Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது தமிழர்கள் வெளியேற்றப்பட்ட மறுநாள் சம்பவம், தலைகுனிவில் சிறிலங்கா காவல் துறை! பாரிய வீதியோர குண்டொன்றை பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றைத் தொடர்ந்து செயலிழக்க செய்துள்ளனர்! 7கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு சோதனை சாவடி ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது! Sri Lanka slammed for deporting Tamils, bomb defused By Simon Gardner COLOMBO (Reuters) - Sri Lankan police defused a big roadside bomb in Colombo on Friday as local and international rights groups slammed the government for rounding up minority ethnic Tamils and deporting them to the war-ravaged north. The military said a 7…

  2. இந்தியாவில் இருந்து ஈ.என்.டி.எல்.எப் தேச விரோத குழுவினர் யாழ் குடாவுக்கு வரவழைப்பு. இந்தியாவில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்கி நின்று சமூகவிரோத தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஈ.என்.டி.எல்.எப் தேசவிரோத ஒட்டுக்குழுவின் உறுப்பினர்கள் பலர் தற்போது யாழ்ப்பாணம் வந்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் தமிழ் மக்களுக்கு எதிரான நாசகார நடவடிக்கைகளுக்காக இவர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் செய்திகள் இவர்கள் தற்பொழுது சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது. இவர்களின் முக்கியமான ஒட்டுக்குழு உறுப்பினரான பாஸ் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் …

  3. கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழத்துக்கான பாதையைத் திறந்த மகிந்தவுக்கு நன்றி: சுரேஸ் பிரேமச்சந்திரன் [வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 11:37 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழம் உருவாவகுவதற்கான பாதையைத் திறந்திருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியதாவது: கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இந்த வெளியேற்றல் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம்…

  4. Posted on : 2007-06-08 தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையின் மற்றொரு கொடூர வடிவம் இது! ஈழத் தமிழர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் வறுத்தெடுத்து வதைக்கும் அரச ஒடுக்குமுறை, இப்போது தலை நகரிலும் அவர்களை கருவறுக்கும் தனது வேலையைக் கனகச் சிதமாக முழு அளவில் ஆரம்பித்து விட்டது. கொழும்பு விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நித் திரைப் படுக்கையில் இருந்து உடுத்த உடையோடு கால் நடைகள் போல அள்ளிச் செல்லப்படும் கொடூரம் முழுத் தமிழினத்துக்கும் இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அவமான மாகும். மாற்று இனத்துப் பிச்சைக்காரர்கள் கூட தலைநகர் வீதியோரங்களில் கேட்பாரின்றி விசாரிப்பாரின்றி ஆனந் தமாக, சாவகாசமாகப் படுத்துத் தூங்கி மகிழும்போது தமிழர்கள் மட்டும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த க…

  5. செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் கொலை தொடர்பாக தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் இருவர் கடந்தவாரம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா அறிவித்துள்ளார். சந்தேக நபர்கள் அல்லது பணியாளர்களை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கே இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் தகவல்களை 0112328138 0777633359 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 0112326937 என்ற பக்ஸ் இலக்கங்கள் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் 0112447319 0773679900 என்ற தொலைபேசி இலக்கம் ம…

  6. மகிந்தவின் கொழும்பு நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் கண்டனம் தமிழ் மக்களை சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வடக்கு - கிழக்குப் பகுதிக்கு திருப்பி அனுப்பியமையானது இனப்படுகொலையின் மற்றொரு செயற்திட்டமும் பாரிய மனித உரிமை மீறலுமாகும். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மனித …

  7. தமிழர்களை வெளியேற்றியமையை கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் வீரகேசரி நாளேடு சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு கொழும்பில் கடந்த ஒருவாரகாலமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பை கண்டித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மேலக மக்கள் முன்னணியும் இணைந்து நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பகல் 12.00 மணிக்கு கொழும்பு லிப்டன் சதுக்க சந்தியில் நடைபெறவுள்ளது. கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் அனைவரையும் அப்புறப்படுத்தி வடக்குகிழக்கிற்கும் தமிழகத்திற்கும் அனுப்பிவிடவேண்டும் என்பது நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுவரும் பேரினவாத சதியாகும். இன்று இந்நடவடிக்கையை இந்த அரசாங்கம் எமது பலத்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் பகிரங்க…

  8. மடுவை கைப்பற்ற சிறிலங்கா இராணுவ தளபதிகள் தயக்கம். மன்னார் மடு பிரதேசத்தை பாரிய இழப்புகளுக்குப் பின்னரும் கைப்பற்ற வேண்டுமா என்ற தயக்கம் சிறிலங்கா இராணுவ தளபதிகள் மத்தியில் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி: சிறிலங்கா இராணுவத் தளபதியின் வன்னிப் பயணத்தின் சில மணி நேரங்களுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் விளாத்திக்குளம், மற்றும் முள்ளிக்குளம் இராணுவ நிலைகளை தாக்கியுள்ளர். கல்மடு முகாம் மீது சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் விடுதலைப்புலிகள் 130 மி.மீ பீரங்கிகளினால் தாக்குதலை தொடுத்தனர். அரை மணிநேர தாக்குதலின் பின்னர் 8.30 மணியளவில் பம்பைமடுவில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பீரங்கித் தளத்தின் மீதான பீரங்கித் தாக்குதல் தொடங்கி…

  9. கருணா குழுவுடன் இணைந்து அரசு கடத்தல்களில் ஈடுபடுகிறது: ஐ.தே.க சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுடன் அரச படையதிகாரிகள் பலர் இணைந்தே கொழும்பில் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறிலங்கா காவல்துறையினரின் உதவி காவல்துறை ஆணையாளர் ரொகான் அபயவர்த்தன, வான்படையின் ஸ்குவட்றன் லீடர் நிசந்த கஜநாயக்க ஆகியோர் கருணா குழுவினருடன் இணைந்து படுகொலைகளையும் கடத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். நிசந்த கஜநாயக்க "கொலிடே இண்" ஆடம்பர விடுதியில் தற்போது தங்கியுள்ளார். அவரது செலவுகளுக்கான பணத்தை அமைச்சர் ஒருவரின் சகோதரரான கஜடீரா…

  10. தொடரும் மனித உரிமை மீறல்கள் நாட்டில் ஆட்கடத்தல்கள் இன்று படுமோசமாக அதிகரித்துக் கொண்டே போகின்றன. அடுத்த நிமிடம் யார் கடத்தப்படுவாரோ என்ற அச்சத்தில் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வாழ்கின்றனர். படுகொலைச் சம்பவங்களோடு ஆட்கடத்தல்கள் சர்வசாதாரணமாகியுள்ளன. மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் குடிகொண்டுள்ளது. மக்கள் நிம்மதியிழந்தவர்களாக விரக்தி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்து வெளியே போகும் ஒருவர் மீண்டும் வீடு திரும்பும் வரை நிச்சயமில்லாத நிலைமையே தொடர்கிறது. ஆட்கடத்தல்கள் குறித்து எத்தகைய குரல் எழுப்பப்பட்ட போதிலும் அரசு அது குறித்து அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இனம் தெரியாதவர்களால்…

  11. ஜ புதன்கிழமைஇ 6 யூன் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழ் மக்களை முட்டள்களாக்கும் வேலையினை தற்போது அமைச்சர் என்று கூறிக்கொள்ளும் சந்திரசேகரன் மேற்கொண்டுள்ளார். ஈழத்தமிழர்களின் மேடையில் ஓங்கி முழங்கிய சந்திரசேகரன் அற்ப சலுகைகளுக்காக அமைச்சர் பதவியினை ஏற்று கடந்த 2 வருடத்திற்குள் எந்த ஒரு பயனுள்ள செயலையும் தனது சொந்த மலையக மக்களுக்கு செய்ய தவறிய இவர் அண்மையில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை அழைத்து சென்று மகிந்தவிடம் சந்திக்க செய்தமையானது மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயமாகும். கொலைகள் கடத்தல்களில் ஈடுபடும் அரச தலைவர் மகிந்தவிடம் பாதிக்கபட்டவர்களை கொண்டு சென்று சந்திக்க விடுவது மிகவும் வேடிக்கையானதும் கண்டிக்கபடவேண்டியதுமாகும். அவரகாலச்சட்டத்திற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு அரசாங்…

    • 0 replies
    • 1.1k views
  12. கிழக்கு எவ்வாறு மீட்கப்பட்டதோ வடக்கும் அவ்வாறே மீ“ட்கப்படும் வீரகேசரி நாளேடு வடக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. கிழக்கு வாழ் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமை எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்பட்டதோ, அவ்வாறே வடக்கு வாழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்குரிய உரிமையும் பெற்றுக்கொடுக்கப்படும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தõர். மக்களுக்கு சிறந்த எதிர்காலம் ஏற்படுத்தப்பட வேண்டும். யுத்தம் அரசியல் நோக்குடனோ, அரசியல் இலாபம் கருதியோ முன்னெடுக்கப்படவில்லை. நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் ஜ…

    • 8 replies
    • 2.4k views
  13. கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது பாரிய மனித உரிமை மீறல் - பல அமைப்புக்கள் கண்டனம். கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருந்த சுமார் 800 வரையிலான தமிழர்கள் சிறீலங்காப் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, ஒரு தொகுதியினர் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவித்த மனித உரிமை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடக இயக்கங்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகளும், அமைப்புகளும் சிறீலங்கா அரசைக் கண்டித்திருப்பதுடன், ஹிட்லர் பாணியில் தமிழ் மக்கள் அடிமைகள்போன்…

    • 37 replies
    • 4.1k views
  14. சுன்னாகத்தில் வீட்டுக்குள் கைக்குண்டு வீச்சு யாழ்ப்பாணம் ஊரடங்கு வேளையில் வீட்டிற்கு கைக்குண்டு வீச்சு மேற் கொள்ளப்பட்ட போதிலும் கைக்குண்டு வெடிக்காமையால் வீட்டில் உள்ளவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்கள். நேற்றிரவு 8.30 மணியளவில் இடம் பெற்ற இக்கைக்குண்டு வீச்சினால் வீட்டுக் கூரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. சுன்னாகம் பூதராயர் கோவிலடியைச் சேர்ந்த சாயீஸ்வரன் என்பவருடைய வீட்டின் மீதே இக் கைக்குண்ட வீச்சு இடம் பெற்றது. இராணுவத்தினர் கைக்குண்டு வீச்சு இடம் பெற்றவேளையில் அந்தப் பகுதியில் நடமாடியதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். இன்று காலையில் இராணுவத்தினருக்கு வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர…

  15. விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற மாணவர்கள் இராணுவத்தினர் நெருக்கடி யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம் பெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற மாணவ மாணவிகள் மீது இராணுவத்தினரும் இராணுவப் பலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றார்கள். கடந்த இரண்டு நாட்களாக இந்த தடகள விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக மருத்டதுவ பீடத்திற்கு அருகாமையில் உள்ள பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. நேற்றும் இன்றும் இடம் பெறும் இப்போட்டிகளில் கலந்துகொள்ள வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மைதான வாசலில் வைத்து இராணுவத்தினரின் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ப…

  16. செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் கொலை - பிரிட்டன் கண்டனம். சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்பு நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரிட்டன் தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டொமினிக் ஷில்கொற் தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்களும் நாட்டின் நெருக்கடியான பாதுகாப்பு நிலைமைகளையும் சிறிலங்கா அரசின் சட்டவிதிகள் மீறப்படுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்தவாரம் சன நெருக்கடி மிகுந்த நேரத்தில் இரத்மலானைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். அதனைத் தொடர்ந்து க…

  17. விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு இலங்கை விமான நிலையத்தில் அடி, உதை ஜூன் 07, 2007 திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர். விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது. ஆனால் கிளம்பிய சில வ…

    • 11 replies
    • 3.3k views
  18. நிலக்கீழ் கண்ணியில் படையினரின் வாகனம் வெடித்துச் சிதறியது: 3 படையினர் பலி. மட்டக்களப்பு புலுட்டுமான் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினரின் வாகனம் ஒன்று சிக்கியதில் சிறீலங்காப் படையினர் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்று புலுட்டுமான் பகுதியில் ஊடாகச் வானம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த போதே வாகனம் புதைத்து வைக்கப்பட்ட நிலக்கீழ் கண்ணியில் சிக்கியதிலேயே இப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நிலக்கண்ணில் சிக்கிய வானம் தூக்கி வீசப்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது. -Pathivu-

  19. சிறிலங்கா இராணுவம் ஏற்க மறுத்த இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் இன்று உரிய மரியாதைகளுடன் எரியூட்டப்பட்டுள்ளன.மன்னாரி

    • 5 replies
    • 1.7k views
  20. புலிகளின் விமான பலத்தை ஒழிக்க அமெரிக்கா - இந்தியா வழங்கிய அறிவுறுத்தல்கள் [07 - June - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காகவும் அதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காகவும் அண்மையில் ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுனர்களும் இந்திய பாதுகாப்பு வல்லுனர்களும் புலிகள் இயக்கத்தின் யுத்த பலத்தை ஒழிப்பதற்கு அரசு எடுக்கவேண்டிய உடனடியான நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுப் பட்டியல்களுடன் தமது பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை ஸ்ரீலங்கா அரசுக்கு சமர்ப்பித்துவிட்டதாக ஞாயிறு லங்கா தீபவுக்கு அறிவிக்கப…

  21. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வு: த.தே.கூ. நிராகரிப்பு. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தின் மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேசியதாவது: அரசாங்கத்தின் இராணுவ வழித் தீர்வுத் திட்டத்தையே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு முன்வைக்கிறது. பெரும்பான்மை தேசிய இனத்தினரைத் திருப்திபடுத்தும் வகையில்தான் சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தப்பட்டதால்தா

  22. Posted on : Thu Jun 7 7:38:09 EEST 2007 கொழும்பில் பிரபல வர்த்தகரைக் கடத்தி 24 1/2 கோடி பெற்றுக்கொண்டு விடுவிப்பு! கொழும்பின் பிரபல வர்த்தகரான நிஸ்தார் என்பவரைக் கடத்திச் சென்று, அவரிடம் இருபத்திநான்கரைக் கோடி ரூபாவைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு விடுவித்த சம்பவம் ஒன்று கடந்த மாத மத்தியில் இடம்பெற்றுள்ளது. இந்நத விவகாரம் நேற்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தெரிவித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான லக்ஸ்மன் செனவிரட்ண. அவர் வெளியிட்ட தகவலின் பிரகாரம் வர்த்தகர் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட சம்பவம் இதுதான். கடந்த மே 16ஆம் திகதி கொழும்பின் பிரபல வர்த்தகரான நிஸ்தார், பக்ஸ் அறிவித்தல் ஒன்றின் மூலம் கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். "டுபாயில் பல ஆயிர…

  23. கொழும்பு விடுதிகளிலிருந்து 500 தமிழர்கள் கட்டாய வெளியேற்றம் சிறிலங்கா தலைநகரான கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் விடுதிகளில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர். வெள்ளவத்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விடுதிகளை இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சுற்றிவளைத்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் வெளியேற்றினர். அதன் பின்னர் அனைவரையும் வெள்ளவத்தை சிறிலங்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து 7 பேரூந்துகளில் ஏற்றி கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொடவில் இறக்கிவிட்டனர். சிறிலங்காவின் இந்த கொடூர நடவடிக்கைக்கு மேலக மக்கள் முன்னணியின் கொழும்ப…

  24. வடபோர்முனையில் 200 இராணுவத்தினர் பலி: ஐ.தே.க. வடபோர்முனையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மோதலில் சிறிலங்கா இராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றில் ஐ.தே.க.வின் ஜோன் அமரதுங்க கூறியதாவது: கடந்த மூன்று தசாப்த காலங்களை விட கடந்த ஆண்டு குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 61,196 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 4 ஆயிரம் குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளன. வடபோர் முனையில் கடந்த சில நாட்களில் 200 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருப்பினும் அந்தத் தகவல்களை மக்களிடத்தில் அரசாங்கம் மறைத்துவிட்டது. இதுவரை 90 இராணுவத்தினர் காணாம…

  25. ரணிலின் செயற்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன: அமைச்சர் ஜோன் செனிவிரட்ன [வியாழக்கிழமை, 7 யூன் 2007, 10:13 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று மின்சாரத்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜோன் செனிவிரட்ன பேசியதாவது: சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகத்தில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகிறார். வேறு எந்த ஒரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவர் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை. ரணிலின் செயற்பாடுகள் தேசப்பற்று அல்லாத வகையிலேயே உள்ளன. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்தமைக்கு ஐக்கிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.