Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'சிறிலங்கா அரசிற்கும் கருணா குழுவிற்கும் இடையிலான உறவை மறைப்பது கடினம்': த ஏஜ் [சனிக்கிழமை, 17 மார்ச் 2007, 15:08 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கம், கருணா குழுவினருடனான தமக்குள்ள தொடர்புகளை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் அரசியல் வேறுபாட்டை தோற்றுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு கருணா குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை கோரியிருந்தனர். ஆனால் அரசோ அதனை செய்யவில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்மையானது. தற்போதைய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான உறவை மறைப்பது கடினமாகியுள்ளது." அவுஸ்திரேலியா மெல்பேணிலிருந்து வெளிவரும் 'த ஏஜ்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் கொனி லவெற்றினால் எழு…

  2. நாகர்கோவிலில் சிறிலங்காப் படைமுன்னகர்வு முயற்சி முறியடிப்பு யினரின் ஜசனிக்கிழமைஇ 17 மார்ச் 2007இ 16:19 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கி இன்று சனிக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்பின் போது படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் - 2இ ரவைக்கூடுகள் - 4இ ரவைகள் 100 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தாக்…

    • 6 replies
    • 1.8k views
  3. சிறீபதி சூரியாராச்சி கைது முன்னால் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி கைது செய்யப் பட்டதாக சக்தி fM செய்திகள் தெரிவிக்கின்றன

  4. சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளைக் கூட மதிக்காமல் சிறிலங்கா அரசு செயற்பட்டுவருகின்றது: சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதற்குமுரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா அரசை வலியுறுத்துவதோடு, தமிழின அழிப்பு நடவடிக்கைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் சர்வதேச சமூகம் தீர்வு ஒன்றினைக் காண உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம். என சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை கோரியுள்ளது ' மாணவர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட மதிக்காமல் சிறிலங்கா அரசு செயற்பட்டு வரு…

    • 0 replies
    • 1k views
  5. முகமாலையில் எறிகணைத் தாக்குதலில் படைச்சிப்பாய் பலி. ஒருவர் காயம். யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப் படையினர் நேற்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி எறிகணைவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலுக்குப் பதில் தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போது ஒரு சிறிலங்காப் படைச்சிப்பாய் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/

  6. தற்கொலைக் குண்டுதாரி யாழ். குளப்பிட்டியில் சுடப்பட்டதாக படையினர் அறிவிப்பு குளப்பிட்டிப் பகுதியில் இருந்து சூட் டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் யாழ். ஆஸ்பத்திரியில் நேற்று மானிப்பாய் பொலிஸாரால் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட இருந்தவர் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குளப்பிட்டிச் சந்தியில் இருந்து சாவற் கட்டுக்குச் செல்லும் வீதியில் அமைந் துள்ள படையினரின் காவலரண் மீது தற் கொலைத் தாக்குதல் நடத்த முனைந்த இளை ஞனையே தாம் சுட்டுக்கொன்றதாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சைக்கிளில் வந்த பிரஸ்தாப இளைஞன், படையினர் சோதனை நடத்த முனைந்த போது தாக்குதல் நடத்த முற்பட்டார். அத னால் படையினர் அவரைச் சுட்டுக் கொன்ற னர் என்றும…

    • 2 replies
    • 1.3k views
  7. அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம் ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

  8. சந்திரன் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான வாருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி கிளிநொச்சி சந்திரன் சர்வதேச பாடசாலை ஆரம்பநிலை மாணவர்களுக்கான வாருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் அங்கையற்கன்னி இல்லம் மற்றும் மில்லர் இல்லம் ஆகிய இரு இல்லங்களுக்கிடையிலான திறனாய்வுப் போட்டிகள் இன்று மதியம் 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் பாண்ட்வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன் பின்னர் பாடசாலை மாணவர்களினால் ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. அணிவகுப்பினைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் …

    • 0 replies
    • 783 views
  9. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரம் கீழக்கரை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்களது 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்த போது இலங்கையில் நிலவி வரும் சண்டையால் தங்களால் அப்பகுதியில் மீன்பிடிக்க இயலவில்லை என்றும் அதனால் சற்று தொலைவாக இலங்கை எல்லையில் மீன்பிடிக்க வந்ததாகவும் கடலில் வீசிய பலத்த காற்றால் தாங்கள் இந்திய எல்லைக்குள் அடித்து வரப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்..

    • 5 replies
    • 1.7k views
  10. தமிழகத்தில் இருந்து குடாநாட்டிற்கு உணவுப்பொருட்கள் யாழ்குடாநாட்டிற்கு தேவையான உணவுப்பொருட்களை தமிழகத்தில் இருந்து மாதாந்தம் மூன்று தடவை கப்பல் மூலம் தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்;பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க செயலர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடவையும் மூவாயிரத்து முந்நூறு மெற்றிக் தொன் உணவுப்பொருட்கள் யாழ் குடாநாட்டிற்கு தருவிக்கப்படும் என்றும் இதற்கென தனியான கப்பல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

    • 0 replies
    • 620 views
  11. அரசியல் தீர்வு யோசனையினை ஒருவாரத்தில் முன்வைக்க தீர்மானம் சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவில் முடிவு இனப்பிரச்சினை தீர்வுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்வு யோசனையை இன்னும் ஒரு வாரத்தில் முன்வைப்பது என்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கூடிய அந்தக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது. மத்திய குழு கூட்டத்தின்போது அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த கட்சியின் தீர்வு யோசனை தொடர்பாக நீண்ட நேரம் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை பதவி விலக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரி…

    • 4 replies
    • 1.5k views
  12. நிவாரண உதவிகளை பணயமாக வைத்து மக்களை அச்சுறுத்தும் சிறீலங்கா அரசு இடம்பெயர்ந்த மக்களை யுத்த பிரதேசங்களுக்கு மீள குடியமர்த்துவதில் சிறீலங்கா படைகளும் அரசாங்க அதிகாரிகளும் முற்படுவதாக நியூயோர்க்கை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மட்டக்களப்பில் தங்கியிரக்கும் 721 இடம்பெயர்ந்தோரை அச்சுறுத்தல் யுக்திகளை கையாண்டு சிறீலங்கா படைகளும் அரசாங்க அதிகாரிகளும் திருமலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மோதலால் இடம்பெயர்ந்து வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப் போவதில்லை என அறிக்கையளவில் கூறிவரும் சிறீலங்கா அரசு அனைத்துலக கண்காணிப்பாளர்கள் முன்னிலை…

  13. சனி 17-03-2007 01:12 மணி தமிழீழம் [மோகன்] ஊரடங்கு நடைமுறையில் மாற்றம் நேற்று முதல் இரவு மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர். சிறீலங்கா படையினர் தமது வசதிக்கேற்ப ஊரடங்கு அமுலுக்கு வரும் நேரங்களை மாற்றுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. பதிவு

  14. வெள்ளி 16-03-2007 23:28 மணி தமிழீழம் [மயூரன்] பருத்தித்துறை துறைமுகத்தை பலப்படுத்தும் முயற்சி இன்று பருத்தித்துறையில் உள்ள 52 ம் படைப்பிரிவின் நான்காவது பரிகேட் தலைமையகத்தில் சிறீலங்கா படைகளின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஐர் nஐனரல் ஜி.ஏ.சந்திரசிறீ தலைமையில் பாதுகாப்பு மாநாடு இடம்பெற்றது. சிறீலங்கா தரைப்படை, கடற்படை, வான்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு துறைமுக பாதுகாப்பை பலப்படுத்தும் கடல் ரோந்துகளையும், வான்வேவு நடவடிக்கைகளையும் அதிகரிப்பது தொடர்பாகவும் ஆராயப்;பட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவு

  15. வெள்ளி 16-03-2007 23:05 மணி தமிழீழம் [மயூரன்] தென்னிலங்கை மதத் தலைவர்கள் யாழ் விஐயம் யாழில் தற்போது நிலவும் வெளியிடப்போக்குவரத்து நெருக்கடிகள் குறித்தும், மீன்பிடித்தடைகள் இதனால் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இவற்றை ஆராயும் பொருட்டு இரு சிங்கள் கிறீஸ்தவ ஆயர்களும், பௌத்த துறவியொருவரும் யாழ் குடாநாட்டிற்கு செல்ல இருப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் சமாச தலைவர் தி.தவரட்ணம் தெரிவித்துள்ளார். இவர்கள் மாவட்ட அரசாங்க செயலரையும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கும் இவர்கள் கொழும்பு திரும்பி சிறீலங்கா உயர் தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்

  16. வெள்ளி 16-03-2007 23:34 மணி தமிழீழம் [மயூரன்] களப்பலியான போராளியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா படையினருடனான நேரடி மோதலில் களப்பலியான போராளியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது மேஐர் புவியரசன் என்றழைக்கப்படும் கிளிநொச்சி முழங்காவில் கிராஞ்சி மொட்டையன்குளம் அந்தோனியார் கோவிலடியை சொந்த இடமாக கொண்ட சுப்பிரமணியம் nஐனாந்தன் என்ற போராளி வீரச்சாவை தழுவிக் கொண்டுள்ளார்.

  17. - பண்டார வன்னியன் குசனையலஇ 16 ஆயசஉh 2007 15:48 சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையால் யாழ்ப்பாணத்திலிருந்து 40 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் யாழ் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களால் குடாநாட்டிலிருந்து இதுவரை 40,000 பேர் வெளியேறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்து வெளியேறுவதற்கு 80,000 பேர் இன்னமும் காத்திருப்பதாகத் தெரியவருகிறது. படையினரின்; சிவில் நிர்வாக அலுவலகத்தில் 40,000 பேர் அனுமதிபெற்று குடாநாட்டிலிருந்து வெளியேறியிருப்பதுடன், 80 ஆயிரம் பேர் அனுமதி பெற்றுவிட்டு வெளியேறுவதற்குக் காத்திருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. …

  18. -அருஸ் (வேல்ஸ்)- 'இராணுவத் தீர்வு", 'அரசியல் தீர்வு" இவை இரண்டும் தற்போது பிரபல்யமான சொற்கள். போர்நிறுத்த காலத்தில் அழுத்தம் கூடியிருந்த அரசியல் தீர்வு என்னும் சொற்பதம் தற்போது அழுத்தம் குறைந்ததாகவும். அன்று அழுத்தம் குறைந்திருந்த இராணுவத் தீர்வு என்ற சொல் அழுத்தம் கூடியதாகவும் தற்போது மாறியுள்ளது. சிறிலங்கா அரச தலைவர் தொடக்கம் அடிமட்ட சிங்கள மக்கள் வரை இராணுவத்தீர்வின் கனவில் மிதக்கும் போது, அனைத்துலக சமூகம் அடிக்கடி அரசியல் தீர்வை வலியுறுத்துகின்றன. இந்த எதிரும் புதிருமான கருத்துக்களுக்கு காரணம் என்ன? http://www.tamilnaatham.com/articles/2007/mar/arush/16.htm தாம் உலகில் கற்ற பாடங்களில் இருந்து கூறும் கருத்துக்களாக அனைத்துலக சமூகத்தின் கருத்தும். த…

    • 0 replies
    • 1.1k views
  19. வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு [வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2007, 19:09 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மேற்கில் பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. படையினர் இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தைக்கு மேற்காக பாலமோட்டைப் பகுதி விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கிய நகர்வை மேற்கொண்டனர். முன்னகர்ந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை முறியடிப்புத் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து படையினர் படை உபகரணங்கள் சிலவற்றை கைவிட்டு இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடிவிட்டனர். இந்த …

    • 4 replies
    • 2.4k views
  20. தேவையென்றால் நீதிமன்றத்தை இடமாற்றுக. சிறிலங்கா இராணுவம் பதில். - பண்டார வன்னியன் Friday, 16 March 2007 16:22 மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் செறிந்துவாழும் பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரப் பகுதியின் பெவர் மைதானத்திலிருந்து படையினர் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதால் அருகிலுள்ள 4 பாடசாலைகள், தபால் நிலையம், நீதிமன்றம், மாவட்ட செயலகம் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாகப் பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர்…

  21. பாம்பு கடித்து இலங்கை அகதி சிறுவன் பலி மார்ச் 16, 2007 திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பாம்பு கடித்து 13 வயது இலங்கை தமிழ் அகதிச் சிறுவன் ப>தாபமாக இறந்தான். திருவண்ணாமலை அருகே புதுப்பாளையம் என்ற இடத்தில் இலங்கை தமிழ் அகதிகளுக்கான முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்து வரும் ராபின்சன் என்கிற 13 வயது சிறுவனை நேற்று பாம்பு கடித்து விட்டது. அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவனை பாம்பு கடித்தது. உடனடியாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவன் இறந்து விட்டான். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://thatstamil.oneindia.in/news/2007/03/16/boy.html

  22. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 1,53,463ஆக உயர்வு [ மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை மாலைவரை 40 ஆயிரத்து 745 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 53 ஆயிரத்து 463 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை இடம்பெயர்ந்த மக்கள் 89 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளின்றி இடம் பெயர்ந்த மக்கள் அவலப்பட்டு வருகின்றனர். சுகாதார வசதியின்மையால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மண்முனை வடக்கில் 29 நலன்புரி நிøலயங்களும், கோறளைப்பற்றில் 4 நிலையங்களும்,…

  23. மட்டக்களப்பு அகதிகள் நகரம் ஆகிவிட்டது எங்கு பார்த்தாலும் மக்களின் அவலக்குரல்கள் உண்மையை வெளிப்படுத்த முடியாத நிலை ஆயர் சுவாம்பிள்ளை கவலை [Friday March 16 மட்டக்களப்பு மாவட்டம் இடம்பெய ரும் அகதிகளால் நிரம்பிவழிகின்றது. இந்த மாவட்டத்தை அகதிகள் நகரம் என்றே கூறவேண்டியுள்ளது. மக்கள் படும் அவ லம் பெரும்துயரைத் தருகின்றது. இவ்வாறு தமது கவலையை வெளி யிட்டார் திருமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி ஜோஸப் சுவாம்பிள்ளை ஆண்டகை. கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூ ரியின் (தேசியப் பாடசாலை) எஹெட் கரித்தாஸ் நிறுவனம் 62லட்சம் ரூபா செலவில் அமைத்துள்ள எஹெட் கரித்தாஸ் வகுப் பறைக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இத்திறப்புவி…

  24. ஆஸிக்கு தஞ்சம் கோரிச் சென்றவர்கள் பசுபிக் தீவில் உள்ள அகதி முகாமுக்கு 83 பேரில் எவருமற்ற ஒரு சிறுவனும்! அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் 83 இலங்கை அகதிகளையும் பசுபிக் தீவான நவ்றுவில் தடுத்து வைப்பது என்று ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்திருக் கின்றது. இவர்களில் மிகப் பெரும்பாலா னோர் இலங்கைத் தமிழர்கள். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவர். நாட்டுக்கு வெளியே இவர்களைத் தடுத்துவைத்துப் பின்னர் அவர்களது தஞ் சக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு தமது அரசு முடிவு செய்துள்ளது என்றும் சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்தி வரும் செயலில் ஈடுபடும் கடத்தல்காரர் களுக்கு இதன்மூலம் உறைப்பானசெய்தி ஒன்றைத் தெரிவிக்க ஆஸ்திரேலி…

  25. ஜவெள்ளிக்கிழமைஇ 16 மார்ச் 2007இ 06:52 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் போர்க் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற உள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் வசம் உள்ள ஐந்து போர்க் கைதிகளையும் விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் உதவியை நாடியுள்ளது. அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளானது நேற்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனுடன் நடைபெற்ற சந்திப்பின் போது கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் சோல்பேர்க்கினால் தெரிவிக்கபட்டதாகவும் இந்த வேண்டுகோள் தொடர்பாக விடுதலைப் புலிகள் பரிசீலிப்பதாகவும் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.