Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் மறுப்பு. சிறிலங்கா அமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளதாக தெரிகிறது. அண்மையில் சிறிலங்கா அமைச்சர் பி. சந்திரசேகரன், முதல்வர் கருணாநிதியை சந்திக்க அனுமதி கேட்டிருந்ததாகவும் ஆனால் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழாவை சுட்டிக்காட்டி சந்திரசேகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒருவரை சந்திக்க விரும்பாததால்தான் மலையக கட்சியைச் சேர்ந்த சந்திரசேகரனுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. -Puthinam-

  2. காலத்தின் தேவையே உண்மையான சேவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கற்பதற் குத் தேவையான சகல வளங்களும் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகப் பேரவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது கல்விச் செயற் பாடுகள் சீராக நடைபெறமுடியவில்லை என்ற நிலை யைப் பேரவையின் அறிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது. பல்கலைக்கழகக் கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பினால் இத்தகைய நிலை தோன்றியுள்ளது என்றும் பேரவையின் அறிக்கை எடுத்துரைக்கிறது. தாய்ச் சங்கத்தின் வேலைநிறுத்த நடவடிக்கை களுக்கு ஆதரவு தெரிவித்துத் தாம் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், கல்விச் செயற்பாடுகள் பாதிப்புறாதிருக் கும் வகையில் தாம் தொண்டர் சேவையில் ஈடுபடுவர் எ…

  3. [02 - Mஅய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஷ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான உத்தேச தீர்வுத் திட்ட யோசனைகளை விடுதலைப்புலிகள் முழுமையாக நிராகரித்துள்ள அதே சமயம், அரசியல் ஆய்வாளர்கள் இந்த தீர்வுத் திட்ட யோசனைகள் வெற்றியளிப்பனவாக இல்லையென்று கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சியில் இருக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மட்டத்தில் அதிகளவு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் சிவில் யுத்தத்துக்கு தீர்வு காணும் யோசனைகளை முன்வைத்துள்ளதுடன் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் இவ்வுத்தேச தீர்வுத் திட்ட யோசனைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால…

    • 0 replies
    • 668 views
  4. அதி காலை உட்புகுந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் யாழ் பல்கலைக்கழக காவலர் தாக்கப்பட்டார். அதி காலை1-00 மணியளவில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த குழுவினர் பல்கலைக்கழக காவலரை ஆயுத முனையில் இருத்தி விட்டு பல்கலைக்கழகத்துக்குள் சென்று பல மணி நேரம் தேடுதல் நடத்தியுள்ளனர். பத்துக்கு மேற்பட்டவர்களை கொண்ட இந்த ஆயுதக் குழுவினரால் பல்கலைக்கழக காவலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். Armed men in civil, attack JU security officer A gang of more than ten armed men in civil clothes, forcibly entered and searched Jaffna University (JU) campus, holding the security officer at gun point, Saturday around 1:00 a.m, sources in Jaffna said. Th…

    • 4 replies
    • 1.7k views
  5. கருணா ஒட்டுக் குழு சிறுவர் கடத்தலை நிறுத்தவில்லை - யுனிசெப் கிழக்கில் கருணா குழு நாளாந்தம் சிறுவர்களை தமது ஆயுதக் குழுவில் இணைத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய ஐ-நா சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் பேச்சாளர் கோர்டன் வீஸ், கருணா குழுவுடன் தாம் மேற்கொண்டுவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாகக் கூறினார். சிறுவர்களை படையில் இணைப்பதை நிறுத்துவதாகவும், ஏற்கனவே இணைத்த சிறுவர்களை விடுதலை செய்வதாகவும் ஒப்புக்கொண்ட கருணா ஒட்டுக்குழு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி இருப்பதாகவும், நாளாந்தம் மேலும் சிறுவர்களைப் படையில் இணைத்து வருவதாகவும் கோர்டன் மேலும் கண்டித்தார். கர…

  6. புலிகளின் நிர்வாகப் பகுதியை பார்வையிடுகிறது பிரித்தானிய அனைத்துக் கட்சி குழு [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:44 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை செப்ரெம்பர் மாத இறுதியில் பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெய்த் வாஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான மூன்று மணிநேர விவாதத்தின் போது கெய்த் வாஸ் கூறியதாவது: இனப் பிரச்சனை தொடர்பில் நாம் மூன்றுவிதமான செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம். முதலாவதாக அனைத்துக்கட்சி குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இறுதியில்…

  7. புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி அந்த அமைப்பின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்தை அந்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. …

  8. இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கையில் அமைதி திரும்பும்: சென்னையில் ரணில். இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கையில் அமைதி திரும்பும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த 18 நாட்களாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரணில் இன்று சனிக்கிழமை காலை துபாயில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் சென்னை வந்தார். இன்று காலை வானூர்தி நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சென்னை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: சிறிலங்காவில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்குள்ள பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தற்போது ஆட்சி…

    • 4 replies
    • 1.3k views
  9. திருமலையில் 3 குடியேற்றவாசிகள் சுட்டுப் படுகொலை. திருமலை வடக்கு திரியாய் கல்லாறு, சலப்பையாறு ஆகிய பகுதிகளில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று தென்னிலங்கை குடியேற்றவாசிகள் தலத்தில் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு குடியேற்றவாசிகள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் தமிழிலும் சிங்களத்திலும் சரளமாக உரையாடக் கூடியவர்கள் என்றும் அண்மையில் திரியாய் பகுதியில் அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டவர்கள் என்றும் தெரியவருகின்றது -Pathivu-

  10. சிறீலங்கா விமானப் போக்குவரத்து வருமானமும் வீழ்ச்சி வான் புலிகளின் தாக்குதலின் எதிரொலி காரணமாக சிறீலங்கா அரசு விமானப் போக்குவரத்து மூலம் பெற்றுவந்த வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று மாலை விமான நிறுவன அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணிவரை விமான சேவையை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வான் புலிகளின் தாக்குதல் காரணமாக விமான நிலையத்தை இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை மூடுவதற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் முடிவு செய்திருந்தது. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை மூலமும் பெற்றுவந்த நிதிகள் தடைப்படுவதால், சிறீலங்காவின் பொருளாதார…

  11. பிரிட்டனின் முடிவு: இலங்கை கவலை அதன் பின்னணி குறித்து அரசு ஆராயுமாம் கொழும்பு, மே 5 இலங்கைக்கான நிதி உதவியை பிரிட்டன் முடக்கி யமை தொடர்பாக இலங்கை அரசு ஆராயவுள்ளதாக அர சின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கை யில் அரசு மனித உரிமை மீறல் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. நாட்டில் பயங்கரவாதம் நிலவுகின்றபோது, அப்பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். அதைத்தான் அரசு தற்போது செய்துகொண்டிருக்கின்றது. நாம் முன்னெடுத்துச்செல்லும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்குப் …

  12. சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தம் [வியாழக்கிழமை, 3 மே 2007, 16:24 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமைகளை ஏற்றுக்கொண்டு, இராணுவச் செலவீனங்களைக் குறைக்கும் வரை பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரக பேச்சாளர் கூறியதாவது: அனைத்துலக சமூகம் பலமுறை விடுத்த வேண்டுகோள்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் நிராகரித்த நிலையில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தபடுகிறது. சிறிலங்காவுக்கு 2005 ஆம் ஆண்டு 41 மில்லியன் பவுண்ட்ஸ் (81.6 மில்லியன் டொலர்) கடன் உதவி வழங்க ஒப்புக் கொண்டது. இதன் அடிப்படையில் …

  13. மட்டு, படுவான்கரையில் 21 புதிய படை முகாம்கள் மட்டக்களப்பு படுவான்கரையை அண்மையில் ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படையினர், அங்குள்ள பொதுமக்களின் காணிகளை அபகரித்து படை முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்தப் பிரதேசங்களில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இவ்வாறான முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இதேபோன்ற ஆக்கிரமிப்பு கடந்த காலங்களிலும் நிகழ்ந்து முகாம்கள் அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன், இதனால் மக்களிற்குப் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனக் கூறினார். பதிவு

  14. தென்மராட்சியில் வியாழன் இரவும் மினி சூறாவளி; பெரும் சேதங்கள் தென்மராட்சிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் வியாழன் இரவும் மினி சூறாவளி வீசி பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. பனை மரம் ஒன்று வீட்டின் மீது வீழ்ந்ததில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். பெரும்மளவு பயன்தரு மரங்கள் முறிந்து நாசமாகின. பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 8.15 மணி தொடக்கம் 9.15 மணி வரை இடைவிடாது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் திடீரென மினி சூறாவளி வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தன. மட்டுவில் தெற்குப் பகுதியில் பனை மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் அதே இடத்தைச் சேர்ந்த பத்மநாதன் கமலேஸ்வரி (வயது 48) என்பவருக்கு விலா எலும்பு முறிந…

  15. வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் படுகாயமடைந்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுக்கு வேட்டையாடச் சென்றவர்கள் மீதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும், உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர் பான விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர் உதயன்

  16. இலங்கைக்கான உதவிகளை உலகநாடுகள் பிரிட்டனைப் பின்பற்றி முடக்க வேண்டும்! ஆசிய மனித உரிமைகள் மையம் வலியுறுத்து புதுடில்லி, மே 5 திட்டமிட்ட வகையில் மனித உரிமை களை மோசமாக மீறிவரும் இலங்கை அரசை சரியான வழிக்குக் கொண்டுவரு வதற்காக, அந்நாட்டுக்கான உதவிகளை பிரிட்டனைப் பின்பற்றி உலக நாடுகள் அனைத்தும் முடக்கவேண்டும். புதுடில்லியை யைமாகக் கொண்டி யங்கும் மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் இவ்வாறு கோரியிருக்கின்றது. மனித உரிமைகளைப் பேணுவது தொடர் பான அடிப்படை நிலைமைகளை நிறைவு செய்யத் தவறியமைக்காக இலங்கைக்கான உதவிகளை முடக்குவதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கின்றது. மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பான இலங்கை அரசின் செயற்பாட்டில் அதிருப்தியுற்று, அதனடிப்படை யில் பிரிட்டன் எடுத்த…

  17. மனித உரிமைகளைப் பேணத் தவறியதால் இலங்கைக்குக் கிடைத்த முதல் தண்டனை பிரிட்டன் நிதி முடக்கம் கொழும்பு, மே 5 ""இலங்கைத் தமிழர்களினதும் ஏனைய இன மக்களின தும் அடிப்படை உரிமைகளை இலங்கை அரசு மீறிவரு வதன் காரணமாகவே பிரிட்டன் இலங்கைக்கான அதன் நிதி உதவியை முடக்கியுள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைக்காக சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு வழங்கவிருக்கும் தண்டனையின் முதல் கட்டமே இந்த நிதி உதவி முடக்கம்.'' இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான நிதியுதவியை பிரிட்டன் முடக்கியமை தொடர்பாக நேற்றுக் கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள் ளன என்பதையும் இலங்கை அரசே…

  18. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் பாதுகாப்பு அமைச்சர் அன்ரனி திருவனந்தபுரம், மே 2 தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்திய மண்ணை தளமாக பாவிக்க எந்த பயங்கர அமைப்புக்கும் இடமளிக்கமாட்டோம். இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி கூறினார். விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் பின் இலங்கை நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறோம். கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளக் கரையோரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். கரையோரங்களில் பொலிஸ் நிலையங்களை அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரையோரப்பகுதியில் கூடுதலான …

    • 23 replies
    • 4.4k views
  19. இலங்கையின் அராஜகங்கள் சர்வதேச மட்டத்தில் அம்பலம் தென்னிலங்கையிலும், அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் வகைதொகையின்றி இடம்பெறும் மனிதப் படுகொலைகள், கேட்டுக் கேள்வியின்றி நடைபெறும் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல மட்டங்களிலும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அரசுத் தரப்பில் ஒட்டிக்கொண்டிருந்தபோதிலும் மனச்சாட்சி காரணமாக, இந்த அராஜகங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியோர் மேலிட அழுத்தத்துக்கு உள்ளானார்கள். அதனால் அமுக்கி வாசிக்க வேண்டியவர்களுமானார்கள். இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய வேறு சிலரோ மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். ரவிராஜ் எம். பி. போன்றோர்…

    • 1 reply
    • 879 views
  20. புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத குற்றச்சாட்டை தமிழக பொலிஸ் ஆணையர் கூறுவது யாரை பாதுகாக்க? விடுதலைப் புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென தமிழக பொலிஸ் ஆணையாளர் கூறுவது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், எதையோ மூடி மறைக்க யாரையோ காப்பாற்ற பொலிஸ் ஆணையாளரை பயன்படுத்துவது அவரின் பதவிக்கே இழுக்கைத் தேடித் தருமெனவும் கூறியுள்ளார். குமரி மாவட்ட மீனவர்களை விடுதலைப் புலிகளே சுட்டதாக தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி தெரிவித்த குற்றச்சாட்டைக் கண்டித்தே இவ்வாறு தெரிவித்த பழ.நெடுமாறன் மேலும் கூறியதாவது; தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணாமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் …

    • 24 replies
    • 5.4k views
  21. கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையம் இரவில் முழுதாக மூடப்படுகிறது: சிறிலங்கா. சிறிலங்கா கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தினை இரவில் மூடும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வான்புலிகளின் தாக்குதலால் சிறிலங்காவுக்கான பல வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் பகல் சேவைகளை மட்டும் வானூர்தி சேவை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்டுநாயக்க வானூர்தி நிலையமானது எதிர்வரும் 10 ஆம் நாள் நாள் முதல் இரவில் மூடப்படவுள்ளது. வானூர்தி நிலையம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை முழுதாக மூடப்படும் என்று சிறிலங்கா வானூர்தி சேவைகள் பணிப்பாளர் பராக்கிரம திசநாயக்க தெரிவித்துள்ளார். -Puthinam-

  22. கடற்படை கப்பல்களில் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும்: கொழும்பு ஊடகம் [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 17:28 ஈழம்] [அ.அருணாசலம்] வான்புலிகளை எதிர்கொள்ள சிறிலங்கா கடற்படை கப்பல்களிலும் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என்று கொழும்பு ஊடகம் யோசனை தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கட்டுரை: பலாலி கூட்டுப்படைத் தளத்தின் மீது வான்புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் தொடர்பாக படையினர் ஆராய்ந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் மூன்றாவது வெற்றிகரமான தாக்குதலையும் நடத்தி முடித்துவிட்டனர். விடுதலைப் புலிகளின் ஒற்றை இயந்திரத்தைக் கொண்ட Zlin-143 அல்லது செஸ்னா வகை வானூர்திகள் மிகவும் முக்கியம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப…

  23. மீனவர்களைக் கடத்தியது புலிகள் தான் அடித்து கூறுகிறார் கருணாநிதி http://thatstamil.oneindia.in/news/2007/05/04/karuna.html புலனாய்வுப் பிரிவினர் விரித்த வலையில் கருணாநிதி ரொம்ப சுலபமாக விழுந்துவிட்டார்.சில வேளையில் ஒட்டுக்குழுக்களைக் கொண்டு கடத்தியிருக்கலாம்.அங்கு அகப்பட்ட 6 பேரும் ஒட்டுக் குழுவாகவும் இருக்கலாம்.மீனவர்களுக்கே மீன் கொடுக்கிறார்களாம்.

  24. மகிந்தவினால் தமிழகம் செல்ல முடியுமா?: ஐ.தே.க. [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ்நாட்டின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் முன்னணித் தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது: இலங்கை அமைதி முயற்சிகளில் தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் பேற வேண்டும். தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறாமல் இதர நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் எதுவித பயனும் இல்லை. இந்திய மத்திய அரசின் நிலைத்தன்மையானது தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்ததே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவும் அந்த மாநிலத்திலிருந்துதான்…

    • 8 replies
    • 2.1k views
  25. பத்திரிகை அறிக்கை இலங்கைத் தீவில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இனப் பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தினை முழு அளவில் ஈர்த்துள்ளது. இனப் பிரச்சினைக்கு யுத்தம் மூலமாக அல்லாமல் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என சர்தேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது. சர்வதேசத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாத இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவதுடன் பயங்கரவாதத்திற்கு இராணுவத் தீர்வு என்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் கூறி தமிழ் மக்களுக்கு எதிரான போரை முழு அளவில் முன்னெடுத்து வருகின்றது. இந் நிலையில் கடந்த 30-04-2007 அன்று சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.