ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இலங்கையின் தரத்தைக்குறைக்க அமெரிக்கா முடிவு. Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 02:28 PM அமெரிக்காவில் உள்ள சுதந்திர இல்லம் எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கான தரத்தை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது இலங்கையில் இடம்பெற்றுவரும் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு;ள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தமது அறிக்கை மே முதலாம் திகதி வெளிவர உள்ளது. 2006 ஆம் ஆண்டு வரையான நிகழ்வுகளையே தாம் கருத்தில் எடுத்துள்ள போதும் வரவுள்ள அறிக்கையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளும் உள்ளடக்கப்பட உள்ளதாக சுதந்திர இல்லத்தின் ஆய்வாளர் ஹரின் கார்லெகர் தெரிவித்துள்ளார் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளில் இருந்து இலங்…
-
- 2 replies
- 2k views
-
-
பாப்பரசரின் நற்போதனையை ஏற்றுச் செயற்பட அரசு தயாரா? ` "திருத்தந்தையின் தரிசனம் திருந்துவதற்கு நல்வழிப்படுத்துமா?'என்று ஆற்றாண்மையோடும் ஆதங்கத்தோடும் இப்பத்தியில் சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தோம். அந்தக் கருத்தை ஊக்கப்படுத்துவதுபோல பரிசுத்த திருத்தந்தை 16 ஆவது ஆசீர்வாதப்பர் இப்போது அறிவுரை உரைத்திருக்கின்றார். தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அமைதிக்கான மார்க்கத்தை சமாதானத்துக்கான பாதையை தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துரைத்திருக்கின்றார் திருத்தந்தை. ""மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்! அமைதிப் பேச்சுக்கு மீண்டும் திரும்புங்கள். அதன்மூலம் மட்டுமே இலங்கையில் இரத்தக் களரியை உண்டாக்கும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்…
-
- 8 replies
- 2k views
-
-
புதுக்குடியிருப்பில் குண்டுவீச்சு வயோதிபர் மரணம் கிளிநொச்சி,ஏப்.25 புதுக்குடியிருப்பில் இயங்கும் செயற் கைக்கால் உற்பத்தி நிறுவனமான வெண் புறா அலுவலகம் மீது மிக் 27 ரக விமா னங்கள் நேற்றுத் தாக்குதல் நடத்தின. நேற்றுப் பிற்பகல் 4.20 மணிமுதல் 15 நிமிட நேரம் நடத்தப்பட்ட இத் தாக்குத லில் வயோதிபர் ஒருவர் கொல்லப்பட் டார், பலர் காயமடைந்தனர். இத் தாக்குதலில் பல வீடுகள், வீதியில் சென்ற தனியார் பஸ் என்பனவும் சேத மடைந்தன உதயன்
-
- 1 reply
- 1k views
-
-
. குடாக்கடலில் 8 தினங்களாக மீன் பிடித்தடை; 3 ஆயிரம் குடும்பங்கள் வருமானமின்றிப் பாதிப்பு குடாக் கடலில் தொழில் செய் வதற்கு கடந்த எட்டுத் தினங்க ளாக மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் குருநகர், பாஷையூர், கொழும்புத் துறைப் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் கஷ்டத்தை எதிர்கொள்கின்றன. மீனவர்கள் தொழிலுக்குச் செல் வதற்குத் தினமும் தயாராகச் செல் வதும் தமக்கு மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை எனப் படையினர் திரும்பி அனுப்புவ தும் கடந்த ஒரு வாரமாக வழக் கமாகிவிட்டதாகப் பாதிக்கப் பட்ட மீனவர்கள் கவலை வெளியிட் டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், தமது குடும்பங்கள் பட்டினியை எதிர்கொள்ளும் அவலநிலை ஏற் படும் என்று மீன…
-
- 0 replies
- 544 views
-
-
செவ்வாய் 24-04-2007 03:13 மணி தமிழீழம் [தாயகன்] ஐந்து போராளிகள் வீரச்சாவு சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதல்களில் வீரச்சாவடைந்த ஐந்து மாவீரர்களின் பெயர் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். மன்னாரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் மேஜர் சோழநேயன் என்றழைக்கப்படும் வவுனியா மாவட்டத்தைச் சொந்த முகவரியாகவும், கிளிநொச்சியை தற்காலிய முகவரியாகவும் கொண்ட சுந்தரம் ராஜா வீரச்சாவடைந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மட்டக்களப்பு கோப்பை வெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற மோதலில், கப்டன் மதுசன் என்றழைப்படும் ரவி சத்தியசீலன் வீரச்சாவடைந்துள்ளார். 19ஆம் திகதி யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட மோதலில் திருமலையைச் சொந்த முகவரியாகவும், முல்லைத்தீவு புதுக்கு…
-
- 7 replies
- 3.8k views
-
-
பொருள்களின் விலைகள் திடீரென உயர்ந்தன குடாநாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நேற்றுத் திடீரென உயர்ந்தன. அரிசி, சீனி, மா மற்றும் சவர்க் காரம், சம்பு போன்ற பொருள்களின் விலைகள் நேற்று அதிகரித்த விலை யில் விற்பனையாகின.யாழ். நக ரப் பகுதியில் மட்டுமல் லாது கிரா மப் புறக்கடைகளிலும் பொருள் களின் விலைகள் அதிகரித்துக் காணப் பட்டன. வடமராட்சியில் ப.நோ.கூ. சங் கக் கிளைகளுக்கு முன்பாக பெரும் எண்ணிக்கையானவர்கள் கியூ வில் நின்று பொருள்களைக் கொள் வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது உதயன்
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் இரு சடலங்கள் வவுனியா,ஏப். 25 வவுனியா நகரில் நேற்றுக் காலை இரண்டு சடலங்கள் மீட் கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகிலும் மற் றைய சடலம் வவுனியா முதலாம் குறுக்குத் தெருவிலும் மீட்கப்பட் டன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சடலங்களாக மீட்கப்பட் டோர் இயற்கையாக இறந்தனரா அல் லது கொலை செய்யப்பட்டார்களா என்பதை அறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலி ஸார் தெரிவித்தனர். (சி) உதயன்
-
- 0 replies
- 817 views
-
-
பாதுகாப்புக்கு அரசு உறுதியளிக்காததால் 4 தமிழ் எம்.பிக்களின் மட்டு. பயணம் ரத்து! கொழும்பு, ஏப்.25 தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர் களது பயணத்துக்கு அரசு ஹெலிக் கொப்டர் வசதி செய்து கொடுக்க வில்லை. இதனால் அந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் மட்டக்களப் பில் நேற்று இடம்பெற்ற மட்டக் களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடி யாமற்போனது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளு மாறு ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அரசு அழைப்பு விடுத் திருந்தது. ஆனால், தற்போது கொழும் பில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளு மன்ற உறுப்பினர்கள் மட்டக் களப்புக்குச் செல்ல முடி…
-
- 0 replies
- 761 views
-
-
ஆயுதம் வழங்குவதில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறதா? ` பேரழிவு தரும் போராயுதங்களை இலங்கைக்கு, இந்தியா வழங்கியுள்ளது எனத் தெரிவித்து இணை யத்தளம் ஒன்றின் ஊடாகக் கசிந்த தகவல், இந் தியாவில் அரசியல் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றது. அயல்நாடு என்ற வகையில் இலங்கைக்குத் தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குவோம், தாக்குதல் ஆயுதங்களையோ, பேரழிவு தரும் ஆயு தங்களையோ வழங்கமாட்டோம் என்றே புது டில்லி அரசு இதுவரை வெளிப்படையாகக் கூறி வந்தது. இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவே பயன் படுத்தப்படுகின்றன என்ற எரிச்சல் இந்தியாவில் குறிப்பாக ஈழத்தமிழர் தாயகத்துடன் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தென்னிந்திய மாநில மான தமிழகத்தில் பரவியுள்ள நிலையில், தமிழக மாந…
-
- 1 reply
- 964 views
-
-
சிறிலங்கா அரசு கூறிவந்த பொய்களை உடைத்த விடுதலைப் புலிகள்: ரணில் விக்கிரமசிங்க. பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான்தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள அனைத்துலக ஊடக நிலையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியியுள்ளார். இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது: மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரப் பாதுகாப்பு, பாதுகாப்பு விடயங்களை அரசாங்கம் பொய்களைக் கூறி த…
-
- 1 reply
- 1.1k views
-
-
பலாலித் தளம் மீதான தாக்குதல் - கனடாவில் புலிக்கொடி ஏந்தியவண்ணம் இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்த இளைஞர்கள். பலாலி பெருந்தளம் மீது தமிழீழ வான்படையினர் நேற்று நடத்திய தாக்குதற் செய்தி அறிந்த கனேடியத் தமிழ் இளைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகளில் செல்வோருக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை பாபு கேற்றிங் என்ற உணவகம் கேக் வெட்டி நாள் முழுவதும் வந்த வாடிக்கையாளர்களிற்கு கேக் வழங்கி கொண்டாடியுள்ளது. -Sankathi-
-
- 0 replies
- 989 views
-
-
தமிழன் என்றோர் இனம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்றுள்ள வங்கதேச வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் விற்பனை கொல்கத்தாவில் இப்பொழுது அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்க இளைஞர் கூறும் காரணம், நம் முரட்டுத்தோலை ஊருடுவிக் குத்திக்கொண்டு நிற்கிறது. "இந்தியா சூப்பர் எட்டுக்குள் நுழைய முடியாத நேரத்தில், நம் பக்கத்து நாடான வங்கதேசம் நுழைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே! வங்காளத்தில் கிழக்கு, மேற்கு என்று நாம் ஏன் பார்க்க வேண்டும்?" தமிழ்நாடு, கேரளா, குஜராத் என்ற எந்தவொரு மாநிலத்திலும் காண முடியாத காட்சியை மேற்கு வங்கத்தில் காண முடிகிறதென்றால், அங்கே `வங்காளி' என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. அது இயற்கையானதுதான். இடி அமீனின் கொடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது: தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கடும் எதிர்ப்பு [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:55 ஈழம்] [ந.ரகுராம்] தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது, பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விவாதம்: பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க. மணி: இராணுவத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு மத்திய அரசு கொடுப்பதாக வந்துள…
-
- 19 replies
- 3k views
-
-
பயங்கரவாத அமைப்பு அறிவித்தலுக்கு எதிராக புலிகள் வழக்குத் தொடரலாம் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் தீர்மானத்தின் விளைவு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனப் படுத்தப்பட்டதற்கான காரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் அவ்வமைப்புக்கு அறிவிக்கவுள்ளது. லக்ஸம்பேர்க்கில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கர வாத அமைப்புகளாக பிரகடனப்படுத்தப் பட்டுத் தடை செய்யப்பட்ட 30 இயக்கங் கள் (மற்றும் 30 தனிப்பட்டவர்கள்) ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டன என்ற காரணங்களை அவற்றுக்கு அறிவிப்பதென நேற்றைய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தக…
-
- 1 reply
- 2k views
-
-
மரியா படகின் மர்மம் (கலைஞன்) *ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தமிழக மீனவர்கள் மீது தொடரும் இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் போலவே குமரி மீனவர்களை சுட்டுக் கொன்ற மரியா படகின் மர்மமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் தமிழக ஊடகங்களில் வெளியான மரியா படகு சிறைப்பிடிப்பு குமரி மீனவர்களைக் கொன்ற 12 சிங்களவர்கள் கைது என்ற செய்திகளால் தமிழகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இச் செய்திகள் காட்டுத் தீ போல் பரவியதையடுத்து தமிழக மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. தமது சக பாடிகளைக் கொன்ற அந்த 12 சிங்களவர்களையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும்…
-
- 10 replies
- 3.8k views
-
-
வெள்ளவத்தையில் வர்த்தகர் கடத்தல் கொழும்பு,ஏப். 24 வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து பிரபல புடைவை வர்த்தகர் ஒருவர் நேற்று வெள்ளைவானில் கடத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 252 7285 என்ற இலக்கமுடைய வெள்ளை வானில் வந்த சிலர் இந்த வர்த்தகரைக் கடத்திச் சென்றனர் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட் டுள்ளது எனவும் கூறப்படுகிறது. (சி) உதயன்
-
- 1 reply
- 1k views
-
-
ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சி பயணம் இரத்து. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரத்து செய்யப்பட்ட தகவல் விடுதலைப் புலிகளுக்கு நோர்வேத் தூதரகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வன்னிக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஆலோசனையை அடுத்து இந்தப் பயணம் இரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமாதானப் பேச்சுக்களை தொடர வேண்டும் எனில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துதல் என்ற அடிப்படையில் பேசலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்து வரும் நிலையில் அதனை அதிகாரப்பூர்வமாக நோர்வேத் தரப்பிடம் விடுதலைப் புலிகள் …
-
- 5 replies
- 1.8k views
-
-
Three dead in Sri Lanka bus blast At least three people have been killed and 35 injured by a bomb that hit a passenger bus in northern Sri Lanka, the country's defence ministry says. The attack, in Vavuniya district, about 250km (155 miles) north of the capital, Colombo, happened late on Monday night. Vavuniya is the last government-held garrison town before territory held by the separatist Tamil Tigers, blamed for the attack by Sri Lankan officials. It is the third bombing of a civilian bus so far in April. Military officials said the blast was probably caused by a mine planted by the side of the road to target the bus, which was travelling …
-
- 3 replies
- 1.4k views
-
-
மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலை குறித்த புலன் விசாரணைக்கு சுயாதீனக் குழு தேவை மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலை குறித்த புலன் விசாரணைக்கு சுயாதீனக் குழு தேவை என்கிறது சர்வதேச நீதி வல்லுனர் ஆணையம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூரை கடந்த ஆகஸ்டு மாதம் விடுதலைப்புலிகள் கைப்பற்றியதை அடுத்து நடந்த மோதல் சம்பவங்களின் போது, பிரெஞ்சு உதவி நிறுவனமான ஆக்ஷண் கொந்த்ர லெ பேர்ம் (ஏசிஎப்) என்ற நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்த சர்வதேச நீதி வல்லுநர்கள் குழு, (ஐ.சி.ஜே) இந்தச் சம்பவம் குறித்து இன்று ஜெனீவாவில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், இந்த கொலைகளை யார் செய்தார்கள் எ…
-
- 3 replies
- 976 views
-
-
வாழ்வாதாரங்களைத் தொலைத்து அல்லலுறும் மட்டக்களப்பு மக்கள் ` தமிழர் தாயகத்தின் தேசிய வாழ்வுக்கு ஆதார மாக இருக்கும் அத்தியாவசிய அடித்தளங்களைப் படிப்படியாகத் தகர்த்துவிடும் சதித் திட்டத்தை தென்னிலங்கை அரச அடக்குமுறையின் குரூர வன்முறை வடிவம் நோக்காகக் கொண்டது என் பதை இப்பத்தியில் திட்டவட்டமாகவும் தெளிவாக வும் பல தடவைகள் அம்பலப்படுத்தியுள்ளோம். ஒரு தேசிய இனக்கட்டமைப்பாகத் தமிழர்கள் தலை நிமிர்ந்து உறுதியோடு நிற்பதற்கு என்னென்ன மூலங்கள் அவசியமோ அத்தியாவசியமோ அவற்றையெல்லாம் பல்வேறு மட்டங்களில் பல்வேறு பரிமாணங்களில் தாக்கி அழித்து, தமி ழரின் தனித்துவ இனம் என்ற ஸ்திரத்தன்மையைத் தகர்ப்பதே பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்கின் நீண்டகால நோக்காகும். மொழி உரிமை முதல், வாழிட உரிம…
-
- 0 replies
- 666 views
-
-
சிறிலங்கா காவல்துறையினரின் அதிகாரங்கள் முப்படையினரிடமும் கையளிப்பு. சிறிலங்காவில் காவல்துறையினரிடம் இருந்த பொதுமக்களுக்குரிய அதிகாரங்கள் தற்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எல்லா சமயத்திலும் காவல்துறையினரால் ஒத்துழைக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள போதும் பொதுமக்களுடன் சம்பந்தப்படும் சட்ட நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் காவல்துறையினரின் உதவியையே நாடி வந்துள்ளனர். ஆனால் புதிய விதிமுறையின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு படையினர் காவல்துறையினரின் உதவியை நாடவேண்டிய தேவையில்லை. …
-
- 1 reply
- 870 views
-
-
புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க நவீன ராடர்களுடன் புதிய படைப்பிரிவு [23 - April - 2007] இலங்கை வான் பரப்பின் மேலாக காணப்படும் சந்தேகத்திற்கிடமான விமானங்களை கண்டுபிடிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய படைப்பிரிவிற்கு நவீன ராடர் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்னியின் முன்னணி காவலரண்களில் பணி புரியும் படைப்பிரிவினரிடம் இவை கையளிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான விமானங்களை காணும் பட்சத்தில் அவர்களது பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு மேற்படி ராடர் சாதனங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகம் ஆர்வமாகவுள்ளது. இந்தப் புதிய படைப…
-
- 9 replies
- 3.1k views
-
-
விடுதலைப்புலிகளை கனடா தடை செய்தது தவறு: கனடிய பாராளுமன்ற உறுப்பினர் Written by Pandara Vanniyan - Apr 24, 2007 at 12:26 AM விடுதலைப்புலிகளை கனடா தடை செய்தது தவறு என்றும் கனடா நடுநிலைமையையும் சமத்துவத்தன்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஸ்காபுரோ கிழக்கு, கில்வூட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கே தெரிவித்துள்ளார். ஸ்காபுரோ மிரர் ஏப்ரல் 19ஆம் நாள் வெளிவந்த இதழுக்கு கருத்து வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை தடைசெய்து ஒருபக்கம் சார்ந்து, ஒரு பகுதியை பயங்கரவாதிகள் என அறிவித்ததன் மூலம் எதனையும் நாம் சாதித்துவிடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்காபுரோ கிழக்கு - பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் டான் மக்ர…
-
- 2 replies
- 1.4k views
-
-
த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா குழுவினர் கொலை அச்சுறுத்தல்- அரசாங்கம் அலட்சியம்: மாவை சேனாதிராசா குற்றச்சாட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் கருணா குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் அரசாங்கம் அலட்சியமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம்சாட்டியுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.07) வெளிவந்த கொழும்பு ஆங்கில வார ஏடான நேசனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு பலமுறை கொண்டு …
-
- 0 replies
- 548 views
-
-
விமான நிலையத்தில் பயணிகளுடன் வருவேரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வரும் வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுக்கோள் பயணியொருவருடன் ஒருவர் வறுமாறு விமான நிலைய அதிகாரிகள் பொதுமக்களஒ கேட்டுக்கொண்டுள்ளனர். பயணியொருவருடன் பெருந்தொகையானோர் விமானநிலையத்திற்கு வருவதால் விமான நிலைய நிர்வாகம் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் விமான நிலைய நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ தலைவர் செனரத் ஹெட்டிராய்ச்சி தெரிவித்துள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைமையடுத்து விமானநிலையத்துனுள் பயணிகளுடன் வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. -வீரகேசரி
-
- 0 replies
- 810 views
-