ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
முஸ்லிம் காங்கிரஸுக்கு 5 அமைச்சுப் பதவிகள்! தபால், தொலைத் தொடர்பு அமைச்சராக ஹக்கீம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேற்று அரசில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சராக அவர் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஸீர் சேகு தாவூத்துக்கு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உள்ளூராட்சி அமைச்சராக அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களில் மூவருக்குப் பிரதி அமைச்சுப் பொறுப்புகள் கிடைத்திருக்கின்றன. கே. அப்துல் பாய…
-
- 3 replies
- 1.3k views
-
-
கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியலாளர்கள் [29 - January - 2007] [Font Size - A - A - A] * கருத்து வேறுபாட்டை ஓரம்கட்டி ஊடகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் அரசாங்க படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் என்றுமில்லாதவாறு உக்கிரமடையவே சுதந்திரமாக செயல்பட முடியாத ஊடகவிலாளர்கள் கொலை அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதால் நாட்டிலிருந்து தப்பியோட ஆரம்பித்துள்ளார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உதாரணமாக ஒரு சம்பவம் இடம்பெற்றது. எதிரணி அரசியல் கட்சிகளினால் நிறுவப்பட்ட யுத்த எதிர்ப்பு கூட்டமைப்பான ஐக்கி…
-
- 2 replies
- 1.4k views
-
-
[ உதயன் ] - [ Jan 29, 2007 05:00 GMT ] இந்த யுத்த நிறுத்த காலத்தில், யுத்தநிறுத் தத்தைப் பேணுவதாகக் கூறிக்கொண்டே, பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை கிழக்கில் முன் னெடுத்து வெற்றிகரமாக முடித்திருக்கின்றது அரசு. அதுமட்டுமல்ல. அந்த இராணுவ நட வடிக்கை வெற்றியை பெரும் இறுமாப்பு அறி விப்பாக பகிரங்கமாக வெளியிடவும் அரசுத் தலைமை தவறவில்லை. மாத்தளை மாவட்டத்தில் நீர்த்தேக்கத்திட் டம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்று கையிலேயே நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இந்த வெற்றி மமதை அறிவிப்பை வெளியிட்டார். அந்த வெற்றி மிதப்புக்கு மத்தியிலும் தமி ழர்களின் உரிமைக்கான போராட்டத்தைப் "பயங் கரவாதமாக' சித்திரிக்கும் வழமையான சிங்களத் தலைமைகளின் புறணியைத் தாமும் பாட ஜனா திபதி மஹிந்த…
-
- 0 replies
- 995 views
-
-
யாழ். குடாநாட்டில் இரவு வேளையில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் நடமாடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவேண்டும். இதற்கான பணிப்புரையை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா பலாலி படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் கொள்ளைகள், கொலைகள், கைதுகள், ஆட்கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தமது அறிவுறு…
-
- 2 replies
- 1.2k views
-
-
1) ரட்ணசிறி விக்ரமநாயக்க உள்நாட்டு நிர்வாகம் 2) அநுர பண்டாரநாயக்க தேசிய மரபுரிமைகள் 3) டி.எம்.ஜயரட்ண பெருந்தோட்டக் கைத்தொழில் 4) நிமால் சிறிபால டி சில்வாசுகாதாரம் மற்றும் போஷாக்கு 5) மங்கள சமரவீரதுறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து 6) ஏ.எச்.எம்.பௌசிபெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை 7) ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 8) மைத்திரிபால சிறிசேன விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 9) சுசில் பிரேமஜயந்த கல்வி 10) கரு ஜயசூரிய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11) ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி 12) ரவூப் ஹக்கீம்தபால் தொலைத் தொடர்பு 13) தினேஷ் குணவர்த்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
இன்று வவுனியாவில் சூசைப்பிள்ளையார் குலம் பகுதியில் காலை 10 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இருகாவல்துறையினர் மற்றும் பொதுநபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொதுமகன் தனபால எனவும் வவுனியா செயலகத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர் எனவும் காயமடைந்த காவல்துறையினரை வவுனியா வைத்;தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவம் அறியமுடிகிறது THANKS:WW.PATHIVU.COM
-
- 0 replies
- 918 views
-
-
வெடிபொருட்களுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நுழைந்தது எப்படி? ஜெயலலிதா கேள்வி [Friday January 26 2007 01:44:52 PM GMT] [pathma] அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கை தமிழர்கள் உள்பட 9பேர் கைது. 100 மூட்டை வெடிகுண்டு பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி. கைதான 9 பேரில் 6 பேர் விடுதலைப்புலிகளாம். நிறையவெடி பொருட்களை அவர்களிடம் இருந்து கைப் பற்றியிருக்கிறார்கள். இது ஒருவரிச் செய்தி போல தோன்றும். உண்மையில் இந்த ஒருவரிச் செய்திக்குள் ஓராயிரம் செய்திகள் புதைந்திருக்கின்றன. வெடி பொருட்கள் கிடைக்குமிடம் எதுப அதன் விற்பனை எப்படி? அதனை யார் விற்றது? யார் வாங்கினார்கள்? அதன் நடமாட்டம் எவ்வாறு? இதனை எப்படி …
-
- 16 replies
- 4.3k views
-
-
Who cares about our future – Jaffna school Student representative Kandeepan, representative of the boycotting Jaffna school students said in an interview to BBC interview, “ We are boycotting classes demanding the release of our friends. We have evidence to prove that the Sri Lankan military has abducted them. There are eyewitnesses to the abductions and all the students know this and will say this.” Several senior school students have recently been abducted, killed and tortured. On 15 January 2007, Advanced Level student from Hartley College in Point Pedro, Muruhananthan Paramananthan, disappeared after abduction. Paramsothy Thananchayan, another Advanced…
-
- 0 replies
- 912 views
-
-
வல்வெட்டத்துறை மக்கள் வங்கிக்கு முன்பாக உடுப்பிட்டிக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையில் நேற்று மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒரு இராணுவம் கொல்லப்பட்டும், இருவர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பில் சிறீலங்கா இராணுவம் உத்தியோகபூர்வமான எந்தவித அறிவித்தலும் விடவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனபோதும் சிறீலஙடகா இராணுவத்தினர் அவ்இடத்தை அண்டியபகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 964 views
-
-
யுத்த அனர்த்தம் காரணமாக வாகரையிலிருந்து இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சின் நான்கு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாக ஆராயவுள்ளனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வாகரை அகதிகளை மீளக் குடியமர்த்துவது தொடர்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த அதிகாரிகளை நியமித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மீள்குடியேற்ற அமைச்சின் பணிப்பாளர் நாயகம் காதர் முகைதீன் தலைமையில், புனர் வாழ்வு அதிகாரசபைப் பணிப்பாளர் ஏ.மஹ்ரூப், மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் கே.மகேசன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ். ஜெகநாதன் ஆகியோர் க…
-
- 0 replies
- 779 views
-
-
மேட்டூர், ஜன. 29 விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் முன்னர் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதாகக் கருதப்படும் இடங்கள் எங்கிலும் "கியூ' பிரிவுப் பொலிஸார் பாரிய தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் இரும்புக்குண்டுகளுடன் ஐந்து ஈழத்தமிழர்கள் சென்னையில் கைதான சம்பவத்தையடுத்து விடுதலைப்புலிகள் தமிழகம் எங்கும் ஊடுருவியுள்ளனர் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது. இதனைத் தொடர்ந்தே "கியூ' பிரிவுப் பொலிஸார் மேற்படி தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், குறித்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவி வகித்த காலத்தில் தமிழகத்தின் மேட்டூர், கௌத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நமக்குள்ள பிரச்சினைகளைச் சொல்ல தமிழர்கள் எத்துணை தயாராகவுள்ளோம்? [28 - January - 2007] [Font Size - A - A - A] -பீஷ்மர்- * தமிழரிடையே அருகிச் செல்லும் மக்கட் பொதுநிலை அபிப்பிராய உருவாக்கம், செயற்பாடு பற்றிய ஒரு சிந்திப்பு கடந்த வாரத்தில் இரண்டு செய்திகள் இலங்கைத் தமிழர் நிலைப்பட்ட அதிமுக்கியத்துவம் கொண்டனவாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை பற்றிய தமிழ் ஊடகச் சிரத்தை எதுவுமே இல்லாதிருப்பது அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற விடயமாகும். முதலாவது இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய சர்வதேச கண்காணிப்புக் குழுவுக்கு வேண்டிய அங்கத்தவர்களுள் கனடாவினது அங்கத்துவம் பற்றிய செய்தி. …
-
- 0 replies
- 861 views
-
-
அரசு – ஐ.தே.க. உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது [திங்கட்கிழமை, 29 சனவரி 2007, 08:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.க. தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க, உடன்படிக்கையின் நகலைக் கிளித்தெறிந்ததோடு, இனிமேல் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான எந்தவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காது எனவும் அறிவித்திருக்கின்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெ…
-
- 2 replies
- 936 views
-
-
அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மீறும் நடவடிக்கை: ஜே.வி.பி. அரசாங்கம் மேற்கொண்ட அமைச்சரை மாற்றம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, மக்கள் வழங்கிய ஆணையை மீறும் நடவடிக்கை என்று கூறிய ஜே.வி.பி, அது மகிந்த சிந்தனைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சரையில் மிக அதிகளவிலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமையானது இலங்கை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத பொருளாதார சுமையென ஜே.வி.பி. அரசியல் சபை விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அரசாங்கத்தில் இணைந்தவர்கள், பதவி, பணம், புகழுக்காகவும் தனிப்பட்ட சில தேவைகளுக்காகவுமே இணைந்துள்ளதாகவும், இவர்களில் அதிகமானவர்கள் 2001 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்தைக் காட்டிக் கொடுத்து…
-
- 0 replies
- 725 views
-
-
வலிகாமம் மேற்கு சங்கானையில் கிணறு ஒன்றினுள் இளைஞரின் உடல். வலிகாமம் மேற்கு, சங்கானையில் அமைந்துள்ள முருகமூர்த்தி கோயிலுக்கு அருகே பாழடைந்த கிணறொன்றினுள், கை கால்கள் கட்டப்பட்டு, சித்திரவதை செய்ததற்கான காயங்களுடன் ஒரு இளைஞரின் உடலை, அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளனர். 20 வயது மதிக்கத்தக்க இந்த இளைஞரின் உடல், டெனிம் காற்சட்டை அணிந்த நிலையில், கிணற்றில் காணப்பட்டது. இதுபோன்று, சிறீலங்கா இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள சுழிபுரம் பகுதி பாழடைந்த கிணறு ஒன்றினுள்ளும், இளைஞர் ஒருவரின் உடல் காணப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த உடல் பின்னர் காணாமல் போயுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள வேளையில் கடத்தப்படும் இளைஞர்கள், இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்க…
-
- 0 replies
- 760 views
-
-
சர்வதேச நாடுகளின் அசைவற்ற நிலையே, கொழும்பின் அராஜகப் போக்குக்கு உந்துசக்தியாக உள்ளது: சுப.தமிழ்ச்செல்வன் [திங்கட்கிழமை, 29 சனவரி 2007, 04:33 ஈழம்] [காவலூர் கவிதன்] எந்தவிதமான உணர்வையும் வெளிப்படையாகத் தெரிவிக்காத, வெறும் அசைவற்ற போக்குடன் சர்வதேச சமூகம் இருப்பது, சிறீலங்கா அரசு, தனது வன்முறை அரசியலையும் இராணுவத் தீர்வையும் தொடர்ந்து முன்னெடுக்க, உந்துசக்தியாக இருக்கிறது என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழ்நெற் இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது: இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு சரியானது அல்ல என்பதை வெறுமனே கருத்தாக வெளிப்படுத்திவரும் சர்வதேச சமூக…
-
- 1 reply
- 931 views
-
-
ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - புதிய சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.எம். ஜயரட்ணவை நியமிக்க அரச உயர் வட்டாரம் விரும்புவதாக அறிய வருகிறது. தற்போதைய சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார அப்பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்து அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவரும் உறுதிப்படுத்தினார். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க காலத்திலிருந்து கட்சி தாவாமலிருக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த டி.எம். ஜயரட்ணவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சிக்குள்ளே கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில் அவருக்கு பல்வேறு அமைச்சுப்…
-
- 0 replies
- 691 views
-
-
-150 கோடி டொலர் உதவி கிடைக்குமென பிரதியமைச்சர் நம்பிக்கை டிட்டோ குகன் அரசாங்கம் முன்வைத்திருக்கும் 10 வருடகால அபிவிருத்தி திட்டத்தை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படையாக எடுத்துக் கூறுவதே நாளை திங்கட்கிழமையும், நாளை மறுதினமும் காலியில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மாநாட்டின் நோக்கமென பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இம்மாதம் 29 ஆம், 30 ஆம் திகதிகளில் காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி நிதியமைச்சர் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் கூற…
-
- 0 replies
- 596 views
-
-
நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாவோ போராளிகளின் தலைவர் பிரசந்திராவை சந்தித்து பேசியுள்ளார் இந்த சந்திப்பின் போது தான் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு விரும்புவதாக மாவோ போராளிக் குழு தலைவர் கூறியுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவுடனும் பேச்சு நடத்தியுள்ளார் இந்த பேச்சுவார்த்தையின் போது நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்ச்சிகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 682 views
-
-
உதவி வழங்கும் நாடுகள் அழுத்தம் கொடுக்குமா? [28 - January - 2007] [Font Size - A - A - A] -அஜாதசத்ரு- சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனான இன நெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கான அனைத்து சமாதான முயற்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளது. காலியில் இரு தினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ள அதேநேரம், இதனையொட்டி தென் பிராந்தியப் பிரதேசங்களான காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதிகூடிய விசேட பாதுகாப…
-
- 1 reply
- 991 views
-
-
உலக ஒழுங்குக்கு அமைய புலிகளின் தலைவர் விரைவில் முடிவுகளை எடுப்பார் Sunday, 28 January 2007 -மட்டு.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தெரிவிப்பு போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், உலக ஒழுங்குக்கு அமைய பொறுமை காத்து வந்த எமது தலைவர் விரைவில் சில முடிவுகளை அறிவிப்பாரென விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பெறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்; "மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலம் போன்று மட்டக்களப்பிலும் பெரும் அவலத்தை உருவாக்க அரசு முயல்கிறது. கடந்த சில தினங்களாகக் க…
-
- 2 replies
- 2.7k views
-
-
உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை காலியில் ஆரம்பம் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை காலியில் உள்ள லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் இலங்கைக்கு உதவி வழங்கும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள.; மகிந்த எமது மக்கள் மீது குண்டைக் கொட்டப்போகிறான்.
-
- 0 replies
- 905 views
-
-
யாழ். குடாவில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை கடுமையாக அமுல்படுத்த பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பலாலி பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் அறிவித்துள்ளது. படைத் தலைமையகத்தினால் நேற்றிரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குடாநாட்டில் இரவு 7 மணிக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை நான்கு மணிக்கு நீக்கப்படும். ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறும் வகையில் வீதிகளில் நடமாடுவோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்த்துக் கொள்…
-
- 0 replies
- 814 views
-
-
[28 - January - 2007] [Font Size - A - A - A] அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவையும் அரச நிறுவனங்களின் கணக்கு விபரங்களைக் கண்டறியும் பாராளுமன்றக் குழுவையும் இரத்துச் செய்துவிட்டு அதற்குப் பதிலாக அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து `நல்லாட்சி நிர்வாகக் குழுவை' உருவாக்கும் முயற்சிகள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தகவல்கள் கசியத் தொடங்கியதும் அரசாங்கம் அதனை முற்றாக நிராகரித்ததோடு குற்றவாளிகள் தப்புவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று அறிவித்தது. அரச துறையில் இடம்பெற்றுவரும் ஊழல் நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்கு மேற்படி குழுக்களை இரத்துச் செய்து ஊழல் பேர்வழிகள் தப்புவதற்கு வசதியாக திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்…
-
- 0 replies
- 748 views
-
-
கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல் முதலீட்டாளர்களுக்கான செய்தியே -பொருளியலாளர்கள் கொழும்புத் துறைமுகத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சிறிலங்காவின் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கான மிகப்பெரிய செய்தியாகவும் விளங்குகின்றது எனப் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்புத் துறைமுகம் மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக பெருமெடுப்பில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு தாக்குதல் துறைமுகப்பகுதிக்கு அப்பால் வைத்தே முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்த ுவருகின்றது. ஆனால் அரசு வெளியிடும் தகவல்களுக்குள் இருக்கும் ஓட்டைகள், குழப்பங்கள், முரண்கள் என்பவையே நேற்று நடைபெற்ற சம்பவத்தின் உண்மை நி…
-
- 2 replies
- 1.3k views
-