ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளனர்: சரத் பொன்சேகா. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்த விகாரையில் மல்வத்த மகாநாயக்கர் திப்படுவவெ சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் கூறியதாவது: 150 விடுதலைப் புலி பயங்கரவாதிகள், இராணுவத்திடம் சரணடைந்து விட்டனர். இராணுவத்திடம் சரணடைந்த 6 சிறார்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலி பயங்கரவாதிகள் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆள் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறையில் புலிகள் உள்ளனர். தமிழ் மக்களால் பயங்கரவாதிகள் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக…
-
- 7 replies
- 2.2k views
-
-
நவாலியில் கொள்ளையர்கள் துப்பாக்கி, வாள்களுடன் வீட்டினுள் புகுந்து தாக்குதல் : ஒருவர் காயம். நவாலி வடக்கைச் சேர்ந்த ஒருவர் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். நேற்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இளையதம்பி மருதகுட்டி(வயது 85) என்பவரே வாள் வெட்டு மற்றும் கொட்டன் தாக்குதல் ஆகியவற்றுக்கு இலக்காகயுள்ளார். இவர் தற்பொழுது யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சுமார் ஆறு, ஏழுபேர் கொண்ட கோஷ்டி ஒன்று வாள், கத்தி, கொட்டன்கள், துப்பாக்கிகள் சகிதம் காயமுற்றவரின் வீட்டுக்கு வந்தனர் என்றும் வந்த கையோடு வயதானவரைத்தாக்கினர் என்றும் சொல்லப்படுகிறது. வீட்டிலிருந்த மற்றவர்கள் தொலைபேசி ம…
-
- 0 replies
- 860 views
-
-
நாட்டைச் சீரழிக்கும் அரசாங்கத்தை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்: ரணில். சிறிலங்காவைச் சீரழிக்கும் மகிந்த அரசாங்கத்தை ஆதரிக்கமாட்டோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது: இந்த நாட்டை மகிந்த சகோதரர்கள் ஒருபுறமும் விடுதலைப் புலிகள் ஒருபுறமும் அழித்து வருகின்றனர். நாட்டை நாசமாக்க மகிந்த சகோதரர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாட்டைச் சீரழிக்கும் எவரையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது. மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக ஆதரிப்போம். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க ராஜபக்ச குடும்பம் முயற்சிக்கிறது. அதனை எதிர்த்துப் போராடி மக்களின் உரிமைக…
-
- 1 reply
- 891 views
-
-
உச்சநிலையில் உள்ளக மோதல்: கருணாவுக்கு பிள்ளையான் இறுதி எச்சரிக்கை. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உள்ளக மோதல் உச்சநிலையை அடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தி விவரம்: தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிலிருந்து கருணா விலக வேண்டும் அல்லது பலவந்தமாக வெளியேற்றப்படும் அவமதிப்பான நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று அக்குழுவைச் சேர்ந்த பிள்ளையான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணா குழுவின் உள்ளக மோதலை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி மற்றும் பிள்ளையானுக…
-
- 5 replies
- 2k views
-
-
ஓமந்தை பாதை மூடப்பட்டதை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய ஜந்து நோயாளர்கள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிறந்த ஒருநாள் சிசு ஒன்று நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளது. அத்துடன் 28 இற்கும் அதிகமான நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லமுடியாத நிலையில் கிளி. வைத்தியசாலையில் உள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நான்கு நோயாளர்கள் மரணமடைந்துள்ளனர். என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் க.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
-
- 0 replies
- 727 views
-
-
புலிகள் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நிஷாந்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றுவதற்கான புலிகள் பாரிய முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் முக்கிய படைதளபதிகள், புலனாய்வு பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.. இச்சந்திப்பின் போது யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்கான போர் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் தெரிவித்துள்ள்து.. வீரகேசரி தமிழ் நாடு சென்ற அகதிகளிலுள்ள புலி உறுப்பினர்களை மீண்டும் இயக்கத்தில் இணையுமாறு புலிகள் கோரிக்கை நிஷாந்தி மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து தமிழ் நாடு சென்ற…
-
- 3 replies
- 1.7k views
-
-
Posted on : Mon May 28 6:16:07 EEST 2007 புனித மடுப் பகுதியை நாசமாக்குதவதற்காக அரசு அங்கு தாக்குதல்களை நடத்துகிறது ஜயலத் ஜயவர்த்தனா குற்றச்சாட்டு மன்னார் மடு பகுதியைக் கைப்பற்றி அந்தப் புனித இடத்தை நாசமாக்கும் நோக்கு டன் அங்கு அரசு தாக்குதலைத் தொடர்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கவேண்டும் எனக் கோரி அவர் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதங்களை அனுப்பவுள்ளார். இது தொடர்பாக ஜயலத் ஜயவர்தன உதயனுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: மன்னார் மடுப்பகுதி 600 …
-
- 0 replies
- 866 views
-
-
Posted on : Mon May 28 6:17:08 EEST 2007 அரசும் புலிகளும் இராணுவ வெற்றியிலேயே அதிக நம்பிக்கை அதனால் போர் புரிவதில் வெகு தீவிரம்! விரைவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் அரசாங்கப் படைகளும் விடுதலைப் புலிகளும் தமக்கே வெற்றி கிட்டும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றன. அதனால், அவை போரை நடத்துவதிலேயே வெகு தீவிரமாகக் காணப்படு கின்றன இத்தகைய பின்னணியில் எதிர்வரும் வாரங்களில் போர்வெடித்து, வன்முறைகள் அதிகரித்து இரத்த ஆறு ஓடும் சாத்தியம் நிறையவே உண்டு. இவ்வாறு இலங்கை நிலைமை குறித்து இராஜதந்திரிகள் கணிப்பீடு செய்திருக்கிறார்கள். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, இலங்கையின் நிலைமை குறித்த தனது ஆய்வில் இவ்வாறு இராஜதந்திர வட்டா ரங்களை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டிருக்…
-
- 1 reply
- 1k views
-
-
Posted on : Mon May 28 6:16:28 EEST 2007 கொழும்பில் வெடித்த குண்டின் உண்மையான இலக்கு என்ன? ஆங்கில இதழின் ஆய்வில் வெவ்வேறு தகவல்கள் ""கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுதாக்குதல், கொழும்பு துறைமுகத் தில் தரித்து நிற்கும் ஆயுதக்கப்பலில் இறக் கப்படும் ஆயுதங்களுக்கு வைக்கப்பட்ட குறியா என படைத்தரப்பில் இருந்து பலத்த சந்தேகம் எழும்பியுள்ளது.'' இவ்வாறு "த சண்டே ரைம்ஸ்' வார வெளியிட்டில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுக் கட்டுரையை ஆதாரம் காட்டி இணையத்தளங்கள் செய்தி வெளியிட் டுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்படுவதா வது: நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடந்த சில மணிநேரங் களுக்குள் கொழும்பு துறைமுகத்திற்கு அண் டிய பகுதியில் குண்…
-
- 1 reply
- 1.3k views
-
-
நிஜப்போரும் நிழல்போரும் ஆங்கில வார இதழில் பாதுகாப்பு நிலைவரம் பற்றிய விடயங்களை வரையும் பிரபல இராணுவ விமர்சகர் ஒருவர் இலங்கையில் இரண்டு விதமான யுத்தங்கள் கட்டவிழ்ந் திருக்கின்றன எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஒன்று அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையில் களத்தில் வெடித்துள்ள போர். மற்றது அரசுத் தரப்பு கட்டவிழ்த்து விட்டிருக்கும் பிர சாரப் போர். இராணுவ இழப்புகள் பற்றிய உண்மைகளை மறைத்து இந்த ஊடகத்துறைப் போரில் அரசுத் தரப்புச் செய்யும் பிர சாரத் தந்திரோபாயத்தை அவர் கோடிகாட்டியிருக்கின்றார். இதற்கு அப்பாலும் இதில் ஒரு விடயம் உள்ளது. முதலாவது வகைப் போரில் அரசுப் படையினரும், புலி களும், அத்தோடு இடையில் சிக்கி அப்பாவிகளும் உயிரிழக் கின்றார்கள். மற்…
-
- 0 replies
- 909 views
-
-
வவுனியா மருத்துவமனையில் குழந்தைகளை விட்டுவிட்டு தாய்மார் தலைமறைவு. வவுனியா மருத்துமனையில் அண்மையில் பிரசவித்த இரண்டு குழந்தைகளை அவற்றின் தாய்மார் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 700 மற்றும் 950 கிறாம் எடையுள்ள இந்த இரண்டு குழந்தைகளும் மருத்துவர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதாக, மருத்துமனைப் பணிப்பாளர் மருத்துவர் நவான் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். இது பற்றிய விசாரணைகளை சிறீலங்காவின் சிறப்பு காவல்துறை குழுவொன்று மேற்கொண்டு வருவதால், குழந்தைகளை நிறழ்படம் பிடிப்பதற்கு மருத்துவமனை நிருவாகம் ஊடகர்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. குழந்தைகளை விட்டுச்சென்ற தாய்மார் இருவரும் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு மருத்துமனைகளில் இருந்து மேலத…
-
- 1 reply
- 1k views
-
-
தீர்வுத்திட்டமா தீர்த்துக்கட்டவா http://www.pathivu.com/?ucat=nilavaram&file=270507
-
- 1 reply
- 824 views
-
-
சிறிலங்காவில் என்னால் வாழ முடியவில்லை: கடற்படை புலனாய்வுத்துறை அதிகாரி [திங்கட்கிழமை, 28 மே 2007, 04:55 ஈழம்] [சி.கனகரத்தினம்] வவுனியாவில் உள்ள சிறிலங்கா கடற்படையின் புலானாய்வுத்துறை அதிகாரியாகவும், அரசின் வவுனியா இணைப்பாளராகவும் பணியாற்றிய கொமாண்டர் ரோகண கமகே தன்னால் சிறிலங்காவில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மகிந்தவினதும், பாதுகாப்பு அமைச்சினதும் வேண்டுகோளுக்கு இணங்க சுதந்திரக்கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளராக பணியாற்றிய ரோகண கமகே விடுதலைப் புலிகளுக்கு தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் பின்னர் இவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்ட்டிருந்தார். எனினும் அரச ஊடகங்களின் கடுமையான…
-
- 1 reply
- 1.3k views
-
-
நெடுந்தீவு ராடார் நிலையம் படையினருக்கு பெரும் இழப்பு: ஏஎஃப்பி இடம்பெற்று வரும் மோதல்களில் இருதரப்பும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். எனினும் நெடுந்தீவில் இருந்த கரையோர ராடார் நிலையத்தின் இழப்பே படையினருக்கான பெரும் இழப்பாகும். இந்த ராடார் நிலையம் இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையிலான ஒடுக்கமான பாக்கு நீரிணையை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி ஆய்வில் அமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: புதிதாக இடம்பெற்று வரும் வான், கடல் தாக்குதல்கள் அரச படையினரும், விடுதலைப் புலிகளும் ஒரு பெரும் சமருக்கு தயாராகி வருவதையே கட்டுகின்றது. அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்னர் உக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
திங்கள் 28-05-2007 04:58 மணி தமிழீழம் [தாயகன்] மகிந்தவிற்கு உதவிய கடற்படை புலனாய்வு உறுப்பினர் நாட்டில் வாழ முடியாத நிலை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்துவந்த கடற்படை புலனாய்வு அதிகாரி கொமான்டர் மேஜர் றோஹண கமகே நாட்டில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வவுனியாவில் பணிபுரிந்த இவர்இ விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்சச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜே.வி.பி ஆகியவற்றின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்கஇ சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருக்கு தனது நிலை பற்றி இந்த அதிகாரி கடிதம் அனுப்பியிருக்கின்றார். …
-
- 0 replies
- 716 views
-
-
தமிழ் கட்சிகளின் நிராகரிப்புக்கு மத்தியில் சு.க.வின் யோசனைகள் இவ்வாரம் ஆராய்வு வீரகேசரி நாளேடு இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சி ஆலோசனை குழு நான்கு மாதங்களுக்கு பின்னர் இவ்வாரம் மீண்டும் கூடவிருக்கின்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் ஆராயப்படவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது யோசனைகளை பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தினமான ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தது. அந்த யோசனையை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஏகமனதாக நிராகரித்துவிட்டன. இந்நிலையிலேயே அந்த யோசனைகள் ஆலோசனை குழுவினால் இவ்வாரம் ஆராயப்படவுள்ளமை குறி…
-
- 0 replies
- 836 views
-
-
திங்கள் 28-05-2007 00:28 மணி தமிழீழம் [தாயகன்] ரணில், திஸ்ஸ முரண்பாடு - ஐ.தே.கட்சிக்குள் குழப்பம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் இடையில் முறகல்நிலை தோன்றியுள்ளதால், கட்சிக்குள் பாரிய குழப்பங்கள் தோன்றியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ரணிலிற்கு ஆதரவான உறுப்பினர்கள் பலர் திஸ்ஸ அத்தநாயக்கவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு வழங்கிய தமது ஆதரவை விலக்கியுள்ளனர். குண்டசாலையில் 10,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் பாரிய பிரசாரக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க, கட்சி உறுப்பினர்கள் பலரை அதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை அகிலா காரியவாசம், சாகல ரத்நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
மேற்குலக கரிசனையும் இந்திய கடும்போக்கும் -சி.இதயச்சந்திரன்- இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இனவாத வேர்கள் பரவிப்படர்ந்து சகல பெரும்பான்மையின அரசியல் சக்திகள் மத்தியிலும் ஆழமாக ஊடுருவி இன்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற எல்லைகளைக் கடந்து பேரெழுச்சி கொண்டுள்ளது. தமிழின விடுதலை எழுச்சியின் குறியீடாக விளங்கும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதென்கிற பேரினவாத உந்துசக்தி, சிங்கள இனத்தின் முழுமையான அரசியல் சக்திகளையும் இனவன்மக் கோட்பாட்டோடு இணைய வைத்துள்ளது. இவற்றையெல்லாம் சர்வதேசம் புரிந்துள்ளதென்பதை ஊகிக்கக் கூடிய சக்தியும் தமிழ் மக்களுக்கு உண்டு. ஜனநாயக வழியில் அதற்கான தீர்வினை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் தேர்தல் மூலமும் தமிழ்மக்கள் உலகிற்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறி லங்கா தலைநகர் கொழும்பில் இடம்பெறும் ஆட்கடத்தல், பணப்பறிப்பு விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அண்மையில் சிறி லங்காவுக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சட் பௌச்சர் முன் வைத்த மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் சிறி லங்கா அரசு ஈடுபடுகின்றது என்ற கருத்துக்குப் பின்னர், ஆட்கடத்தல் குழுக்களில் செயற்பட்ட பாதாள உலக, படைத்தரப்பு ஆட்கள் சிலர் தமது எஜமானர்களின் கட்டளைகளிற்குக் கீழ்ப்படியாமல் ஓதுங்கி வருகின்றனர். பிரதானமாக மூன்று குழுக்களாக இவர்கள் செயற்பட்டு வந்தனர்.மகிந்த ராஜபக்ச, கோத்தபாயா ராஜபக்ச ஒரு குழுவும், கெஹெலிய ரம்புக்வெல, மகிந்த சமரசிங்க, மைத்திரிபால சிறிசேன அமைச்சர்;கள் குளு இரண்டாவதும், பொலிஸ், டி.ஜ.ஜி.மார் குழு மூன்றாவதுமாகும். மேற்பட…
-
- 7 replies
- 2.8k views
-
-
விமலின் வியாபார இரகசியங்கள் வெளியிடப்படும்: மகிந்த Sunday, 27 May 2007 சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பாக 10 மில்லியன் டொலர்களை அரசின் உயர் அதிகாரி ஒருவர் கையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால், அவரது வியாபார நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பங்கு விற்பனை இரு நிறுவனங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அதில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. வனஸ்ப்பதி வர்த்தகம் தொடர்பாக விமல் என்னை சந்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஞாயிறு 27-05-2007 20:11 மணி தமிழீழம் [மயூரன்] அரசுக்கெதிராக செயற்படுபவர்களை கவனிக்க விசேட காவல்துறைப்பிரிவு சிறீலங்கா காவல்துறையினர் அரசியல்வாசிகளின் செயற்பாடுகள், பொதுசேவைகளில் ஈடுபடுபவர்கள், தொமிற்துறைசார்ந்தோர், ஊடகர்கள், வர்த்தக ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றை கண்காணிப்பதற்கான விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்தப்பிரிவு கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துவிட்டதாகவும். இவர்கள் சந்தேகத்திற்கு இடமானமுறையில் செயற்படுபவர்களை கண்காணித்து அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகிறது. pathivu
-
- 0 replies
- 976 views
-
-
ஞாயிறு 27-05-2007 19:57 மணி தமிழீழம் [மயூரன்] மத்திய மாகாணம் போனகல எஸ்ரேற் பண்டாரவளை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை மாலை சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 11 தமிழ்பொதுமக்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது. தியத்தலாவ இராணுவப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினரும் மற்றும் காவல்துறையினரும் இணைந்தே இத்தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும். இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரயவருகிறது. பதிவு.com
-
- 0 replies
- 646 views
-
-
ஜூலையில் நாடு திரும்புகிறேன்: மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் [ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 18:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறிலங்கா திரும்ப உள்ளதாக மகிந்தவுக்கு சந்திரிகா குமாரதுங்க கடிதம் அனுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திரிகாவுக்கான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் குறைத்துவிட்ட நிலையில் தனது பயணம் தொடர்பாக மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் அனுப்பியுள்ளார். சிறிலங்கா திரும்பும் சந்திரிகா தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்று வழமைபோல் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மகிந்தவின் அமைச்சரவையிலிருந்து மங்கள தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து சந்திரிகாவுடன் லண்டனில் மங்கள ஆலோசனை ந…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 18:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறிலங்கா திரும்ப உள்ளதாக மகிந்தவுக்கு சந்திரிகா குமாரதுங்க கடிதம் அனுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திரிகாவுக்கான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் குறைத்துவிட்ட நிலையில் தனது பயணம் தொடர்பாக மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் அனுப்பியுள்ளார். சிறிலங்கா திரும்பும் சந்திரிகா தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்று வழமைபோல் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மகிந்தவின் அமைச்சரவையிலிருந்து மங்கள தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து சந்திரிகாவுடன் லண்டனில் மங்கள ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகாவை…
-
- 0 replies
- 523 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 18:13 ஈழம்] [செ.விசுவநாதன்] மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ உத்தி அவ்வளவு தெளிவானதாக இல்லை என கருதுகிறேன். வடபகுதியில் நாம் முன்னகர்வு முயற்சிகளில் இருக்கிறோம். இருப்பினும் அவர்கள் அடிக்கடி வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறார்கள். கிழக்குப் பகுதிகளில் இராணுவம் முன்னேற்றமடைந்து எதுவித நேரடி மோதலுமின்றி சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இது புலிகளுக்…
-
- 0 replies
- 610 views
-