Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப.தமிழ்ச்செல்வன். எமது வான்படையில் இந்தியாவுக்கு ஒரு போதும்அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப. தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்: ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், …

  2. எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒரு போதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப. தமிழ்ச்செல்வன் [வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 09:42 ஈழம்] [புதினம் நிருபர்] எமது வான்படையில் இந்தியாவுக்கு ஒரு போதும்அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப. தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்: ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் …

  3. தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து நேற்று சூடான விவாதம்: எம்.எல்.ஏக்கள் மோதல். ஈழத்தமிழர் நிலை குறித்து தமிழக சட்டசபையில் நேற்றுச் சூடான விவாதம் இடம்பெற்றது. விவாதத்தின் போது உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் அடிபட்டு மோதும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. எனினும் அது ஒருவாறு தவிர்க்கப்பட்டது. தமிழக வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நேற்று இடம்பெற்றபோது, ம.தி.முகவின் உறுப்பினர் (எம்.எல்.ஏ.) வீர இளவரசன் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து உரையாற்றினார். இலங்கையில் தினமும் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என தினமும் சம்பவங்கள் நடக்கின்றன. அங்கிருந்து வரும் அகதிகளை பாதுகாக்கும் உணர்வு சகலருக்கும் ஏற்படவேண்டும் என்று…

  4. வான் புலிகளின் தாக்குதலால் பிரசார உத்தியில் தடுமாற்றம். விடுதலைப்புலிகளின் "வான் புலிகள்' படையணி நடத்திய முதலாவது விமானத்தாக்குதல் பற்றிய செய்தியை தகவலை எவ்வாறு கையாள்வது என்பதில் அரசுத் தலைமைக்கு மிகுந்த நெருக்கடி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறும் விடயமாகிவிட்டது. இது நாடு தேசிய இனப்பிரச்சினையில் சிக்கிச் சீரழிந்து போயிருக்கின்றது இவ்விடயத்துக்கு விரைந்து நீதியான நியாயமான நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய ஸ்திரமான ஒரு தீர்வைக் காண்பதற்காகப் பாரபட்சமற்ற முறையில் செயற்படவேண்டிய அரசுத் தலைமை அதை விடுத்து அதற்கு முரணாக தனது வாக்கு வங்கியான தென்பகுதி பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளை அரவணைத்து அவற்றுக்கு விருப்ப…

  5. ராடார்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு கூறியது யார்? சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் இடம்பெற்ற நாள், ஒரு ராடாரைத் தவிர ஏனைய எல்லா ராடார்களும் திருத்த வேலைகளுக்காக அகற்றப்பட்டு இருந்ததாக கட்டுநாயக்கா மீதான வான்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் குற்றப்புலனாய்வுத்துறையினர

  6. கிளிநொச்சிக்கு பயணம் செய்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன்,கு.சிவநேசன் ஆகியோர் கொண்டு சென்ற 35 லீற்றர் டீசலை கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து வவுனியாவுக்கு திரும்பிய அவர்கள் 35 லீற்றர் டீசல் கொள்கலனை வவுனியாவில் வைத்துவிட்டே கிளிநொச்சிக்கு சென்றுள்ளனர். செல்வம் அடைக்கலநாதனும் சிவநேசனும் நேற்றுக்காலை கிளிநொச்சிக்கு செல்வதற்காக ஓமந்தை சோதனைச் சாவடிக்கு சென்றனர். அங்கு அவர்களின் வாகனத்தை சோதனையிட்ட இராணுவத்தினர் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 35 லீற்றர் டீசல் கொள்கலனை கண்டு விட்டு அதனை கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல முடியாது என தெரிவித்திருக்கின்றனர். தங்களின் சொந்தப் பாவனைக்காகவே டீச…

    • 0 replies
    • 683 views
  7. யாழ்ப்பாணம், கைதடிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறு கோவில்களில் தங்க நகைகள், விக்கிரகங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கைதடி வடக்கு கைத்துசிட்டி கந்தசாமி கோவில், கைதடி மேற்கு இணுங்கி தோட்டம் முருகன் கோவில், கைதடி மத்தி வலாம்பிகா அம்மன் கோவில், கைதடி கிழக்கு வைரவர் கோவில், கைதடி மத்தி மடத்து கந்தசாமி கோவில், கைதடி மத்தி ஆச்சிரமம் ஆகிய ஆறு கோவில்களிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெருந்தொகையாக தங்க ஆபரணங்கள், விக்கிரகங்களுடன் மூலஸ்தானத்திலிருக்கும் விக்கிரத்தை அகற்றி நிலத்திலுள்ள தங்க தகடுகளையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைத்து பெருந்தொகை…

    • 5 replies
    • 1.2k views
  8. மனிதநேயப் பணியாளர்களுக்கு எதிரான தாக்குதலை உடன் நிறுத்தப் பணிக்குமாறு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பிலான கடிதத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் சிவனடியார் அனுப்பியுள்ளார். மனிதநேயப் பணியாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணியின் நிறைவின் போதே மகிந்த ராஜபக்சவுக்கான கடிதம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தின் முழு விவரம்: 29.03.2007. திரு.தி.இராசநாயகம் அவர்கள், அரச அதிபர், கிளிநொச்சி ஊடாக, மாண்புமிகு சனாதிபதி திரு. மகிந்…

    • 0 replies
    • 618 views
  9. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிற்குத் தெற்காக 30 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வடுவ என்ற சிங்கள கிராமத்தில் சிறியரக வானூர்தியை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிறிய வானூர்தியை உடனடியாகக் கைப்பற்றி தங்கள் பாதுகாப்பில் கொண்டுவந்த சிறிலங்காப் படையினர், அங்கிருந்து அதனை அப்புறப்படுத்தினர். விசாரணையில் தெரியவந்த மேலதிக தகவல்களின்படி, சில வருடங்களுக்கு முன்னர் சிங்களவர் ஒருவரால் பயன்பாட்டில் இருந்த இந்த சிறியரக வானூர்தியை அவர் தனது பொழுது போக்கிற்காக பயன்படுத்தி வந்துள்ளார். எனினும், இயந்திரம் மற்றும் உதிரிப்பாகங்கள் பழுதடைந்ததால், கடந்த சில வருடங்களாக அவரால் வானூர்தியை பாவிக்க முடியவில்லை. இருப்பினும், வானூர்தியை வைத்திருப்பதற…

  10. எனது அரசாங்கத்தை தாக்குதல் மூலம் வெளியேற்ற முடியாது, விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சாதகமாகப் பயன்படுத்தி பதவிக்கு வந்துவிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி எண்ணுமாயின் அது முற்றிலும் தவறானது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான் தாக்குதலைத் தொடர்ந்து, என்னைப் பதவி விலகும் படியான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நாம் பெரும் போரை நடத்தி வருவதாக அவர்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிரபாகரன் பேசும் மொழியிலேயே அவர்களும் பேசுகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என யாராவது எண்ணுவார்களாக இருந்தால். அவர்கள் தாங்கள் வெட்டிய குழிக்குள்…

    • 7 replies
    • 1.3k views
  11. "சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள இயக்கங்களும் கூறி வருவதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் இந்தியாவுக்கோ அல்லது ஏனைய தெற்காசிய நாடுகளுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பாகிஸ்தான் வழங்கிய போர் விமானங்கள் சிறிலங்கா வசம் இருப்பதுதான் இந்தியாவுக்கு பேராபத்து" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இலங்கையில் அன்றாடம் வான் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்ற…

  12. பிரபாகரனின் மொழியும் இந்த நாட்டின் சிலரின் மொழியும் இன்று ஒன்றாகிவிட்டது வீரகேசரி நாளேடு பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றிவெறும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இருப்பினும் என்னை தவறிழைக்கச் செய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதும் எங்களை பதவி விலகுமாறு இத்தகையவர்கள் கூறுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்மை பதவி விலகுமாறு கோருபவர்கள் மிக் ரக விமானங்கள் குறித்தான தகவல்களை வெளியிட்டு பயங்கரவாதிகளுபு உதவிபுரிகின்றனர். பிரபாகரனின் மொழியும் இன்று இந்த நாட்டின் சிலரின் மொழியும் ஒன்றாகிவிட்டது. புலிகள் இந்த வலயத்துக்கு மட்டுமல்லஇ முழு உலகத்திற்குமே அச்சு…

  13. 'நாடாளுமன்றத்தின் மீதும் வான் தாக்குதல்கள் நடக்கலாம்': ஊகிக்கிறார் அனுரா ஜவெள்ளிக்கிழமைஇ 30 மார்ச் 2007இ 05:26 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "நாடாளுமன்ற அமர்வுகளின் போதோ அல்லது வாக்கெடுப்பின் போதோ தமிழீழ விடுதலைப் புலிகளால் வான் தாக்குதல் நடத்தப்பட்டால் பேரழிவு ஏற்பட்டுவிடும். எனவே சபாநாயகர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று சிறிலங்காவின் தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார். சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டாராவுக்கு அனுரா பண்டாரநாயக்க எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "நான் நான்கு நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்காவில் இடம்பெற்ற பயங்கரமானஇ எதிர்பாராத வான்தாக்குதல் தொடர்பாக உங்களுக்கு எழுதுகிறேன். …

  14. [Thursday March 29 2007 08:43:59 PM GMT] [virakesari.lk] கட்டுநாயக்க விமான தளத்தின் மீது புலிகள் மேற்கொண்ட இலகு ரக விமான தாக்குதல் தொடர்பாக ஐவர் கொண்ட விசாரணைக்குழு மேற்கொண்டு வருகின்ற விசாரணைகள் முடிவதற்குள் எந்தவொரு தகவல்களையும் யாருக்கும் வழங்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் தேசிய பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பயங்கரவாதிகளுக்கு சார்பான கேள்விகளை கேட்கவேண்டாம் என்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொள்ளுப்பிட்டியில் உள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அ…

  15. புலிகளின் படகைப் பிடித்த பின்னணி! அண்மையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகு ஒன்றினை இந்திய கடலோரக் காவற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். அந்தப் படகில் ஆயுதங்கள் இருந்ததாகவும். அப்படகு தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட படகு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாட்டை நோக்கி அந்தப் படகு வரவில்லையென்றும் வழிதவறி இந்திய கடல் எல்லைக்குள் அந்தப் படகு வந்ததனால் அதை வளைத்துப்பிடித்ததாகவும் தமிழகக் காவல்துறைத் தலைவர் அறிவித்தார். இந்நிகழ்ச்சி குறித்து பலவேறுவிதமான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஆனால் உண்மை என்ன என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. அண்மையில் சென்னையில் தென்பிராந்திய இராணுவத் தலைவர்கள் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பு உயர்…

  16. தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் பிரச்சினை முதல்வரின் முன்னுக்குப்பின் முரணான அணுகுமுறை தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். நமது கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து நமது மீனவர்களை சிங்கள வெறியர்கள் படுகொலை செய்யும் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இது குறித்து மீனவர்களும் மற்றும் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் இந்தியப் பிரதமருக்கு கவலைதோய்ந்த கடிதம் எழுதியிருப்பதாக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பின் மூலம் தமிழர்களின் கொதிப்புணர்வு அடங்கிவிடும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அது மேலும் மேலும் அதிகமானதே தவிர குறையவில…

    • 5 replies
    • 1.5k views
  17. சிங்களவர் பின்னும் சூழ்ச்சி வலைகள்! விடுதலை பெற்ற நாள் முதலாக, பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழரைக் கொலை செய்வதற்காகவே இலங்கையின் கடற்படை பயன்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டுத் தமிழரைச் சுட்டுக்கொன்று பழகியவர்கள் சிங்களக் கடற்படையினர். 1950களின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையில் வாழும் தம் உற்றார் உறவினரைச் சந்தித்து உறவு கொண்டாட வந்த தமிழகத் தமிழரே இலங்கைக் கடற்படையின் முதற்குறி, இவர்களைக் கள்ளத் தோணி என அழைத்துக் கொச்சைப்படுத்தினர், சுட்டுத் தள்ளினர். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உறவுகள் இன்றும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர், கலைஞரின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் கலைமாமண…

    • 4 replies
    • 2.3k views
  18. வட இலங்கையில் தொடர்ந்தும் மோதல்கள் இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாளிகைப்பிட்டி, செம்மந்தீவு, கட்டுக்கரைக்குளம் போன்ற பிரதேசங்களை நோக்கியும், மற்றும், பரப்பாங்கண்டல், முருங்கன் பகுதிகளின் இராணுவு முன்னரங்க காவல் நிலைகள் மீதும் விடுதலைப் புலிகள் இன்று நண்பகல் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் நேற்றிரவு கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் புலிகளின் 3 படகுகள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது 12 கடற்புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மோதலி…

    • 0 replies
    • 1.1k views
  19. அவுஸ்ரேலியாக் கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்ரேலியக் கிளையின் பொறுப்பாளர் தில்லைநடராஜா ஜெயக்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு அவர் ஆற்றிய பணியை மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் எனும் அதியுயர்ந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்ரேலியப் பொறுப்பாளராகவும் அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றிணைத்து தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வியாழக்கிழமை இவர் தீடீர் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவரின் இறுதிக் கிரிகைகள் அடுத்த வாரம் நடுப்பகுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்…

    • 3 replies
    • 1.4k views
  20. பலாலி மற்றும் காங்கேசத்துறையில் இரவு நேரப் பயிற்சியில் முப்படையினர் யாழ்ப்பாணம் பலாலி கங்கேசன்துறைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முப்படையினரும் இணைந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது. இந்தப் பயிற்சியினால் வலி வடக்கு, மற்றும் வலி தெற்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாக உள்ளவர்கள் பெரும் பதட்டமான நிலையில் வாழும் நிலமை காணப்படுகின்றது. கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் இராணுவத்தினர் என முப்படையினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் திடீரென கடற்கலங்களில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டு வீச்சுகள் இடம் பெறத் தொடங்கிய சில நிமிட நேரத்தில் பலாலி படைத்தளத்தில் இருந…

    • 0 replies
    • 802 views
  21. வெள்ளி 30-03-2007 00:54 மணி தமிழீழம் [தாயகன்] தமிழீழ வான் படையை அவதானிப்பவர்கள் தகவல் கூற புதிய தொலைபேசி சேவை தமிழீழ வான் படையின் விமானங்களின் நடமாட்டத்தை அவதானிப்பவர்கள் தகவல் தெரிவிப்பதற்கு என புதிய 24 மணிநேர தொலைபேசி சேவையொன்றை சிறீலங்கா வான் படையினர் ஆரம்பித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் மீது தமிழீழ வான் படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான விபரங்களை இந்த தொலைபெசி இலக்கத்தின் ஊடாக வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க வான் படைத் தளம் மீது கடந்த 26ஆம் திகதி வான் புலிகள் நடத்திய தாக்குதலால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காப் படையினர், எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாது தடுப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் மே…

    • 3 replies
    • 1.4k views
  22. மனித நேயப் பணியாளர்களுக்கு எதிரான தாக்குதலை உடன் நிறுத்தப் பணிக்குமாறு வேண்டுகை - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 19:34 கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டில் மனித நேயப் பணி முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதை தாங்கள் உட்பட முழு உலகமே அறியும். காலத்திற்குக் காலம் அனர்த்தங்கள் இடம்பெறும் பொழுதெல்லாம், மனிதநேயப்பணி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு பாதிப்புற்ற மனித உயிர்களின் அவலங்களை, இழப்புக்ளை, முற்றாக ஈடுசெய்ய முடியாவிட்டாலும் கூட, ஒத்தடம் கொடுக்கின்ற, கைதூக்கி விடுகின்ற, முன்னேற்றத்திற்கான வழிகளைக் காட்டி நிற்கின்ற சேவையினை மனித நேய அமைப்புகள் வழங்கி வந்தன – வருகின்றன. இப்பணியினைக் கடமையாகவும் தொண்டாகவும் ஏற்று இந்த மனித சேவையின் …

  23. [வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 22:20 ஈழம்] [காவலூர் கவிதன்] சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். மீன்பிடித் தொழில் ஈடுபட…

  24. -தி.இறைவன் (தாயகம்)- சிறிலங்கா வான்படைக்கு கட்டுநாயக்கவில் இரண்டாவது தடவையும் இடி விழுந்திருக்கின்றது. அதேவேளை தமிழ் மக்களிடையே பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் விடுதலைப் போராட்டத்தின் புதிய பாய்ச்சலின் எழுச்சியுமாக உள்ளது. தங்களை அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த நிலையில் தமிழ்மக்களை கொன்றொழித்து வந்த சிறிலங்கா வான்படை தலைமைத்;தளத்தின், கிபிர் மற்றும் மிக் விமானங்களினுடைய தரிப்பிடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை விமானங்கள் தாக்குதலை நடத்தி தளம் திரும்பியுள்ளன. இங்கு இந்த விமானத் தாக்குதலில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது வான்புலிகளினுடைய விமானங்கள் வெற்றிகரமாக தாக்குலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தளம் திரும்பியமை தான். சிறிலங்கா அரச…

    • 0 replies
    • 1.2k views
  25. பத்திரிகை ஆசிரியர்கள் மத்தியில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்திய விமானத் தாக்குதல் பாரதூரமான அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராயிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். விமானப்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து தோன்றியிருக்கும் பாதுகாப்பு நெருக்கடி நிலைவரம் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்களுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அலரிமாளிகையில் விளக்கமளித்த ஜனாதிபதி ராஜபக்‌ஷ, `அரசியல் வேறுபாடுகளை அரசியல் களத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்புடன் சம…

    • 0 replies
    • 867 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.