Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சு.க.யோசனையை சபையில் கிழித்தெறிந்தார் யாழ். எம்.பி அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனையை சபையில் கிழித்து எறிந்தார். கடந்த 50 ஆண்டுகாலத்திற்கு முன்னர் பரீட்சிக்கப்பட்டு கைவிடப்பட்ட யோசனையை சுதந்திரக்கட்சி மீண்டும் தூசிதட்டி கொண்டு வந்ததன் மூலம் அவர்களின் பேரினவாத சிந்தனை வெளிப்பட்டு நிற்கின்றது என்று கூறி காரசாரமாக விமர்சித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்திபேரினவாதத்த

  2. புலிகளின் விமானங்களை வலை வீசி பிடிக்க முடியுமா? கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை கொண்டு கொள்வனவு செய்த விமானங்களை பயன்படுத்தியே இன்று புலிகள் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டனர். அந்த விமானங்களை வலை வீசி பிடிக்க போவதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அப்படி வலை வீசி பிடிக்க முடியுமா? என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கட்சி சார்பாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகள் விமானத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை சீர் குலைந்தமைக்கும் இந்த அரசாங்கம் பொறுப்…

  3. புலிகளின் வானூர்திகளினால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அச்சத்துடன் வாழப்போகின்றோம்?: எதிர்க்கட்சி நா.உ. கேள்வி தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அச்சத்துடன் வாழப்போகின்றோம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கட்சி சார்பாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த அரச தலைவர் தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு கொள்வனவு செய்த வானூர்திகளைப் பயன்படுத்தியே இன்று விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்…

    • 2 replies
    • 956 views
  4. யாழில் ரிச்சர்ட் பௌச்சர் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். யாழ். பலாலி வான்படைத் தளத்துக்கு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் சிறப்பு வானூர்தி மூலம் ரிச்சர்ட் பௌச்சர் சென்றடைந்தார். அதன் பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் பலாலி சிறிலங்கா படைத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுடன் ரிச்சர்ட் பௌச்சர் ஆலோசனை நடத்தினார். யாழ். அரச செயலகத்துக்குச் சென்று அரச அதிபர் கணேசையும் ரிச்சர்ட் பௌச்சர் சந்தித்துப் பேசினார். யாழ். மாவட்ட நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட இச்சந்திப்பில் அரசாங்க உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். யாழ். நிலைமைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்கப் …

  5. சமாதான பேச்சு என்று கூறியே ரணில் புலிகளை அடக்கி வைத்திருந்தõர் ஆனால் ஜனாதிபதி யுத்தத்தை ஆரம்பித்து அவர்களை திறந்துவிட்டுள்ளார் விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் காரணமாக நாட்டு மக்கள் அச்சமடைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமாதான காலத்தில் ரணில் தலைமையில் எமது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அடைத்து வைத்திருந்த புலிகளை இந்த அரசாங்கம் திறந்து விட்டுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/

    • 0 replies
    • 1.4k views
  6. கொழும்பில் அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவர் ரொவான் வில்லியம்ஸ் [புதன்கிழமை, 9 மே 2007, 20:54 ஈழம்] [ப.தயாளினி] இலங்கை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவரான ரொவான் வில்லியம் கொழும்பு வருகை தந்துள்ளார். தனது இலங்கைப் பயணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு இன்று புதன்கிழமை அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது: இலங்கையின் நிலைமைகளை அறிவதற்காக இங்கு வந்துள்ளோம். நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் இங்கு அமைதியை உருவாக்குவதற்கு எந்த வகையில் உதவுவது என முடிவெடுப்போம் என்றார். உலகம் முழுமைக்கும் உள்ள 77 மில்லியன் கிறிஸ்தவ அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவர் ரொவான் வில்லியம்ஸ் ஆவார். புதினம்

  7. புதன் 09-05-2007 21:29 மணி தமிழீழம் [மயூரன்] பாராளுமன்றில் வான்புலிகளின் தாக்குதலுக்கு த.தே.கூ வாழ்த்துத் தெரிவிப்பு வான்புலிகளின் வான்வெளித் தாக்குதல் தொடர்பான விவாதம் இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்றது. இதனைதத் தொடர்ந்து பாராளுமன்றில் பெரும் அமளிதுமளி இடம்பெற்றது. இங்கு நிமால் சிறீ பாலடி சில்வாவுக்கும் ரவி கருணாயக்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இன்று வான்புலிகள் தொடர்பான விவாதம் மிகவும் சூடாக இடம்பெற்ற வேளையில் ஆளும் கட்சியினர் கொதித்த வண்ணம் காணப்பட்டனர். எதிர்க்கட்சி அரசாங்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆளும் கட்சியால் சரியான பதில் வழங்க முடியாத நேரத்தில் தமிழ்த் தேசியக் கூ…

  8. மேலதிக பாதுகாப்பு கோரி மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் [புதன்கிழமை, 9 மே 2007, 17:08 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தனக்கு மேலதிக பாதுகாப்பு அளிக்கக் கோரி மகிந்த் ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் அக்கடிதத்துக்கு மகிந்தவிடமிருந்து எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்று சந்திரிகாவின் செயலாளர் பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராவுக்கு சந்திரிகாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நிமல் சந்திரசிறி, பாதுகாப்பு தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்துக்குப் பதில் அனுப்பியுள்ள விக்டர் பெரேரா, அதிகபட்சமாக 7 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்…

  9. புலனாய்வுத்துறை அதிகாரியை கண்டுபிடிக்க அனைத்துலக உதவி கோருகிறது சிறிலங்கா இந்தோனேசியாவில் காணாமல் போன சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரி கப்டன் மொகமட் நிலாமைக் கண்டுபிடிக்க அனைத்துலகத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வுத்துறைப் பிரிவு அதிகாரியாக நிலாம் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக அவர் காணாமல் போனார். இது தொடர்பாக இந்தோனேசிய பாதுகாப்பு தரப்பினரிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மொகமட் நிலாம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்…

    • 9 replies
    • 3k views
  10. கல்முனை அரிசி ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். [Wednesday May 09 2007 02:27:51 PM GMT] [யாழ் வாணன்] கல்முனை சாய்ந்தமருது பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கல்முனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவ்விபத்தில் சிறிலங்கா மின்சார சபைக்குச் சொந்தமான மின்மாற்றி தொகுதி ஒன்றும் சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன தமிழ் வின்

  11. யாழில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு யாழ்பாணத்தில் காணாமல் போன பாடசாலை மானவர்கள் நால்வரையும் விடுவிக்குமாறு தமிழரசு கட்சியின் யாழ்மவட்ட பாராளுமன்ற உறுபினர்களும் யாழ் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இப்பாடசாலை மாணவர்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை மாணவர்களும்,பொதுமக்களும் மேற்கொள்ளப்படுவார்களேன பாராளுமன்ற உறுபினர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ் நெட் இனையத்தளம் தெரிவித்துள்ளது. இதுவரை 4 பாடசாலை மாணவர்கள் வெள்ளை வான் ஆயுததாரிகளால் கடத்தப்படுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழு ஞாயிறன்று தெர்வித்துள்ளது. யாழ் இந்து கல்லூரி மாணவர்களான கொக்குவில் கி…

  12. இணைத்தலைமை நாடுகளின் மாநாடு நாளை சிறீலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் நாளை கொழும்பில் சந்திக்கவுள்ளனர். அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சர் சிறீலங்காவிற்குப் பயணம் செய்துள்ள நிலையில், றிச்சட் பௌச்சர் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஜப்பான், நோர்வே, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத் தூதரகத்தை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினை விடயத்தில் அண்மைக் காலமாக அமைதிப் போக்கை கடைப்பிடித்துவந்த இணைத்தலைமை நாடுகள், மீண்டும் தமது சமாதான முயற்சிகளையும், அதற்கான அழுத்தங்களையும் ஆரம்பித்துள்ளன. சிறீலங…

  13. ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்குப் பயணம் சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை நாளை மறுதினம் மேற்கொள்ள இருக்கின்றார். சீன அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்படும் இநதப் பயணத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேலும் சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர். இலங்கையின் தற்கால அரசியல், பாதுகாப்பு, மற்றும் சிறீலங்கா அரசு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியினர் சீன அரசிற்கு எடுத்துக்கூற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு

  14. பிரித்தானியாவுக்கு எதிரான பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள் அர்த்தமற்றது - பிரித்தானிய இராஜதந்தரி கடந்தவாரம் இலங்கை இனப்பிரச்சினை மற்றும் அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விடயங்களை பிரித்தானிய பாராளுமன்றில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரேரனைக்கு பிரித்தானியா உத்தியோகபூர்வ கருத்துகளை இதுவரை வழங்கவில்லை, உத்தியோகபூர்வமாக சிறீலங்காவுடன் தொடர்புகளை பேணவில்லை என பிரித்தானிய இராஜதந்திரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறீலங்காவில் பிரித்தானியாவுக்கு எதிராக முன்னெடுக்கும் பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள் எந்தவகையிலும் அர்த்தமற்றது எனவும் இராஜதந்திரி மேலும் தெரிவித்துள்ளார். பதிவு

    • 6 replies
    • 2.4k views
  15. வெல்லாவெளியில் கால்ரோந்து அணி மீது தாக்குதல்: அதிரடிப்படை அதிகாரி பலி! அம்பாறை வெல்லாவெளிப் பகுதியில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் கால் ரோந்து அணிமீது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கைக்குண்டுத் தாக்குகுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.20 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். கொல்லப்பட்ட அதிகாரியின் சடலம் களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் தேடுதல் நடத்தப்பட்ட போது தாக்குதலாளிகள் எவரும் இதுவரை பிடிபடவில்லை பதிவு

  16. யாழ் படை உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிபருடன் ரிச்சாட் பெளச்சர் சந்திப்பு அமெரிக்காவின் இராஜங்க துணைச் செயலர் ரிட்சாட் பெளச்சர் இன்று யாழ் குடாநாட்டுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்று காலை பலாலி கூட்டுப்படைத் தளத்திற்கு விமான மூலம் சென்ற ரிச்சாட் பெளச்சர் அங்கு படை உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பலாலியிலிருந்து உலங்கு வானூர்த்தி மூலம் யாழ் நகரம் சென்ற ரிட்சாட் பெளச்சர் அங்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் அவர்களைச் சந்தித்து யாழ் குடாநாட்டு நிலமைகளை அறிந்துகொண்டார். சந்திப்பின் போது யாழ் குடாநாட்டின் நிலமைகள் குறித்த அறிக்கை ஒன்றையும் கே.கணேஸ் அவர்கள் ரிச்சாட் பெளச்சரிடம் கையளித்துள்ளார். இதில் குறிப்பாக கல்வி மற்…

    • 2 replies
    • 1.1k views
  17. கொழும்பில் இரண்டு இளைஞர்கள் கடத்தல் கொழும்பில் நேற்றிரவு இரண்டு தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் கண்காணிப்புக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தெஹிவளை பதிய மாவத்தையில் வசித்த 26 வயதுடைய சற்குணராஜா சசீந்திரன் அவரது வேலைத் தளமான வெள்ளவத்தை, விஹாரை வீதியிலுள்ள சன்றைஸ் தொலைத்தொடர்பு நிலையத்தில் வைத்து நேற்றிரவு 11.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கொட்டஹேன மேஃபீல்ட் என்ற இடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து 29 வயதுடைய றொபின் றூஸ்ரர் என்ற மற்றொரு இளைஞர் நேற்றிரவு 10.00 மணியவில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். வெள்ளை சிற்றூந்தில் சென்ற 6ற்கும் மேற்பட்ட ஆயுத தாரிகளே இவர்களைக் கடத்திச் சென்றிருப்பதாக, பொதுமக்கள் கண்காணிப்புக் குழுவ…

  18. வெளிநாடுகள் தமது தீர்வுகளை இலங்கை மீது திணிக்கமுடியாது அவை அவசியமற்றவை என்கிறார் ஜனாதிபதி. இலங்கைப் பிரச்சினைக்கு வெளிநாடுகள் எந்தத் தீர்வையும் திணிக்க முடியாது. சர்வதேசத்தினால் திணிக்கப்படும் தீர்வுகள் எமக்கு அவசியமற்றவை. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து அவர் இக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை மக்கள் இரத்தம் சிந்தியது போதும் அவர்கள் பலவகைகளாலும் பாதிக்கப்பட்டதும் போதும். இந்தப் பிரச் சினையை முடிவுக்குக்கொண்டுவந்தாக வேண்டும். அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே தீர்வு கண்டறியப்பட வேண்டும…

  19. . அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார் நேற்றிரவு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு கொழும்பு, மே 9 இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்து சேர்ந்த மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச் சர் றிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். சமய மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும், அரச உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து, குடாநாட்டின் நிலைமை குறித்து கலந்துரையாடுவார் என்று தெரியவந்துள்ளது. அவர் நேற்றிரவு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகெல்லாகமவைச் சந்தித்து சமாதான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை குறித்துக் கலந்துரையாடினார். நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்கும் அவர் அன்று செய்…

  20. இலங்கைக்கு ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் ஆயுத உதவியை பிரிட்டன் வழங்குகிறது. அதைப்பற்றி எவரும் கூச்சலிடவில்லையே என்கிறார் சுரேஷ் கொழும்பு, மே 9 இலங்கைக்கு ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் யுத்த தளபாடங்கள் போன்றவற்றை வழங்க பிரிட்டிஷ் நாடாளுமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினைபற்றி ஆராய்வது தொடர்பாக பிரிட் டிஷ் நாடாளுமன்றம் தீர்மானம் எடுத்தமைபற்றி நேற்று நாடாளு மன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை இடம்பெற்ற பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: இலங்கைப் பிரச்சினையை ஆராய்வதற்கு பிரிட்…

    • 2 replies
    • 1.7k views
  21. பிராயச்சித்தம் செய்யுமா பிரிட்டன்? இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளுக்கு இடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத் துடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் உத் தேச மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக் கிடைக்க முன்னரே இந்த மாநாடு குறித்து பேச்சுகள் அடிபடும் ஆரம்ப நிலையிலேயே இத்தகைய முடிவை முந்திக் கொண்டு கொழும்பு விடுக்கும் என்று எண்ணப்படவில்லை. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதற்கென தனக்கென தனியான இராணுவத் தீர்வை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சி நிரல் ஒன்றை வகுத்து, அதன…

  22. நோர்வேத் தூதுவரின் பயணத்திற்கு விடுதலைப் புலிகள் உத்தரவாதம் சாமாதான அனுசரனையாளர்களான நோர்வேத் தூதுவரின் கிளிநொச்சி பயணத்திற்கு தம்மால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது தடவையும் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் கைவிடப்பட்டதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்தனர். ஓமந்தையில் இருந்து எம்மால் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முடியும் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். நோர்வே தூதுவர் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஆகியோரின் கிளிநொச்சிக்கான பயணத்தை பாதுகாப்பு காரணங்களை கூறி அரசு தடுத்துள்ளது. கிழக்…

  23. கிழக்கில் மீண்டும் உணவுப் பற்றாக்குறை அபாயம்: உலக உணவு திட்டம் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவு விநியோகம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அது எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் உலக உணவு திட்ட அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் அப்பகுதி தலைவரான ஜெஃப் ரஃப்டிக் தெரிவித்துள்ளதாவது: புதிய நன்கொடைகள் இன்றி தற்போதுள்ள உணவுப் பொருட்கள் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. கொடையாளிகளினால் குறுகிய காலத்திற்கு வழங்கப்பட்ட கொடைகள் குறித்து நாம் திருப்பதி அடைந்துள்ளோம். ஆனால் நாம் நீண்டகால திட்டங்கள் குறித்து கவலை அடைந்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பதற்கு…

  24. 'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன் "எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது." தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு: "குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகா…

  25. 'எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்': குமார் ரூபசிங்க "எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்" என்று சிறிலங்காவின் போருக்கு எதிரான தேசிய முன்னணியின் தலைவரும், ஆய்வாளருமான குமார் ரூபசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் 'த ஐலன்ட்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "கடந்த மாதத்தில் அரசின் முக்கிய மையங்களை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பல தடவைகள் தாக்கிவிட்டு எதுவித சேதங்களும் இன்றி தளம் திரும்பிவிட்டன. முதாலாவது தாக்குதல் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நிகழ்த்தப்பட்டது. இது அதிகளவு சேதங்களை ஏற்படுத்தவில்லை. எனினும் அரசுக்கும், அன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.