ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
காவல்துறை மா அதிபர் மீது பழியை போட்டுவிட்டு மகிந்த ராஜபக்ச தப்பிக்க முயற்சி. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராதான் காரணம் என்று பழிபோட்டுவிட்டு அனைத்துலக நாடுகளின் கண்டனங்களிலிருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தப்பிக்க முனைகிறார். மகிந்தவை நல்லவராக்க சிங்கள மற்றும் கொழும்பு ஆங்கில ஊடகங்களும் முனைந்துள்ளன. கொழும்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை மா அதிபரிடம் மகிந்த விளக்கம் கேட்டுள்ளதாகவும் "உடனடி" அறிக்கை ஒன்றை தம்மிடம் தாக்கல் செய்யுமாறு மகிந்த உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. -Puthinam-
-
- 16 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் சுகாஸ் சக்மா வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தலையிட வேண்டும். பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விலங்குகளைப் போல் பேரூந்துகளில் அடைத்து வடக்கு மற்றும் கிழக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
இரேவாடிரவாகக எமக்குத் தெரியாமலேயே நாடு பிரிந்து விட்டதோவென நினைத்தோம்- (தேசியன்) [10 - June - 2007] கொழும்பிலுள்ள தங்குமிடங்களில் (லொட்ஜ்களில்) பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்த பல நூற்றுக்கணக்கான வட, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்தினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வட, கிழக்கு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். கடந்த மே மாதம் 31 ஆம் திகதி மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்குமிடங்களின் உரிமையாளர்களை அழைத்த புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மறுநாள் வெள்ளிக்கிழமை காலைவேளைக்குப் பின் வட, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் எவரும் உங்கள் `லொட்ஜ்'களில் இருக்கக் கூடாது. அவ்வாறு தங்கியிருந்தால் நாம் அவர்களை வெளியேற்ற…
-
- 0 replies
- 2.1k views
-
-
விடுதித் தமிழர் விவகாரத்தை அரசு கையாண்ட இலட்சணம் [10 - June - 2007] இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைவரத்தை கையாளுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறையின் இலட்சணத்தை உலகிற்கு தெளிவாக வெளிக்காட்டுவதாக கொழும்பு தனியார் விடுதிகளில் இருந்து வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் அமைந்திருக்கின்றன. தங்களது அத்தியாவசிய அலுவல்களைக் கவனிப்பதற்காக வடக்கு, கிழக்கிலிருந்து பலத்த சிரமங்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்து தங்கியிருந்த தழிழர்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றிய பொலிஸாரின் செயலை உள்நாட்டிலும் வெளியுலகிலும் நியாயபூர்வமாகச் சிந்திக்கக்கூட…
-
- 0 replies
- 998 views
-
-
பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக கேகலிய நியமனம்? சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவை நியமிக்க அரசாங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான கேள்விகளுக்கு தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சரான பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இருப்பதில்லை என்பதால் கேகலியவையே நியமித்துவிடலாம் என்றும் அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேகலிய, என்னை அமைச்சராக்குவதற்கான குறித்த பேச்சுக்கள் இடம்பெறுவதனை அறிவேன். ஆனால் மகிந்ததான் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதனிடையே யுத…
-
- 2 replies
- 1.3k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து இணைத் தலைமை நாடுகளின் உச்சிமாநாட்டில் ஆராயப்படும் இணைத் தலைமைகளின் மாநாடு எதிர்வரும் 21ம் நாள் நோர்வே ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளது. மாநாட்டில் போர் நிறுத்த உடன்படிக்கை, அரச நிர்வாகம், மனித உரிமை மீறல்கள், இரு தரப்பினடையே அதிகரித்துவரும் மோதல்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளின் படுகொலை, கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 897 views
-
-
சிறிலங்கா இராணுச் சீருடையுடன் சரளமான சிங்களத்தில் பேசி வன்னிச் சமரை நடத்திய விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம் (மேலதிக இணைப்பு) வவுனியாவில் சிறிலங்கா இராணுவச் சீருடையுடன் சரளமான சிங்களத்தில் பேசியபடி சிறிலங்கா இராணுவத்தினரை சுற்றிவளைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. போக்கறுவன்னியில் நடந்த தாக்குதல் குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி: கடந்த சனிக்கிழமை (02.06.07) வவுனியாவுக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்றிருந்தார். இராணுவ அதிகாரிகளைச் சந்தித்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகள் ஒரு பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதனை சுட்டிக்காட்டி விவாதித்தார். விடுதலைப் புலிகள், கடந்த சனிக்கிழமை (02.…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்காவுக்கான நிதியுதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும்: யசூசி அகாசி. சிறீலங்காவுக்காக நிதியுதவிகளை யப்பான் தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தரப்பினருக்கும் விடுதலைப் புலிகள் தரப்பினருக்கும் இடையில் பேச்சுக்கள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என யப்பான் நம்புவதாக யசூசி அகாசி தெரிவித்துள்ளார். அரதரப்பில் மகிந்த ராஜபக்ச உட்பட பலரையும் சந்தித்த நான் இங்க சமாதான உருவாக்கும் பற்றுருதி சிறீலங்காவில் காணப்படுவதாகவும் சிறீலங்காவின் எதிர்காலம் குறித்தும் எதிர்பார்ப்புக்களுடனும் நம்பிக்கையுடனும் நான் யப்பான் செல்கின்றேன் என யசூசி அகா…
-
- 9 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Jun 10 7:37:33 EEST 2007 83 வயதான முதியவருக்கு சோதனைச் சாவடியில் ஏற்பட்ட கதி! அவர் நடப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகிறார். அவரது வயதின் முதிர்ச்சியை உடலில் காணமுடிகிறது. உற்றார், உற வினர்களின் உதவியின்றி முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார். அவர் முன்னாள் அரச ஊழியர். அத னால் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு கள் சம்பந்தமான விடயங்களுக்கு அங்கு செல்ல வேண்டுமாயின் தாமே வருவ துண்டு. அதிக தூரம் நடக்க முடியாத, பஸ்ஸில் தானும் அடிக்கடி ஏறமுடியாத முதியவர் அவர். அவருக்கு வயது 83. கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் செயலகத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. எவரது உதவியுமின்றித் தாமே வந்தார். அலுவலை முடித்துக் கொண்டு திரும்பியபோது ஏற்பட்டஅனுபவம் அவரை விரக்தியுடன் பேச…
-
- 0 replies
- 1.3k views
-
-
50,000 பேரை படையில் சேர்க்க சிறிலங்கா அரசு முடிவு: மகிந்த ராஜபக்ச. சிறிலங்கா படையில் மேலும் 50,000 பேரை சேர்ப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது. எனவே அமைச்சர்கள் தமது பொறுப்பின் கீழ்வரும் திணைக்களங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதனை நிறுத்த வேண்டும். மேலும் 50,000 பேரை இராணுவத்திற்கு திரட்டுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. எனவே தேவையற்ற செலவுகளை நாம் குறைக்க வேண்டும். பொது நிர்வாக சேவைகளில் பதவி உயர்வுகளை வழங்குவதிலும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவ…
-
- 0 replies
- 953 views
-
-
கொழும்பில் தமிழ் மக்கள் வெளியேற்றத்தின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ச. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சவே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதம் வடக்கு - கிழக்கு மூத்த காவல்துறை உதவி ஆணையாளாரான பாலசுர்யாவினால் அரச அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுற்று அறிக்கையில் வவுனியாவில் ஜூன் 6 ஆம் நாள் புனர்வாழ்வு முகாம் ஒன்றை அமைக்கும் படி தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜூன் 7 ஆம் நாள் கொழும்பு விடுதிகளில் உள்ள தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த மே மாதம் 31 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சில் கோத்தபாய ராஜபச்ச தலைமையில் நடைபெற்ற…
-
- 0 replies
- 724 views
-
-
மனைவி விடுங்கோ விடுங்கோ எனக் கதறி அழ... சிறுநீரக நோயாளியை இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றிய பொலிஸார். கடந்த வியாழக்கிழமை கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பஸ்களில் தமிழர் மாவட்டங்களுக்குப் பலவந்தமாகக் கூட்டிச் சென்ற போது, பொலீஸாரும் படையினரும் மனிதாபிமானமற்ற முறையில் கர்ணகொடூரமாக நடந்து கொண்டனர் என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டுவிட்டு விடுதி ஒன்றில் தங்கியிருந்த நோயாளி ஒருவர் அவரது படுக்கையில் இருந்து இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றப்பட்டிருக்கின்றார். தமது கணவர் கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய தேவை இருப்பதாக அவரது மனைவி அவரை விடுங்கோ விடுங்கோ எனக் கதறி அழுத போதிலும் அந்த நோயாளியை தள்ளிச் செ…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கான நிதி உதவியை நிறுத்த அகாசியிடம் த.தே.கூ. வலியுறுத்தல் [சனிக்கிழமை, 9 யூன் 2007, 10:02 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவுக்கான நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தங்கேஸ்வரி ஆகியோரை உள்ளடக்கிய குழு அகாசியை சந்தித்தது. அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியதாவது: கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வடக்கு - கிழக்கிலும் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள், காணாமல் போகின்றார்கள்…
-
- 4 replies
- 1.1k views
-
-
"தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்து விட்டதா?: விஜயகாந்த். சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதன் மூலம் "தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்துவிட்டதா? என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து தமிழர்கள் சிங்கள அரசால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். விடியற்காலை 3 மணிக்கு தட்டி எழுப்பி அரை மணி நேரம் கூட அவகாசம் தராமல் வீட்டைக் காலி பண்ணச் சொல்லி துப்பாக்கி ஏந்திய சிங்கள காவல்துறை தமிழர்களை பேரூந்துகளில் ஏற்றிக்கொண்டு கொழும்பு மாநகரத்திற்கு அப்பால் கொண்டு போய் விட்டுள்ளது. அவர்கள் மீண்டும் கொழும்புக்கு வ…
-
- 10 replies
- 2.1k views
-
-
மகிந்தவின் ஆட்சியில் அமைதி சாத்தியமற்றது: தி எக்கனொமிஸ்ற் [சனிக்கிழமை, 9 யூன் 2007, 15:21 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைதி என்பது சாத்தியமற்றது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'தி எக்கொனமிஸ்ற்' என்ற இதழ் கருத்து தெரிவித்துள்ளது. அந்த இதழில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையின் முக்கிய பகுதிகள்: மட்டக்களப்பில் உள்ள ஒர் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த ராதிகெல (வயது 21) தனது தந்தையார் எவ்வாறு கொல்லப்பட்டார் என விவரித்தார். எனது தந்தையின் இரு கரங்களும் வெட்டப்பட்டன, அவரது வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டது, பின்னர் புழுதியில் போட்டு அடித்துக் கொன்றனர். அதனை 13 வயதே நிரம்பிய எனது தம்பியை பார்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆயுதக் கொள்வனவு விவகாரம்: சிங்களவர் எதிர்ப்பும் தமிழரின் எச்சரிக்கையும் Wednesday, 06 June 2007 சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவது சரியே என்ற கருத்துருவாக்கத்தை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேரடியாகக் களம் இறங்கியுள்ளார் புதுடில்லியில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் சென்னைக்குப் பறந்து வந்து மீண்டும் சென்னையிலும் கருணாநிதியை சந்தித்த எம்.கே.நாராயணன், "இராணுவ தளபாடங்களை இந்தியா அளிக்காவிட்டால், சீனா அல்லது பாகிஸ்தானிடம் அவற்றை பெறப்போவதாக சிறிலங்கா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. நம்மை சிறிலங்கா அணுகின…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பில் தமிழர்களின் வெளியேற்றம். இந்தியாவிற்கு அழுத்தம். Saturday, 09 June 2007 சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் சுகாஸ் சக்மா வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தலையிட வேண்டும். பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி 500-க்கும் மேற்பட்ட தம…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் Saturday, 09 June 2007 கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியமும் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, அனைத்துலக மனித உரிமைச் சட்ட விதிகளை மீறும் செயல் என, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை அவர்களுக்கு வழங்கப்பட்ட “ஒட்டுமொத்த தண்டனை” என பல உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன. தமிழோசை
-
- 0 replies
- 859 views
-
-
வடக்கு - கிழக்கில் பதிவு செய்யப்பட்ட பாரவூர்த்திகள் கொழும்புக்கு வரத் தடை - படையினர் அறிவிப்பு வடபகுதியில் பதிவு செய்யப்பட்ட பாரவூர்த்திகள் கொழும்பு நோக்கி பயணிக்க சிறீலங்காப் படையினர் தடைவிதித்துள்ள நிலையில் தற்போது கிழக்குப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட பராவூர்த்திகளும் கொழும்புக்கு வரமுடியாது என சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர். பதிவு
-
- 0 replies
- 790 views
-
-
Posted on : 2007-06-09 "படுமுட்டாள்தனமான நடவடிக்கை!' பல தரப்பிலும் இப்படித்தான் விமர்சனம் கொழும்பு தங்குமிட விடுதிகளில் இருந்து ஈழத் தமிழர் களைப் பலவந்தமாக வெளியேற்றும் இலங்கைப் பாதுகாப் புத் தரப்பினரின் அடாவடித் தனமான நடவடிக்கைக்கு எதி ராக உயர்நீதிமன்றமே இடைக்காலத் தடை விதித்து விட்டிருக் கின்றது. இவ்விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவான பச்சாதாப உணர்வு இனம், மொழி, மதம் கடந்து இலங்கைத்தீவு முழு வதும் ஒரே சமயத்தில் பீறிட்டுப் பிறந்திருப்பதையும் உணர முடிகின்றது. இத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு அரசின் பாதுகாப்புத்துறை மேற்கொண்ட தீர்மானம் குறித்து இலங்கை யின் எந்தத் தரப்பிலிருந்தும் எந்தப் பக்கத்திலிருந்தும் எந்தத் தலைவர்களிடமிருந்தும் வந்த ஒரே கணிப்பு இது தான்: ""இது …
-
- 1 reply
- 1.4k views
-
-
குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல். இன்று காலை 5-30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தியதில் 16 படையினர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. Stiff resistance to SLA assault in Batticaloa, 16 troopers wounded Sri Lankan forces launched a three pronged offensive attempting to move towards Liberation Tigers of Tamileelam (LTTE) territory in Kudumpimalai jungles in Batticaloa district since 5:30 a.m. Friday. The SL forces encountered stiff resistance from Tiger forces at the Forward Defence Line in E…
-
- 4 replies
- 2.2k views
-
-
சிறீலங்காவின் கிழக்கே தொப்பிக்கல காட்டுப்பகுதிகளில் இராணுவம் மேற்கொண்ட அமெரிக்க உச்சரிப்பிலான பயங்கரவாதத்திற்கு எதிரான புலிகளைக் கிழக்கில் இருந்து வெளியேற்றும் யுத்தத்தில் புலிகளின் நாங்கு முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதுடன் சுமார் 30 புலிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது..! இராணுவம் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு பிரேமதாச அரசின் காலத்திலும் இராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இருந்தது என்பதுவும்.. அப்போது கூட தொப்பிக்கல நோக்கி இராணுவம் நடவடிக்கையில் இறங்கி பல பிரதேசங்களை மீட்டது என்பதும்.. அதன் பின்னர் வடக்குப் போர்முனை.. கிழக்கின் நிலவரத்தை தலை கீழாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 90 களின் போது …
-
- 1 reply
- 2.3k views
-
-
மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத தண்டவாளத்தைக் கழற்றிய படையினர்! http://www.alaikal.com வெளிவரும் உண்மைத் தகவல்கள். மட்டக்களப்பிலிருந்து “சன்யு” கடந்த புதன்கிழமை காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வாழைச்சேனை-புணானைப் பிரதேசத்தில் தடம்புரண்டது. இதில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தின்போது ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் பொலனறுவை வைத்தியசாலையிலும் ஒருவர் வாழைச்சேனை ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புகையிரதம் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு …
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட செயல் பேரினவாதத்தின் இன ஒழிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு அம்சம் [09 - June - 2007] ஒரு நாட்டின் அரசியலமைப்பு அது எத்தகையதாக இருந்தபோதிலும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலேயே சட்ட ஆட்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை ஜனநாயகக் சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு அனைத்துப் பிரசைகளினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து நிற்கும் ஒன்றாகவே காட்டப்படுகின்றது. உயிர் வாழும் உரிமை, நடமாடும் சுதந்திரம் இலங்கையில் எப்பாகத்திலாவது வாழ்க்கை நடத்தும் உரிமை உட்பட பேச்சு, எழுத்து கூட்டம் கூடும் உரிமைகள் எனப் பலவற்றை மிக அலங்காரமாக எடுத்துக் கூறுகின்றது. தோற்றமளவில் கூறப்படும் இவற்றை ஆளுவோரும் அரசு இயந்திரமும் எவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.khaleejtimes.com/DisplayArticle...tinent&col=
-
- 9 replies
- 2.7k views
-