Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெகிவளையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது நேற்று இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறீலங்கா காவல்துறையினரால் 11 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள

    • 0 replies
    • 921 views
  2. எம்முடன் காதல் உறவாடி, ரணிலுடன் தேன்நிலவுக்கு சென்றுள்ள அரசாங்கமே இன்று நாட்டிலுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த கிண்டல் செய்தார். தங்காலை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற `அரசு எங்கே செல்கிறது' என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இன்று நாட்டில், நீலம், பச்சை கலந்த அரசாங்கமே வேரூன்றியிருக்கிறது. அதனால், இன்று ஆட்சியில் முற்போக்குச் சக்திகளுக்கு இடமேயில்லை. இப்போதுள்ள நிலை மிகப் பயங்கரமானது. ஜே.வி.பி.யும், ஸ்ரீ.ல.சு.கட்சியும் அரசுடன் இணையவிருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வர ஜே.வி.பி. திய…

  3. லிவர் பூல் கப்பலை தற்;போதைக்கு திருத்த முடியாது - நிபுணர்குழு தெரிவிப்பு. - பண்டார வன்னியன் Thursday, 25 January 2007 12:20 அண்மையில் சிறிலங்கா படையினருக்கான வழங்கல் பொருட்களை ஏற்றிச் சென்ற லிவர் பூல் கப்பல் வல்வெட்டித்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உட்பட்டது. இத்தாக்குதலில் இவ் கப்பல் கடும்சேதத்திற்கு உள்;ளாகியமை படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இக் கப்பலில் படையினருக்கான உபகரணங்கள் எடுத்து வந்துள்ளமை குறித்து பருத்தித்துறை துறைமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இக்கப்பலில் 690 மெற்றிக் தொண் மா, 200 மெற்றிக் தொண் படையினருக்கான பொருட்களும் எடுத்து வரப்பட்டுள்ளன. இதில் படையினருக…

  4. அம்பாறை மாவட்ட ஆதரவாளர் ஒன்றியம் ஹக்கீமிடம் வலியுறுத்தல் பதவி ஆசை கொண்டு அலையும் சுயநல நோக்கம் கொண்டவர்களுக்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எவருக்கும் அடகு வைக்க முற்பட வேண்டாமென்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒன்றியம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. வெளிச்சக்திகளதும் உட்சக்திகளதும் சவால்களுக்கு உறுதியுடன் நின்று தலைமைத்துவம் முகம் கொடுக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமைத்துவத்தையும் பாதுகாக்க அதன் ஆதரவாளர்களைக் கூட்ட தயாராகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியம் செவ்வாய்க்கிழமை தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவற்றைக் குறிப்பிட்டிருக…

  5. சிறுவர்களை படைக்கு சேர்ப்பதற்கு இராணுவம் உதவுவது குறித்து இலங்கை அரசாங்கம் அவசியம் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனிதஉரிமைகள் அவதானிப்புக்குழு நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைக்குப் பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்படும் அதேசமயம், சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பான குற்றப் பொறுப்பில் அரசாங்கத்திற்கு சம்பந்தமிருப்பதான குற்றச்சாட்டானது அரசின் பாசாங்குத்தனத்தைக் காட்டுவதாக உள்ளதாகவும் மனித உரிமை அவதானிப்புக் குழு சாடியுள்ளது. `காரணங்களை உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் மீதான குற்றப் பொறுப்பு குறித்து தீவிரமான ப…

  6. இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு நெருக்கடி: ஆதரவை வாபஸ் பெறுவதாக சிங்களர் கட்சி மிரட்டல் கொழும்பு,ஜன.25- இலங்கையில் அதிபர் ராஜபக்சே தலைமையில் ஆன சுதந்திரா கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான ரனில் விக்கரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கட்சி தாவி வரும் சில எம்.பி.க் களுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கவும் மந்திரி சபையை விரிவாக்கவும் அதிபர் ராஜபக்சே முடிவு செய்திருக்கிறார். இது ஆளும்சுதந்திரா கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிபர் சந்திரிகா, வெளியுறவுத் துறை மந்திரி மங்கள சமரவீரா ஆகியோர் தலைமையில் ஆளும் கட்சியினர் தனி கோஷ்டியாக செயல் படுகிறார்கள். இந்த எதிர்ப்பு கோஷ்டியில் 20 எம்.பிக்கள் உள்ளனர். ஆளும் கட்சி உடைய…

  7. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மத்திய வங்கியில் புதிய புலனாய்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்த புலனாய்வு பிரிவு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் அவர்களுக்கான நிதி பெறப்படும் முறை மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றமை குறித்து ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பிரிவு முதல் கட்டமாக 50 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  8. உதவி வழங்கும் சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் உறுதி மொழிகள் எதனையும் இம்முறை வழங்கப்போவதில்லை என சிறிலங்காவின் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களின் மாநாடு எதிர்வரும் 29 ஆம் நாள் காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்மாநாடு தொடர்பாக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். "மகிந்த சிந்தனையின் கீழான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்" எனவும் தெரிவித்த ஜெயசுந்தர, "நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக உறுதி மொழிகளை வழங்குவது இம்முறை இடம்பெறப் போவதில்லை…

  9. வியாழன் 25-01-2007 03:37 மணி தமிழீழம் [மயூரன்] அரசியல் அமைப்பிற்கு முரணான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் - ஹெகலிய ரம்புக் வெல இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமுல்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் விரைவில் கிழித்தெறியப்படும் என சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக் வெல தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணான வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார் பதிவு

    • 3 replies
    • 1.5k views
  10. வியாழன் 25-01-2007 03:34 மணி தமிழீழம் [மயூரன்] மனித உரிமை மீறல் தொடர்பில் ஐனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கனடா கண்காணிக்கிறது இலங்கையில் இடம்பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான குழுவிற்கு கனடா தனது பிரதிநிதியை நியமித்துள்ளது கனடாவின் சார்பில் பேராசிரியர் மத்தியுஸ் என்பரை கண்காணிப்புக் குழுவிற்கு நியமித்துள்ளதாக கனடாவின் வெளிவிவாகர அமைச்சர் பீற்றர் மக்கே அறிவித்துள்ளார் இலங்கையின் முரண்பாடுகளில் மதம் மொழி இனங்களின் தாக்கம் குறித்து ஆய்வினை இவர் மேற்கொண்டுள்ளார்.இதன் காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஆழமான அறிவு பேராசிரியர் மத்தியுசிற்கு இருப்பதாக கனடாவின் வ…

    • 2 replies
    • 1.1k views
  11. இருதரப்பினரும் உடன்பாட்டை ஏற்படுத்துங்கள்: நோர்வேயின் முன்னாள் தூதுவர் சிறிலங்கா அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமும் அது தொடர்பான பேச்சுக்களும் ஆக்கபூர்வமானவை, அது தொடர வேண்டும் என நோர்வேயின் சிறிலங்காவிற்கான தூதுவர் ஜோன் வெஸ்ற்பேர்க் கூறியுள்ளார். "இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க உதவும். அதுவே இனப்பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வுக்கான அடித்தளமாக அமையும். நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் அதாவது நாங்கள் தீர்வைக் கொண்டுவர முடியாது. "இருதரப்பையும் ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வரவே எங்களால் முடியும். தீர்வை எட்டுவது அவர்களைப் பொறுத்தது. சர்வதேசத்தின் கர…

  12. நியூயார்க்: கருணா கும்பலுக்கு சிறுவர்களைப் பிடித்துத் தரும் வேலையில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போன கருணா தலைமையில் ஒரு கும்பல் அங்கு செயல்பட்டு வருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் இவர்களுக்கு இலங்கை ராணுவம் முழு ஆதரவும் ஆயுதமும் தருகிறது. இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் கருணா கும்பலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார் கருணா. அவருடன் சிறு அளவிலான வீரர்களும் உடன் சென்றனர். அதன் பின்னர் அவர்களைப் பயன்படுத்தி ராணுவம் புலிகள் மீது தாக்குதல் ந…

  13. சென்னை: இதற்கிடையே சென்னையிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கான உதிரிப் பாகங்களை அனுப்பியதாக 8 இலங்கைத் தமிழர்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உதி>ப் பாகங்களை சிலர் அனுப்புவதாக கியூ பி>வு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் போரூர், மேடவாக்கம் ஆகிய இடங்களில் புலிகளுக்கு ஆயுத உதிரி பாகங்களை சப்ளை செய்வோர் நடமாடுவதாக உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். போரூரில் போலீஸ் பிடியில் சிலரும், மடிப்பாக்கத்தில் சிலரும் சிக்கினர். அவர்களில் எட்டு பேர் இலங்கைத் தமிழர்கள், மற்றவர்கள்…

  14. சிறிலங்கா அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளினால் ஏற்கக்கூடியவையல்ல: வெளிநாட்டு இராஜதந்திரிகள். - பண்டார வன்னியன் Wednesday, 24 January 2007 10:44 அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுமே சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளனர். ஜெனிவா உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்கள் போன்றவற்றை மீறி அரசாங்கம் செயற்படுவதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதி யூலியன் வில்சன் மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலி, ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளி…

    • 4 replies
    • 1.6k views
  15. பேரிழப்பை ஈடுசெய்ய இளைஞர்களை பெருந்தொகையில் கடத்தும் புலிகள் [24 - January - 2007] [Font Size - A - A - A] கிழக்கு மாகாணத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்றுகொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளைச் சமாளிக்கும் நோக்கத்தில் இளைஞர்களைக் கடத்திச்செல்லும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 47 இளைஞர்களை புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களிலிருந்தே மேற்படி இளைஞர்கள் புலிகளால் பலாத்காரமாகக் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ள இளைஞர்களில் கூடுதலானோர் பாட…

  16. ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் விடுதலைப் புலிகளைப் பணிய வைக்குமா? எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அ…

    • 3 replies
    • 1.5k views
  17. வாகரையின் மமதையில் சிங்களம் மூழ்கிக்கொண்டு இருக்கிறது. இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் கொண்டாட முல்லைத்தீவு படைத்தளம் துவசமானது. ஹா....ஹா......ஹா......

  18. கடந்த சனிக்கிழமை "வெதமாத்தயா" மகிந்தவினால் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் கொண்டாட்டம் ஆனது வாகரை வெற்றி விழா கொண்டாட்டமாக்கப்பட்ட நிகழ்வு மிக ஆடம்பரமாக வெதமாத்தயாவின் வாசஸ்தலத்தில் நடைபெற்றதாம். இவ்வெதமாத்தயாவின் ஆடம்பரத்தில் ஈழத்தமிழினத்தின் வெட்கத்துக்குரிய எச்சங்களாகிய ... * "சிறுவர் சில்மிசச் செல்வர்" ஆனந்தசங்கரி * "நிறை தண்ணிக்குட்டி" சித்தார்த்தன் * "மகேஸ்வரி உடையான்" அத்தியடிக்குத்தி டக்கிலசு * எச்ச சொச்ச கூலித்தலைமைகள் * இக்கும்பல்களோடு கடத்தல் நாடமேற்றி தமிழ் தேசிய ஊடகவியலாளராக தன்னை காட்ட முடிந்தவரும், புளொட் கூலிக்கும்பலின் முன்னால்/இன்னால் உறுப்பினரும், சதிப் புளொட்டின் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் * மற்றும் தன்னை தமிழ்த் தேசியத்திற்க்க…

    • 13 replies
    • 4k views
  19. பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது - இளந்திரையன். பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப்புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரை…

  20. வடபோர்முனை, வாகரை களமுனைப்பகுதிகளில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் நான்கு போராளிகள் களப்பலியாகியுள்ளார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடபோர்முனை கிளாலி களமுனையில் சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த மோதலில் அம்பாவை மாவட்டத்தை சேர்ந்த லெப்ரினட் கீதவாணன் என்றழைக்கப்படும் குவேந்திரராசா தயானந்தன், யாழ்மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை அருளன் என்றழைக்கப்படும் டேவிட் பிரேம்குமார் ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர். அதேநாளன்று முகமாலை களமுனையில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்றமோதலில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை கானகன் அல்லது அறிவுமதி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன் நவரதன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாகரை களமுனையில் சிறீலங்கா படைகளுடன…

  21. மகிந்த - மங்கள மோதல் வலுக்கிறது [புதன்கிழமை, 24 சனவரி 2007, 05:33 ஈழம்] [அ.அருணாசலம்] {புதினம்} சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மங்கள சமரவீர கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை, மகிந்தவிற்கு எழுதிய இரகசிய கடிதத்துடன் மகிந்தவிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் நடந்து வரும் பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக உயர்மட்ட அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மங்களவின் கடிதத்தின் பிரதிகள் மகிந்தவின் ஆலோசகரான பசில் ராஜபக்ச மற்றும் டல்லஸ் அழகப்பெருமா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள…

  22. கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான உணவு விநியோகம் தொடர்பில் பிரச்சினைகைள எதிர் நோக்குவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதினாயிரம் பேர் இம்மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள போதிலும் அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மாத்திரமே இடைத்தரிப்பு முகாம்களிலும், தற்காலிக முகாம்களிலுமே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்டப்டுள்ளோரை பொறுத்த வரை தங்களை பராமரித்து வரும் அரச சார்பற்ற அமைப்பகளினால் தொடர்ந்தும் சமைத்த உணவு வழங்கப்படுவது குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். உணவு போதாது என்றும் சிலர…

  23. கொழும்பு காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பில் நான்கு காவல்துறைநிலையங்களில் தடுத்து வைத்திருந்த 12 தமிழ் இளைஞர்கள் காலியில் அமைந்துள்ள பூசா தடுப்பு முகாமிற்கு அனுப்பியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை இந்த 12 பேரையும் பம்பலப்பிட்டிய காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றபின் பூசா தடுப்புமுகாமிற்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களுள் ஊடகத்துறையை சேர்ந்த பெண் மற்றும் இருதய நோயிற்கு உள்ளான வயோதிபரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்து. இவர்கள் எவரும் சட்டவிரோதமான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதபோதும் பூசாவிற்கு அனுப்பியுள்ளதாக அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  24. நேற்று முன்தினம் மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் சிறீலங்கா படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் மட்டக்களப்பு கன்னங்குடா பகுதியை சேர்ந்த கப்டன் உமாமகன் என்றழைக்கப்படும் மாணிக்கம் உமலிப்போடி என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று காலை கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள தமிழீழ அரசியல்துறை மாவட்டத்தில் வைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  25. புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் தாக்குதல்களை அரசு தொடரும்: கெஹெலிய ரம்புக்வெல. கிழக்கு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டில் இருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அரசு பாரியளவு வெற்றியீட்டியுள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டிற்குள் சிக்கும் மக்களை இனவேறுபாடின்றி மீட்டெடுப்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும். இவ்வாறு அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கிழக்கில் மூவின மக்களையும் இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.