ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
''17ஆவது ஆண்டில் புதிய பாய்ச்சலுக்காக காத்திருக்கும் சாள்ஸ் அன்ரனி படையணி'' - தெ.றஞ்சித்குமார்- விடுதலைப் போராட்டம் இன்று விடுதலைப்புலிகளின் படையணிகளோடும், புதிய படைணிகளின் அறிமுகங்களோடும் எதிரிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை ஆரம்பகால கட்டங்களில் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடாத்துவதற்கு ஈருருளிகளைக்கூட விடுதலைப்புலிகள் பயன்படுத்தியுள்ளனர். போராட்ட வளர்ச்சிக்கால கட்டங்களில் சிறிய குழுக்களாக பெரும் இராணுவ பலங்களின் நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் முகம் கொடுத்தார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் கெரில்லா ரீதியான நடவடிக்கையை மேற் கொண்டு, அடுத்த கட்டமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை தற்போதைய யுத்த நடவடிக்கைகள் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடையும் அபாயம் தோன்றியிருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் வெளிப்படுத்தியபோதும் இக் கணிப்பீட்டில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை. அப்பிரதேசங்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது எனத் தெரிவிக்கும் பொருளாதார ஆய்வாளர்கள், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பொருளாதாரக் கணிப்பீட்டில் சேர்க்கப்படுமிடத்து இன்று உள்ளதைவிட வித்தியாசமான பெறுபேறுகளே காணப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இன்று தொடரும்…
-
- 6 replies
- 1.5k views
-
-
யுத்தநிறுத்த உடன்படிக்கையை ரத்தாக்க மேன்முறையீட்டு மனு - ஜே.வி.பி., ஹெல உறுமய, சிங்கள மகா சபா உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் [18 - April - 2007] -த.தர்மேந்திரா- யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக தனித்தனியாக 3 மேன்முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க, சிங்கள மகா சபையின் தலைவர் டாக்டர் பியசேன திசநாயக்க ஆகியோர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களுக்கு சட்டத் தகுதிப்பாடு கிடையாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்தே உயர்நீதிமன்றத்தில் மேன்ம…
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கையில் யே.வி.பி யினரின் பின்னணியில் புதிய ஆயதப்படை ஒன்று உருவாகியுள்ளது. தேசிய மக்கள் படை என்ற பேரில் உருவாகியுள்ள இந்தப் படையினருக்குப் பொறுப்பாக மேஜர் றத்னபிரிய என்பவர் பொறுப்பாக இருப்பதாகவும், கல்கிரியகம என்ற இடத்தில் இந்தப் படைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அறிய முடிகிறது. இந்தப் படையில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.nitharsanam.com/?art=22553
-
- 14 replies
- 3.6k views
-
-
கருணா குழுவினர் சம்பிக்க ரணவக்கவை கொலை செய்ய முயற்சித்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லை. Wednesday, 18 April 2007 கொழும்பில் வெளிவரும் ஆங்கில நாளிதழான டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க லியனாராய்ச்சிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. டெய்லி மிரர் பத்திரிகையில் கருணாகுழுவினர் பற்றிய செய்திகளை பிரசுரிக்க வேண்டாமென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ள அதேவேளை கருணா குழுவினர் டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க ரணவக்கவை கொலை செய்ய முயற்சித்தல் அதற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பின் பேச்சாளர் சுனந்த தேஷப்பிரிய தெரிவித்…
-
- 9 replies
- 2.6k views
-
-
'சிறிலங்கா அரசு எதனையோ மறைக்க முயல்கின்றது': அனைத்துலக மன்னிப்புச் சபை "எமது பிரதிநிதிகளை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுப்பதன் மூலம் அது எதளையோ மறைக்க முயல்கின்றது" என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு என அங்கு சென்றிருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இருவருக்கு பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் றொப் கோடன் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அது எதனையோ மறைக்க முயல்வதனை கா…
-
- 8 replies
- 1.9k views
-
-
புதன் 18-04-2007 21:03 மணி தமிழீழம் [மயூரன்] 3 மாதத்திற்கு பின்னரே படுவான்கரை மக்கள் மீள்குடியேற்றப்படுவர் - பசில் ராஜபக்ச படுவான்கரை மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் தலைமையில் கொழும்பு அரச செயலகத்தில் மட்டக்களப்பு அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் சந்தி்ப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் மட்டுக்களப்பு படுவான்கரை மக்களை மூன்று கட்டங்களாக மீளவும் குடியேற்ற சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ் மீள் குடியேற்றங்கள் எதிர்வரும் யூலை 30 நாளுக்குப் பின்னரே சாத்தியப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முதலாவது மீள் குடியேற்றம் வெல்லாவெளிப் பிரதேசத்திலும், இரண்டாவது மீள் குடியேற்றம் பட்ட…
-
- 0 replies
- 918 views
-
-
ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அரசாங்க அமைச்சர்களின் வார்த்தை பிரயோகங்கள் உள்ளன: சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம். - பண்டார வன்னியன் Wednesday, 18 April 2007 15:35 அமைச்சர்கள் மற்றும் பங்காளிகளின் வார்த்தைப் பிரயோகத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசின் பங்காளர்களுடைய வார்த்தைப் பிரயோகம், அவர்களின் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது அரசாங்கத் தலைவர்களும் அரசில் அங்கம் வகிப்பவர்களும் சுதந்திரமான ஊடகச் செயற்பாடுகளைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுதந்திர ஊடக இயக்கம் கூறுகிறது. கருணா குழுவினர் தொடர்பான செய்திகளை வெளியிடுவது பற்றி …
-
- 1 reply
- 880 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு மிக் - 27 ரக வானூர்திகள் இன்றும் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. [Wednesday April 18 2007 02:41:03 PM GMT] [யாழ் வாணன்] புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் மிக் - 27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. தமிழ்வின்
-
- 0 replies
- 730 views
-
-
ஏறாவூர் சந்திவெளி பகுதியில் இறங்குதுறை படகொன்று கவிழ்ந்ததில் சிலர் உயுரிழந்து இருக்கலாம் என நம்பபடுகிறது. [Wednesday April 18 2007 02:12:22 PM GMT] [யாழ் வாணன்] படகு கவிழ்ந்த்தில் சிலர் உயிரிழந்ததாகவும் சம்பவ ஸ்தளத்திற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஏறாவூர் பொலிஸ் நிலைய இடத்திலிருந்து 3 கூலங்கள் மீட்கப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்வின்
-
- 0 replies
- 625 views
-
-
விடயம்: சிறீலங்கா சனதிபதியின் வத்திக்கான் பயணம் நோக்கம்: சிறீலங்கா சனதிபதி எதிர்வரும் வெள்ளி 20.04.07ல் வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிறீலங்காவின் மனிதவதை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவன ஈர்ப்பினைக் கோரும் நடவடிக்கை. படுகொலைகள் - காணமல் போதல் உட்பட்ட மனிதவதைகளை உடனடியாக சிறீலங்கா நிறுத்தல் வேண்டுமெனக் கோரியும், சர்வதேசக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளல், பயங்கரவாத தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம், ஏ-9 வீதி மூடப்படல் போன்ற விடயங்களை நீக்கும் உறுதிமொழியை சிறீலங்காவிடமிருந்து புனித பாப்பரசர் கோரல் வேண்டுமெனக் வேண்டுதல். வழிமுறை: புனித பாப்பரசருக்கு நேரிடையாகவும், வாழும் நாடுகளில் உள்ள வத்திக்கானிற்கான தூதுரகம்…
-
- 5 replies
- 1.9k views
-
-
குடாநாட்டை ஆக்கிரமித்துவரும் `கசிப்பு' இளைஞர்களும் பெருமளவில் அடிமையாகின்றனர் யாழ்குடா நாட்டிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மதுபான வகைகள் எதுவும் தென்னிலங்கையிலிருந்து எடுத்துவரப்படாத நிலையில் குடாநாட்டுக் "குடிமக்களின்" ஒரே தெரிவாக இன்று கசிப்பே உள்ளது. இதன் காரணமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை என்றுமில்லாதவாறு களை கட்டியுள்ளது. குடாநாட்டின் மூலை, முடுக்கெங்கும் கசிப்பு உற்பத்தி, விற்பனை எவ்வித தடைகளும் இடையூறுகளுமின்றி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணத்தில் தற்போது வெளிநாட்டு, உள்நாட்டு மதுபான வகைகளைப் பெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. திக்கம் வடிசாலையில் உற்பத்தி செய்யப்படும் பனஞ்சாராயம் மட்டும்தான் மதுப்பிரியர…
-
- 3 replies
- 951 views
-
-
மனித உரிமை மீறல்களில் இலங்கை அலட்சியம் பாப்பரசருக்கு `ஹியூமன் றைற்ஸ் வோற்ச்' கடிதம் அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ஹியூமன் றைற்ஸ் வோற்ச் (Human rights watch) அமைப்பு இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான விபரங்கள் அடங்கிய கடிதமொன்றை பரிசுத்த பாப்பரசருக்கு அனுப்பியுள்ளது. இலங்கையில் ஆயுதப் பிணக்குகளில் ஈடுபட்டுள்ள தரப்பான அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்து அலட்சியப்படுத்தி நடந்து கொள்வதாக இக்கடிதத்தில் இவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அலட்சியப்படுத்தி செயற்படுவதாக விடுதலைப் ப…
-
- 3 replies
- 763 views
-
-
பொதுமக்கள் மீதான மோசமான தாக்குதல்கள் உட்பட அனைத்து வகையான தாக்குதல்களையும் கண்டிக்கின்றோம் -அமைச்சர் போகொல்லாகமவிடம் இத்தாலிய உப பிரதமர் இலங்கையின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு யோசனையை சர்வகட்சி மாநாடு மூலம் ஏற்படுத்திக் கொள்வதோடு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இது அடித்தளமாக அமையுமென்றும் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இத்தாலிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிநாட்டமைச்சர் போகொல்லாகம அந்நாட்டின் உப பிரதமரும் வெளிநாட்டமைச்சருமான பெசிமோ டி அலேமாவை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இதன்போது இத்த…
-
- 0 replies
- 527 views
-
-
வாகரையில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாயும், மகனும் சுட்டுப் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2007, 16:18 ஈழம்] [தாயகத்திலிருந்து க.தெய்வேந்திரம்] சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பு வாகரையில் இராணுவத்தினரால் தாயும் மகனும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முத்தையா சிவமணி (வயது 58), அவரது மகன் முத்தையா பாஸ்கரன் ஆகியோரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். கொல்லப்பட்ட இருவரும் தமது சொந்த இடமாகிய வாகரைப் பகுதியில் உள்ள பனிச்சங்கேணி, கோவிற்குடியிருப்பில் இருந்து இடம்பெயர்ந்து வாழைச்சேனையில் வசித்து வந்த போது படையினரால் வாகரைக்கு பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு…
-
- 2 replies
- 1.1k views
-
-
புதன் 18-04-2007 03:24 மணி தமிழீழம் [தாயகன்] கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு வன்னியில் பூநகரிக் கடற் பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்று, விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. யாழ் குருநகர், பாசையூர், மற்றும் நாவாந்துறை கடற்றொழிலாளர்கள் நேற்று காலை கடலுக்குச் சென்றபோது, அவர்களுடன் கடற்றொழிலாளர்கள் போன்று 3 படகுகளில் 18 கடற் படையினர் சென்றிருந்தனர். வன்னி கடற் பரப்பை அண்டிய பகுதிகளில், வன்னியில் இருந்து சென்று தொழில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறீலங்காப் பட…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் மன்னிப்புச் சபை போராட்டம் நடத்துகின்றது: மகிந்த சமரசிங்க அனைத்துலக மன்னிப்புச் சபையினால் 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' என்ற போராட்டமானது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் நடத்தப்படுவதாக சிறிலங்காவின் மனித உரிமைககளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாவது: அனைத்துலக மன்னிப்புச் சபையினால் நடத்தப்படும் போராட்டமானது சிறிலங்காவின் நற்பெயரை கெடுக்கும் முகமாக அமைந்துள்ளது. இந்த போராட்டம் அதிகளவில் பொது மக்களை கவர்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இதற்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம், அனைத்துலகத்தின் தரப்புக்களுடன் மனித உரிமை தொடர்பாக பேசி வருகின்றது.…
-
- 1 reply
- 959 views
-
-
இலங்கை விமானப்படை, கடற்படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் [18 - April - 2007] -கே.பி.மோகன்- இலங்கை விமானப் படைக்கும் ,கடற்படைக்கும் ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது எதிர்பார்த்த இலக்கு எட்டப்படாத நிலையிலேயே மீண்டும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை படை நடவடிக்கைகளுக்கு பெண்களிடமிருந்து அதிகளவு விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன
-
- 0 replies
- 829 views
-
-
இளைஞர்களின் சேஷ்டைகளைக் கண்டித்து குருநகர்ப் பகுதியில் மாணவர் ஆர்ப்பாட்டம் தமது சுதந்திரமான கற்றல் நட வடிக்கைக்கு இடையூறு விளைவிக்காமல் ஆதரவு வழங்குமாறு குருநகர்ப் பகுதியிலுள்ள இளைஞர்களிடம் கோரி குருநகர்ப்பகுதி யைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப் பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். இப்பேரணி திங்கட்கிழமையன்று காலை 9 மணிக்கு குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலயத்திலி ருந்து ஆரம்பமாகி குருநகர் வீதிகளூடாகச் சென்று குருநகர் கல்விக் கழகம் முன்பாக அமைந் துள்ள குருநகர் புனித மலர்கள் கட்டடத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் அருட்சகோதரிகள், மாணவர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். குருநகர் ஆறாம் குறுக்கு வீதியின் அருகில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் பெண் கள் பாடசாலையி…
-
- 0 replies
- 716 views
-
-
எதிர்ப்பின் மத்தியிலும் கிழக்கில் தமிழர்கள் வேறு இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர் கூட்டமைப்பு கூட்டத்தில் கண்டனம் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாமல், வேறு இடங்களில் தொடர்ந்தும் குடியேற்றி வருகிறது. நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக நீண்டநேரம் ஆராய்ந்தனர். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் அகதிகளை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி மக்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் அரசாங்கம் குடியேற்றி வருகிறது. இது குறித்துப் பலதடவைகள் அரசிடம் எடுத்துக் கூறியும் அது செவிசாய்ப்பதாக இல்லை என்று திருமலை …
-
- 0 replies
- 746 views
-
-
உறுதிசெய்யப்படாத தகவல் குறித்து குழப்பமோ கவலையோ கொள்ளவேண்டாம் யாழ். ஆயர் சொல்கிறார் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலுக்கு அருகில் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம், காணாமற்போன ஜிம்பிறவுண் அடிகளாரினது என்ற சந்தேகம் எந்த அடையாளத்தையும் வைத்து உறுதி செய்யப்படவில்லை. எனவே, அது சம்பந்தமான செய்திகளை முன்னிட்டு எவரும் கவலையோ குழப்பமோ அடையவேண்டாம். இவ்வாறு யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் நேற்று விடுத்த செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் கேட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (16.04.2007) அன்று யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து மேற்படி சடலத்தை இனங்காண மரபணுச் சோதனை நடத்தவிரும்புவதாகவும், அதற்கு உதவ ஜிம்புறவுண் அடிகளாரின் பெற்றோரின் உதவியை நாடுவதாகவும் அதற்குத் துணைபுரிய…
-
- 0 replies
- 694 views
-
-
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி [18 - April - 2007] - கே.பி.மோகன் - கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை கிரீன்லேன் பகுதியிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர் கொழும்பு, மட்டக்குளியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான ஹாஜா முஹம்மது அலி ஜின்னா (23 வயது) என அடையாளம் காணப்பட் டுள்ளார். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் 72 ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அங்கு உயிரிழந்துள்ளார். இவர்மீதான துப்பாக்க…
-
- 0 replies
- 694 views
-
-
புங்குடுதீவில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் காணாமற்போன மதகுருவின் உடையதா? மரபணுப்பரிசோதனை வெள்ளியன்று ராகம ஆஸ்பத்திரியில்! புங்குடுதீவுப் பகுதியில் கடந்தமாதம் 14ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட சடலம், காணாமற்போன போதகர் ஜிம் பிறவுண் அடிகளாருடையதா என்பதைக் கண்டறிய மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சடலம் ஊர்காவற்றுறை நீதிவானின் அனுமதியுடன் எடுத்துவரப்பட்டு ராகம வைத்தியசாலையில் எதிர்வரும் 20ஆம் திகதி மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கின்றது. மரபணுத்துறை நிபுணர் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ இந்தப் பரிசோதனையை மேற்கொள்வார். இது விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் ப…
-
- 0 replies
- 551 views
-
-
அமெரிக்க இன்ரெல்சற் செய்மதி சேவைக்குள் புலிகள் ஊடுருவல் [18 - April - 2007] அமெரிக்காவிலிருந்து சர்வதேசம் முழுவதும் ஒளிபரப்பாகி வரும் பிரபல செய்தித் தொலைக்காட்சி வலையமைப்பாகிய "இன்ரெல் சற்"(Intel Sat) செய்மதிச் சேவையை ஷ்ரீலங்காவிலுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவதாகவும் குறித்த செய்மதி சேவையின் அனுமதியின்றி இன்ரல்சற் செய்மதி வலையமைப்புக்குள் புலிகள் அமைப்பு அதன் செய்மதித்தொடர்பைப் புகுத்தியுள்ளதாகவும் இன்ரெல் சற் செய்தி சேவையின் பிரதிநிதி பிலிப்ஸ்பெக்ரர் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பினர் இவ்வாறாக அமெரிக்காவின் இன்ரெல் சற் செய்மதி வலையமைப்புக்குள் ஊடுருவியிருப்பது அமெரிக்க சட்டவிதிகளை மீறும் செயலெனவும் அத்துடன் ஷ்ரீலங்காவிலிருந்து…
-
- 0 replies
- 663 views
-
-
மன்னார் மீனவர்கள் புங்குடுதீவில் கைது யாழ்ப்பாணம்,ஏப்.18 புங்குடுதீவு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மன்னார், பேசாலையைச் சேர்ந்த ச.சந்திரகுமார், ந.சுதர்சன், செ.கோபிநாத், த.சுரேஷ் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டிருந்தனர். பள்ளிமுனையில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்பிடிக்கச் சென்று காணாமற்போனதாகக் கூறப்படும் 13 மீனவர்களில் இந்த நான்கு மீனவர்களும் அடங்கலாம் உதயன்`
-
- 0 replies
- 629 views
-