Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாகர்கோவிலுக்கு பெருமளவில் யுத்ததளபாடங்களை நகர்த்தும் படையினர். Written by Ellalan - May 02, 2007 at 03:12 PM பலாலியில் இருந்து கடந்த இரு தினங்களில் இரவு வேளைகளில் நாகர்கோயில் படைத்தளங்களுக்கு பருத்தித்துறை, மந்திகை ஊடாக பெருமளவில் இரும்புக்கேடர்கள் இரும்புக்கம்பிகள், சிலுப்பர்கட்டைகள், சீமெண்ட், யுத்ததளபாங்கள், போன்றன கனரகவாகனங்களில் கொண்டுசெல்லப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்தில் 24 ஆம், 25ஆம் திகதிகளிலும் இதேபோன்ற பொருட்கள் அடங்கிய படையினரின் வாகனத்தொடரணி ஒன்றும் நாகர்கோயில் தளங்களுக்கு படையினரால் கொண்டு செல்லப்பட்டதாகவும் இவற்றில் பெருமளவில் இரும்புக் கேடர்கள் காணப்பட்டதாகவும் இப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். குடாநாட்டில் சிற…

    • 3 replies
    • 2.5k views
  2. குமரி மீனவர்கள் படுகொலை விவகாரம்- தி.மு.க. அரசைக் கலைக்க நினைக்கும் சக்திகளின் சதி: தொல். திருமாவளவன் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்துவதில் தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சில சக்திகளின் சதியும் நிர்ப்பதங்களும் உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார். சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "மீனவ தமிழர் பாதுகாப்பு" மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் பேசியதாவது: இலங்கையில் வான்வழியாக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி உலக சாதனை படைத்துள்ளனர். இஸ்ரேல் விமானத்தையும் அவர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். எந்த இயக்கமும்…

    • 0 replies
    • 737 views
  3. திசை திருப்பப்படும் விமானங்களைச் சமாளிக்க சென்னை விமான நிலையம் தயார் நிலையில் சென்னை, மே 2 கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்கள் நீடிப்பதால் அங்கிருந்து திசை திருப்பி விடப்படும் சர்வதேச பயணிகள் விமானங்களைச் சமாளிப்பதற்கான முழு ஏற்பாடுகள் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமானங்களையும், பயணிகளையும் சமாளித்துப் பராமரிப்பதற்குத் தயாரான நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரே தடவையில் திசை திருப்பி விடப்படும் பல விமானங்களைச் சமாளிக்கும் வகையிலான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டால் அங்கிருந்து திருப்பி விடப்படும்…

  4. கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய போர் ஒத்திகை [புதன்கிழமை, 2 மே 2007, 21:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் போர் ஒத்திகையால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் துறைமுகப் பகுதியில் துப்பாக்கி சத்தங்கள், பீரங்கி வேட்டொலிகள் அதிகளவில் எழுந்தன. இதனால் கொழும்பில் மக்கள் பெரிதும் பதற்றமடைந்து சிதறி ஓடினர். இதன் பின்னர் ஊடகங்கள் ஊடாக தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும் தாக்குதல் ஒத்திகையே நடைபெற்றது என்றும் சிறிலங்கா இராணுவத்தினர் அறிவித்தனர். இந்த ஒத்திகை இன்று மாலை 5 மணிமுதல் 7 மணிவரை நடைபெற்றது. நன்றி - புதினம்

  5. சிலாபத்தில் வட்டமிட்ட இரு வானூர்திகள்: பொதுமக்கள் பீதி. வெசாக் பண்டிகையையொட்டி சிலாபம் வான்பரப்பில் பாதுகாப்புக்காக சிறிலங்கா வான்படையின் இரு ரிரி-6 ரக வானூர்திகள் நேற்று செவ்வாய்க்கிழமை பறந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இரு வானூர்திகள் பறப்பதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவசர தொலைபேசி எண் 116 க்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அந்த தொலைபேசி சேவை செயற்படவில்லை. பொதுமக்களுக்கு எதுவித முன்னறிவித்தல்களும் கொடுக்கப்படாமல் இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடத்திலேயே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எண்ணெய்க் களஞ்சியங்கள் மீதான வான்புலிகளின் தாக்குதலின் போது படைத்தரப்பின் அனைத்துப் பிரிவினரும் கண்ம…

  6. புலிகளின் வானூர்திகளை இலங்கை விமானப் படை விமானங்களால் வழி மறித்து தாக்கமுடியாது: முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க. சிறிலங்கா வான்படையிடம் உள்ள கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது என்று சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார். "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" ஏட்டுக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து விவரம்: மரங்களை அழிக்க அவற்றின் கீழ்ப்புறத்தை வெட்டுவது போல புலிகளின் வானூர்திகளை தரையில் வைத்து அழிக்க வேண்டும். கிபீர்களாலும் மிக்குகளாலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது. அந்த வசதிகள் அவற்றுக்கு கிடையாது. ஆனால் அவற்றால் குண்டுகளைப் போடமுடியும். விடுதலைப்…

  7. திமுக அரசால் தான் விடுதலைப்புலிகள் வளர்கிறார்கள் : ஜெயலலிதா சென்னை : தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடப்பதால்தான், இலங்கையில் விமான தாக்குதல் நடத்தும் அளவிற்கு விடுதலைப்புலிகள் வளர்ந்துள்ளார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு தேவையான ராணுவ தளவாட பொருட்களை இங்கிருந்து கடத்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது தான் இதற்கு காரணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் தவிர மருந்துகள், உணவு மற்றும் பொருட்களும் இங்கிருந்து கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் தினமலர்

  8. அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக பணியாற்றும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும் ஈ.பி.டி.பி. கொலைகளைக் கண்டித்து அறிக்கை யாழ்ப்பாணம். மே 1 ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாகப் பணியாற்றவும், வாழவுமான சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும். இதற்குத் தடையாக உள்ள மக்கள் விரோதச் சக்தி கள் இனங்காணப்படவேண்டும். இவ்வாறு படுகொலைகளைக் கண் டித்து ஈ.பி.டி.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின் றது. அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது: வடக்கு கிழக்கில் அன்றாடம் தொட ரும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழிலையும், தரா தரத்தையும் பார்த்து கொலையைக் கண் டிக்க நாம் தயாரில்லை. எம்மைப் பொறுத் …

  9. படையினரின் தென்மராட்சி ஆட்லெறி தளம் புலிகளின் தாக்குதலில் சேதம். Written by Ellalan - May 02, 2007 at 03:14 PM யாழ். தென்மராட்சிக் கிழக்குப் பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படைகளின் ஆட்லறி எறிகணைத் தளங்கள் பல கடுமையாகச் சேதமுற்று இருப்பதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினரின் முன்னரங்க நிலைகளை பாதுகாக்கவும் பொது மக்கள் பிரதேசங்களை சிதைக்கவும் படையினர் நிலைகளுக்கு அண்மித்த பகுதியில் இருந்த படையினரின் எறிகணைத் தளங்கள் பல விடுதலைப் புலிகளின் துல்லியமான பதில் எறிகணை வீச்சில் சிக்கி சிதைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எழுது மட்டுவால் சிவன்கோயிலடி பகுதியில் அமைந்திருந்த படையினரின் ஆட்லெறி எறிகணைத் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதில…

  10. விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி புலிகள் கேட்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது: மைத்திரிபால. விடுதலைப்புலிகள் விமான குண்டு தாக்குதலை நடத்துவதனால் அவர்கள் கேட்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்காது, அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்கும் , மரணத்திற்கும் இந்நாட்டு மக்கள் பயப்படப்போவதில்லை. என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்வு திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் …

    • 2 replies
    • 1.5k views
  11. அணிதிரண்டு எதிர்ப்பதை தவிர மாற்று வழியில்லை [02 - May - 2007] * முஸ்லிம் கட்சிகள் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இனநெருக்கடிக்குத் தீர்வு யோசனையாக ஒற்றையாட்சியின் கீழ் மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் தொடர்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களை தெரிவித்தன. சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகள் குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்கள் வருமாறு: மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைவர்- உலமாக் கட்சி சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை குறித்து கவலைப்படுகிறோம். அதில் எமக்கு திருப்தி இல்லை. பழையதொன்றை புதுப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போதிய அதிகாரப் பகிர்வு கிடைக்காத…

  12. புலிகளின் வான் பலத்தை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கம் தற்போது தேவையா? [02 - May - 2007] * கேள்வி எழுப்புகிறது ஜே.வி.பி. ப. பன்னீர்செல்வம் விடுதலைப் புலிகள் தமது இறுதி துருப்புச் சீட்டான விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டு மக்களை பீதிக்குள்ளாக்கி பொருளாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் புலிகளின் விமானங்களை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. இது தேவையா? எனக் கேள்வியெழுப்பும் ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அரசாங்கத்தின் இந்த யோசனைகளை ஜே.வி.பி. எதிர்க்கின்றது. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதென்றும் தெரிவித்தார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாராளுமன…

  13. பழைய மொந்தையில் புளித்த கள் [02 - May - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அதன் யோசனைகளை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த யோசனைகளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான விவசாய அபிவிருத்தி, கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வாசித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சி அதன் வேட்பாளருக்கு ஆ…

  14. சிங்கள பேரினவாதத்தை எதிர் கொள்ள தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் [02 - May - 2007] * சிங்கள பேரினவாத முனைப்பானது உண்மையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்குமே குந்தகமானதென்பதே யதார்த்தமாயுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மு.கா.தலைமைகளும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அரசில் இணைந்திருக்கின்ற போதும் நில அபகரிப்பு மற்றும் சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. இந்த நிலை மிக அபாயகரமானது எனும் விழிப்புணர்வு பரந்து விரிந்து வீரியம் பெறுவதற்கு முதலாவதாக தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதுதான் மிக அவசியமும் மிக அவசரமுமானதாகும். தலைமைகள் காத்திரமானதொரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடும் பட்சத்தில்தான் மக்கள் சக்தியை வெளிக…

  15. இலங்கையின் படைச் சமநிலை வான் புலிகளால் மாறிவிட்டது! முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல் மேத்தா கொழும்பு, மே 2 இலங்கையின் யுத்த நிலைமை ஆபத்தான ஒரு திருப்பு முனையை எட்டியிருக்கின்றது. சரித்திரத்தில் முதல் தடவையாக அரசு அல்லாத ஓர் அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் ஒழுங்கான விமானப்படையைத் தான் தொடங்கியிருப்பதை வெளிக்காட்டியிருக்கின்றது. இந்த 24வருட காலப் பிணக்கில் படைச் சமநிலை மாறியிருக்கின்றது என்பது உண்மை. இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் அசோக் கே.மேத்தா மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைதிப்படை அதிகாரியாகப் பணியாற்றிய இவர் "த வோல் ஸ்ரீட் ஜேனல்' என்ற பாதுகாப்புத்துறைச் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளார். "பறக்க…

  16. பாதிப்புறும் விமான சேவைகள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது 2001 ஜூலையில் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதலினால் ஏற்பட்ட நேரடி சேதங்களைப் போன்று பாரிய நேரடி அழிவை, இப்போது விடுதலைப்புலிகளின் வான் புலிகள் நடத்தியிருக்கும் மூன்று விமானத்தாக்குதல்களும் ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு மிக்க தலைநகரின் வான் பிரதேசத்துக்குள், அரசுப் படைகளின் தீவிர கண்காணிப்புக் ஏற்பாடுகளையும் மீறி, வெற்றிகரமாகப் புலிகளின் விமானங்கள் பறந்து சென்று, குண்டுகளை வீசிவிட்டு, பாதுகாப்பாகத் தமது தளங்களுக்குத் திரும்புகின்றமை மறைமுக வழியில் பெரும் பாதிப்புகளையும், பின்னடைவுகளையும், இழப்புகளையும் அரசுத்தரப்புக்கு ஏற்படுத்தி வருவது கண்…

  17. "வெசாக் வாரத்தை முன்னிட்டு மோதல் தவிர்ப்பை கடைப்பிடிக்க வேண்டுகோள்" வெசாக் வாரத்தினை முன்னிட்டு மோதல் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து அமைதி நிலவ வழிசெய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவசர கடிதங்களை சர்வமத தர்மசக்தி நிதியம் அனுப்பியுள்ளது. இந்நிதியத்தின் கூட்டம் நேற்று போருக்கெதிரான முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க இக்கடிதத்தினை நிதியத்தின் இணைப்பு செயலாளர் வண.வெலிகம தம்மிஸ்வர தேரோ கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செய்தி அவரது செயலாளருக்கும் விடுதலைப் புலிகளுக்கான செய்தி சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக வும்அனுப்பிவைக்கப்பட்டுள்ள

  18. தமிழ் எம்.பி.க்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை: இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி மானாமதுரை, மே 1: இலங்கையில் தமிழ் எம்.பி.க்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழர் தேசிய இயக்க மாநிலப் பொதுச்செயலர் கா. பரந்தாமன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் விடுதலைப் புலிகள் மூன்றாவது முறையாக விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்போது அவர்களது பலம் இலங்கை அரசுக்குத் தெரிந்திருக்கும். புலிகளை ஆதரிக்கும் தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழகத்தில் ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் பேசி வரும் நிலையில்…

    • 1 reply
    • 798 views
  19. பிரான்ஸ் மே நாளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு இன்றைய மேதின ஊர்வலம் Republique ல் ஆரம்பித்து Nation ல் முடிவடைந்தது இதில் 8000ற்கு மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், எமது தலைவர் பிரபாகரன் என்ற கோசங்களுடனும் பிரெஞ்சு மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தும் சிறப்பித்தனர். இவ் ஊர்வலத்தில் தமிழ்ச்சங்கங்கள், இளையோர் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், வர்த்தக சங்கங்கள், உதைபந்தாட்டச்சம்மேளனம், தமிழ்ச்சோலைகள், ஏனைய பிற பாடசாலைகள், சங்கங்கள், வர்த்தகர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வர்த்தகர்கள் மதியம் 1 மணியுடன் தமது நிறுவனங்களைப்பூட்டியும் கலந்து கொண்டனர். இறுதியாக பாதர். இம்மானுவேல் அடி…

  20. 'விளையாட்டு - அரசியல் - மொழி - நாட்டுப்பற்று!' உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டி விளையாட்டின் வெற்றியின்- ஊடே, தனது இனவெறி அரசின் அரசியல் பரப்புரையை, மேற்கொள்ள முனைந்த சிறிலங்கா அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிறிலங்கா அணியை, அவுஸ்திரேலிய அணி வெற்றி கொண்டுள்ளது. வெளிநாட்டில் இப்படிப்பட்ட ஒரு தோல்வியை, சிறிலங்கா அடைந்துள்ள அதே நேரத்தில், உள்நாட்டில்- சிறிலங்காவிலும் இன்னுமொரு மாபெரும் தோல்வியையும், இழப்பையும் அது அடைந்துள்ளது. சிறிலங்காவின் இரண்டு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள்மீது வான் புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். சிறிலங்காவின் பேரினவாத அரசுகள் தமிழீழ மக்களி…

    • 1 reply
    • 805 views
  21. விமான தாக்குதல் தொடர்பில் ஜே.வி.பி.யும் ,ஹெல உறுமயவும் மௌனம் காப்பது ஏன்? நாட்டில் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் தொடர்பாக ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் ஏன் மௌனமாக இருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: விடுதலைப்புலிகள் நான்காவது தடவையாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டனர். ஆனால், அரசாங்கத்தினால் எந்தவொரு தாக்குதல்களையும் முறியடிக்க முடியவில்லை. புலிகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதும் அரசாங்கம் அப்பகுதியில் மி…

    • 2 replies
    • 1.2k views
  22. கொலன்னாவவில் குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும்: முன்னாள் வான்படை அதிகாரி டிர்க்சி கொலன்னாவ எண்ணெய்க்குதங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படை அதிகாரியான விங் கொமாண்டர் சி.ஏ.ஓ டிர்க்சி எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு "புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பது" தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான்தாக்குதல் அதன்பின்னர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் தற்போது நடைபெறும் மோதல்களை ம…

    • 2 replies
    • 1.1k views
  23. திங்கள் 30-04-2007 16:11 மணி தமிழீழம் [முகிலன்] விமான சேவைகள் இடைநிறுத்தம்: இரவு சேவைளை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு விரைவில் தென்னிலங்கையில் கட்டுநாயக்க மற்றும் கேந்திரமுக்கிய இலக்குகள் மீது விடுதலைப் புலிகள் வான்தாக்குதலையடுத்து சிறீலங்காவுக்கான சர்வதேச விமான சேவையை மேற்கொள்ளும் கத்தேபசுபிக் மற்றும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனங்கள் தமது சேவையை காலவரையின்றி இடைநிறுத்தியுள்ளன. இந்த நிலையில் சிறீலங்காவுக்கான இரவு நேர விமான சேவைகள் நிறுத்துவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. pathivu

  24. மனித உரிமை மீறல்கள்: பாதுகாப்புப் பிரிவின் 30 பேர் கைது [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 15:13 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்க இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 30 பேர் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பவ்ரெல் அமைப்பு தெரிவித்துள்ளது. பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்றிக்கோ கூறியுள்ளதாவது: ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் பொதுநலப் பணிகளில் ஈடுபட்ட தலைவர்களின் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்புடைய 452 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பான எமது அமைப்பின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் நாள் வெளியிடப்பட உள்ளது. இதுவரை பொதுமக்களிடமிருந்து ஆயிரக…

    • 7 replies
    • 1.5k views
  25. சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில், எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது. ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு…

    • 6 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.