Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இடப்பெயர்வுகள் தொடருமா? -அ.பிரியன்- இலங்கைத்தீவு போர்நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்பதில் ஐயம் இல்லை. இவர்களுக்கு ஏற்படுகின்ற உயிர் இழப்புக்கள் உடைமை இழப்புக்கள் உறவிழப்புக்கள் என்பன தொடாகதையாகவுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலான மீள முடியாத இழப்பாக இருப்பது தமிழர்கள் தம் வாழ்விடங்களை விட்டு வேறோடு பிடுங்கப்படுவதாகும். இவ் இழப்பு 1958ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக தமிழர்களை விரட்டிக் கொண்டு வருகின்றது. இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் போரினால் தமது வாழ்விடங்களை இழந்தவர்களே ஆவர். தற்போது தாயகத்தில் எல்லோர் முகங்களும் மீண்டும் ஒரு இடப்பெயர்வை எதிர்நோக்கிய படியே இருக்கிறது…

    • 3 replies
    • 1.5k views
  2. சிறிலங்காப் பிரதமருக்கு எதிராக இணையத்தள மனு சிறிலங்காவில் மக்கள் கடத்தப்படுவதை நிறுத்தும்படியும், அரசு அதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் அனைத்துலக உரிமைக்குழு சிறிலங்காவின் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்கவிற்கு இணையத்தளங்களின் ஊடாக எதிர்ப்பு மனுவை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல கடத்தல்கள், காணாமல் போதல் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (வயது 37) கடந்த வாரம் காணாமல் போயுள்ளார். சிறிலங்காவில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும…

  3. திருமலையில் சிறீலங்கா கடற்படையின் பேருந்து பாதையை விட்டு விலகி தடம்புரண்டதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 16 பேர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இச்சம்பவமானது ஹபரணவில் இருந்து புறப்பட்ட கடற்படைப்பேரூந்தே கந்தளாய் அகுபுர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பாதையைவிட்டு விலகி தடம்புரண்டதாக தெரியவருகிறது. thanks: pathivu.com

  4. கிழக்கில் பாரிய நகர்வுக்காக வடகில் நடத்தப்படும் தாக்குதல்! -விதுரன்- கிழக்கில் பாரிய தாக்குதலைத் தொடுக்க முன்னர் வடக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கில் தங்களின் முழுக் கவனமும் திசை திருப்பப்பட்டிருக்கையில் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குல்களைத் தொடுத்து விடலாமென்ற அச்சத்திலேயே தற்போது வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதலை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாக விடுவித்து விடவேண்டுமென்பதில் அரசும் படையினரும் அக்கறை கொண்டுள்ளனர். தற்போதைய மோசமான அரசியல் சூழ்நிலையிலிருந்து விடுபட ஜனாதிபதி மகிந்தவுக்கு இராணுவ வெற்றிகள் அதிகம் தேவைப்படுகிறது. நாட்டின் முன்னைய தலைவர்கள் எல்லோரும் புலிகளிடம் அடிபணிந்தனர…

  5. ஞாயிறு 18-02-2007 18:00 மணி தமிழீழம் [சிறீதரன்] பாகிஸ்தானின் உயர் குழு சிறீலங்காவிற்கு விஐயம் நாளை சிறீலங்காவிற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலர் ரறிக் வசீம் காசி (Tariq Waseem Ghazi ) தலமையிலான குழுவினர் விஐயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். சிறீலங்கா அண்மையில் பாகிஸ்தானிடம் கொள்வனவு செய்த 100 மில்லியன் டொலர்க்கு மேற்கொள்ளப்பட்ட ஆயுதங்களின் தரத்தில் ஏற்பட்ட கேள்விகளையடுத்தே இவ்விஐயம் அமைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா அரசு எதிர்வரும் 18 மாதங்களில் 200 மில்லியன் டொலருக்கு தொகைக்கு ஆயுத்கொள்வனவு மேற்கொள்ளவிருப்பதாகவும் சிறீலங்கா ஊடகச் செய்தி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை முன்னர் வழங்கப்பட்ட 500, AB-103 மற்றும் AB-104 ன் பியூஸ்களில் பழுத…

  6. சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை. "அனைத்துலக விதிமுறைகளை மீறும் செயல்களிலும், தேவையற்ற இராணுவச் செலவீனங்களையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமாக இருந்தால் சிறிலங்காவிற்கான 41 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் உதவித்தொகையை நிறுத்தப்போவதாக" பிரித்தானியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவிற்குச் சென்ற பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல், அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசத் தயார் என அறிவித்திருந்த சில நாட்களில் பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இரட்டை வேட அரசியல் கொள்கையில் இதுவும் ஒரு பட்டும் படாததுமான அணுகுமுறை. தற்போதைய அரசின் இராணுவ நடவடி…

    • 4 replies
    • 1.6k views
  7. ஞாயிறு 18-02-2007 17:25 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை யாழ்பாணத்தில் 7% மேற்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 10201 மாணவர்கள் இவ்வாறு பாடசாலைக்கு செல்லாமல் உள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா இராணுவத்தால் 11ம் திகதி ஓகஸ்ட் 2006 ல் இருந்து யாழ்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் அளவுக்கதியமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே பெருமளவு மாணவர்களின் கல்வி கற்பதற்கு பாடசாலைகளுக்கு செல்லமுடியாமல் உள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்கல்வி செயலகங்களில் 2006ம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் 155 389 பேர் மாணவர…

  8. போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியாவிடில் பிக்குகளின் பெரும் போராட்டம் வெடிக்கும் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் அரசு உறுதிமொழி தர வேண்டுமாம் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை புரிந்துணர்வு உடன்படிக்கையை அதன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அரசாங்கம் கிழித்தெறியவேண்டும். அவ்வாறு செய்ய வில்லையெனில் பௌத்த பிக்குகள் அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்துவர். இவ்வாறு சரித்திரப்பிரசித்தி பெற்ற தலதா மாளிகைக்கு முன் நேற்றுக் கூடிய பௌத்த பிக்கு கள் பிரகடனம் செய்தனர். தலதா மாளிகைக்கு முன் கூடிநின்ற பல நூற்றுக்கணக்கான பிக்குகள் மத்தியில் மேற்படி பிரகடனத்தை தேச…

  9. சிறிலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க சந்திரிகா முயல்கிறார்: மைத்திரிபால சிறீசேன. சிறிலங்கா சுதந்திரக்கட்சியை அழித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க முயற்சித்து வருவதாக சிறிலங்காவின் விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது: சந்திரிகா குமாரதுங்கவின் வலைக்குள் வீழ்ந்து ரணிலின் வெற்றிக்கு துணைபோக முயற்சித்ததனால் தான் மங்கள சமரவீர, அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து நீக்கிருந்தார் என்றார் அவர். முன்னாள் அமை…

  10. அம்பாறை மாவட்டம் - திருக்கோவிலுக்கு தென்மேற்கேயுள்ளது தங்கவேலாயுதபுரம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனான முதலாம் விஜயபாகுவின் படையெடுப்புக்குள் அகப்பட்டு அழிந்து போன இந்த பிரதேசம் இன்றும் சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து மீளவில்லை. தூர்ந்து போய்க் கிடக்கும் பத்துக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன குளங்களும் முருக வழிபாடுகள் நடைபெற்ற மலைகளும் இப்பிரதேசத்தில் ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புகளை பறைசாற்றி நிற்கின்றன. அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் செல்லும் பாதையில் பிரயாணம் செய்யும் ஒருவர் தங்கவேலாயுதபுரத்தை அடைய தாண்டியடி என்னும் கிராமத்தை முதலில் சென்றடைய வேண்டும். தாண்டியடியிலிருந்து மேற்குத் திசை நோக்கி 5 கிலோ…

  11. தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஆட்சியதிகாரத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் சிரேஷ்ட முக்கியஸ்தர்களிடையே தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சிதாவும் போக்குகள் என்பன தற்போதைய குழப்பகரமான அரசியல் நிகழ்வுகளாக விசுவரூபமெடுத்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடக்கைகள், கைது, காணாமல் போதல், ஆட்கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் அனைத்தும் சாதாரணதொரு நிகழ்வாகிவிட்ட நிலைமையே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மாலைதீவுக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு…

  12. யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டு ஆறு மாதங்களைக் கடந்தும், குடாநாட்டுக்கான எந்தவிதமான ஒரு பொருளையும் யாழ். வர்த்தகர்கள் குடாநாட்டுக்கு எடுத்து வராத நிலையில், யாழ். செயலகம், யாழ் மாவட்டத்துக்கான பொருட்களின் உச்ச விலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு "பொதுமக்களை" கோமாளிகளாக மாற்றியுள்ளது. கொழும்பில் நிலை கொண்டுள்ள இரு வர்த்தகர்கள் ஒரு தடவைக்கு பத்துக் கோடி ரூபா இலாபம் என்ற நியதியில், பொருட்களைக் கொண்டு வந்து, அங்காடி வியாபாரிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருவதும் உண்மையாகும். இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகள் நாயகத்தின் யாழ். விஜயம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஒரேயொரு தரை வழிப்பாதையை இராணுவத்தினர் தம்மிஷ்டப்படி மூடி ஆறுமாத…

  13. கனகரவி- போர் பல முனைகளினாலும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாளாந்தம் துன்ப துயரங்களையே அனுபவித்து வருகின்றனர். 05-01-2007 அன்று வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான புளியங்குளம் முள்ளியவளை வீதியின் நெடுங்கேணிக்கு தெற்குப் புறமாக சிவா நகரை அண்மித்த இடத்தில் உள்ள ஐயனார் கோவில் பகுதியில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்களின் பிக்கப் வாகனம் மீதான கிளைமோர் தாக்குலினால் இரண்டு உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உயிரிழப்பும் வெறுமனமே அவர்களின் குடும்பத்தினரிற்கும், உறவினர்களிற்குமான இழப்பாக நோக்க முடியவில்லை. காரணம் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவ…

  14. அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த போது இலங்கை - இந்திய உறவுகள் பற்றி பல இந்திய புத்திஜீவிகளுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய காங்கிரஸ் கட்சியின் அழைப்பில் சென்றிருந்தேன். இந்த மகாநாடு பெரு வெற்றியில் முடிவடைந்திருந்தது. ஏறத்தாழ 300 உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். நோபல் பரிசு பெற்றவர்களான தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு, பங்களாதேஷின் மொஹமட் யூனுஸ் மற்றும் தலைவர்களான லெச்வலீசா, கென்னத் கௌண்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அரசியல் பிரமுகர…

  15. பீஷ்மர்- சென்ற வாரம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை வரை தென்னிலங்கையின் அரசியலை உலுக்கிக் கொண்டிருப்பது ஜனாதிபதி ராஜபக்‌ஷ மேற்கொண்ட அதிரடி `அமைச்சர்கள் பதவி நீக்கங்களாகும். கிழக்கில் கிடைத்த வெற்றிகளை தளமாகக் கொண்டு தனது ஜனரஞ்சகத் தன்மையையும் அதற்கு மேலாக தனது மேலாண்மையையும் நிலை நிறுத்திக் கொண்ட ஜனாதிபதி அவர்கள் வாகரை விஜயத்துடன் இந்த வெற்றிகளுக்கொரு மேலுமொரு கட்ட முத்தாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். அதற்கு முதல் வாரம் 18 யு.என்.பி. அதிருப்தியாளர்கள் யு.என்.பி.யுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மாறான முறையில் அமைச்சர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். வந்த அந்த வெள்ளத்தோடு வெள்ளமாக முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டது. ஏற்கனவே, ஆறுமுகம் தொண்டம…

  16. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். மாவிலாறு, சம்பூர், மற்றும் வாகரை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்ட படையினருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் நன்றிகளை தெரிவிப்பதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவிலாறு ஒயா பகுதியில் அமைந்துள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமுக்கும் , வெலிக்கந்தை 23 ஆவது படைத் தலைமையகத்திற்கும் விஜயம் செய்துள்ளனர். இப்பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கு அவசியமான தேவைகளை நிறைவேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் உறு…

  17. தபால் மா அதிபர் சேர்வின் சேனாதீர யாழ்.குடாநாட்டிற்கு ஒரு கிலோவுக்கு மேற்படாத மருந்துப் பொருட்களை மாத்திரமே தபால் பொதியாக அனுப்பிவைக்க முடியுமெனத் தெரிவித்த தபால் மா அதிபர் சேர்வின் சேனாதீர, பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை தபால் பொதியாக அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.குடாநாட்டிற்கு தொடர்ச்சியாக தற்போது உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றமையால் அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவவில்லையென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். யாழ்.குடாநாட்டிற்கு அனுப்புவதற்காக பொதுமக்கள் 5 அல்லது 6 கிலோ பெறுமதியான உணவுப் பொருள் பார்சல்களை தபாலகங்களில் ஒப்படைக்கின்றனர். இப்பார…

  18. விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்கள் யாரென்பதை ஆதாரங்களுடன் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அம்பலப்படுத்துவோம் எனத்தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி கட்சியினதும் தலைவரினதும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் `புலி' லேபல் ஒட்டப்படுவது நாகரிமாகிவிட்டதென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஸ்ரீபதி சூரியாராச்சி மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை நடத்தவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியோரின் ஒலிநாடாக்களை வெளியிடுவோம். அத்தோடு, செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? அதில் யார் கையெழுத்து இட்டிருக்கின்றார்கள்? என்பதையும் வெளியிடுவோம். எம்மிடம் வீடியோ…

  19. போர்நிறுத்தத்தை விட்டு விலகவேண்டி விசேட ஆராதனைப் போராட்டம். கண்டி தலதாமாளிகையில் சிறீலங்கா அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி 22ம் திகதிக்கு முன் அதாவது போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன் அதனைகைவிட வேண்டும் எனகோரி பெருமளவிலான பௌத்த பிக்குமார் இணைந்து ஆராதனை போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்கள். தேசிய பிக்குகள் முன்னணி இவ்விசேட ஆராதனையை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை என்.ஐ.யு, ஜே.வி.பி ஆகியன இணைந்து எதிர்வரும் 22ம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடன் கைவிடவேண்டி கொழும்பு கைட்பாக் பகுதியில் பொதுகூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்கள் -Pathivu-

    • 5 replies
    • 1.5k views
  20. யாழில் கிளைமோர் தாக்குதல் - 2 இராணுவம் பலி - 12 பேர்ககாயம். இன்று காலை 11.45 மணியளவில் ஏ-9 பாதையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் யாழ்செயலகத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் வீதித்துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.இத் தாக்குதலின் இராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் போது ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் 3 வர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. காயமடைந்தவர்கள் அரியாலையை சேர்ந்த 24 அகவையுடைய ஏ.சந்திரா, 46 அகவையுடைய கே.மோகன், 55 அகவையுடைய …

  21. ''வலை வீசும் அரசியலும் ஜே.வி.பியின் வீழ்ச்சியும்'' நா. யோகேந்திரநாதன்- அண்மையில் கொழும்பு அரசியலில் மிக வேகமாகவும் திடீர் திடீர் எனவும் ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இவை ஆரசியல் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்ட செய்கைகளாகவும் தோன்றலாம். ஆனால் சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் இது நடைமுறையில் காலம்காலமாக நிலவி வரும் ஒரு மூன்றாம் தர அரசியலின் தொடர்ச்சி என்பதை புரிந்து கொள்ள முடியும். அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் அரசுபக்கம் தாவினர். இவர்களை தம்பக்கம் இழுக்கும் வலையாக திரு. மகிந்த ராஜபக்ஷ மந்திரிப்பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் பலனாக அரசியலிலே மி…

  22. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எனினும் அங்கு மோதல்களை தணித்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உதவும் பொருட்டு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் முடிவை அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு இடம்பெற்று வரும் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள் போன்றவற்றை சிறிலங்காவில் உள்ள இராஜதந்திரிகள் மூலம் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனினும் உடனடியாக சிறிலங்காவிற்கு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை. அண்மையில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சிறி…

  23. சிறீலங்கா அரசை சூழும் மேற்குலக அழுத்தம் அமெரிக்காவின் ஐனநாயகக்கட்சியை சேர்ந்த (எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலுக்கான) ஐனாதிபதி வேட்பாளர் உட்பட்ட மிகபிரபலமான செனற்ரர்கள் இலங்கையில் நிகழ்ந்து வரும் பாரிய மனிதஉரிமை மீறல்களால் ஆழ்ந்த விசனமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐனநாயகக்கட்சியின் செனற்றர்களான எட்வேட் கென்னடி. றிச்சேட் டேபின், ஜோன் கெரி, கிறிஸ்ரோபர் டொட் ஆகியோர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் நாளுக்குநாள் கேவலமடைந்துவரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 14 ம்திகதி அமெரிக்காவிற்கான சிறீலங்கா தூதுவர் பேனாட் குணதிலகவிற்கு எழுதிய கடிதத்தில் இல…

  24. 1970 களில் ஆபிரிக்க காங்கிரஸுடன் லண்டனில் ஏற்பட்ட தொடர்பிலிருந்து, 1995 ல் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாம் நிறுவியது வரை, அதன் பின் தற்போதைய நிலை வரை விபரமாக, பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை விளக்குகிறது. எங்கட பொடியள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் கிளை விட்டிருக்கிறார்கள் என அறிய பெருமையாக இருக்கிறது. கட்டுரை ஆங்கிலத்தில்தான். படித்து பாருங்கள். ஈழம் கிடைத்தால் தென்னாபிரிக்கா எங்களை அங்கீகரிக்குமா? http://www.defence.lk/new.asp?fname=20070212_10

  25. மங்கள, சிறீபதி ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சு.க சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அவரின் குடும்ப உறுப்பினர்களையும், அரசாங்கத்தையும் அவதூறாக விமர்சனம் செய்தமைக்காக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் மீது சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்சவை அவரது சகோதரர்கள் வழிநடத்துவதாகவும், மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை பொதுமக்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தப் போவதாகவும் முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். தமது கட்சியின் தலைமையை அவதூறாக பேசியதுடன் நாட்டின் தலைவருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்ட மங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.