ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
[ராஜபக்ஷ சகோதரர்களை பாதுகாக்கும் சுவரொட்டிகள் இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்கள் தலைநகரில் ராஜபக்ஷ சகோதரர்களை பாதுகாப்பதற்கான சுவரொட்டிகளை ஒட்டி வருவதாகத் தெரிவித்த கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவர்கள் உண்மையிலேயே படை வீரர்களாக இருப்பார்களானால் ராஜபக்ஷ சகோதரர்களுக்காக கூஜா தூக்காமல் தேசத்தின் பாதுகாப்புக்காகப் பாடுபட முன்வருமாறு கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை அவர் குறிப்பிட்டார். லக்ஷ்மன் கிரியெல்ல தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது; "கடந்த சில தினங்களாக தலைநகரில் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை பா…
-
- 2 replies
- 1.1k views
-
-
மனிதநேயப் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் தலையிட ஐ.நா. செயலாளரிடம் கோரிக்கை மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் முறையீடு கொழும்பு, ஏப்.26 கிழக்கில் பணியாற்றும் மனிதநேய அமைப்புகளின் இணையத்தின் உறுப்பினர் களுக்கும் ஐ.நா. முகவர் அமைப்புகளின் அலுவலர்களுக்கும், கருணா தலைமையி லான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டி ருப்பதாகத் தெரிவித்து, இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு ஐ.நா. செய லாளர் நாயகம் பான் கீன் மூனைக் கோரி யிருக்கின்றது மனித உரிமைகளுக்கான ஆசிய மையம். மனிதநேயப் பணியாளர்களுக்கும், ஐ.நா. முகவர் அமைப்புகளின் அலுவலர்களுக் கும் ஏப்ரல் 17 ஆம் திகதியும், ஏப்ரல் 20 ஆம் திகதியும் அச்சுறுத்தல் விடுக்கும் "ஈ மெயில்' செய்திகள் இரண்டை கருண…
-
- 0 replies
- 749 views
-
-
கிளிநொச்சியில் பாரிய குண்டு வீச்சு Written by Ramanan - Apr 26, 2007 at 09:52 AM கிளிநொச்சி மாவட்டம் திருவையாற்றுப் பகுதி மீது இன்று காலை 7.00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் குண்டு வீச்சை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வான்படையின் மூன்று தாக்குதல் வானூர்திகள் திருவையாற்றுப் பாடசாலையில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் 12ற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளன. இதன் காரணமாக வீடு ஒன்று முற்றாக அழிந்துள்ளதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் காரணமாக பொதுமக்களிற்கு சேதங்கள் எதுவும் ஏற்படாதபோதும் குறித்த பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. சங்கதி
-
- 4 replies
- 1.7k views
-
-
வெசாக் தினங்களில் புலிகள் தாக்கலாமாம்! மக்களை எச்சரிக்கிறார் இராணுவப் பேச்சாளர் கொழும்பு,ஏப்.26 வெசாக் தினங்களில் புலிகள் பொதுமக்கள் மீது தாக் குதல் நடத்தக்கூடும் என்றும் இது தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் இராணு வப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று எச்சரித்தார். புலிகள் கடந்த காலங்களில் பொதுமக்கள் மீது தாக் குதல்களை நடத்தியுள்ளனர். அதேபோல் புதுவருட நாட்களிலும் தாக்குதல் நடத்த முற்பட்டனர். மக்கள் விழிப்பாக இருந்ததனால் புலிக ளால் தாக்குதல் நடத்த முடியாமற்போனது. ஆனால் எதிர் வருகின்ற வெசாக் தினங்களில் மே மாதம் 1ஆம் 2ஆம் திகதி களில் கொழும்பில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவர். அவர்கள் மீது அநேகமாகப் புலிகள் தாக்குதல் நடத்த லாம். மக்கள் விழ…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஊடக சுதந்திரமும் இலங்கை அரசும் ` இலங்கையில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள், நேரடியான தாக்குதல்கள் என்பவற்றை விவரமாக விளக்கி, வியன்னாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஊடக நிலையத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க. இலங்கையில் தொடர்ந்தும் ஆபத்துக்கும், நெருக்கடிக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிவரும் ஊடகச் சுதந்திரம் குறித்து இக்கடிதத்தில் விவரமாக விளக்கியிருக்கின்றார் ரணில். இலங்கையின் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரம் அரசுக் கட்டமைப்பினாலேயே எவ்வாறு திட்டமிட்டு நுட்பமாக கச்சிதமாக மீறப்பட்டு வருகின்றது என்பதையும், ஊடகங்களின் குரல்வளையை நசித்…
-
- 0 replies
- 674 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி: இனப்பிரச்சினைக்கான தீர்வு மாவட்ட சபை! இலங்கையில் தற்போதுள்ள மாகாணசபை ஆட்சி முறையினை நிறுத்தி, மாவட்ட சபை முறையிலான ஆட்சி முறையை உருவாக்குவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பு சார்ந்த அரசியல் கட்சிகளினால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது தீர்வுத்திட்ட யோசனை கொண்ட அறிக்கையினை மே மாதம் சமர்ப்பிக்கவுள்ளனர். நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், தீர்வுத் திட்டம் குறித்த யோசனைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில,; தற்போதுள்ள மாகாணசபை முறைய…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறீலங்காவுக்கா நிதியினை நிறுத்துக: யப்பானிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து சிறீலங்காவுக்கான யப்பானியத் தூதரகத்தின் அரசியல் விவகார ஆலோசகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மாருவெலப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு வந்த பின்னர் கிழக்கு மட்டக்களப்பில் 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ்வதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு யப்பான் வழங்கும் அபிவிருத்தி நிதி யுத்த தளபாடத்திற்கே பயன்படுவதாகவும் எனவே சிறீலங்கா அரசுக்கு வழங்கும் நிதியினை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
-
- 0 replies
- 713 views
-
-
ஏட்டிக்குப் போட்டியான இராணுவ அணுகுமுறை கவலை தருகிறது அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளது ஏட்டிக்குப்போட்டியான இராணுவ ரீதியான அணுகுமுறை பெரும் கவலையளிக்கின்றது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவ ரீதியான வெற்றிகள் ஒரு போதும் உதவப் போவதில்லையென இணைத்தலைமை நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. விடுதலைப்புலிகள் நேற்று முன்தினம் பலாலி இராணுவ தளம்மீது மேற்கொண்ட விமானத்தாக்குதல். வடபகுதியை நோக்கி பாரிய படை நடவடிக்கைக்கு இராணுவம் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கருத்துத்தெரிவித்த இணைத்தலமை நாடொன்றின் தூதரக உயர் அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறியதாவது: இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்பட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீ…
-
- 4 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் வியூகத்தைத் தகர்த்தெறிந்த வான்புலிகள் [புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 19:02 ஈழம்] [க.நித்தியா] தமிழீழ வான் புலிகளின் பறப்பைக் கட்டுப்படுத்தவும் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கவும் சிறிலங்கா அரசாங்கப் படைகள் செயற்படுத்தி வந்த திட்டங்களை வான்புலிகள் முற்றாக முறியடித்துள்ளனர். வான்புலிகள் மீண்டுமொரு தாக்குதல் நடத்தினால் சிங்களப் படைகளினதும், சிங்கள மக்களினதும் மனோநிலை மாற்றமடைந்து விடும் என்ற காரணத்தினாலும், அனைத்துலக மட்டத்தில் விடுதலைப் புலிகளிற்கான பலமான பிரச்சாரமாக அமைந்து விடும் என்ற காரணத்தினாலும், வான்புலிகளின் வானூர்திகள், அவற்றின் தளங்களிலிருந்து இரவு நேரங்களில் பறப்புக்களை மேற்கொள்ள விடாது பல முற்காப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இனவெறி கொண்ட சிறிலங்காவுக்கு அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிர திட்டமிடலில் ஈடுபட்டு வருகின்றனர். விளையாட்டும் அரசியலும் பின்னிப்பிணைந்தவையாகவே காலங்காலமாக இருந்து வருகின்றது. இந்த வகையில் தென்னாபிரிக்க அணி தனது வரலாற்றில் சந்தித்த துடுப்பாட்டப் போட்டிகளுக்கான தடை பற்றிய விழிப்புணர்வு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்காவின் பிரச்சாரப் போரிற்கு முழுமையான ஆதரவைத் தருவதாக இங்கிலாந்தின் முக்கிய கட்சியான லிபரல் டெமோக்கிரட்ஸ் அறிவித்துள்ளது. சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டித் தடைகளை எதிர்காலத்தில் பெறலாம் என்ற நிலையிலேயே தமிழர்களும் இது குறித்த ஆலோசனைகள…
-
- 3 replies
- 1.4k views
-
-
40ற்கு மேற்பட்ட இராணுவம் பலியென சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன 10 SLA soldiers killed, 25 wounded in Madu [TamilNet, Wednesday, 25 April 2007, 12:38 GMT] Ten Sri Lanka Army soldiers were killed and more than 25 wounded in a explosion in Madu DS Division in Mannar Wednesday evening, according to initial reports. 25 wounded soldiers were admitted at Anurdhapura hospital, medical sources said. Further details are not available at the moment. Sri Lanka Army had stepped up artillery shelling towards Liberation Tigers of Tamileelam controlled area Wednesday morning.
-
- 14 replies
- 5.1k views
-
-
அம்பாறையில் கிளேமோர்த்தாக்குதல் இருவர் பலி. அம்பாறை தமன பக்மிட்டியாகம பிரதேசத்தில் ஆயுததாரிகள் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் ஊர்காவற் படைவீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை 8.30க்கு இடம்பெற்றுள்ளது வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த படையினரை நோக்கி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் இரண்டு ஊர்காவல் படையினரும் மூன்று விசேட அதிரடிப்படையினரும் காயமடைந்தனர் இத்தாக்குதலில் படையினரது கவசவாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த படையினர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi.net/
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையின் தரத்தைக்குறைக்க அமெரிக்கா முடிவு. Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 02:28 PM அமெரிக்காவில் உள்ள சுதந்திர இல்லம் எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கான தரத்தை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது இலங்கையில் இடம்பெற்றுவரும் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு;ள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தமது அறிக்கை மே முதலாம் திகதி வெளிவர உள்ளது. 2006 ஆம் ஆண்டு வரையான நிகழ்வுகளையே தாம் கருத்தில் எடுத்துள்ள போதும் வரவுள்ள அறிக்கையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளும் உள்ளடக்கப்பட உள்ளதாக சுதந்திர இல்லத்தின் ஆய்வாளர் ஹரின் கார்லெகர் தெரிவித்துள்ளார் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளில் இருந்து இலங்…
-
- 2 replies
- 2k views
-
-
உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது : ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:04 PM தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியுமானால் பகல்வேளையில் வான்தாக்குதல் நடத்தட்டும். அதனை எவ்வாறு? முறியடிப்பது என நாங்கள் காட்டுகின்றோம் என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பணிப்புரையின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பலாலி கூட்டுப்படைத்தளத்துக்குச் சென்று, விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்கள் நடத்திய இடங்களை பார்வையிட்டார். நேற்று கொழும்பு திரும்பிய அவர்…
-
- 22 replies
- 5.2k views
-
-
கைவேலிப் பகுதியில் விமானத் தாக்குதல். ஒருவர் பலி. Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:17 PM சிறிலங்கா விமானப் படையின் மிக் விமானங்கள் நேற்று மாலை புதுக்குடியிருப்பில் நடாத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் பலியானார் சிலர் காயமடைந்தனர். குடியிருப்புகளும் சேதமடைந்தன. புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதி மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்தும் கைவேலிப் பகுதியில் அமைந்துள்ள வெண்புறா செயற்கை கால் உற்பத்தி நிறுவனத்தை இலக்கு வைத்தும் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் மிக் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. மாலை 4.20 மணியளவிலும் அதன் பின்னர் 4.50 மணியளவிலும் தாக்குதல் நடத்;தப்பட்டுள்ளன. வீதியால் பயணித்துக்கொண்டிருந…
-
- 1 reply
- 1k views
-
-
. குடாக்கடலில் 8 தினங்களாக மீன் பிடித்தடை; 3 ஆயிரம் குடும்பங்கள் வருமானமின்றிப் பாதிப்பு குடாக் கடலில் தொழில் செய் வதற்கு கடந்த எட்டுத் தினங்க ளாக மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் குருநகர், பாஷையூர், கொழும்புத் துறைப் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் கஷ்டத்தை எதிர்கொள்கின்றன. மீனவர்கள் தொழிலுக்குச் செல் வதற்குத் தினமும் தயாராகச் செல் வதும் தமக்கு மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை எனப் படையினர் திரும்பி அனுப்புவ தும் கடந்த ஒரு வாரமாக வழக் கமாகிவிட்டதாகப் பாதிக்கப் பட்ட மீனவர்கள் கவலை வெளியிட் டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், தமது குடும்பங்கள் பட்டினியை எதிர்கொள்ளும் அவலநிலை ஏற் படும் என்று மீன…
-
- 0 replies
- 546 views
-
-
பொருள்களின் விலைகள் திடீரென உயர்ந்தன குடாநாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நேற்றுத் திடீரென உயர்ந்தன. அரிசி, சீனி, மா மற்றும் சவர்க் காரம், சம்பு போன்ற பொருள்களின் விலைகள் நேற்று அதிகரித்த விலை யில் விற்பனையாகின.யாழ். நக ரப் பகுதியில் மட்டுமல் லாது கிரா மப் புறக்கடைகளிலும் பொருள் களின் விலைகள் அதிகரித்துக் காணப் பட்டன. வடமராட்சியில் ப.நோ.கூ. சங் கக் கிளைகளுக்கு முன்பாக பெரும் எண்ணிக்கையானவர்கள் கியூ வில் நின்று பொருள்களைக் கொள் வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது உதயன்
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் இரு சடலங்கள் வவுனியா,ஏப். 25 வவுனியா நகரில் நேற்றுக் காலை இரண்டு சடலங்கள் மீட் கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகிலும் மற் றைய சடலம் வவுனியா முதலாம் குறுக்குத் தெருவிலும் மீட்கப்பட் டன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சடலங்களாக மீட்கப்பட் டோர் இயற்கையாக இறந்தனரா அல் லது கொலை செய்யப்பட்டார்களா என்பதை அறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலி ஸார் தெரிவித்தனர். (சி) உதயன்
-
- 0 replies
- 820 views
-
-
பாதுகாப்புக்கு அரசு உறுதியளிக்காததால் 4 தமிழ் எம்.பிக்களின் மட்டு. பயணம் ரத்து! கொழும்பு, ஏப்.25 தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர் களது பயணத்துக்கு அரசு ஹெலிக் கொப்டர் வசதி செய்து கொடுக்க வில்லை. இதனால் அந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் மட்டக்களப் பில் நேற்று இடம்பெற்ற மட்டக் களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடி யாமற்போனது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளு மாறு ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அரசு அழைப்பு விடுத் திருந்தது. ஆனால், தற்போது கொழும் பில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளு மன்ற உறுப்பினர்கள் மட்டக் களப்புக்குச் செல்ல முடி…
-
- 0 replies
- 763 views
-
-
புதுக்குடியிருப்பில் குண்டுவீச்சு வயோதிபர் மரணம் கிளிநொச்சி,ஏப்.25 புதுக்குடியிருப்பில் இயங்கும் செயற் கைக்கால் உற்பத்தி நிறுவனமான வெண் புறா அலுவலகம் மீது மிக் 27 ரக விமா னங்கள் நேற்றுத் தாக்குதல் நடத்தின. நேற்றுப் பிற்பகல் 4.20 மணிமுதல் 15 நிமிட நேரம் நடத்தப்பட்ட இத் தாக்குத லில் வயோதிபர் ஒருவர் கொல்லப்பட் டார், பலர் காயமடைந்தனர். இத் தாக்குதலில் பல வீடுகள், வீதியில் சென்ற தனியார் பஸ் என்பனவும் சேத மடைந்தன உதயன்
-
- 1 reply
- 1k views
-
-
ஆயுதம் வழங்குவதில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறதா? ` பேரழிவு தரும் போராயுதங்களை இலங்கைக்கு, இந்தியா வழங்கியுள்ளது எனத் தெரிவித்து இணை யத்தளம் ஒன்றின் ஊடாகக் கசிந்த தகவல், இந் தியாவில் அரசியல் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றது. அயல்நாடு என்ற வகையில் இலங்கைக்குத் தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குவோம், தாக்குதல் ஆயுதங்களையோ, பேரழிவு தரும் ஆயு தங்களையோ வழங்கமாட்டோம் என்றே புது டில்லி அரசு இதுவரை வெளிப்படையாகக் கூறி வந்தது. இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவே பயன் படுத்தப்படுகின்றன என்ற எரிச்சல் இந்தியாவில் குறிப்பாக ஈழத்தமிழர் தாயகத்துடன் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தென்னிந்திய மாநில மான தமிழகத்தில் பரவியுள்ள நிலையில், தமிழக மாந…
-
- 1 reply
- 966 views
-
-
சிறிலங்கா அரசு கூறிவந்த பொய்களை உடைத்த விடுதலைப் புலிகள்: ரணில் விக்கிரமசிங்க. பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான்தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள அனைத்துலக ஊடக நிலையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியியுள்ளார். இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது: மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரப் பாதுகாப்பு, பாதுகாப்பு விடயங்களை அரசாங்கம் பொய்களைக் கூறி த…
-
- 1 reply
- 1.1k views
-
-
பலாலித் தளம் மீதான தாக்குதல் - கனடாவில் புலிக்கொடி ஏந்தியவண்ணம் இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்த இளைஞர்கள். பலாலி பெருந்தளம் மீது தமிழீழ வான்படையினர் நேற்று நடத்திய தாக்குதற் செய்தி அறிந்த கனேடியத் தமிழ் இளைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகளில் செல்வோருக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை பாபு கேற்றிங் என்ற உணவகம் கேக் வெட்டி நாள் முழுவதும் வந்த வாடிக்கையாளர்களிற்கு கேக் வழங்கி கொண்டாடியுள்ளது. -Sankathi-
-
- 0 replies
- 991 views
-
-
தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது: பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி. தமிழர்கள் பயங்காரவாதிகள் அல்ல எனவும், தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது என்பதை வலியுறுத்தியும், பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது. பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந்தப் பேரணி, இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கைளை பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதுடன், அனைத்துலக ரீதியாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் பரப்புரையை முறியடிக்கவும் இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழன் என்றோர் இனம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்றுள்ள வங்கதேச வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் விற்பனை கொல்கத்தாவில் இப்பொழுது அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்க இளைஞர் கூறும் காரணம், நம் முரட்டுத்தோலை ஊருடுவிக் குத்திக்கொண்டு நிற்கிறது. "இந்தியா சூப்பர் எட்டுக்குள் நுழைய முடியாத நேரத்தில், நம் பக்கத்து நாடான வங்கதேசம் நுழைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே! வங்காளத்தில் கிழக்கு, மேற்கு என்று நாம் ஏன் பார்க்க வேண்டும்?" தமிழ்நாடு, கேரளா, குஜராத் என்ற எந்தவொரு மாநிலத்திலும் காண முடியாத காட்சியை மேற்கு வங்கத்தில் காண முடிகிறதென்றால், அங்கே `வங்காளி' என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. அது இயற்கையானதுதான். இடி அமீனின் கொடு…
-
- 1 reply
- 1.2k views
-