ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143503 topics in this forum
-
-சு.ஞாலவன்- அண்மையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிஸில் வெளியிடப்பட்ட ‘பூமி வெப்பமடைதல்’ குறித்த ஆய்வறிக்கையின்படி இந்த நூற்றாண்டின் முடிவிலே இப்போது நிலவும் வெப்பநிலையானது 2-6 பாகை செல்சியஸால் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பினைத் தடுக்கும்விதத்தில் சுற்றுப்புறச்சூழல் மாசடவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிடின் உலகெங்கும் தாழ்வான கரையோரப்பிரதேசங்களின் பெரும்பகுதியைக் கடல்கொள்ளலாம் என்ற அதிர்ச்சிதரும் எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கையின் அமைதியைப் பாதிக்கும் எமது வாழ்வியல்-வழக்கங்களைச் சரிசெய்துகொள்ளவேண்டியவர்கள
-
- 2 replies
- 1.9k views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கை 22 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட்டால் பாரியளவில் எதிர்ப்புப்போராட்டம் ஜே.வி.பி.அறிவிப்பு அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்பதாக ரத்துச் செய்து அந்த உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகும் வரை நாங்கள் அதனை ரத்துச் செய்ய வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராடுவோம் என்று ஜே.வி.பி.யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். போர்நிறுத்த உடன்படிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் ரத்துச் செய்துவிடுமாறு ஜே.வி.பி. அரசாங்கத்தைக் கோரி வருகின்றது. இந்நிலையில் இவ்விடயம்…
-
- 3 replies
- 1.4k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்க இரு தரப்பும் இணக்கம் - நோர்வே வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடை யிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர்கூறியுள் ளார். நோர்வேயின் என்.ஆர்.கே. வானொலி இத்தகவலை வெளியிட்டுள்ளது. போர்நிறுத்த உடன் படிக்கைக்கு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் அமுலில் இருந்தாலும் புலிகளின் ஆயுத பலத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக நோர்வேயிடம் …
-
- 1 reply
- 962 views
-
-
வரணிப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் படையினரால் சுட்டுப்படுகொலை யாழ் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு கலைப்பீடத்ததைச் சேர்ந்த மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறீலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளளார். நேற்று மாலை 6.15 மணியளவில் இப்படுகொலை இடம்பெற்றுள்ளது. இவர் நேற்று தனியார் கல்வி நிலையம் நோக்கிச் சென்ற போது இவர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டுவர் 24 அகவையைக் கொண்ட கிருஷ்ணர் கமலதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.2k views
-
-
மனித அவலங்களுக்குள் நலன் தேடும் உலகநாடுகள் இலங்கையில் மனித அவலம் உச்சத்தை எட்டி விட்டதென ஒரு வகையினரும், அதைத் தொடுவதற்கு இன்னமும் பல படிகள் கடக்க வேண்டுமென இன்னுமொரு சாராரும் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். எம் தாயகத்தில் மட்டுமல்லாது, உலகெங்கனும் உள்ள பல நாடுகளில் இவ்வாறான நிலைமைகளே நீடிக்கின்றன. அவலங்களைத் தரம் பிரித்து தட்டில் நிறுத்தாலும் அவை இலகுவில் மாற்றமடையப் போவதில்லை. தினமும் 100 பேர் வரை கொல்லப்படும் ஈராக்கை விட இலங்கையில் நிகழும் தமிழினப் படுகொலைகள் ஒப்பீட்டு அடிப்படையில் குறைவானதென்று அவலத்தை தர நிர்ணயம் செய்ய முடியாது. வாழ்விடயங்கள் அழிந்து, வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மக்களின் சிதைக்கப்பட்ட உளவியல் பரிமாணத்தின் ஆழ வடுக்க…
-
- 0 replies
- 909 views
-
-
அரசியல் ‘வெடிப்பு’களுக்கும் விடுதலைப்புலிகள் காரணமா? எந்தவொரு சம்பவம் இடம்பெற்றாலும் அதை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டுவது இலங்கை அரசியலில் ஒரு மரபாகவே மாறிவிட்டது. ஜ.தே.க ஆட்சியின் போது சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் போதும் சரி இதுதான் வழக்கம். மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்க அணியின் நடவடிக்கையின் பின்னணியில் புலிகளே இருப்பதாகவும் அவர்களின் திட்டப்படியே இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது அரச தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். கடந்த மாதம் வரை வெளிவிவகார அமைச்சராக எந்த அரசில் மங்களசமரவீர அங்கம் வகித்து சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தாரே – அதே அரசுதான் இப்படியொரு குற்றச்சாட்டை முன்…
-
- 9 replies
- 3.3k views
-
-
மங்கள சமரவீரவின் கருத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள் யாழ். குடாநாட்டிலும் தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளிலும் சீருடையினராலும், இனந் தெரியாத குழுவினராலும் ஆள்கள் கடத்தப்படல், படுகொலை செய்யப்படல் மற்றும் காணா மற்போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கட்டுமட்டின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கொடூரத்தின் பேரச்சத்தில் தமிழர் தாயகம் மூழ்கிக் கிடக்கின்றது. இந்த மனிதப் பேரவல நிலை இப்போது மிக மோசமான கட்டத்தை அடைந்தமைக்கு அரச பயங்கரவாதம், புதிய ராஜபக்ஷ அரசின் நிர்வாகத்தின்கீழ் கட்டவிழ்த்து விடப்பட்டமையே பிரதான காரணம் என்பதைத் தமிழர் தரப்பு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றது. கடந்த வாரம்வரை ராஜபக்ஷவின் அரசில் மூத்த முக்கியஅமைச்சராக இருந்த மங்கள சமரவீர …
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக்கின் பேட்டி இலங்கை இராணுவம் சமீபத்தில் பெற்றுள்ள இராணுவ வெற்றிகளாலும், வடகிழக்கை பிரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பினாலும் உருவாகியுள்ள புதிய சூழ்நிலைகளுக்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு உருவாக்க முயலும் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் ஊடாகவே தீர்வைக் காண முயல வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகளை இல்லாமல் செய்துவிடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை இருதரப்பும் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளும் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேட் பிளாக், `தினக்குரல்' இற்கு அளித்த விசேட பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார். சர்வ…
-
- 11 replies
- 2.6k views
-
-
சிறிலங்காப் பிரதமருக்கு எதிராக இணையத்தள மனு சிறிலங்காவில் மக்கள் கடத்தப்படுவதை நிறுத்தும்படியும், அரசு அதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் அனைத்துலக உரிமைக்குழு சிறிலங்காவின் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்கவிற்கு இணையத்தளங்களின் ஊடாக எதிர்ப்பு மனுவை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல கடத்தல்கள், காணாமல் போதல் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (வயது 37) கடந்த வாரம் காணாமல் போயுள்ளார். சிறிலங்காவில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும…
-
- 1 reply
- 943 views
-
-
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடை யிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர்கூறியுள் ளார். நோர்வேயின் என்.ஆர்.கே. வானொலி இத்தகவலை வெளியிட்டுள்ளது. போர்நிறுத்த உடன் படிக்கைக்கு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் அமுலில் இருந்தாலும் புலிகளின் ஆயுத பலத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக நோர்வேயிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கையை புலிகள் மீறுவதை தொடர்ந்தும் பார்த்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழில் நிகழும் மனித அவலத்தை எடுத்துக்கூறும் ஒரு பெண்ணின் கதை கடந்த நான்கு மாதங்களாக தனது கணவனின் வரவுக்காக காத்திருக்கிறார் சுதர்சினி ஜசுதன். கடந்த ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கந்தையா ஜசுதன் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் இராணுவத்தினராலும் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள மக்கள் தினம், தினம் அனுபவிதித்து வரும் மனித அவலங்களுக்கும் தமது உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் சுதர்சினியின் நிலமை ஒரு சிறு உதாரணமாகும். துரதிர்ஸ்டவசமான அந்த நாள் தொடர்பாக கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு சுதர்சினி தெரிவித்ததாவது: கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 19 ஆம் நாள் ந…
-
- 1 reply
- 869 views
-
-
இடப்பெயர்வுகள் தொடருமா? -அ.பிரியன்- இலங்கைத்தீவு போர்நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்பதில் ஐயம் இல்லை. இவர்களுக்கு ஏற்படுகின்ற உயிர் இழப்புக்கள் உடைமை இழப்புக்கள் உறவிழப்புக்கள் என்பன தொடாகதையாகவுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலான மீள முடியாத இழப்பாக இருப்பது தமிழர்கள் தம் வாழ்விடங்களை விட்டு வேறோடு பிடுங்கப்படுவதாகும். இவ் இழப்பு 1958ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக தமிழர்களை விரட்டிக் கொண்டு வருகின்றது. இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் போரினால் தமது வாழ்விடங்களை இழந்தவர்களே ஆவர். தற்போது தாயகத்தில் எல்லோர் முகங்களும் மீண்டும் ஒரு இடப்பெயர்வை எதிர்நோக்கிய படியே இருக்கிறது…
-
- 3 replies
- 1.5k views
-
-
திருமலையில் சிறீலங்கா கடற்படையின் பேருந்து பாதையை விட்டு விலகி தடம்புரண்டதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 16 பேர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இச்சம்பவமானது ஹபரணவில் இருந்து புறப்பட்ட கடற்படைப்பேரூந்தே கந்தளாய் அகுபுர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பாதையைவிட்டு விலகி தடம்புரண்டதாக தெரியவருகிறது. thanks: pathivu.com
-
- 4 replies
- 1.4k views
-
-
ஞாயிறு 18-02-2007 18:00 மணி தமிழீழம் [சிறீதரன்] பாகிஸ்தானின் உயர் குழு சிறீலங்காவிற்கு விஐயம் நாளை சிறீலங்காவிற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலர் ரறிக் வசீம் காசி (Tariq Waseem Ghazi ) தலமையிலான குழுவினர் விஐயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். சிறீலங்கா அண்மையில் பாகிஸ்தானிடம் கொள்வனவு செய்த 100 மில்லியன் டொலர்க்கு மேற்கொள்ளப்பட்ட ஆயுதங்களின் தரத்தில் ஏற்பட்ட கேள்விகளையடுத்தே இவ்விஐயம் அமைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா அரசு எதிர்வரும் 18 மாதங்களில் 200 மில்லியன் டொலருக்கு தொகைக்கு ஆயுத்கொள்வனவு மேற்கொள்ளவிருப்பதாகவும் சிறீலங்கா ஊடகச் செய்தி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை முன்னர் வழங்கப்பட்ட 500, AB-103 மற்றும் AB-104 ன் பியூஸ்களில் பழுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 18-02-2007 17:25 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை யாழ்பாணத்தில் 7% மேற்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 10201 மாணவர்கள் இவ்வாறு பாடசாலைக்கு செல்லாமல் உள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா இராணுவத்தால் 11ம் திகதி ஓகஸ்ட் 2006 ல் இருந்து யாழ்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் அளவுக்கதியமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே பெருமளவு மாணவர்களின் கல்வி கற்பதற்கு பாடசாலைகளுக்கு செல்லமுடியாமல் உள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்கல்வி செயலகங்களில் 2006ம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் 155 389 பேர் மாணவர…
-
- 0 replies
- 847 views
-
-
கிழக்கில் பாரிய நகர்வுக்காக வடகில் நடத்தப்படும் தாக்குதல்! -விதுரன்- கிழக்கில் பாரிய தாக்குதலைத் தொடுக்க முன்னர் வடக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கில் தங்களின் முழுக் கவனமும் திசை திருப்பப்பட்டிருக்கையில் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குல்களைத் தொடுத்து விடலாமென்ற அச்சத்திலேயே தற்போது வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதலை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாக விடுவித்து விடவேண்டுமென்பதில் அரசும் படையினரும் அக்கறை கொண்டுள்ளனர். தற்போதைய மோசமான அரசியல் சூழ்நிலையிலிருந்து விடுபட ஜனாதிபதி மகிந்தவுக்கு இராணுவ வெற்றிகள் அதிகம் தேவைப்படுகிறது. நாட்டின் முன்னைய தலைவர்கள் எல்லோரும் புலிகளிடம் அடிபணிந்தனர…
-
- 6 replies
- 2.5k views
-
-
இந்தியப் படையின் கொடுரம்.. தாய் ஒருத்தியின் கண்ணீர் கதை... http://www.mandaitivu.com/index.php?option...5&Itemid=43
-
- 8 replies
- 2.9k views
-
-
போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியாவிடில் பிக்குகளின் பெரும் போராட்டம் வெடிக்கும் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் அரசு உறுதிமொழி தர வேண்டுமாம் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை புரிந்துணர்வு உடன்படிக்கையை அதன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அரசாங்கம் கிழித்தெறியவேண்டும். அவ்வாறு செய்ய வில்லையெனில் பௌத்த பிக்குகள் அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்துவர். இவ்வாறு சரித்திரப்பிரசித்தி பெற்ற தலதா மாளிகைக்கு முன் நேற்றுக் கூடிய பௌத்த பிக்கு கள் பிரகடனம் செய்தனர். தலதா மாளிகைக்கு முன் கூடிநின்ற பல நூற்றுக்கணக்கான பிக்குகள் மத்தியில் மேற்படி பிரகடனத்தை தேச…
-
- 1 reply
- 840 views
-
-
அம்பாறை மாவட்டம் - திருக்கோவிலுக்கு தென்மேற்கேயுள்ளது தங்கவேலாயுதபுரம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனான முதலாம் விஜயபாகுவின் படையெடுப்புக்குள் அகப்பட்டு அழிந்து போன இந்த பிரதேசம் இன்றும் சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து மீளவில்லை. தூர்ந்து போய்க் கிடக்கும் பத்துக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன குளங்களும் முருக வழிபாடுகள் நடைபெற்ற மலைகளும் இப்பிரதேசத்தில் ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புகளை பறைசாற்றி நிற்கின்றன. அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் செல்லும் பாதையில் பிரயாணம் செய்யும் ஒருவர் தங்கவேலாயுதபுரத்தை அடைய தாண்டியடி என்னும் கிராமத்தை முதலில் சென்றடைய வேண்டும். தாண்டியடியிலிருந்து மேற்குத் திசை நோக்கி 5 கிலோ…
-
- 0 replies
- 961 views
-
-
தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஆட்சியதிகாரத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் சிரேஷ்ட முக்கியஸ்தர்களிடையே தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சிதாவும் போக்குகள் என்பன தற்போதைய குழப்பகரமான அரசியல் நிகழ்வுகளாக விசுவரூபமெடுத்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடக்கைகள், கைது, காணாமல் போதல், ஆட்கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் அனைத்தும் சாதாரணதொரு நிகழ்வாகிவிட்ட நிலைமையே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாலைதீவுக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு…
-
- 0 replies
- 948 views
-
-
யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டு ஆறு மாதங்களைக் கடந்தும், குடாநாட்டுக்கான எந்தவிதமான ஒரு பொருளையும் யாழ். வர்த்தகர்கள் குடாநாட்டுக்கு எடுத்து வராத நிலையில், யாழ். செயலகம், யாழ் மாவட்டத்துக்கான பொருட்களின் உச்ச விலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு "பொதுமக்களை" கோமாளிகளாக மாற்றியுள்ளது. கொழும்பில் நிலை கொண்டுள்ள இரு வர்த்தகர்கள் ஒரு தடவைக்கு பத்துக் கோடி ரூபா இலாபம் என்ற நியதியில், பொருட்களைக் கொண்டு வந்து, அங்காடி வியாபாரிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருவதும் உண்மையாகும். இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகள் நாயகத்தின் யாழ். விஜயம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஒரேயொரு தரை வழிப்பாதையை இராணுவத்தினர் தம்மிஷ்டப்படி மூடி ஆறுமாத…
-
- 0 replies
- 655 views
-
-
கனகரவி- போர் பல முனைகளினாலும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாளாந்தம் துன்ப துயரங்களையே அனுபவித்து வருகின்றனர். 05-01-2007 அன்று வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான புளியங்குளம் முள்ளியவளை வீதியின் நெடுங்கேணிக்கு தெற்குப் புறமாக சிவா நகரை அண்மித்த இடத்தில் உள்ள ஐயனார் கோவில் பகுதியில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்களின் பிக்கப் வாகனம் மீதான கிளைமோர் தாக்குலினால் இரண்டு உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உயிரிழப்பும் வெறுமனமே அவர்களின் குடும்பத்தினரிற்கும், உறவினர்களிற்குமான இழப்பாக நோக்க முடியவில்லை. காரணம் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவ…
-
- 0 replies
- 890 views
-
-
அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த போது இலங்கை - இந்திய உறவுகள் பற்றி பல இந்திய புத்திஜீவிகளுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய காங்கிரஸ் கட்சியின் அழைப்பில் சென்றிருந்தேன். இந்த மகாநாடு பெரு வெற்றியில் முடிவடைந்திருந்தது. ஏறத்தாழ 300 உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். நோபல் பரிசு பெற்றவர்களான தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு, பங்களாதேஷின் மொஹமட் யூனுஸ் மற்றும் தலைவர்களான லெச்வலீசா, கென்னத் கௌண்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அரசியல் பிரமுகர…
-
- 0 replies
- 890 views
-
-
பீஷ்மர்- சென்ற வாரம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை வரை தென்னிலங்கையின் அரசியலை உலுக்கிக் கொண்டிருப்பது ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கொண்ட அதிரடி `அமைச்சர்கள் பதவி நீக்கங்களாகும். கிழக்கில் கிடைத்த வெற்றிகளை தளமாகக் கொண்டு தனது ஜனரஞ்சகத் தன்மையையும் அதற்கு மேலாக தனது மேலாண்மையையும் நிலை நிறுத்திக் கொண்ட ஜனாதிபதி அவர்கள் வாகரை விஜயத்துடன் இந்த வெற்றிகளுக்கொரு மேலுமொரு கட்ட முத்தாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். அதற்கு முதல் வாரம் 18 யு.என்.பி. அதிருப்தியாளர்கள் யு.என்.பி.யுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மாறான முறையில் அமைச்சர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். வந்த அந்த வெள்ளத்தோடு வெள்ளமாக முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டது. ஏற்கனவே, ஆறுமுகம் தொண்டம…
-
- 0 replies
- 684 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். மாவிலாறு, சம்பூர், மற்றும் வாகரை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்ட படையினருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் நன்றிகளை தெரிவிப்பதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவிலாறு ஒயா பகுதியில் அமைந்துள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமுக்கும் , வெலிக்கந்தை 23 ஆவது படைத் தலைமையகத்திற்கும் விஜயம் செய்துள்ளனர். இப்பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கு அவசியமான தேவைகளை நிறைவேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் உறு…
-
- 0 replies
- 730 views
-