ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ஜே.வி.பி.யும் உடைகிறது?: பசில்- விமல் இரகசியப் பேச்சு [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 11:42 ஈழம்] [செ.விசுவநாதன்] ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவும் மகிந்தவும் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சவும் இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விரைவில் மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடும் எனத் தெரிகிறது. தன்னுடன் சுனில் கந்துநெட்டி, பிமல் ரட்நாயக்க, காமினி பத்ரன உள்ளிட்டோர் அரசாங்கத்துடன் இணைய உள்ளனர் என்றும் விமல் வீரவன்ச பசில் ராஜபக்சவிடம் பட்டியலை அளித்துள்ளார். கனடாவுக்கு குடிபெயர்ந்திருக்கும் ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 01-07-2007 14:31 மணி தமிழீழம் [சிறீதரன்] அளவெட்டிப் பகுதியில் மூவர் இராணுவத்தால் கைது. கடந்த வெள்ளிக்கிழமை சுன்னாகம் கந்தரோடை வீதியில் உள்ள மாசியப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தோட்டத்திற்கு நீர் இறைத்துக் கொண்ட நின்ற அளவெட்டி மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க ஊழியர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டள்ளார் இவர் தோட்டத்திற்கு தண்ணீர் இறைத்து விட்டு மல்லாகம் காங்கேசன்துறை வீதியில் உள்ள தனது பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைக்கு கடமைக்கு வந்த பின்னர் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினர் இவரை பெற்றொர்களைக் கொண்டு …
-
- 0 replies
- 792 views
-
-
Posted on : 2007-07-01 நிழலோடு யுத்தம் வேண்டாம் நிஜத்தோடு போர் புரியுங்கள்! ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது தெரிவித்து வரும் கருத்துக்களைக் கேட்டு அழுவதா, சிரிப் பதா என்று தெரியாமல் வேதனைப் படுகின்றார்கள் நம் தமிழ் மக்கள். உதாரணத்துக்கு தலைநகர் கொழும்பில் தங்குமிட விடுதிகளில் இருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளி யேற்றப்பட்ட கொடூரத்தை எடுத்துக் கொள்வோம். தமது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவினால் எடுக்கப்பட்ட மூடத்தன மான இந்த நடவடிக்கை மஹிந்த ராஜபக்ஷ அரசை "பூமராங்' ஆக வந்து திருப்பித் தாக்கி நிற்பதால் தடுமாறுகிறார் அவர். உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பெரும் எதிர்ப்பு அலைகளை இந்த முட்டா…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்கு பணம் தருகிறது: ஈ.பி.டி.பி. டக்ளஸ் ஒப்புதல். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்குப் பணம் தருகிறது- இது அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மை என்று பல்வேறு ஆட்கடத்தல், படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஈ.பி.டி.பிக்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சுதான் தருகிறது என்பது ஒவ்வொருவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. எங்களுக்கான ஒரு பகுதி தொகையைத்தான் பாதுகாப்பு அமைச்சு த…
-
- 4 replies
- 1.7k views
-
-
தினக்குரல் பத்திரிகையின் பொறுப்பற்ற தலையங்கம். லண்டன் பிரஜையின் விடுதலை கோரி அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் இந்தளவுக்கு உலக பூகோள அறிவுள்ள பத்திரிகையை வாசிக்கும் இலங்கை வாழ் தமிழ் மாணவர்கள் லண்டன் என்றொரு தனிநாடும் உள்ளது என்று படிக்கப்போகின்றார்கள்.
-
- 1 reply
- 875 views
-
-
சுதந்திரக் கட்சிக்குள் பலப்பரீட்சை மகிந்த எதிர்கொள்ளும் சவால்கள் [01 - July - 2007] -ஆர்.பி.- அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் களான மங்கள சமரவீரவும், ஸ்ரீபதி சூரியாராய்சியும் கடந்த வாரத்தில் அதிரடியான திடீர்த் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள
-
- 0 replies
- 852 views
-
-
கிழக்கில் தேர்தல் முனைப்பும் கிள்ளப்படும் தமிழர் தலைகளும்! - (தேசியன்) [01 - July - 2007] இணைந்த வட, கிழக்கே எமது தாயக பூமியென இறுக்கமாக வரித்து, அதன் அடிப்படையில் தமது ஆணித்தரமான அபிலாஷைகளை வலியுறுத்தி நிற்கும் தமிழ் மக்களின் அசையாத அரசியல் கோரிக்கைகளை, ஈடாடச் செய்துவிட வேண்டுமென செயற்பட்டு வரும் அரசின் போக்கு மீண்டும் மீண்டும் அம்பலமாகியே வருகிறது. " சண்டையால் எதையும் சாதிக்க மாட்டீர்கள். சமாதான வழியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து இனக்குழும சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்" என உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ச்சியாக கோரிவருகிற நிலையிலும் கூட தமது திட்டமிட்ட தமிழின அழிப்பை நிறுத்தாமல் சன்னதமாடுகிறது பேரினவாதம். குறிப்பாக, கிழக்கை பிரித…
-
- 0 replies
- 828 views
-
-
பாசிச இனவாதத்தால் பேரழிவுக்குள் நாடு - 2 ஆம் உலக மகா யுத்த காலத்தை விட நிலைமை மோசம் என்கிறார் ரணில் [01 - July - 2007] எம்.ஏ.எம்.நிலாம் பாசிச இனவாதம் தலைதூக்கியதன் காரணமாகவே நாடு பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவும் அதிகாரப் பேராசையும், பொருளாதாரச் சுரண்டல் போக்கும் இதனை மேலும் வலு வடையச் செய்திருப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு இன்று இரண்டாம் உலகப் போர்க்காலகட்ட நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தேசத்தைப் பேரழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கு ஒவ்வொருவரிடமும் மனத்தூய்மையும், நேர்மையும் ஏற்படவேண்டியதன் அவசியத்தையும் ரணில் வலியுறுத்தினார். கொழும்பு மாளிகாகந்த மகாபோதி விகாரையில் நேற்று சனிக்கிழமை மாலை நடைப…
-
- 0 replies
- 850 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை பயங்கரவாதமென சொல்லித் தட்டிக் கழித்து விட முடியாதது [01 - July - 2007] * கனடா என்.டி.பி.கட்சி பிரமுகர் தெரிவிப்பு இலங்கை தமிழர் பிரச்சினையை வெறும் பயங்கரவாதம் என்று தட்டிக் கழித்து விட முடியாதென கனடாவின் ஒன்றாரியோ மாகாண என்.டி.பி. தலைவர் ஹவாட் ஹம்டன் தெரிவித்துள்ளார். கனடா தமிழர் பேரவையினால் நடத்தப்பட்ட பகிரங்க கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், அரசியல் வசதிக்காக எவரையும் பயங்கரவாதி என்று கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை நாம் நன்கறிவோம். எங்கள் கட்சியின் தலைவரும் பிரதிநிதிகளும் தமிழர் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளனர் என்றார். கனடாவில் வாழும…
-
- 0 replies
- 1.1k views
-
-
சு.க. மாநாட்டுக்கு சந்திரிகாவை அழைப்பதில் உள்மோதல் [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 10:09 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு சந்திரிகா குமாரதுங்கவை அழைப்பதில் அக்கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் ஜூலை 22 ஆம் நாள் நடைபெற உள்ளது. அதில் கட்சியின் 2,500 பிரதிநிதிகள் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரக் கட்சியில் அதிருப்திக்குழுவை உருவாக்கியுள்ள மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்கள் என்பதால் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு சந்திரிகா குமாரதுங்கவை அழைக்கத் தேவையில்லை என்று கருதுகின்றனர். அதே நேரத்தில் சுதந்திரக் கட…
-
- 0 replies
- 789 views
-
-
இந்தியா செல்கிறது சிறிலங்கா குழு [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 09:49 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் உயர்நிலைக் குழு விரைவில் இந்தியாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளது. உதவி வழங்கும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவற்றுக்கு அப்பால் இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியா தீவிரமான பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று சிறிலங்கா குழு வலியுறுத்த உள்ளது. மாவிலாறு நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிகழ்வை ஜூலை 26 ஆம் நாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்த உள்ளார். அன்றைய நாளில் இனப்பிரச்சினைக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை மகிந்த ராஜபக்ச அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தனது தீர்வுத் திட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக இ…
-
- 0 replies
- 783 views
-
-
வடமராட்சி புறாபொறுக்கியில் துப்பாக்கி மோதல் யாழ் வடமராட்சிப் பகுதியில் சிறீலங்காப் படையினரின் வாகனம் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் வடமராட்சி புறாப்பொறுக்கி என்ற இடத்தில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலாலி படைத்தளம் நோக்கிச் சென்கொண்டிருந்த படையினரின் வாகனம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறியமுடிவில்லை. எனினும் இச்சம்பவத்தை அடுத்து சிறீலங்காப் படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி மோதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்மராட்சியில் வாள்வெட்டுக்கு இலக்காகி இரு படையினர் படுகாயம். தென்மராட்சி மீசாலை வேம்பிராய் பகுதியில் இரவு நேரக் காவல்கடமையில் ஈடுபட்ட படையினர் இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு வேம்பிராய் பகுதியில் காவல்கடமையில் ஈடுபட்ட இரு படையினர் அருகில் சென்ற இனம் தெரியாத நபர்கள் இவர்கள் மீது இரசாய கலவையை எறிந்து மயக்கமடையச் செய்துவிட்டு வாளால் வெட்டியுள்ளனர். அத்துடன் இரு படையினரும் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களையும் இனம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 1 reply
- 1.6k views
-
-
ஐ.தே.க.வின் ஆதரவினை பெற்றுத்தந்தால் 2 மாதங்களுக்குள் அரசியல் தீர்வு. சிறிலங்கா பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவைப் பெற்றுத்தந்தால் இரு மாதங்களுக்குள் அரசியல் தீர்வினை முன்வைக்க முடியும் என்று வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசின் இந்த அறிவித்தலை கருத்தில் எடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரைவில் அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவின் அரசியல் யோசனை தொடர்பாக அமெரிக்கா அவரிடம் வினவியிருந்த நிலையிலேயே அரசு இந்த அறிவித்தலை தூதரகங்களுக்கு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்துக்கட்சி மாநாட்டின் யோசனைகளுக்கு அமைய இறுதி இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகள் என சந்தேகித்து 4 சிங்களவர்களை படுகொலை செய்தது இராணுவம். திருகோணமலை மாவட்டம் மாவிலாறு, சேருநுவர காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற நால்வரை தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகித்து சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். விடுதலைப் புலிகளைத் தேடி அப்பகுதியில் இராணுவத்தினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நால்வரின் சடலங்கள் கந்தளாய் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கந்தளாய் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் -Puthinam- மாவிலாறு பகுதியில் படையினரால் நான்கு பொதுமக்க…
-
- 5 replies
- 1.6k views
-
-
திருகோணமலையில் 1,000 கிலோ வெடிபொருட்களுடன் பார ஊர்தி: கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது திருகோணமலை பனிக்கர் பகுதியில் 1,000 கிலோ வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியை சிறிலங்கா கடற்படையினர் பறிமுதல் செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பார ஊர்தியின் சாரதியும், உரிமையாளரும் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கடற்படை முகாமில் பார ஊர்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படையினர் தெரிவித்தனர். -Puthinam-
-
- 6 replies
- 2.2k views
-
-
ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசுக்கு பல்வேறு நிலைகளில் சவால்களை தோற்றுவிக்கக்கூடிய அரசியல் நிகழ்வுப் போக்குகள் [30 - June - 2007] * அரசுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கின்ற போதிலும் மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்களே தவிர, பங்காளிகளாக இல்லை. ஐ.தே.க. ஆட்சிக்கால அனுபவங்களே அதற்குக் காரணம் * அரசியலில் மங்கிப்போன மூன்றாவது அணிக்கு மீண்டும் சாயம் பூசும் முயற்சிகளில் ஜே.வி.பி. இந்த வாரத்தில் இடம்பெற்ற சில அரசியல் நிகழ்வுகள் நாட்டில் உருவாகப்போகும் முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு புதிய சமிக்ஞைகளைக் காட்டியுள்ளன. இவற்றின் வளர்ச்சியானது மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு பல்வேறு நிலைகளிலான சவால்களைத் தோற்றுவிக் கவே செய்யும். ஏற்கனவே, ஐக்கிய தேசியக் கட…
-
- 1 reply
- 1.3k views
-
-
"சிங்களப் புலி" தலைவர் சியாமல் மூலம் என்னைக் கொல்ல கோத்தபாய சதி: காவல்துறையிடம் சிறிபதி முறைப்பாடு [சனிக்கிழமை, 30 யூன் 2007, 11:42 ஈழம்] [சி.கனகரத்தினம்] "சிங்களப் புலிகள்" எனப்படும் அழைக்கப்படும் குழுவின் தலைவர் சியாமல் மூலம் தன்னைக் கொலை செய்ய சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதி செய்கிறார் என்று கடவத்த காவல்நிலையத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவைச் சேர்ந்த சிறிபதி சூரியராச்சி முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படும் "சிங்கள புலிகள்" என்றழைக்கப்படும் குழுவினர், கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் 16ஆம் நாள் என்னை குண்டுவெட…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Sat Jun 30 7:05:20 EEST 2007 போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புத்துயிர் கொடுக்க புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ள முடிவு அரசும் கண்காணிப்புக் குழுவும் இணக்கம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் தலைவர் கலாநிதி ரஜிவ விஜயசிங்கவுக்கும், போர் நிறுத் தக் கண் காணிப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகம் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இது குறித்துக் கருத்திண…
-
- 5 replies
- 1.8k views
-
-
Posted on : Sat Jun 30 7:03:23 EEST 2007 மூதூர், சம்பூர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்துக்கு எதிராக நேற்று உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் மூதூர், சம்பூர் பகுதியை உயர் பாது காப்பு வலயமாக வர்த்தமானி மூலம் பிர கடனப்படுத்தி, அங்கிருந்த மக்களை மீளக் குடியமர விடாது தடுத்தமைக்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக் கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு மனுவை மாற்றுக் கொள்கைகளுக் கான மையம் மற்றும் பாக்கியசோதி சரவண முத்து ஆகிய தரப்பினரும் மற்றைய மனுவை மூதூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர வைக்கப்பட்டுள்ள அப்பிரதேச வாசிகள் நால்வர் சேர்ந்தும் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களில் பாதுகாப்பு அமைச் சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, பாதுகாப…
-
- 0 replies
- 794 views
-
-
Posted on : Sat Jun 30 7:04:52 EEST 2007 மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நல்லூர் கோயில் வீதியில் சுட்டுக் கொலை நல்லூர் கோயில் வீதியில் கைலாசபிள் ளையார் கோவில் சந்திக்கும் செஞ்சிலு வைச் சர்வதேசக் குழு அலுவலகச் சந்திக் கும் இடையில் நேற்றுப் பிற்பகல் 4 மணி யளவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகளி லிருந்து அவர்கள் ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயிலடியைச் சேர்ந்த சிங்காரவேலு லோகேந்திரா (வயது 29), ஆனைக் கோட்டை வடக்கைச் சேர்ந்த சுப் பிரமணியம் அம்பிகைபாகர் (வயது 39) ஆகியோரே உயிரிழந்தவர் என இனங்கா ணப்பட்டுள்ளது. மரண விசாரணைக்காக யாழ். ஆஸ்பத்திரி யில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக் களில் வந்து கொண்டிருந்தவேளை, மோட் டார…
-
- 1 reply
- 1.6k views
-
-
முடிந்தவர்கள் இதனைக் கண்டியுங்கள். இவன் ஒரு தமிழின விரோதி. இந்த ஒலிபரப்பு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது இவரது நோக்கம் போல் தெரிகிறது. http://www.tamilmedianz.com/
-
- 0 replies
- 2.6k views
-
-
யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும் யாழ்குடாநாட்டில் ஏற்கனவே இருந்த ஒட்டுக்குழுவினரைவிட மேலதிகமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவினர் தற்போது புதிதாக களம் இறக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாழ்.குடாநாட்டை படையினர் ஆக்கிரமித்த கையுடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், வரதர் அணி, புளொட், ஈ.பி.டி.பி யில் இருந்து பிரிந்து இயங்கிய சனநாயகப் பேரவை ஆகிய ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுவினர் தங்களை அரசியல் கட்சிகள் எனப் பதிவு செய்து கொண்டு குடாநாட்டில் தமது தமிழர் விரோத நடவடிக்கைகளை விரிவு படுத்தி வந்தனர். இக்காலப்பகுதியில் குறிப்பாக 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த குழுவினரின் நடவடிக்கைகள் குடாநாட்டில் தீவிரமாக இருந்தன இக்குழுவினரை நேரடியாகப்…
-
- 1 reply
- 1.6k views
-
-
புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தினாலே அரசியல் தீர்வு சாத்தியம் - கோத்தபாய ராஜபக்ச இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தும் வரை நீண்ட காலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒரு போது தீர்வு காணப்படுவது சாத்தியம் இல்லை என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனையே கடந்த கால வரலாறு கட்டியம் கூடி நிற்பதாக தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச இதனை அடிப்படையாக வைத்தே கிழக்கில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் படை நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
காணாமல் போன 355 பேரின் நிலைமை என்ன?- அமெரிக்காவின் கேள்விக்கு சிறிலங்கா மழுப்பலான பதில் இலங்கையில் காணாமல் போன 355 பேரின் பட்டியலை சிறிலங்காவிடம் கொடுத்து விசாரணை நடத்துமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இதற்கு தற்போது சிறிலங்கா அரசாங்கம் மழுப்பலான பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் தமிழ் வடிவம்: அமெரிக்க பிரதிச் செயலாளர் ஸ்டீபன் மான் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்தபோது காணாமல் போனதாகக் கூறப்படும் 355 பேரின் பட்டியலை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுவோர் தொடர்பாக உரிய அரச நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்ட…
-
- 1 reply
- 1.1k views
-