Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.yarl.com/videoclips/view_video....4c4cf38708677c4

  2. சிறிலங்கா காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் சட்டம் நிறைவேற்றம் [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:35 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் குற்றவியல் சட்டமூலத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து 48 மணி நேரம் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இந்த சட்டத்தையே மாற்றி 48 மணிநேரம் வரை ஒருவரை காவல்துறையினரின் காவலில் வைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்…

  3. 500 மில்லியன் டொலரை கடனாகப் பெற முடிவு: சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:20 ஈழம்] [கொழும்பு நிருபர்] 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 13 வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தும், இரண்டு உள்நாட்டு வங்கிகளிடமிருந்தும் கடனாகப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை கூடியபோது வாழ்க்கைச் செலவு குறித்து எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரை நிகழ்த்தினார். அந்த உரையில், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும், சலுகைகளையும் நிறுத்தியுள்ள மகிந்த அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து 500 மில்லியன் டொலர் அமெரிக்க டொலர…

  4. வியாழன் 23-08-2007 18:02 மணி தமிழீழம் [சிறீதரன்] டக்ளசின் வருகையால் நல்லூர் ஆலய சுற்றாடலில் பதற்றம் ஈபிடிபி ஆயுததாரியும் அமைச்சரும் டக்ளஸ் தேவானந்தா நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு மேற் கொண்ட விஜயம் காரணமாக அப் பகுதியில் பெரும் பதட்டமான நிலமை காணப்ப்டது. கடந்த திங்கட்கிழமை பகல் டக்ளஸ் தேவானந்த நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்தமையால் அவரின் பாதுகாப்பக் காரணங்கள் என்ற போர்வையில் ஆலயத்திற்கு வருதை தந்திருந்த அடியவர்கள் படைத்தரப்பினராலும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களினாலும் பலத்த துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். ஆலய சுற்றாடலில் உந்துருளிகளில் வந்தவர்கள் சோதனை என்ற பெயரில் அடியார்களை பலத்த கேள்விகளுக்கு உள்ளாக்கியதுடன் குறிப்பிட்ட இடங்களில் நின…

    • 5 replies
    • 1.8k views
  5. ஜாதிக ஹெல உறுமயவுக்கு எதிராக "உண்மையான ஹெல உறுமய" உருவானது [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 15:49 ஈழம்] [ப.தயாளினி] பௌத்த பிக்குகளைக் கொண்ட ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு எதிராக சபா (உண்மையான) ஹெல உறுமய என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய சங்க ஒருங்கிணைப்பின் முன்னாள் செயலாளர் கலகொடதே ஞானசார மற்றும் விதரந்தெனிய மேதானந்த தேரர் ஆகியோர் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். நாட்டினது ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற மக்களின் நம்பிக்கை நிறைவேற்ற ஹெல உறுமய தவறிவிட்டது என்று விதரந்தெனிய மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார். புதினம்

  6. யாழில் மீண்டும் சிறப்பு அடையாள அட்டை [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 15:42 ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் சிறப்பு அடையாள அட்டைகள் மீண்டும் வழங்கப்பட உள்ளன. இது குறித்த கலந்துரையாடல், யாழ். மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உதவி அரசாங்க அதிபர் ஆகியோர்களுக்கு இடையே பலாலி படைத்தளத்தில நடைபெற்றது. யாழ்ப்பாணத்தை 1996 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் வலிகாமம் உட்பட ஏனைய பகுதிகளுக்கு திரும்பிய போது சிறப்பு அடயாள அட்டைகள் வழங்கப்பட்டன. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் முதியவர்கள், நோயாளிகள் என்ற வேறுபாடுகள் இன்றி சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது ம…

    • 2 replies
    • 981 views
  7. தமிழக அகதிமுகாம்களில் தங்கியுள்ள இலங்கையருக்கு பிரஜாவுரிமை வழங்க பாராளுமன்ற தெரிவுக்குழு *சபையில் யோசனை சமர்ப்பிப்பு இலங்கை பிரஜா உரிமைக்கு உரித்துடையவர்களாக இருந்தும் இன்னும் பிரஜா உரிமை கிடைக்காமல் இந்தியாவின் தமிழ் நாட்டு அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமையை வழங்கும் பொருட்டு 2003 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டத்தை திருத்துவதற்கும் ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் செவ்வாய் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடிய போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஆளுந்தரப்பின் பிரதம க…

  8. எவராலும் தடுத்து நிறுத்த முடியாது சபையில் ஈழவேந்தன் எம்.பி. சூளுரை சிங்களவர்களை இனிமேலும் நம்புவதற்கு தயாரில்லை. தமிழன் தன்னைத்தானே ஆளுவதை எவராலும் தடுக்கமுடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான ஈழவேந்தன் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். பாராளுமன்றத்தில் தற்போதைய கல்வி நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்; `தமிழன் தன்னைத்தானே ஆளவேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்துள்ளான். தமிழன் தன்னைத் தானே ஆளுவான். இதை யாராலும் தடுக்க முடியாது. தமிழையும், தமிழ்க் கல்வியாளர்களையும் அரசாங்கம் திட்டமிட்டு சாகடித்து வருகிறது. போதாக்குறைக்கு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப…

  9. தினமும் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி [23 - August - 2007] நாட்டின் பொருளாதாரம் நாளாந்தம் அதலபாதாளத்தை நோக்கியே வீழ்ந்துகொண்டிருக்கின்றது. அரசாங்கத்துக்கு இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு பொருட்டாகவே தென்பட்டதாக தெரியவில்லை. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசுக்கு எந்தவிதமானதொரு நிகழ்ச்சி நிரலும் கிடையாது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரசிடம் உருப்படியான பொருளாதாரக் கொள்கை என்று எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. ஸ்திரமானதொரு பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்ளாத நிலையில் எந்த அரசும் ஆட்சியைக் கொண்டு நடத்துவதென்பது மிகக்கடினமானதும் நெருக்கடியானதுமாகும். ஒரு நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலேயே தங்கியிருக்கின்ற…

  10. நாட்டின் பிரதமராக இருக்கத் தகுதியற்ற ரத்தினசிறிவிக்கிரம நாயக்க-செய்திஆய்வு- ஒரு நாட்டை ஆளும் பிரதமருக்கு சில தகுதியகள் இருக்க வேண்டும்.ஒரு விடையத்தைக் கையாளும் போது அது தொடர்பான கருத்துகளை வெளியிடும் கண்ணியம் இருக்க வேண்டும். ஒரு நாட்டின் தலைவர் மனம் போன போக்கில் ஒரு மனநோயாளி போன்று பேசமுடியாது.அவ்வாறு பேசினால் அது அவரது தகைமையைக் கேள்விக்குறியாக்கும்.அந்த நிலைமை சிறிலங்காப் பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பரதமர் தான் என்பதை மறந்து அநாகரிகமாக பேசியுள்ளது நாட்டுக்குமேலும் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் ஜோன்ஹோல்ம்ஸ் குறித்து பிரமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வெளியி…

  11. கோட்டபாய ராஜபக்ஸவின் பயணத்தால் கடைகளினுள் வைத்து பூட்டப்பட்ட பொதுமக்கள். கொழும்பு ஆமர்வீதியில் இன்று காலை 10.00 மணிக்கு பயணித்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்க சென்றவர்கள் கடைக்காரர்கள், பல்வேறு வேலைகளுக்காக அப்பகுதியால் சென்றவர்கள் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் எனப்பலருக்கும் வித்தியாசமான அனுபவம் ஒன்று காத்திருந்தது. ஆமர்வீதியில் திரும்பும் இடத்தில் இருந்து அந்த வீதியின் இரு மருங்கிலும் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரால் அவசர அவசரமாக வீதிகளில் நின்றவர்கள், சென்றவர்கள், என அனைவரும் மறிக்கப்பட்டனர், வாகங்களின் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது. மறிக்கப்பட்டவர்கள் அவசரமாக கடைகளுக்குள்ளும், கட்டடங்களுக்குள்ளும் கட்டாயப்படுத்தி கொண்டு செல்லப்பட்டு ந…

  12. வாகன ஊழலை அப்பலப்படுத்தியதால் வந்த வினை கெல உறுமையக் கட்சி எம்.பி ஒருவர் தனது தீர்வையற்ற கார் லைசென்ஸை பல மில்லின் ரூபாவுக்கு விற்பனை செய்தமை தொடர்பான ஊழலை அம்பலப்படுத்தியவரான ஹேமந்த நிஸாந்த என்ற வர்த்தகருக்கு எதிராக பொலிஸ் கெடுபிடி தீவிரப்படுத்தபட்டிருக்கின்

    • 0 replies
    • 1.1k views
  13. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகிரமசிங்கவை இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதியாக்குமாறு த.தே.கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு புலிகளிடம் வேண்டு கோள் விடுத்தார் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அப்போது குறுக்கிட்ட ரணில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம என்று வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவரே இந்த சிவாஜிலிங்கம் தான் எனத் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று காலை சபாநாயக்கர் தலைமையில கூடிய வேளை சபாநாயகர் அறிவித்தல்கள் சிலவற்றை விடுத்தார். அப்போது ஏற்கனவே சிவாஜிலிங்கத்தால் நடாடாளுமன்றில் எழுப்பப்பட்ட…

  14. இரண்டரை மாதத்தில் 656 பேர் படுகொலை Written by Ravanan - Aug 22, 2007 at 10:00 PM இலங்கையில் கடந்த இரண்டரை மாத காலப் பகுதியில் 656 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பு இதனைத் தெரிவித்தது. இது தொடர்பாக பவ்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூன் மாதம் முதல் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வரை 656 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். போர் காரணமாக 526 பேரும், வேறு காரணங்களால் 130 பேரும் இவர்களுள் அடங்கும். 14 கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 25 பேர் காணாமல் போயுள்ளனர். நாட்டின் ஏனையப் பகுதிகளில் ஆட்கடத்தல்களும், காணாமல் போதல்களும் ஒப்பீட்டளவில் குறைந்துள்…

    • 4 replies
    • 1.2k views
  15. புதன் 22-08-2007 17:07 மணி தமிழீழம் தாயகன் விடுதலைப் புலிகள் வடக்கில் எந்த நேரமும் தாக்குதல் மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தல் பதில் தாக்குலுக்கு படையினர் தயாராகி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வட போர் முனையை நோக்கி சிறீலங்காப் படையினர் படை, மற்றும் படைக்கல நகர்த்தல்களை குடாநாட்டில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடாநாட்டிற்குச் சென்ற பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, விமானப்படை முக்கிய அதிகாரி டொனால்ட் பெரேரா போன்றவர்கள் பருவகால மழைக்கு முன்னர் வன்னி நோக்கிய ஆக்கரமிப்பு தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி : பதிவு

    • 0 replies
    • 2.2k views
  16. புதன் 22-08-2007 14:31 மணி தமிழீழம் [மயூரன்] அமெரிக்கா - சிறீலங்கா இடையே இராணுவ சட்டப் பரிமாற்றம் அமெரிக்காவும் சிறீலங்காவும் தமக்கிடையே இராணுவ சட்டங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளன. இப் பரிமாற்றத்தின் போது இராணுவத்தினரின் கீழ் இரு நாடுகளிடையே தெளிவுபடுத்தல் மற்றும் மனித உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களும் உள்ளடங்கப்படுகின்றன. கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் சிறீலங்கா பாதுகாப்பு அதிகாரிகளும் கொழும்பில் சந்தித்து இது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே இரு நாட்டு இராணுவத்தினரிடையே இராணுவச் சட்டங்களை பரிமாறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. pathivu

  17. புதன் 22-08-2007 16:53 மணி தமிழீழம் [செந்தமிழ்] முல்லைத்தீவில் வான்வெளித் தாக்குதல்கள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கில் சிறீலங்கா வான்படையினரால் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று காலை முள்ளிவாய்கால் கிழக்கில் மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்தும் பேரூந்தை இலக்கு வைத்தும் இரு தடவைகள் மிக் 27 யுத்த வானூர்த்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன. முதலாவது தாக்குதல் 7.30 மணிக்கும் 7.50 மணிக்கும் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் வான்வெளித் தாக்குதலில் வீசப்பட்ட குண்டுகள் குறித்த இலக்குகள் மீது விழாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. மக்கள் குடியிருப்புகள் மீது விமாக் குண்டின் சிதறு துண்டுகள் வீழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. …

  18. தொடரும் போராட்டம்: கொழும்பில் மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தடைகளை மீறி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை நோக்கிச் சென்ற சிறிலங்காவின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். கொழும்பு "லிப்டன்" சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் கூடிய 2,000-க்கும் அதிகமான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து "லிப்டன்" சுற்று வட்டத்தின் ஊடாக மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை நோக்கி பேரணியாக நகர்ந்தனர். பேரணியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மகிந்த அரசாங்கத்தின் புதிய கல்வி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததுடன் பல்கலைக்…

  19. http://www.yarl.com/videoclips/view_video....f97ba6ce92bf5ad

  20. சர்வதேச சமூகம் அரசுக்கு எதிராக திரும்புவதற்கு இராஜதந்திர நடவடிக்கைகளின் பலவீனமே காரணம் -சாடுகிறது ஐ.தே.க. அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளின் பலவீனமே சர்வதேச சமூகம் எதிராகக் கருத்துத் தெரிவிப்பதற்கான காரணமாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்ததுடன் ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகம் ஹோம்ஸின் கருத்து தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; "ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவி…

  21. புலிகளுக்கு டீசல் கடத்தல்-5 மீனவர்கள் கைது ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு டீசல் விற்றதாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையினரும் கூட்டு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகு இலங்கை கடல் பகுதியிலிருந்து இந்திய கடல் எல்லைக்குள் வேகமாக வந்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதையடுத்து அந்தப் படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குமார், அந்துக் கிழவன், பாக்கியராஜ், ராபர்ட், பல்தா ஆகிேயாரை கரைக்குக் ெகாண்டு வந்து விசாரித்தனர். அப்போது அந்தப் படகு அருளானந்தம் என்பவருக்குச் சொந்தமானது என்றும், படகில் டீசலை எடுத்துச் சென…

  22. அவசியமாகத் தேவைப்படும் சமயத்தில் தடுக்கப்படும் மனிதாபிமானப் பணி யுத்தம் காரணமாகவும், ஆழிப்பேரலை அனர்த்தம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய அவசர அவசிய மனி தாபிமானப் பணிகள் மிக நெருக்கடிக்குள்ளும், இக்கட்டுக் குள்ளும் சிக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய மக்களுக்கான மனித நேயத் தொண்டுப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 34 ஊழியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர் என்று கூறப்படும் பின்னணியில் ""மனித நேயத் தொண்டுப் பணியாளர்கள் தமது கட மையை ஆற்றுவதற்கு உலகில் மிக மோசமான இடமாக இலங்கை உள்ளது.'' என்று ஐ. நாவின் அவசரகால நிவா ரணப் பணி ஒருங்கிணைப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஜோன் ஹோம்ஸ் திறந்த மனதோடு கூறிய …

  23. வவுனியா சுமதிபுரத் தாக்குதலை அடுத்து வீரபுரம் தமிழ்க் கிராமத்தில் குண்டர்கள் அட்டகாசம்! நேற்றுமுன்தினம் வவுனியா உலுக் குளம் பகுதியில் ஊர்காவலர் மீது நடத் தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஊர்காவ லர்கள் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து குண்டர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இரு தமி ழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின் றார்கள். வன்னி மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றில் இது குறித்துத் தெரி வித்திருக்கின்றார். இந்த அறிக்கையில் அவர் தெரிவித் திருக்கின்றவை வருமாறு : 20ஆம் திகதி செட்டிக்குளம் பிர தேசத்திலுள்ள சுமதிபுர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 05 ஊர்கா வலரும் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, ஊர்காவற்பட…

  24. இலங்கை விவகாரங்களில் பிரிட்டனின் மாற்றம் இலங்கை விவகாரம் தொடர்பாக அண்மைக்காலமாக பிரிட்டனில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் புலம் பெயர்ந்து பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் அகதிகளுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் நீதிமன்றமொன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பில் பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் அகதிகள் திருப்பியனுப்பப்பட்டால் அவர்களுக்கு அங்கு பாதுகாப்பில்லை.சிறிலங்கா அரசால் சித்திர வதை செய்யப்படலாம் எனத் தெரிவித்து வழக்குத் தொடுத்த நபரை சிறிலங்காவிற்குத் திருப்பியனுப்பக் கூடாதென்றும் அவருக்குப் பிரிட்டனில் அகதிவாழ்விற்கு அனுமதித்து; தீர்ப்பு வழங்கியது. இப்போது வேறொரு நீதிமன்றம் இதே மாதிரியானதும் மேலும் ஒருபடிமேலே…

    • 2 replies
    • 2.1k views
  25. சூத்திரதாரியான ஜீகாத் உறுப்பினரைக் கைது செய்யவும் பிடியாணை வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள தமிழ்ப் பிரதேசங்களான கொண்டையன்கேணி, கறுவாங்கேணி,மீராவோடை ஆகிய தமிழ்ப் பகுதிகளில் அரச காணிகளில் அத்துமீறிக்குடியேற்றம் மேற்கொள்ளப்டுவதற்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதின்றம் நேற்று முன்தினம் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.இந்தப் பிரதேசத்தில் குடியேற்றங்களை மேற்கொள்வதன் பின்னணியில் சூத்திரதாரியாக நின்று செயற்படுபவர் எனக்கூறப்பட்ட 'ஜீகாத்" அமைப்பு உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யவும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது, வாழைச்சேனை நீதிவான் மாணிக்கவாசகர் கணேஷராஜா இது தொடர்பான உத்தரவுகளை விடுத்தார். மேற்படி பிரதேசததில் அண்மைக் காலத்தில் சுமார் நூறு கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.