Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் புதிய உத்தியாக வெடிகுண்டு அங்கிகளுடன் போராளிகள்: நா.தமிழன்பன். யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள் வெடிகுண்டு அங்கிகளுடன் ஊருவியுள்ளனர் இப்போராளிகள் சோதனையிடப்பட்டால் எதிரியையும் அழித்து தம்மையும் அழிக்கும் புதிய உத்தியை அவர்கள் அங்கு அறிமுகப்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தற்காப்பு வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தி வீரச்சாவைத்தழுவிய லெப். அறிவுமகன் மற்றும் கப்டன் பிரியதர்சன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத…

  2. 'விடுதலைப் புலிகளின் உத்தரவாதங்களை நம்புவதற்கு அரசு தயாராக இல்லை': கேகலிய சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக விடுதலைப் புலிகளின் உத்தரவாதங்களை நம்புவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை" என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமாதான செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்ததாவது: "புனித பாப்பரசரின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்கின்றது. காரணம் பாப்பரசரின் கோரிக்கைக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடை யில் வித்தியாசங்கள் இல்லை. இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பேச்சுவார்த…

    • 0 replies
    • 689 views
  3. வடக்கில் புலிகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் - ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஹெரணவில் நேற்று இடம்பெற்ற புதுவருட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடக்கில் உள்ள விடுதலைப்புலிகளின் தளங்கள் மீது இன்னும் சில தினங்களில் தாக்குதல் நடாத்தப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை கிழக்கிலும் மீட்கப்படாத பகுதிகளும் விரைவில் மீட்க்கப்படும் எனவும் வடக்கை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்திற்குள் நாட்டின் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு முன்நகர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com…

  4. அரசு எதிர்நோக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு -(பீஷ்மர்) கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கொழும்பு நிலைப்பட்ட தென்னிலங்கை அரசியல் போக்குகளின் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றைக் கூறலாம். முதலாவது இலங்கையில் பிரதானமாக கொழும்பில் நடைபெறும் அரச நிலைப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை. இரண்டாவது யு.என்.பி.அரசாங்க எதிர்ப்பை மிக வேகமாக தூண்டியுள்ளமை. மூன்றாவது இவற்றின் தாக்கங்கள் காரணமாக ஜனாதிபதி நிர்வாக மட்டத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளமை. இந்த அரசியல் உஷ்ண அதிகரிப்பின் பிரதான அம்சம் தமிழர் பிரச்சினையோ விடுதலைப் புலிகள் பிரச்சினையோ பெரிய முக்கியத்துவம் பெறாமையாகும். சடங்காசாரமான குறிப்புகள் உண்டெனினும் மேற்கூறிய பிரச்சினையின் வெடிப்புக்கு தம…

  5. காணாமல் போனோர் விவகாரத்தில் ஐநா தலையீடு அண்மையில் சிறீலங்காவில் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் விரைவாக விசாரணைகள் நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் மூன்று மாதகாலப்பகுதிக்குள் விரிவான விளக்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பணித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை காணாமல் போனோரை தேடியறியும் குழு ஐக்கிய நாடுகள் சபைக்கு காணாமல் போனோரின் விபரங்களை நாட்டின் நிலைதொடர்பாகவும் விளக்கி கடிதம் எழுதியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. http://www.pathivu.com/

    • 0 replies
    • 766 views
  6. சிறீலங்கா படையினரின் எட்டு ஆளஊடுருவும் படையினர் காணாமல் போயுள்ளார்கள் கடந்த 11ம் திகதி வவுனியா மன்னார் எல்லையில் உள்ள முள்ளிக்குளம், பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஊடுருவிய எட்டு சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. விசேட பயிற்சி பெற்ற எட்டு ஆழஊடுருவும் இராணுவத்தினரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கல

    • 2 replies
    • 1.4k views
  7. இறுதிச் சுற்றில் சிறிலங்கா நுழைந்தால் மகிந்த மேற்கிந்திய தீவு பயணம். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளில் சிறிலங்கா அணி இறுதிச் சுற்றுக்கு தெரிவானால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். பார்படோஸ்ன் ஹென்சிங்ரன் ஓவல் மைதானத்தில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. நான்கு நாள் பயணமாக இத்தாலி சென்றுள்ள மகிந்த எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியூசிலாந்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளின் முடிவுகளை பொறுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்வார் இதனிடையே சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று…

  8. எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள்: கொழும்பு வார ஏடு. தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் வன்னியில் ஈடுபட்டுள்ளது என்றும், அவர்களின் வானூர்திகளில் ஒன்று மணலாற்றுப் பகுதியில் உள்ள பதவியாவில் அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் வார ஏடு தெரிவித்துள்ளது. சண்ட ரைம்ஸ் வார ஏட்டின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பத்தியிலிருந்து சில முக்கிய பகுதிகள்: வன்னியில் பறப்புக்களில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வானூர்திகள் ஒரு சமயத்தில் வானில் இருந்து தரைக்கு ?டுகளையும் வழங்கி பயிற்சிகளில் ஈடுபட்டதாக சிறிலங்காவின்…

    • 1 reply
    • 1.3k views
  9. சிறிலங்கா இராணுவம் வவுனியா கிராமங்கள் மீது ஆட்லொறி தாக்குதல்கள் தீவிரம் இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பின்னர் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் வவுனியா புலிகளின் கட்டுபாட்டு பகுதியில் உள்ள எல்லைக்கிராமங்கள் பாலபோட்டை , குஞ்சுக்குளம் , நாவவி , புளியங்களம் மற்றும் சேமமடுப்பகுதி மீது ஆட்லொறி தாக்குதல் நடத்தி வருகிறார் என தமிழ்நெட் இணையத்தளம் தெரிவிக்கின்றது . ஆனால் இதுவரை குடிமக்கள் சேதவிபரங்கள் தெரியவரவில்லை ஏற்கனவே இந்த பகுதியில் மக்கள் இடம்பெயர்து பாதுகாப்பான இடங்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இருந்த போதும் குடிமனைகள் மீது பற்றுள்ளவர்கள் இடம் பெயராமல் இருப்பதாகவும் அவர்களின் நிலமை என்ன என்பது குறித்து தெரியவரவில்லை எனவும் அச்செய்தி குறிப்பிடுகிறது - வீரகேசரி

  10. மனித நேய ஒருங்கிணைப்பு அமைப்பினiர் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும்; பிரிவினர், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து விரைவாக வெளியேற்றப்படவுள்ளனர். இந்த வெளியேற்றம் தொடர்பாக, ஸ்ரீலங்கா அரசு -ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளது. மனித நேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும்; பிரிவினர், அதன் தேவைக்குரிய காலப்பகுதியை விட அதிக காலம் தங்கியிருப்பதாகவும், ஆழிப்பேரலை நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்து நடாத்துவதற்கு வருகை தந்த இந்தப் பிரிவினர், தற்போது மனிதவுரிமை மீறல்களை கண்காணிக்கும் அமைப்பாக மாறிவருகின்மை கண்டனத்திற்குரியது என ஸ்ரீலங்கா அரசு கண்டனம் வெளியிட்டுள…

  11. மகிந்த ராஜபக்ஷ - மங்கள சமரவீர சமரச முயற்சியில் அலவி மௌலானா சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா, பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரை அமைச்சு, மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நீக்கிய பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய குழப்பங்களும், பிளவுகளும் தோன்றியிருந்தன. இதனைத் தொடர்ந்து, பௌத்த துறவி ஒருவரும், அலவி மௌலானாவும் சமரச முயற்சியில் ஈடுபட்டதன் பின்னணியில் நேற்று கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவ…

    • 2 replies
    • 921 views
  12. சிறார்களை பணத்திற்கு வாங்கும் கருணா குழுவினர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் சிறார்களை தமது படையில் சேர்ப்பதற்கு அவர்களுக்கு பெருமளவு பணத்தை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறார்களை கருணா குழுவில் சேர்க்கும் குடும்பங்கள் மாதா மாதம் 6,000 ரூபாய்களை பெறுவதாகவும், அந்தப் பணத்தைக்கொண்டு அவர்கள் எதனையும் செய்யலாம், இது அவர்களுக்கு பெரும் தொகையாகும் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத உள்ளுர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகள் மூலம் கடத்தப்பட்டுள்ளதாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறைவடையலாம் என தெ…

  13. மரியா படகின் மர்மம் (கலைஞன்) *ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தமிழக மீனவர்கள் மீது தொடரும் இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் போலவே குமரி மீனவர்களை சுட்டுக் கொன்ற மரியா படகின் மர்மமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் தமிழக ஊடகங்களில் வெளியான மரியா படகு சிறைப்பிடிப்பு குமரி மீனவர்களைக் கொன்ற 12 சிங்களவர்கள் கைது என்ற செய்திகளால் தமிழகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இச் செய்திகள் காட்டுத் தீ போல் பரவியதையடுத்து தமிழக மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. தமது சக பாடிகளைக் கொன்ற அந்த 12 சிங்களவர்களையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும்…

  14. பாதுகாப்பு கெடுபிடிகளின் மத்தியில் இடம்பெயர்ந்தவர்களின் அவலங்கள் (அஜாதசத்ரு) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தற்காலிக கூடாரங்களிலும் உறவினர், நண்பர் வீடுகளிலும் தங்கியுள்ள தமிழ் மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மீதான பாதுகாப்பு கெடுபிடிகள், அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கு என்பன மேலும் மோசமானதொரு நிலைமைக்கு வழிவகுப்பதாகவே அமைந்துள்ளது. படுவான்கரைப் பிரதேசங்களை நோக்கி அரச படையினரால் மிக உக்கிரமாக மேற்கொள்ளப்பட்ட பல்குழல் ரொக்கெட் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல், விமானக்குண்டு வீச்சு என்பவற்றால் சுமார் ஒன்றரை இலட்…

    • 0 replies
    • 554 views
  15. இலங்கை படகோட்டியென செங்கல்பட்டு முகாமுக்கு மாற்றப்பட்டவர் மீண்டும் அகதியாக வருகை இலங்கை படகோட்டி என கியூ பிரிவு பொலிஸாரால் அறியப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்ட அகதி, மீண்டும் இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளார். வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து ஐந்து குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது அகதிகள் படகு மூலம் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்திறங்கினர். இதில் தலைமன்னாரைச் சேர்ந்த கண்ணன் (வயது- 32) என்பவரும் வந்துள்ளார். இவர் இதற்கு முன் கடந்த ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி படகு மூலம் வந்துள்ளார். கியூ பிரிவு பொலிஸாரின் விசாரணையில் இவர் படகோட்டி என தெரிய வந்ததால் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் 10 மாதம் …

  16. வட, கிழக்கில் இடம்பெயர்ந்த மாணவருக்கு கல்வி வசதிகளை மேற்கொள்ளும் ஈழ ஏதிலியர் கழகம் ஈழ ஏதிலியர் கழகம்என்ற ஒஃபர் தன்னார்வ அமைப்பு, வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி வசதிகளைச் செய்து கொடுப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கிராமப்புறங்களிலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது - ஒஃபர் நிறுவன கல்வி அபிவிருத்தி இணைப்பாளர் எஸ். அருளானந்தம் (ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்) தெரிவித்தார். வலுவூட்டல் பயிற்சி தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. திருகோணமலை புனித பிரான்ஸிஸ் சவேரியார் மக…

  17. இறுதிக் கட்டப் போருக்கு கிழக்கில் தயாராகும் படையினர் விதுரன் வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத் தொடரும் இந்தத் தாக்குதல், இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி மேற்கொள்ளப்படுகிறது. வான் புலிகளைத் தேடியே விமானப் படையினர் இந்தக் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். புலிகளின் வான் வழித் தாக்குதலையடுத்து அவசர அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்த படைத்தரப்பு தற்போது வான் புலிகளின் அடுத்த வருகைக்காக காத்திருக்கின்றனர். வான் புலிகளை வரவழைப்பதற்காகவே வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் வான் புலிகளை முழு உலகிற்கும் அறிமுகப்படுத்த…

  18. இனப்பிரச்சினை இல்லையென புதிய அர்த்தம் கற்பிக்க வேண்டாம் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையெனக் கூறி பிரச்சினைக்கு புதிய அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு வியாக்கியானங்களைக் கூறிக் கொண்டிராமல் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியிருக்கிறது. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் பேச்சை ஆரம்பிக்கு முன்பாகவே முன் நிபந்தனைகளை விதித்தால் அது சமரசப் பேச்சுக்கு முட்டுக் கட்டையாக இருக்குமே தவிர எந்தப் பலனையும் தரப் போவதில்லையெனவும் ஐ.தே.க.சுட்டிக் காட்டியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டோ அல்லது வேறெந்த முன் நிபந்தனைகளின் அடிப்படையிலோ பேசத் தயாரில்லை எனவும், நிபந்தனைகள் எதுவுமின்றி…

  19. இடம்பெயர்ந்த மக்களிடம் பலவந்தமாக தகவல்கள் திரட்டும் அதிகாரிகள். Written by Pandara Vanniyan - Apr 22, 2007 at 11:17 AM மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து மிக மோசமான அவலநிலையில் வசிக்கும் மக்களிடம் அரச அதிகாரிகள் குழு பலவந்தமாக தகவல் திரட்டும் திட்டத்தை முன்னெடுப்பது அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் ஒரு நடவடிக்கையாகும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் சம்பவங்கள் காரணமாக தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இடம்பெயர்ந்து வந்து எந்தவொரு அடிப்படைவசதியுமின்றி வாழும் மக்களைப் பலாத்காரமாக பேரூந்துகளில் கொண்டு சென்று காவல்துறை துணையுடன் அரச அதிகாரிக…

  20. ஜனாதிபதியின் வத்திக்கான் விஜயம்: எந்த நோக்கத்தைக் கொண்டது? கொழும்பு, ஏப்.22 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வத்திக்கான் விஜயம் எந்த நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து வாதப் பிரதி வாதங்கள் எழுந்துள்ளன. நாட்டின் இப்போதைய பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சிகளில் ஒன்றாக சர்வதேசத்தின் ஆதரவைத் தேடும் ஓர் அங்கமாகவே, ஜனாதிபதியின் வத்திக்கான் விஜயம் அமைகின்றது என்று இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத் தீர்வைக் காணும் தனது தற்போதைய செயற்பாட்டுக்கு புனித பாப்பரசரின் ஆதரவைத் தேடும் பொருட்டே ஜனாதிபதி வத்திக்கான் சென்றார் என்று கத்தோலிக்கப் பிரமுகர்கள் பலரும் சந்தேகம் எழுப்பி உள்ள…

  21. கிழக்கு அகதிகளும் இந்நாட்டு மக்கள்தானே அவர்களுக்கு ஏன் தனி அடையாள அட்டை? தேவையற்ற வேலை என்று அரியநேத்திரன் சீற்றம் மட்டக்களப்பு அகதிகளை மீளக் குடியமரச் செய்வதற்காக அரசால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடும்ப அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் கடுமையாக எதிர்த்துள்ளார். இத்திட்டம் மூலம் மீள்குடியேற்றத்தை மேலும் தாமதமாக்குவதற்கே அரசு முடிவெடுத்துள் ளது என்று அவர் குற்றஞ்சாட்டியுள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறிய தாவது: ""ஜூலை மாதம் 31ஆம் திகதிக்குள் மட்டக்களப்பு படுவான்கரை அகதிகளை மீளக்குடியமர்த்த அரசு தீர்மானித்துள்ளது. ""இந்தக்கால எல்லை மிக அதிகம். இந் நிலையில் மீள்குடியேற்…

  22. மட்டக்களப்பு அகதிகளின் நிலை குறித்து பாப்பரசரின் பிரதிநிதி நேரில் ஆராய்வு மட்டக்களப்பு, ஏப்.22 மட்டக்களப்பில் தங்கியுள்ள அகதிகளின் நிலை குறித்து பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மரியோ சொனாரி நேற்று நேரில் ஆராய்ந்தார். மட்டக்களப்புக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண் டுள்ள அவர் நகரில் உள்ள அகதி முகாம்களுக்கு நேற்றுச் சென்று அவர் களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினை களைக் கேட்ட றிந்த அவர், தான் கொழும்பு திரும்பியதும் இது விடயமாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகத் தெரிவித் தார். பாப்பரசரின் பிரதிநிதி இன்று வாக ரைக்குச் சென்று அங்குள்ள மக்களை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். (அ1) உதயன்

  23. மட்டக்களப்பு வாழ் தமிழர்களில் 1/3 பகுதிக்கு மேற்பட்டோர் அகதிகள்! மட்டக்களப்பு,ஏப்ரல்22 மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் மேற்பட்டோர், இராணுவத் தாக்குதல்கள் காரணமாக தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். இராணுவ மோதல்கள் இன்னும் ஓயாத நிலையிலும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் (உத்தி யோகபூர்வமான) மொத்தச் சனத்தொகை 5 லட்சத்து 79 ஆயிரத்து 460 பேர்களாவர். அவர்களில் தமிழர்கள் 4 லட்சத்து 26 ஆயிரத்து 796 பேர். முஸ்லிம்கள் ஒரு லட் சத்து 51 ஆயிரத்து 487 பேர். சிங்களவர் 1,162 பேர். 4,26,796 தமிழர்களில் போர் காரணமாக ஒருலட்…

  24. பாப்பரசரின் நற்போதனையை ஏற்றுச் செயற்பட அரசு தயாரா? ` "திருத்தந்தையின் தரிசனம் திருந்துவதற்கு நல்வழிப்படுத்துமா?'என்று ஆற்றாண்மையோடும் ஆதங்கத்தோடும் இப்பத்தியில் சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தோம். அந்தக் கருத்தை ஊக்கப்படுத்துவதுபோல பரிசுத்த திருத்தந்தை 16 ஆவது ஆசீர்வாதப்பர் இப்போது அறிவுரை உரைத்திருக்கின்றார். தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அமைதிக்கான மார்க்கத்தை சமாதானத்துக்கான பாதையை தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துரைத்திருக்கின்றார் திருத்தந்தை. ""மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்! அமைதிப் பேச்சுக்கு மீண்டும் திரும்புங்கள். அதன்மூலம் மட்டுமே இலங்கையில் இரத்தக் களரியை உண்டாக்கும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்…

  25. யாழ் முன்னரங்க நிலைகளுக்கு படை நகர்த்தல். யாழ் நீர்வேலி வாதரவத்தை, கனகம்புள்ளியடி கப்புதூர் வெளிகளில் ஆயிரக் கணக்கான சிறீலங்கா இராணுவத்தினரும், கனரக ஆயுத தளபாடங்களும் நேற்று குவிக்கப்பட்டிருந்ததால், மக்கள் மத்தியில் பாரிய அச்சம் தோன்றியிருந்தது. வழமையாக படைத் தளங்களில் மறைவிடங்களில் வைக்கப்படும் ஆட்டிலறி, பல்குழல் எறிகணைகள் உட்பட கனரக ஆயுத தளபாடங்கள் வெளிப் பிரதேசத்திற்குக் கொண்டு சென்று குவிக்கப்பட்டிருந்தன. ஆயுத தளபாடங்கள் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் அந்த வெளிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அடிப்படை வசதிகள் அற்ற இடத்தில் ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அருகிலுள்ள மக்களின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.