்கில் பூர்விக தேசிய இன விடுதலை -சி.இதயச்சந்திரன்- இலங்கை விவகாரத்தில் தலையிடும் நாடுகள் அனைத்தும், தமிழ் மக்களை தேசிய சிறுபான்மையினமாக அரசு கூறுவது போன்று கருதுவதே தற்போதைய சிக்கல் நிலைமைக்கு பெருந்தடையாகவுள்ளது. தேசிய இனம் (Nation) என்கிற வரையறைக்குள் தமிழ் மக்களை உள்ளடக்கினால் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு விடுமென்ற அச்சமே 'சிறுபான்மையினர்" என்ற சொல்லாடலை பயன்படுத்தத் தூண்டுகிறது. தேசிய இனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பொதுப்பண்புகளான தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரே மொழி, கலாசாரம், தொன்மை போன்றவை தமிழ் மக்களிடம் அமைந்திருந்தும் இறையாண்மை என்கிற ஆக்கிரமிப்புச் சிறைக்குள் அவர்களை அடைத்தலே பிராந்திய …
-
- 0 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை 20 ஓகஸ்ட் 2007 16:33 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் வவுனியாவில் சிறிலங்கா ஊர்காவற் படையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா உலுக்குளம் சுமதிபுரப் பகுதியில் உள்ள வீதித்தடையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. இந்த வீதித்தடையில் நின்றிருந்த சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் ஊர்காவற் படையினர் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படையினரின் ஆக்கிரமிப்பு சிங்களக் குடியேற்றப்பகுதியில் ஜீப்பில் ஆயுதங்களுடன் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி வீதித்தடையை நெருங்கியதும் ஊர்காவற் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குஅரசாங்கம் என்றுமே தயாராக இருக்கிறது வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் என்றுமே தயாராக இருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார். ஆறாவது தெற்காசிய பிராந்திய ஊடக (சப்மா) மாநாடு கடந்த இரு தினங்களாக கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அம்மாநாட்டின் இறுதி அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நேற்றுமாலை உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.. ஊடகம், சமாதானமும் வறுமை ஒழிப்பும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோரின் உரையை கவனமாக அவதானித்த பின்னர் அமைச்சர் உரையாற்றினார். அந்த உரைய…
-
- 2 replies
- 981 views
-
-
10 வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் வாடும் 33 இந்தியர்கள் [19 - August - 2007] தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 இந்தியர்கள் செய்யாத குற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடுவதாக பொன்னானியைச் சேர்ந்த அஷ்ரப் இலங்கையில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பொன்னானியை அடுத்து மரக்கடவையைச் சேர்ந்த பி.அஷ்ரப், ஆன்டனி சுதி (கேரளா), மரியா ஜான் (தூத்துக்குடி) உள்ளிட்ட பலர் இலங்கைச் சிறைகளில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று இலங்கை நீதிமன்றம் அறிவித்த எம்.சண்முக சுந்தரம் (கேரளா), எஸ்.எம்.புகாரி (திருச்சி) , என்.தங்கவேல் (மதுரை) உள்ளிட்ட பலருக்கு இலங்கை நீதிமன்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
Aug 18, 2007 at 09:15 AM இலங்கை செஞ்சிலுவைச்சங்கப்பணியாளர்
-
- 4 replies
- 1.1k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007, 06:59 ஈழம்] யாழ். மாவட்டத்தில் உள்ள முன்னணி பாதுகாப்பு நிலைகளின் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் படைவலு அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலக்குகளான படை உயர் அதிகாரிகளை பீரங்கித் தாக்குதல் முலம் குறிவைப்பதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசி…
-
- 1 reply
- 765 views
-
-
மனித உரிமைகளை மதிக்க வேண்டுமாம்- பெருமளவு மக்களை செம்மணியில் புதைத்த முன்னாள் இராணுவத் தளபதி ஜனக பெரேரா சொல்கிறார் மனித உரிமைகளை கருத்தில் கொள்ளாது, மக்களின் ஆதரவுகள் இன்றிப் போரை வெல்ல முடியாது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றின் முன்னாள் தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். இவரது காலப் பகுதியில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், செம்மணியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய…
-
- 2 replies
- 886 views
-
-
Posted on : 2007-08-20 தமிழர் அபிலாஷையை உள்வாங்கி தீர்வுத் திட்டத்தை தயாரியுங்கள்! திடீரென காலவரையறை குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தை மீண்டும் நாளை கூட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகக் கொழும்பில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுத் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த இணக்கம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் உத்தேச யோசனைத் திட்டம், பௌத்த - சிங்களக் கடும்போக்காளர்களான பேரின வாதத் தலைவர்களைத் திருப்திப்படுத்…
-
- 0 replies
- 966 views
-
-
பட்டப்பகலில் கடத்தல்கள் வடக்கில் தொடர்கின்றன! பாதுகாப்பு இல்லையென்ற உணர்வுடன் கிழக்கு மக்கள் வடக்கில் தொடர்ந்தும் பட்டப் பகலில் ஆள்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக மூன்று முறைப்பாடுகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடைத்துள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் மன்னாரில் கப் பம் பெறுதல், இடையூறு செய்தல் தொடர்பாக 9 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் வாராந்த அறிக்கையில் (ஓகஸ்ட் 6 ஓகஸ்ட் 12) இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை ஆவன கண்காணிப்புக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் படி, வடக்கில் ஆட்கடத்தல்கள் பட்டப் பகல் வேளைகளில் ஒழுங்கு முறையாக நடைபெற்று வரு கின…
-
- 0 replies
- 708 views
-
-
அரசியல் தீர்வு யோசனையை ஜனாதிபதி ஐ.நாவில் முன்வைத்து உரையாற்றுவார் சர்வதேச ஆதரவைக் கோரும் நோக்குடன் அடுத்த மாதம் 23ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 62ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமது அரசு முன்வைக்கும் திட்டம் குறித்து சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைப்பார் எனக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த யோசனைத் திட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்புகளை பேச்சு மேசைக்குக் கூட்டி வருவதற்கு ஒத்துழைக்குமாறு சர்வதேச சமூகத்தை அவர் கோருவார் என்றும் கூறப்படுகின்றது. மாகாண மட்டத்துக்கு அதிகாரப்பகிர்வு உட்பட …
-
- 0 replies
- 735 views
-
-
புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்க்குஅமைச்சர் திஸ்ஸ வித்தாரண முயற்சி வீரகேசரி நாளேடு ஹெல உறுமய குற்றச்சாட்டு; மன்னிப்பு கோரவும் வலியுறுத்தல் சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை. மாவட்ட ரீதியாக அதிகாரங்களை பகிர்வதற்கு சர்வ கட்சி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக திஸ்ஸ விதாரண வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையில் புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்கு அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் அவர் பின்னணியில் செயற்படும் வெளிநாட்டு சக்தியி…
-
- 1 reply
- 993 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கிமூன் மீதும் தனது கீழ்த்தரமான தாக்குதலை சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெனார்ண்டோப் புள்ளே தொடுத்துள்ளார். இது தொடர்பாக த நேசன் இதழுக்கு வழங்கிய நேர்காணல் Jeyaraj slams Ban Ki-moon By: Rathindra Kuruwita Courtesy: The Nation - August 19, 2007 Senior government Minister Jeyaraj Fernandopulle yesterday launched a scathing attack against United Nation’s Secretary General Ban Ki-moon, declaring that he did not give a ‘damn’ about whatever that ‘foreigner’ (Ki-moon) had to say. In yet another of his regular verbal harangues, Fernandopulle, who is also the Chief Government Whip, told The Nation, “I don’t give a…
-
- 4 replies
- 1.6k views
-
-
சனி 18-08-2007 22:29 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் குடாநாட்டில் படை அதிகாரிகளுடன் கோட்டபாய ராஜபக்ச சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் உயர் படைத் தளபதிகள் குழு யாழ் குடாநாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் பலாலி கூட்டுப் படைத்தளத்திற்கு சென்ற கோட்டபாய ராஜபக்சவை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ கைலாகு கொடுத்து வரவேற்றுள்ளார். கோட்டபாய ராஜபக்சவுடன் கூட்டுப்படைத் தளபதி எயார் மார்'ஷல் டொனால் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா உடன் இருந்தார்கள். அத்துடன் யாழ் மாவட்டத்தின் கட்டப் பீடமாக விளங்கும் பலாலி கூட்டுப்படைத் தளத்தில் படை அதிகாரிகளை…
-
- 3 replies
- 2.1k views
-
-
புலிகளின் விமானம் குறித்து திருவனந்தபுரத்தில் முக்கிய கூட்டம் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து விமானப் படையின் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏழு "கமாண்ட்' பிரிவுகளின் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள் தகவல் தருகையில், புலிகளின் வான்வழித் தாக்குதல் இலங்கை இராணுவத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது. புலிகளின் விமானப் படை குறித்து இந்திய விமானப் படை முதல் முதலில் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளது. திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏ…
-
- 2 replies
- 1.8k views
-
-
கடற்படையின் பலம் அதிகரிக்கப்படுகிறதா? -விதுரன்- வடக்கே களமுனையில் சற்று மந்த நிலையே காணப்படுகிறது. எவ்வேளையிலும் பெரும் போர் வெடிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட பகுதி கடந்த வாரம் முழுவதும் மிகவும் அமைதியாகவேயிருந்தது. பாரிய மோதல்களோ, சிறுசிறு நகர்வுகளோ கூட இடம்பெறவில்லை. வடக்கு - கிழக்கில் பருவ மழை பொழியத் தொடங்கப் போகிறது. கடும் மழைபெய்யும் பட்சத்தில் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. அத்துடன், கிழக்கில் பெரும் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதால் அங்கு ஆளணியை முடக்க வேண்டிய கட்டாய நிலை படையினருக்கேற்பட்டுள்ளது. பருவமழையும் ஆளணிப் பற்றாக்குறையும் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாததொரு சூழ்நிலையை அரசுக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
"யார் பயங்கரவாதிகள் என்பதை இனியாவது உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்"விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அவர் பயங்கரவாதி எனவும் சிறீலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க அவர் முயல்கிறார் எனவும், விடுதலைப் புலிகளிடமிருந்து ஹோம்ஸ் கையூட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மிகக்காட்டமாக இந்த ஐ.நா அதிகாரியை திட்டியிருக்கிறார். ஜோன் ஹோம்ஸ் சிறீலங்காவிற்கு வருகை தருவதற்கு முன்பாகவே அவர் தனது பயணங்களின் முடிவில் கூறப்போகும் கருத்துக்கள் குறித்து அரசதரப்பு கவலை கொள்ளத் தொடாடங்கி விட்டது. அவர் செல்லும் இடங்களில் யார் யாரைச் சந்திக்கவேண்டும் யார் யாரைச்சந்திக்கூடாது என்பதில் ஒரு திட்டமிடலை அரச தரப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். ஊடங்களுக்கு அவர் தெரிவிக…
-
- 0 replies
- 992 views
-