Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்துக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதுவர் குற்றச்சாட்டு. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொனினிக் சில்காட் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையேயான மோதலினால் வடக்கு கிழக்கு நிலைமையில் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டனர். அங்கு விடுதலைப் புலிகள் இல்லை. கருணா குழுவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை போதுமானது அல்ல. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்தினரின் விருப்பமாக இல்ல…

    • 4 replies
    • 2k views
  2. இந்தோனேசியாவில் கப்டன் நிலாம் காணாமல் போனதாக அரசாங்கத்தால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஜ வெள்ளிக்கிழமைஇ 18 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இராணுவ புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியாக முன்னர் பணியாற்றி வந்த கப்டன் எஸ்.எம்.எம்.நிலாம் தனது குடும்பத்தினருடன் இந்தோனேசியாவில் காணாமல்போய்விட்டதாக அண்மையில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இந்தோனேசியாவிலுள்ள ஷ்ரீலங்கா தூதரகத்தில் உயர்மட்ட உத்தியோகத்தராகப் பணியாற்றிவந்த கப்டன் நிலாம் கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து தூதரக அலுவலகத்தில் கடமைக்கு சமுகமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு கப்டன் நிலாம் அலுவலகத்துக்கு அறிவிப்பு எதனையும் செய்யாத நிலையில் அவருக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்றே அச்சம் தெரிவிக்கப்பட்…

    • 0 replies
    • 642 views
  3. சனி 19-05-2007 02:44 மணி தமிழீழம் [தாயகன்] ஜே.வி.பியின் “லங்கா” பத்திரிகை நிறுத்தப்பட்டது சிறீலங்காவின் இனவாதக் கட்சியான ஜே.வி.பியினால் வெளியிடப்பட்டுவந்த “லங்கா” என்ற வாராந்தப் பத்திரிகை நிதிப்பற்றாக்குறை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்பட்டுவந்த இந்த வாராந்தப் பத்திரிகை, நேற்று வெளிவிரவில்லை என கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே பத்திரிகை வெளிவரவில்லை எனக் கூறியுள்ள பத்திரிகை நிருவாகத்தினர், அடுத்த வாரம் வெளிவருமா என்பதைக் கூற மறுத்திருக்கின்றனர். பதிவு

  4. முயலையும் உசுப்பி நாயையும் ஏவி விடும் அமெரிக்க அணுகுமுறை. மனித உரிமைகளுக்காகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகவும் அமெரிக்கா குரல் கொடுத்து அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் என்று இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஒரு முக்கிய செய்தியை அறிய வேண்டும். இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் 40 மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒருவகைப் பரப்பரப்புச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கைக்கான வருகை பற்றியதாகவே அச் செய்திகள் அமைந்திருந்தன. அவரது அரசு முறைப் பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அல்ல…

  5. தேசிய அரசு: ஐ.தே.க. மறுப்பு சிறிலங்காவில் மகிந்தவுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பதற்கான சாத்தியமில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திச அத்தநாயக்க கூறியுள்ளதாவது: தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற செயற்பாடுகளினாலும் மனித உரிமை மீறல்களாலும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மகிந்தவுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பது என்பது கனவுதான். நாட்டைப் பாதித்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கான ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முற்றாக நாசமாக்கியவர் மகிந்த ராஜபக்ச என்றார் அவர். ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்தவின் அமைச்சரவையில் இணைய…

  6. புலிகள் ஒளிந்திருக்கும் தொப்பிகலவை கைப்பற்றும் இறுதி நடவடிக்கை தீவிரம் இராணுவப் பேச்சாளர் சொல்கிறார். கிழக்கில் புலிகள் நிலை கொண்டுள்ளனர் என்று கூறப்படும் தொப்பிகலப் பகுதியை வெகு சீக்கிரத்தில் கைப்பற்றிவிடு வதற்கான இராணுவ நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நேற்று தெரிவித்தார். கிழக்கில் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கருத்துத் கூறிய அவர் மேலும் தெரிவித்தவையாவது: கிழக்கில் புலிகள் வசமிருந்த அத்தனை பகுதிகளும் படையினரால் மீட்கப் பட்டு விட்டன. வாகரை மீட்கப் பட்டு அங்கு மக்கள் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து படுவான்கரைப் பகுதி மீட்கப்பட்டது. அங்கிருந்து இடம…

  7. 8 தமிழர்களை விடுதலை செய்தது கொழும்பு நீதிமன்றம். கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 8 தமிழர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு டாம் வீதியில் கடந்த மே 6ஆம் நாளன்று சிறிலங்கா காவல்துறையினர் பாரிய சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின் போது தம்பிராஜா அன்பரசன் தம்பிராஜா வளர்முகம் மற்றும் அவர்களின் தாயாரான தம்பிராஜா பரஞ்சோதி ராஜதுரை கமலாதாஸ் செல்லன் கேதீஸ்வரன் கந்தசாமி ரமணன் விக்னராஜ கிரிதன் ஜோவன் சந்திரகுமார் ஆகியோரை துறைமுகம் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தன…

  8. இலங்கையின் மனித அவலங்கள் தொடர்பாக நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்: உலக உணவுத் திட்ட இயக்குனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சமூட்டும் மனித அவலங்கள், மனித உரிமைகளை மதிப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தப் போக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தனது கவலையை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிக அக்கறைகள் எடுப்பதுடன், மனிதாபிமானப் பணிகளுக்கான வசதிகளையும், உதவி நிறுவனப் பணியாளர்களுக்கான பாதுகாப்பையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இலங்கைக்கான தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட இயக்குனர் ரொனி பன்புறி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: இலங்கையில் தீ…

  9. சுயவிருப்புடன் மீளக்குடியமர்வோருக்கு மட்டுமே உதவி வழங்க முடியுமென ஐ.நா. அமைப்பு நிபந்தனை அகதிகளுக்கு உணவு வசதி அளிக்க உடனடியாக 10 மில்லியன் டொலர் அவசரநிதியும் கோருகிறது அகதிகள், அவர்களது சுயவிருப்பத்துடன் மீள் குடியமர்த்தப்பட்டால் மட்டுமே அவர்களுக் கான உதவிகள் வழங்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப்பான உலக உணவுத் திட்டம் இவ்வாறு அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்துள்ளது. இத் தகவலை உலக உணவுத் திட்டத்தின் ஆசிய பிராந்தியத் துக்கான பணிப்பாளர் ரொனி பன்பெரி நேற்றுக் கொழும் பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த தகவலை வெளி யிட்டார். உலக உணவுத் திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து நேரில் கண்டறிவதற்காக, ரொனி பன்பெரி நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருந்தார். கிழக்கு …

  10. பொதுமக்களின் இழப்புகளை ஆவணப்படுத்தல் வடக்கு கிழக்கு புள்ளிவிபர மையம் Statistical Centre for North East கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைதீவில் நடைபெற்று வரும் இன ஓடுக்குமுறையால் தமிழ் பேசும் மக்கள் பெருமளவு நெருக்கடிகளையும், இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தகைய இழப்புகள், அழிவுகள், நெருக்கடிகளைப் பின்வரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தி ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 1. படுகொலைகள் 2. கடத்தப்பட்டு காணமல் போனவர்கள் 3. கைது செய்யப்பட்டு காணமல் போனவர்கள் 4. மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் 5. கொலை அச்சுறுத்தல்களும் கொலை முயற்சிகளும் 6. வாழ்க்கை துணையை இழந்தவர்…

    • 4 replies
    • 4.9k views
  11. வெள்ளி 18-05-2007 16:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ் ஊர்காவற்துறையில் மோதல் இன்று காலை 3.40 மணியளவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இரு இளைஞர்களின் உடலங்களை கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பதிவு

    • 3 replies
    • 1.7k views
  12. வெள்ளி 18-05-2007 20:28 மணி தமிழீழம் [சிறீதரன்] உடுப்பிட்டிப் படைமுகாம் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகியது வடமராட்சி உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள சிறீலங்காப் படைகளின் படைமுகாம் இன்று மதியம் இனம் தெரியாத ஆயுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. வீதித்தடைகளை திசைதிருப்பி படைமுகாமிற்கு உட்புகுந்த ஆயுததாரிகள் 15 நிமிடங்கள் வரை படையினருடன் மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் எதுவித இழப்புக்களும் இன்றி அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுள்ளனர். பதிவு

  13. கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:07 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் …

  14. உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும் நீதிமன்றங்களிலும் சரணடைந்தோர் தொடர்பான விபரங்கள் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களுக்குக் கிடைத்திருப்பதால் தமக்கு படையினரால் உயிர்அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக சரணடைந்தோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக யாழ்செய்திகள் தெரிவிக்கின்றன. உயிருக்கு அஞ்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க யாழ்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் குறித்தும் அவர்கள் பின்னணி குறித்தும் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களின் பிhவு ஒன்று விசாரணைகளில் ஈடுபட்டுஇருப்பதுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்களிடமும் படைப்புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.sankathi.net/in…

  15. புலனாய்வுத்துறை அதிகாரியை கண்டுபிடிக்க அனைத்துலக உதவி கோருகிறது சிறிலங்கா இந்தோனேசியாவில் காணாமல் போன சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரி கப்டன் மொகமட் நிலாமைக் கண்டுபிடிக்க அனைத்துலகத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வுத்துறைப் பிரிவு அதிகாரியாக நிலாம் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக அவர் காணாமல் போனார். இது தொடர்பாக இந்தோனேசிய பாதுகாப்பு தரப்பினரிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மொகமட் நிலாம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்…

    • 9 replies
    • 3k views
  16. மாணவர்களை விடுவிக்காதது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும்: மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை. யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் மூவரை சிறிலங்கா கடற்படை கைது செய்து இன்னமும் விடுவிக்காதிருப்பதானது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும் என்று யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை: மாணவர்களான சு.யசோதரன், கு.கண்ணன், ந.வேணுகாணன் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே கல்விச் சமூகத்தினதும், தமிழ் பேசும் மக்களினதும் எதிர்பார்ப்பாகும். படைத்தரப்பின் சமாளிப்பு அறிக்கைகளும், போலி வாக்குறுதிகளும் நீலிக் கண்ணீரும் அல்ல. அம் மாணவர்கள் இரகசியமாக தூக்கிச் செல்லப்படவில்லை. ஊரடங்கு நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட உந்துருளி…

  17. கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன். இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் திட்டத்தை அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு அனுப்பியுள்…

  18. பரந்தனில் புலிகளின் குரலின் ஊரெங்கும் ஒலிவெள்ளம் சிறப்பு ஒலிபரப்பு நிகழ்வு [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 19:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புலிகளின் குரல் நிறுவனத்தின் ஊரெங்கும் ஒலிவெள்ளம் சிறப்பு ஒலிபரப்பு பரந்தனில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இரண்டாம் நாள் ஒலிபரப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கியது. நிகழ்வில் பொதுச்சுடரை புலிகளின்குரல் விசுவமடு மன்றத் தலைவர் மு.கந்தசாமி ஏற்ற தமிழீழ தேசியக்கொடியை பரந்தன் பிரதேசப் பொறுப்பாளர் வின்சன் ஏற்றினார். ஈகச்சுடரை போராளி தேவா ஏற்றினார். இன்று இரவு வரை மக்களின் பெரும் பங்களிப்புடன் ஊரெங்கும் ஒலிபரப்பு நடைபெற்றது. மூன்றாவது நாளாக நாளையும்…

  19. வெள்ளி 18-05-2007 16:37 மணி தமிழீழம் [மயூரன்] யாழ் பல்கலைக் கழகத்தை மூடி படைமுகாம் அமைக்க இராணுவம் முயற்சி யாழ்ப்பாணம் பல்கலைக்ழகத்தை மூடுவதற்கான முன்முயற்சி நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள். இதனைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி சந்திசிறீக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் பல் கலைக்கழக பதில் துனைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுடன் இடம் பெற்ற சந்திப்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அறியவருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் இராணுவத்தினர் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் ஈ.பி.டி.பி மற்றும் ஆயுத ஒட்டுக்குழுக்களும், பல்கலைக்கழக மாணவர்களின்…

    • 1 reply
    • 1.3k views
  20. வரணியில் உந்துருளியில் பயணித்த படை அதிகாரி உட்பட இருவரை காணவில்லை. வரணி படைத்தளத்தில் இருந்து காலை வேம்புராய் படைத்தளத்திற்கு உந்துருளி ஒன்றில் புறப்பட்ட படையினர் இருவர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரி நிலையுடைய படையினர் ஒருவரும் அவரது பாதுகாப்பு சிப்பாயுமே உந்துருளியுடன் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகின்றது. நேற்று காலை புறப்பட்டுச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வேம்புராய் படைத்தளத்திற்கு செல்லாமையால் இவர்களை படையினர் இப்பிரதேசத்தின் பல இடங்களில் தேடிபார்த்ததாகவும் மாலை வரை இவர்கள் குறித்தான தகவல்கள் எவையும் படையினருக்கு கிடைக்காமையால் இவர்கள் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் உயர…

    • 4 replies
    • 2k views
  21. வவுனியாவில் மூவர் சுட்டுக்கொலை வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:43 ஈழம்] [ப.தயாளினி] வவுனியாவில் மூன்று தொழிலாளர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சந்திரசேகரன் (வயது 28- இரு குழந்தைகளின் தந்தை), சின்னத்துரை விக்கினேஸ்வரன் (வயது 24- 6 மாத குழந்தையின் தந்தை) மன்மோகன் மோகன்தாஸ் (வயது 24) ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் அவர்களின் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டனர். தமிழை சரளமாகப் பேசிய ஆயுதக்குழுவினரே கடத்தலில் ஈடுபட்டதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட மூவரினது உடல்களும் துப்பாக்கிச் சூட…

    • 1 reply
    • 3.5k views
  22. மோசமான பாதுகாப்பு சூழ்நிலையால் யாழ். பல்கலைக்கழகம் மூடப்படும் அபாயம் யாழ். குடாநாட்டில் எழுந்துள்ள மோசமான பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் மூடப்படும் நிலைமை தோன்றியுள்ளது. யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ள நிலையில், அங்கு கல்வி பயிலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்ட மூன்று பாட சாலை மாணவர்களையும் விடுவிக்குமாறு கோரியும் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவான சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்ட மாணவர் சமூகம் தமது கல்விச் செயற்பாடுகளைப் பகிஷ்கர…

  23. ஏறாவூரில் மின்மாற்றி தகர்ப்பு [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஏறாவூர் - களுவங்கேணி வீதியிலுள்ள மின்மாற்றியை அடையாளம் தெரியாதோர் தகர்த்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நடந்ததாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் ஏறாவூர் சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். புதினம்

  24. நாட்டைக்கொண்டு நடத்த முடியாவிடால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு செல்லுங்கள் வீரகேசரி நாளேடு மக்களின் பிரச்சினைகள் யுத்தத்தால் மூடிமறைக்கப்படுகின்றன என்கிறது ஐ.தே.க. மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த எதிர்கொள்கின்ற துன்பங்களை பார்க்கும் போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. நாட்டைக்கொண்டு நடத்த முடியாவிட்டால் பொறுப்புக்களை எம்மிடம் ஒப்படைத்து விட்டு வீடு செல்லுமாறு இந்த அரசாங்கத்தை கோருகின்றோம். நாட்டை துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எம்மிடமிருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றன. அனைத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.