Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2006 மே 13இன் 13 பேர் படுகொலைச் சம்பவம் இரசாயனப் பகுப்பாய்வுக்கான மனுவை நீதிமன்றம் நேற்று நிராகரித்தது முதலில் அடையாள அணிவகுப்பை நடத்த உத்தரவு யாழ்ப்பாணம், மே 12 அல்லைப்பிட்டி, வேலணை, புளியங் கூடல் ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 13 பேர் தொடர்பான வழக்கில் குற் றப்புலனாய்வுப் பொலிஸார் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இரசாயனப் பகுப்பாளர் குழு ஒன்றை இங்கு அழைத்து வருவதற்கு அனுமதிகோரி, குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையே நீதிமன்றம் நிராகரித்தது. ஊர்காவற்றுறை நீதிவான் ஜெயராமன் றொக்ஸி முன் இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த குற்றப்புலனாய்வுப் பொலி…

  2. "யுனிசெவ்' அதிகாரிகள் யாழ். நீதிவானுடன் நேற்றுச் சந்திப்பு யாழ். மாவட்டத்தில் உயிர் அச்சுறுத் தல் காரணமாக நீதிமன்றங்களில் சரண் அடை பவர்களின் வாழ்க்கை நிலை, சிறுவர் மற்றும் பெண்களின் மனித உரிமை நிலை ஆகியன தொடர்பாக "யுனிசெவ்' அதிகாரி கள் நேற்று யாழ். நீதிவானுடன் ஆராய்ந்த னர். "யுனிசெவ்' அமைப்பின் கொழும்ப அலுவலக அதிகாரி சஜீவா சமரநாயக்க, யாழ். அலுவலக அதிகாரி யோகு உசாலா ஆகியோர் யாழ். நீதிவான் இ. த. விக்னராஜாவை நேற்று நீதிமன்றத்தில் சந் தித்துக் கலந்துரை யாடினர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரண் அடை யும் இளம் வயதினரின் பிரச்சினைகளை அவர்கள் கேட்டறிந்தனர். திருமணம் செய்யாத நிலையில் தாயா கிப் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கை நிலை குறித்தும் அவர்கள் நீதிவானுடன் கலந்துரையாடின…

  3. மனித உரிமை கண்காணிப்பாளர்களை ஐ.நா. இலங்கைக்கு அனுப்பவேண்டும்! "ஹியூமன் றையிட்ஸ் வோட்ச்' மீண்டும் வலியுறுத்து தொடரும் மோதல்களால் பாதிக்கப்படும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. தனது மனித உரிமைகள் கண் காணிப்பாளர்களை கட்டாயம் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று, அமெ ரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் "ஹியூமன் றையிட்ஸ் வோட்ச்' என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவ்வாறு விடுக்கப் பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலை யில், மனித உரிமைகள் கண்காணிப்ப கம் மீண்டும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தீவிர கவனம் செலுத்துகிறது என்று, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக் கான அமெரிக்க …

  4. தமிழக மீனவர்களின் உயிருடன் விளையாடும் அபத்தப் போக்கு ` பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்கள் படும்பாடு இப் போது பெரும் சர்ச்சையாகியிருக்கின்றது. மீனவர்கள் விவகாரத்தில் இந்தியா கண்ணை மூடிக்கொண் டிருந்தால், ஈழத் தமிழர் தாயகப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் காலாதிகாலமாகத் தமக்கு வாழ்வளித்து வந்த கடல் அன்னையின் மடியில் இறங்கமுடியாமல், அன்றாட ஜீவனோபாயத்தைத் தொலைத்து, அல்லாடுவது போன்ற நிலைமை, தமிழக மீனவர்களுக்கும் கூட ஏற்படும் என்பதை முற்கூட்டியே உரைக்கும் விதத்தில் "தமிழக மீனவர்களின் பாடும் அதே(õ)கதி' என்ற தலைப்பில் இப்பத்தியில் சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்னரே மார்ச் முதல் வாரத்திலேயே எச்சரித்திருந்தோம். அதுதான் இப்போது களத்தில் கட்டவிழ்கின்றது போலும். தமிழக ம…

  5. நிதி சேகரிப்பை தடுக்குமாறு சர்வதேசத்திடம் கோருவோரே புலிகளுக்கு இரகசியமாக உதவி [11 - May - 2007] * சாடுகிறது ஐ.தே.க. - எம்.ஏ.எம்.நிலாம் - சர்வதேச சமூகம் அரசு மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் மனித உரிமை மீறல் விவகாரத்தில் அரசு- புலிகள் இருதரப்பினர் மீதும் சர்வதேசம் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது ஆளும் தரப்பினரே குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் அவற்றை மூடி மறைப்பதிலேயே அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பின…

    • 3 replies
    • 2.4k views
  6. மட்டக்களப்பில் அகதிமுகாம் மீது கைக்குண்டுத் தாக்குதல்: 10 பேர் காயம் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் அகதி முகாம்மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகவலை மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 4 பெண்கள் உட்பட 10 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அகதி முகாமில் உள்ள குடும்பத்தினர் கூடாரத்தின் வெளிப்பகுதியில் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த இடத்தில் மறைந்த…

    • 0 replies
    • 616 views
  7. மன்னாரில் இன்று அதிகாலை படையினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு மன்னார் விளாத்திக்குளம் ஊடாக பரிசங்குளம் நோக்கி இன்று அதிகாலை சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் படையினரின் பின்தளங்களில் இருந்து ஆட்டிலெறி எறிகணை, பல்குழல் வெடிகணை ஆகியவற்றின் சூட்டாதரவுடன் விளாத்திக்குளம் ஊடாக பரிசங்குளம் நோக்கி படையினர் முன்னேற முயற்சித்தனர். இம்முயற்சியினை விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளனர். படைத்தரப்பு பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றுள்ளது http://www.eelampage.com/

    • 0 replies
    • 742 views
  8. சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாகவும் ஆட்கள் கடத்தப்படுதல் கொலைகள் மற்றும் சட்டவிரோத ஆயுதக்குழுக்களை அரசு இயக்குதல் என்று அரசு தரப்பு மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் கண்டித்து அதை நிறுத்த அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நிலைமை சீரடையும் வரை சிறீலங்காவுக்கான நிதி உதவிகளின் குறித்த அளவை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது..! அமெரிக்க சிறப்புத் தூதரின் செய்தியாளர் மகாநாட்டில் இவ் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆதாரம் skynews.

  9. நவீன நீரோ மன்னன் நாடு கெட்டுக்கிடக்கிறது. இரவில் நிம்மதியாகக் கூடத்தூங்க முடியாமல் சனங்கள் பரிதவிக்கிறார்கள். பஸ்ஸில் கலக்கமில்லாமல் பயணம் செய்;யமுடியாது. விதைத்த வயலை அறுக்கமுடியாமல், வீட்டிலிருக்கும் நெல்லையோ அரிசியையோ போய் எடுக்க வழியில்லாமல் அகதி முகாம்களில் சனங்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு வீடுகளில்லை. அப்படியல்ல வீடுகளிருக்கு ஆனால் அவற்றில் இருப்பதற்கு அனுமதி இல்லை. நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் நடக்கவேயில்லை. பாதைகளுமில்லாமல் பயணங்களுமில்லாமல் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினமும் ஒரு தடவையாவது பங்கருக்குள் நுழையாமல் அன்றிரவு படுக்கைக்குச் செல்ல முடியாது. இவ்வளவும் இலங்கைத்தீவில் நடக்கிறது. அதுவும் தமிழ்மக்களுக்குத்தான் …

  10. இராணுவ மயப்படும் அரசியல் அண்மையில் சிறிலங்கா சனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் சிறிலங்கா இராணுவத்திற்கு சிவில் நிர்வாக விஷயங்களைக் கையாள்வதற்கான அதிகாரம் இராணுவத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தல் வெளிவந்து சிலமணி நேரத்திற்குள்ளேயே சிறிலங்கா இராணுவ வடபகுதிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ்.குடா நாட்டில் சீரான உணவு விநியோகம் நடைபெறுகிறது எனவும், எரிபொருள் போதியளவு கையிருப்பில் உண்டு எனவும் சிவில் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது இனி அரச அதிபரால் மேற்கௌ;ளப்பட்ட விடயங்கள் யாவும் இராணுவத்தளபதிகளால் மேற்கொள்ளப்படும். அல்லது, அவற்றின் மேல் இராணுவ அதிகாரிகளின்…

  11. துணைப்படை இராணுவக்குழுவின் தாக்குதலில் எட்டு பொதுமக்கள் காயம் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 10.35 மணியளவில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முகாம்களின் மீது சிறீலங்கா இராணுவத் துணைப்படைக்குழு மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட எட்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. பதிவு

  12. திரியாயில் ஆயுததாரிகளால் மூன்று இளைஞர்கள் கடத்தல் திருகோணமலை திரியாயப் பகுதியில் ஆயுததாரிகளால் மூன்று இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நேறிரவு திரியாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளினுள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த மூன்று இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் காணப்பட்டது. பதிவு

  13. வவுனியா பூவரசங்குளத்தில் பொதுமகன் ஒருவர் வெட்டிப் படுகொலை வவுனியா பூவரசங்குளத்தில் பொதுமகன் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு பின்னர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பூவரசங்குளப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த பொதுமகனை விசாணைக்காக அழைத்துச் செல்லவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பபட்டனர். அழைத்துச் செல்லப்பட்ட பொதுமகன் பலத்த அடிகாயங்களுடன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதிவு

  14. ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் என்று எம்மால் கூற முடியாது; ஆனால் தற்போது குறைந்துள்ளது ஆட்களை கடத்துபவர்கள் யார் என்று எங்களால் கூறமுடியாது. ஆனாலும் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சபையில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்: ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் இடம்பெயர்வுகள் தொடர்பாக நாங்கள் கவலைப்படுகின்றோம். இருந்தாலும் ஆட்கடத்தல் கடந்த மாதம் குறைவடைந்துள்ளது. அரசாங்கம் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆட்களை யார் கடத்துகின்றனர் என்று எங்களினால் கூறமுடியாது. ஐக்கிய தேசியக…

    • 7 replies
    • 1.7k views
  15. தோல்வியுற்ற நாடுகளின் பட்டியலில் முதன்மை இடம் இலங்கைக்கே! ` போரழிவுகளினாலும், ஆழிப்பேரலை, மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தின் பேரழிவுகளினாலும் அல் லாடும் இலங்கைத் தீவை, பொருளாதாரச் சீரழிவு என்ற மற்று மொரு நெருக்கடி மோசமாகத் தாக்கி முடக்கும் ஏதுநிலைகள் தென்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருப்பதாக அரசியல் தலைவர்களும், அவர்களுக் குச் சார்பான புள்ளி விவரங்களை அள்ளி வெளியிடும் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரும் வாய்வீச்சாக அறிவித்தாலும் கூட, களத்தில் என்னவோ மக்களின் பாடு திண்டாட்டமாகத் தான் இருக்கின்றது. வடக்கு , கிழக்கை தமிழர் தாயகத்தை பொறுத்தவரை போரழிவு மற்றும் ஆழிப்பேரலைப் பேரழிவுகளிலிருந்து அப் பகுதி மக்கள் இன்…

    • 5 replies
    • 2.7k views
  16. வி.புலிகள் வான் பலத்தைக் கொண்டிருப்பதாவது தென்னிந்தியாவிலுள்ள அணு உலைகளை இலக்கு வைக்கக் கூடிய ஆபத்து ஏற்படலாமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி?? பாலித்த கோஹன தெரிவித்துள்ளார். வி.புலிகளின் வான் படையானது நினைத்தளவிற்கு இல்லாது மிக மோசமானதாயிருக்குமென இலங்கை அரசானது முதல் தடவையாக இந்திய அதிகாரிகளுக்குத தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் நெளவ்"வை மேற்கோள் காட்டி 'டைம்ஸ் ஒப் இந்தியா" பத்திரிகை தெரிவித்துள்ளது. வி.புலிகளின் வான் படை அணியை குறைத்து மதிப்பிடக் கூடாதெனவும் இந்தியா அரசுக்கு தெரிவிக்கப்ட்டுள்ளது . எனினும் இவ்வாறானதொரு அச்சுறுத்தலை தங்களால் மிக இலகுவாகச் சமாளிக்க முடியுமென இந்திய அரசு நம்புகிறது. ஆனாலும் தென்னிந்தியாவிலுள்ள மிக முக்கிய அண…

    • 25 replies
    • 4.9k views
  17. பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவையில் மே 10-இல் 38 இயக்கங்கள் கண்டனப் பேரணி பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவை மாநிலத்தில் 38 இயக்கங்கள் சார்பில் பாரிய கண்டனப் பேரணி எதிர்வரும் மே 10ஆம் நாள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கர் தொண்டர் படை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மீனவர் விடுதலை வேங்கைகள் மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இராஷ்டிரிய ஜனதா தளம் தமிழர் தேசிய இயக்கம் தனித் தமிழ்க் கழகம் செந்தமிழர் இயக்கம் …

  18. பிரித்தானிய நாடாளுமன்றக் குழு: சிங்களக் கட்சி எதிர்ப்பு [வெள்ளிக்கிழமை, 11 மே 2007, 17:13 ஈழம்] [ப.தயாளினி] ஈழத் தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றக் குழு அமைக்கப்படுவதற்கு சிங்களக் கட்சியான சிறிலங்கா தேசபிமானி பெரமுன எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் சில்கொட்டுக்கு அக்கட்சியின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் எழுதியுள்ள கடிதம்: தமிழர்கள் கண்ணியத்துடனும் நீதியுடனும் வாழ்வதற்காக அனைத்து கட்சிக் குழுவை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது குறித்து சிறிலங்கா தேசாபிமானி பெரமுன அதிர்ச்சியடைந்துள்ளது. பிரித்தானியா குறிப்பிடுவது இலங்கை வாழ் தமிழர்களைத்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதிக…

  19. நள்ளிரவில் பரா வெளிச்சம், துப்பாக்கிப் பிரயோகம். மக்கள் பதற்றம். Written by Ellalan - May 11, 2007 at 04:44 PM நேற்று முன்தினம் இரவு திடீரென காங்கேசன்துறை மாதகல் மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் பரா வெளிச்சக் குண்டுகளின் ஏவுதல் நடவடிக்கைகள் காரணமாக கரையோரப் பகுதிகளில் பதட்டமான நிலமை காணப்பட்டது. இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த நடவடிக்கை சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இடைக்கிடையே லேசர் குண்டுகளும் ஏவப்பட்டதையும் அவதானிகக் கூடியதாக இருந்தது. இரவு நேரமாகையால் கடலில் காணப்பட்ட அசைவைத் தொடர்ந்து கடற் படையினர் கடலில் இத்தகைய செயல்பாட்டை மேற்கொண்டதாக உயர் பாதுகாப்பு வல…

  20. மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட முகத்துவாரம் வீதியில் உள்ள தொட்டி தவெர்ன் சந்திக்கு அருகே துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரின் முகாம் உள்ளது. இம்முகாமில் உள்ளோரிடையே நேற்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மோதல் வெடித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துணை இராணுவக் குழுவினர் இருவரும் இம்மோதலின் போது அப்பகுதியைக் கடந்து சென்ற முச்சக்கர வாகன சாரதியான நஸ்ரூதின் (வயது 55) என்பவரும் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடிக்கு நஸ்ரூதின் திரும்பிக் கொண்டிருந்த போது இம்மோதலில் சிக்கிக் கொண்டார் …

    • 26 replies
    • 9.8k views
  21. வில்பத்து வனப்பகுதியில் புலிகளின் வானூர்தி தளம்?: கொழும்பு ஊடகம் வில்பத்து வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தளம் இருக்கக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் 'த ஐலன்ட்' நாளிதழில் இடம்பெற்றுள்ள செய்தி விவரம்: வில்பத்துவில் உள்ள சிறிலங்காவின் தேசிய பூங்கா பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு வகை வானூர்தி தரையிறங்கியதாக இராணுவப் புலனாய்வுத்துறையினர் தகவல் சேகரித்துள்ளனர். மிலெவில்ல, பெரியவில்லு மற்றும் பெரியகட்டை அணைகள் உள்ள பகுதிக்கு அருகாமையில் மன்னாரை நோக்கியதாக வானூர்தி தளம் அமைக்கப்பட்டுள்ளது. வானூர்தித் தளத்தை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டுள்ளனர்…

    • 1 reply
    • 1.6k views
  22. 28 வருடங்கள் கழிந்தும் எத்தரப்பும் வெற்றி பெற முடியாமலிருக்கும் யுத்தம் [11 - May - 2007] * ஐ.தே.க. எம்.பி. சரத் ரணவக்க இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளபோதும் எத் தரப்பும் அதில் வெற்றி பெற முடியவில்லையென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்; "இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், யுத்தத்தில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை. தற்போது யுத்தம் சில வருடங்களாகவே நடைபெறுகின்றதென்ற போலியான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முற்படுகின்…

    • 2 replies
    • 1.7k views
  23. ஐ.தே.க. வெளியிடும் கவலை கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் விடுதலைப் புலி களின் இராணுவப் பலத்தைப் பெரிதும் உடைத்துவிட்டோம் என்று இலங்கை அரசு மார்தட்டி மேற்கொண்ட பிரசாரத்தின தும், அதற்கு ஒத்து ஊதிய தென்னிலங்கை ஊடகங்களின தும் குட்டைப் போட்டுடைத்திருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி. நாட்டின் நிலைமை குறித்து அக்கட்சி நேற்றுமுன்தினம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரி விக்கப்பட்டிருக்கின்றது. ""ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையின் பின்னரும் புலிகளின் இராணுவ வலிமை முடிவுற்று விட்டதாகப் பாது காப்பு அமைச்சும் ஊடகங்களும் நாட்டுக்கு அறிவித்து வந் தன. ஆனால் இன்று புலிகளின் இராணுவ வலிமை பாது காப்பாக உடையாமல் இருப்பது மட்டுமல்ல, உலகில் தனியான விமானப்படையைக் கொண்ட ஒரே பயங்கர வ…

  24. தமிழ்மொழியை அரச சேவையில் முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் உக்கிரமடைந்துள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவாக இருக்கும் வீரகேசரி நாளேடு அரச சேவையில் தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் உக்கிரமடைந்துள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவாக இருக்கும் என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான ராஜா கொல்லுரே தெரிவித்தார். நாட்டில் இனப்பிரச்சினை ஏற்படுவதற்கு மொழியே அடிப்படையாக அமைந்தது. எனவே, அரசகரும மொழிகளின் பயன்பாட்டை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசகரும மொழிகள் கொள்கையை செயற்படுத்தும் பொருட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் 20…

  25. வெள்ளி 11-05-2007 04:51 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த நான்கு மாதத்தில் 80 பேர் கடத்தல் இந்த வருடம் கடந்த நான்கு மாதத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவலின்படி ஜனவரி மாதத்தில் 20 பேரும் பெப்ரவரி மாதத்தில் 8 பேரும் மார்ச் மாதத்தில் 33 பேரும் ஏப்ரல் மாதத்தில் 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை யாழ் சிறைச்சாலையில் உயிருக்கு அஞ்சி தஞ்சம் கோரி 72 பேர் உள்ளதாகவும் தெரியவருகிறது. யாழ்பாணத்தில் அமெரிக்க தூதுவர் றிச்சாட் பௌச்சர் விஜயம் செய்தபோது இதுதொடர்பில் அவர்களது தாய்மார் கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகிறது. யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகம் இவ்வாறு பலவந்தமாக ஆட்கடத்தலுக்கு உட்படுத்துவதற்கு புள்ளிவிபரங்களை திரட்டுதல் போன்றவை தவிர எது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.