Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விக்கிபீடியா இணையத்தளம் இராணுவ இரகசியங்களை வெளியிடுகின்றது: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 25 மே 2007, 16:34 ஈழம்] [அ.அருணாசலம்] ஐக்கிய தேசியக் கட்சி இராணுவ இரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு வெளியிடுவது என்பது தவறானது நாம் அதனை வெளியிடவில்லை. ஆனால் விக்கிபீடியா இணையத்தளத்தில் சிறிலங்காப் படையினரின் போரிடும் திறன் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு படையினர் தொடர்பான இரகசியங்களை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கி வருகின்றது என்று எரிபொருள் மின்சக்தி பிரதி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையிலேயே ஜெயசே…

  2. வெள்ளி 25-05-2007 15:51 மணி தமிழீழம் [மோகன்] கருணா குழு மற்றும் ஈபிடிபி குழு ஆயுதங்களை வைத்திருக்க அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை - போகல்லாகம சிறீலங்காவில் கருணா குழுவினரோ அல்லது ஈபிடிபியினரோ ஆயுதங்களை வைத்திருப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என சிறீலங்காவுக்கான வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் யுத்த முன்னெடுப்பால் இடப்பெயர்வுக்கு உள்ளாகி மக்களை மீளவும் குடியேற்றுகின்ற நடவடிக்கை தொடர்ப்பில் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே நேற்று போகல்லாகம இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றங்கள் வலுக்கட்டாயமாக இடம்பெறவில்லை எனத் தெரிவித்து போகல்லாகம பொதுமக்களின் சுயவிருப்பிலேய…

  3. வெள்ளி 25-05-2007 17:04 மணி தமிழீழம் [தாயகன்] கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவி - அனுராவிடம் பறிப்பு, கருவிடம் ஒப்படைப்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் முரண்பட்டிருந்த அனுரா பண்டாரநாயக்க பதவி வகித்து வந்திருந்தார். இந்த நிலையில், அனுரா பண்டாரநாயக்கவின் பதவியைப் பறித்த அதிபர் மகிந்த ராஜபக்ஸ, அதனை அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசுடன் இணைந்துகொண்ட கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளார். இந்தப் பதவி மாற்றம் தொடர்பான எழுத்துமூல அறிவித்தல் கம்பஹா அலுவலகத்திற்கு அதிபர் மானிகையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள கம்பஹா மாவட…

  4. கண்காணிப்புக் குழுவின் தலைவர் இன்று கிளிநொச்சி செல்கிறார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் சொல் பேர்க் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார். இன்றுகாலை தரை மார்க்கமாக கிளிநொச்சி வரும் அவர், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் பேச்சு நடத்துவார். போர்நிறுத்த உடன்பாடு, அண்மைக்காலத் தாக்குதல் கள் ஆகியன குறித்தே இன்றைய சந்திப்பின்போது பிர தானமாகப் பேசப்படும் என்று அறியவருகிறது உதயன்

  5. வெள்ளி 25-05-2007 14:32 மணி தமிழீழம் [மோகன்] யாழில் கப்பம் கேட்டு எச்சரிக்கை கடிதங்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பீடாதிபதிகள் உட்பட பலரிடம் கப்பம் கேட்டு வீட்டு முகவரிகளுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் இந்தக் கடிதங்கள் அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அமைப்பு பல்கலைக்கழ வளாகத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பீடாதிபதிகள் விரிவுரையாளர்களுக்கு என கொலைப் பயமுறுத்தல் விடுத்து துண்டுப்பிரசுரங்களை ஒட்டியிருந்தார்கள். இந்நிலமையில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் யாழ் மாவட்டத்தின் பொது அமைப்புப் பிரத…

  6. நாடாளுமன்ற விவாதத்திற்கு முன்பே தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டு விட்டன: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 25 மே 2007, 05:47 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 8 ஆம் நாள் நடைபெற உள்ள நிலையில் அதன் பங்குகள் 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: நிதி அமைச்சிடம் இருந்து சிறிலங்காவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் குளோபல் தொலைத்தொடர்பு நிறுவனம் எங்கே? அதற்குரிய உரிமையாளர…

  7. மன்னிப்பு சபை செயலாளர் நாயகத்தின் எச்சரிக்கை [25 - May - 2007] மனித உரிமை மீறல்கள் தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் கையாலாகாத்தனமாக, பலவீனமடைந்ததாக இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கானிடமிருந்து எழுந்துள்ளது. அவநம்பிக்கைகள், தமக்கிடையிலான பிளவுகளால் சர்வதேச சமூகம் வலுவிழந்துவிட்டது என்று ஐரீன்கான் சாடியிருக்கிறார். உலகத்தை ஆபத்து நிறைந்ததாக, மனித உரிமைகள் மோசமான முறையில் மீறப்படுவதாக துருவமயப்பட்டதாக மாற்றுவதற்காக வல்லமை வாய்ந்த அரசாங்கங்களும் ஆயுதக் குழுக்களும் வேண்டுமென்றே அச்ச சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்த…

  8. இலங்கைப் பிணக்கு விடயத்தில் மாறுகிறது சர்வதேசப் போக்கு இலங்கை இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகள் பின்னடைவு கண்டமைக்கு அது தொடர்பான விடயங் களைக் கையாண்ட சர்வதேச சமூகத்தின் பிழையான அணுகு முறையும் பிரதான காரணம் என்று இப்பத்தி யில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளான இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம தரப்பு அந் தஸ்தோடு அமைதி முயற்சிகளில் ஈடுபட இணங்கி, அதன் அடிப்படையில்தான் சமாதான எத்தனங்களை முன்நகர்த்தின என்பது வெள்ளிடைமலை. ஆனால், காலப்போக்கில் சமதரப்பு அந்தஸ்து, விடு தலைப் புலிகளுக்கு மறுக்கப்பட்டு, அவர்கள் ஒதுக்கப்பட்ட தால் அமைதி முயற்சிகள் தடங்கப்பட்டு முடங்கும் நிலைமை உருவாயிற்று. புதிதாக ஆட்சிக்கு வந்த ஸ்ர…

  9. குடாநாட்டில் பாடசாலைகள் முழு அளவில் இயங்கின குடாநாட்டில் நேற்றுப் பாடசாலைகள் முழு அளவில் இயங்கின. அனேகமாக நூறு வீத மாணவர்கள் பாடசாலை களுக்குச் சமுகமளித்தனர். கடந்த பதினொரு நாள்கள் மேற்கொண்ட பகிஷ்கரிப்பு போராட்டத்தைக் கைவிட்டு பாடசாலை மாணவர்கள் நேற்று பாடசா லைகளுக்குச் சென்றனர். மாணவர்கள் மூவர் இரவு வேளையில் கடத்திப் பட்டமை, மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக் கப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாட சாலை மாணவர்கள் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டுவந்தனர். இந்தப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற் காலிகமாக நிறுத்துவதாக தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை மூலம் அறிவித்ததை அடுத்து, மாணவர்கள் பகிஷ்கரிப்பு போராட் டத்தைக் கைவிட்டு, பாடசாலைகளுக்கு நேற்று முழு எண்…

  10. நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலை அடுத்து தீவகம் முழுவதும் ஊரடங்கு. நேற்று அதிகாலை நெடுந்தீவில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து வேலணை பிரதேச செயலகம், ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு உதவி அரசாங்க பிரிவு ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பண்ணை பாலத்திற்கு அப்பாலும் காரைநகருக்கு செல்லும் மூளாய் வீதிக்கு அப்பாலும் எவரையும் உள் நுழையவோ வெளி நுழையவோ அனுமதிக்கவில்லை எனவும் தெரியவருகிறது. -Pathivu-

  11. புலிகளின் விமானத் தாக்குதலால் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி நாட்டில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் இலகுரக விமானத் தாக்குதல் சுற்றுலாத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 19 வீதமாகக் குறைவடைந்துள்ளது என்று இலங்கை உல்லாசப் பயணச்சபையின் தலைவர் ரென்டன் டி அல்விஸ் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டே வருகிறது. ஆனால், விடுதலைப்புலிகளின் இலகுரக விமானத் தாக்குதல் மூலம் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை நிவர்த்திக்க நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றும் அவர் சுட்டிக…

  12. ஐ.தே.க. எம்.பி.ஜோன் அமரதுங்கவிற்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஜோன் அமரதுங்க தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை பாராளுமன்றத்தில் நேற்று முன்வைத்தார்.பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடிய போது சபாநாயகர் அனுமதியுடன் மேற்படி சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தார்.நான் பராளுமன்றத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை வருகை தந்து கொண்டிருக்கின்ற போது எனது தொலைபேசியூடாக எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று கூறினார். ஐ.தே.க. எம்.பி ஜோன் அமரதுங்க இவ்வாறு உரையாற்றுகின்ற போதுஎதிர்கட்சி …

  13. வியாழன் 24-05-2007 17:37 மணி தமிழீழம் [சிறீதரன்] ஈ.பி.டி.பினரால் கப்பல் பயணிகளிடம் பணம் பறிப்பு யாழ்ப்பாணம் திருகோணாமலைக்கு இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பிரயாணிகள் கப்பலில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பணம் அறவிட்டு வருவதாக கப்பல் பயணத்தை மேற் கொள்பவர்கள் தெரிவிக்கின்றார்கள். கப்பலில் பொது மக்களே தமது பயணப் பொதிகளைத் தூக்கி ஏற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் கப்பலில் நிற்க்கும் இருவர் கப்பல் பயணத்தின் போது பயணிகளிடம் கப்பல் புறப்பட்டு சில நிமிட நேரத்தில் பொதிகள் ஏற்றியதாகக் கூறி ஒவ்டிவாருதரும் பொதிக்கு ஐம்பது ரூபா என்ற அடிப்படையில் பணம் தர வேண்டும் எனக் கூறி பணம் பறித்து வருவதாக கப்பல் பயணிகள் தெரிவிக்கின்றார்கள். இது சம்பந்தமாக கப்பல் கப்டனுக்குப…

  14. இந்திய மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார் இலங்கை பயணம் இந்தியாவின் மத்திய வேளைண்மைத்துறை அமைச்சர் சரத் பவார் இன்று சிறீலங்காவுக்கான இரண்டு நாள் அரச பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று கொழும்பை அடைந்த சரத் பவார் இன்று மகிந்த ராஜபக்சவையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

  15. புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்பாக ஐ.தே.க. விவாதம் நடத்தக் கோரியதால் சபையில் கடும் சர்ச்சை வீரகேசரி நாளேடு விடுதலை புலிகளின் விமானத் தாக்குதலை எதிர்கொள்ள விமானப்படை தயாராக இல்லை. ஆகவே அது தொடர்பாக விவாதம் ஒன்றை நடத்த அனுமதியளிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்தமையினால் சபையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த இந்த கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. க்கள் ஏற்றுக்கொண்டு இன்றைய (நேற்று) தினமே விவாதம் நடத்தவேண்டுமென அழுத்தம் கொடுத்தமையினால் அரச தரப்பு அமைச்சர்கள் விசனமடைந்து வாய்த்தர்க்கம் புரிந்தனர். ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் நீண்ட நேரம் மேற்படி விடயம் தொடர்பாக …

  16. பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் அமைதி ஒன்றுகூடல் இலங்கையரசின் மனிதவுரிமை மீறல்களை பிரான்ஸ்வாழ் மக்களிற்கும் பிரெஞ்சு அரசிற்கு எடுத்து சொல்லும் விதமாகவும் மற்றும் பிரான்சில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணியாளர் மீதான நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவேண்டியும் பிரான்ஸ் வாழ் தமிழர்களின் அமைதி ஒன்று கூடல் பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு மற்றும் பல தமிழ் அமைப்பகளினாலும் 29ந்திகதி ஒழுங்கு செய்யபட்டுள்ளது. பி. பகல் 2மணியளவில். 8ம் இலக்க நிலகீழ் தொடரரூந்தில் அமைந்திருக்கும் tour mauboucg என்னுமிடத்தில் நடைபெறும் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு இலங்கையரசு தமிழர் மீதான மனிதவுரிமை மீ…

    • 0 replies
    • 598 views
  17. கெப்பிட்டிக்கொல்லாவ: ஊர்காவல் படையைச் சேர்ந்தவரின் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி [வியாழக்கிழமை, 24 மே 2007, 18:54 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொலாவப் பகுதியில் சிங்கள ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒரு குழந்தை, இரு பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கொல்லப்பட்ட பெண்களில் ஒருவர் தாக்குதல் நடத்திய ஊர்காவல் படையைச் சேர்ந்தவரின் மனைவி ஆவார். துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். புதினம்

    • 1 reply
    • 1.1k views
  18. கொழும்பு மாலுகடைக்கு அண்மையில் குண்டு வெடித்துள்ளது மேலதிக செய்திகள் வெகுவிரைவில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரியே குண்டை வெடிக்க வைத்துள்ளார் சக்தி செய்திகள் கடற்கரை வீதியில் இருக்கும் துறைமுக பிரதான வாசலில் குண்டு வெடிபு நடைபெற்றுள்ளது

    • 14 replies
    • 3.6k views
  19. நெதர்லாந்தில் இருந்து வந்த தாயையும் மகளையும் காணவில்லை [Wednesday May 23 2007 08:18:29 AM GMT] [யாழ் வாணன்] நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினமிரவு உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து செத்சிறிபாய பிரதேசத்திற்கு சென்ற இவர்கள் தொடர்பாக பின்னர் தகவல்கள் கிடைக்கவில்லை என உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செத்சிறிபாய பிரதேசத்தில் இறுதியாக ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் என ஆட்டோ சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். tamilwin.com

  20. கடத்தப்பட்ட மாணவருக்காக தியாகம் செய்வதற்குத் தயார் மாணவர் ஒன்றியம் அறிக்கை யாழ்ப்பாணம்,மே.24 கடத்தப்பட்ட எமது சகோதரர்களின் விடுதலைக்காக நாம் எத்தகைய தியா கத்தினையும் செய்வதற்கு குடாநாட்டு மாணவர் சமூகம் காத்திருக்கிறது. இவ்வாறு தெரிவித்திருக்கிறது யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம். மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட் டத்தை இடைநிறுத்துவது தொடர்பாக நேற்று விடுத்த அறிக்கையில் மேற் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது: கடந்த 04.05.2007 அன்று இரவு ஊர டங்கு வேளையில் எமது சக மாணவர் களான சுந்தரலிங்கம் யசோதரன், குக ராஜன் கண்ணன், நாகராசா வேணு காணன் ஆகிய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் வைத்து விசாரணைக்கென கூட்டிச் செல்ல…

    • 1 reply
    • 1k views
  21. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் ஜே.வி.பி நேற்றுமாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் 37ஜே.வி.பி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    • 0 replies
    • 984 views
  22. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சுவிஸ் தமிழர் பேரவை [வியாழக்கிழமை, 24 மே 2007, 17:29 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த வருடத்திற்கும் நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதை அறிந்து, சுவிஸ் வாழ் தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என சுவிஸ் தமிழர் பேரவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த வருடத்திற்கும் நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதை அறிந்து, சுவிற்சர்லாந்து வாழ் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய…

  23. இனப்பிரச்சினைக்கு சீனத்தலைவர்களும் அதிகாரப் பரவலையே வற்புறுத்துகிறார்கள் ரணில் விக்கிரமசிங்க தகவல் கொழும்பு,மே24 இலங்கையில் தற்பொழுது நிலவும் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவ லாக்கல் மூலமே தீர்வுகாணப்படமுடியும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்களும் வலியுறுத்தினார்கள். எதிர்க் கட் சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளு மன்றக் கட்டடத்தில் நடந்த தமது கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இவ் வாறு விளக்கினார். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சீனாவில் மேற்கொண்ட விஜயம் தொடர் பாகத் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறினார். சீனா பூகோள அளவில் பெரிய நாடாக இருந்தபோதிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளித்திருப் பதன் மூலம் பிரிக்கப்படாமல்…

  24. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்: ஜப்பானும் உன்னிப்பாக அவதானிக்கின்றது சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி தகவல் ரோக்கியோ, மே 24 இலங்கையில் மனித உரிமை மீறல் கள் தமிழீழ விடுதலைப் புலிகளாலோ அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த தரப்பினராலோ எவரால் செய்யப் பட்டாலும் ஜப்பான் அதனை கவ னித்தே வருகின்றது. கவலைப்படவும் செய்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங் கைக்கான ஜப்பானிய சமாதானத் தூது வர் யசூசி அகாஷி. டோக்கியோவில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அகாஷி, இலங் கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாக அவ தானித்தே வருகின்றோம். இதை இலங்கை அரசும் அவதானத்தில் கொள் ளும் என்று கருதுகின்றோம் என்று கூறினார். மனித உரிமை மீறல்கள் தொடர் பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட…

  25. யாழில் இருந்து விடுமுறையில் சென்ற இராணுவ மேஜர் வாகன விபத்தில் பலி [வியாழக்கிழமை, 24 மே 2007, 06:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து விடுமுறையில் மாத்தறை தங்காலைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் 3 ஆவது கெமுனு வோச் பிரிவின் தளபதியான மேஜர் ரசிக்க வெத ஆராச்சி என்பவரே வாகன விபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். -புதினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.