ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
கருணா கூலிக்குழுவால் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த இளைஞர்கள் கடத்தல். வாகரை கண்ணன்கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த வாழைச்சேனைப்பகுதிக்கு சென்ற இரு இளைஞர்கள் கருணா கூலி இராணுவத் துணைக்குழுக்களால் நேற்று சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை 3 இடம்பெயர்ந்த இளைஞர்கள் இராணுவத்துணைக்கூலிக் குழுவான கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளனர். இதேவேளை வாகரைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற 4700 பேர்களில் 1200 பொதுமக்களே கட்டுமுறிவு ஊடாக சிங்கபுர பகுதிக்கு சென்றுள்ளார்கள் ஏனையவர்கள் மாங்கேணி கஐவத்தை பகுதிகளிலும் மற்றும் தற்காலிக இடங்களிலும் தங்கியுள்ளார்கள். எனினும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள் கஐவத்தை சோதனைச்சாவடி முன்னரங்க நிலைகளை கடத…
-
- 0 replies
- 744 views
-
-
யாழ் அதிபர் - போர் நிறுத்த கண்காணிப்பு குழு சந்தித்து பேச்சு. யாழ் மாவட்ட அரச அதிபர் கணேஷ் - யாழ் மாவட்டத்திற்கான போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற சந்திப்பி யாழின் தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடியதாகவும் யாழ்ப்பாணத்தின் கண்காணிப்பு பணிகள் மீள ஆரம்பிக்கும் நோக்கம் குறித்து ஆராயப்படதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு இ திருகோணமலை ஆகிய இடங்களிலும் தமது பணிகளை நாளை அல்லது மறுதினம் ஆரம்பிக்கவுள்ளதாக கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 0 replies
- 741 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவியை யார் ஏற்றுக்கொள்வது என்ற பிரச்சினையால் ஜாதிக கெல உறுமயவிற்குள் பாரிய விரிசல் வீழ்ந்துள்ளது. அரசிற்கு ஆதரவு வழங்குவதற்கு பதிலாக அரசினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவி தொடர்பாக கெல உறுமயவின் சோபித தேரர், ரத்தன தேரர், சம்பிக்க ரணவக்க, உதய கமன்பில ஆகியோரைக் கொண்ட குழு, அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபச்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பில் கலாச்சார அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசு சம்மதித்திருந்தது. அதனை ரத்தன தேரர் ஏற்றுக்கொண்ட வேளை ஏனைய மூன்று உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். பின்னர் சோபித தேரர், ரணவக்க, கமன்பில ஆகியோர் இயற்கை வளத்துறை அமைச்சுப் பொறுப்பை தரும்படி அரசை கேட்டி…
-
- 0 replies
- 848 views
-
-
[saturday January 20 2007 07:02:20 PM GMT] [virakesari.lk] வாகரையில் இருந்து மாங்கேணியூடாக மட்டக்களப்பு வாளைச்சேனை பகுதிக்கு செல்லும் மக்கள் மீது பெரும் அவதிநிலையடைந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று வாகரை பகுதியை ஆக்கிரமித்த சிறிலங்கா படையினர் தொடர்ந்து அதிரவெளி கோமத்தமடு போன்ற இடங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கும் நிலையில் அகதிகள் தொடர்ந்தும் இடம் பெயர்ந்து வருகின்றனர் . இவர்களில் 10,000ற்க்கும் அதிகமானோர் மாங்கேனி ஊடாக மட்டகளப்பு இடம் பெயரும் வேளையில் மிகுந்த சோதனை நடவெடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக அந்த அகதிகள் தெரிவித்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன . மக்களின் சிலர் இராணுவ முகாம் அருகி…
-
- 0 replies
- 850 views
-
-
கடந்த வருடம் ஒக்டோபர் 29ந்திகதி முதல் ஆக குறைந்த 45 படையினரும் 500 புலிகளும் வாகரையை இராணுவம் கைப்பற்றி அடுத்த அடுத்த இராணுவ நடவெடிக்கையில் கொல்லப்பட்டிள்ளனர் என இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரி சமரசிங்க ஏபிக்கு செயதுஇ அளித்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதிகளில் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் நிலமைகள் காரணமாக சுமார் 5 இலட்சம் அகதிகள் இலங்கை முழுவதிலும் இருந்த இடம்பெர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது thanks:www.tamilwin.com
-
- 2 replies
- 1.3k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 21 சனவரி 2007, 03:22 ஈழம்] [அ.அருணாசலம்] தொண்டர் அமைப்புக்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிறிலங்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 'கெயார்' சர்வதேச நிறுவனம் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களின் படுகொலைகளின் அடிப்படையில் மேற்கொண்ட 2006 ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தலில் உலக நாடுகளின் வரிசையில் ஆப்கானிஸ்தான் முதலாவது இடத்தையும், சிறிலங்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 'கெயார்' சர்வதேச நிறுவனம் மேலும் தகவல் தெரிவிக்கையில், தொண்டர் நிறுவனப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த பத்து வருடங்களில் 2006 இல் அதிகளவு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் 83 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது 2003 ஆம் ஆண்டிற…
-
- 0 replies
- 737 views
-
-
ஆளும் தரப்புக்கு தாவும் ஐ.தே.க.வினரை உள்ளடக்கி இந்த வாரம் புதிய அமைச்சரவை [14 - January - 2007] [Font Size - A - A - A] {தினக்குரல்} * வெளிவிவகார அமைச்சு பதவிக்கு கடும் போட்டி * ஜனாதிபதியிடம் ரணில் கேள்வி எழுப்புவார் * முஸ்லிம் காங்கிரஸும் அரசில் இணைய சாதகமான சமிக்ஞை புதிய அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அமைச்சுப் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக அறியவருகிறது. ஜனாதிபதியுடன் அவரின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஐ.தே.க.வின் 18 பா…
-
- 0 replies
- 652 views
-
-
இலங்கை இராணுவத் தளபதி யாழ் விஜயம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் இதில் காயமடைந்துள்ளனர். அதேவேளை வாகரையை நேற்று கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர், இன்று தாம் கதிரவெளி வரை முன்னேறியுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் இன்று யாழ் குடாநாட்டுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் இராணுவத தளபதிகளுடன் உரையாடியதாகக் கூறப்படுகிறது. பிபிசி. தமிழ். ---------------------------------------…
-
- 4 replies
- 2.2k views
-
-
மாங்கேணி முகாம் மீது எறிகணை வீச்சு - 4 படையினர் பலி - பாண்டியன் Saturday, 20 January 2007 21:02 (சங்கதி) மட்டக்களப்பு மாவட்டம், மாங்கேணிப் படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பகல் நடத்திய ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பொலநறுவையில் உள்ள படைத்துறை வட்டாரங்களை மேற்கொள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று பிற்பகல் நடைபெற்ற இத்தாக்குதலில் மேலும் மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று திருமலையில் மகிந்தபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்ட நிலையில் இன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சனிக்கிழமையும் இதே முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் …
-
- 0 replies
- 730 views
-
-
முஸ்லீம் காங்கிரசின் கட்சித்தாவலுக்கும் அண்மையில் புத்தளத்தில் கைதான இரு ஈரானியருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இருக்குமோ என பாதுகாப்புத்தரப்பு ஆராய வெளிக்கிட்டுள்ளதாம்.நேற்று புத்தளத்தில் நடந்த தேடுதல் இதன் பின்ணணியில் தானாம்.இவர்களின் விசாரணையில் தீவிரவாத வலைப்பின்னல்களில் சம்பந்தப்பட்டவர்களா?பாகிஸ்தான் அரசுடன் தொடர்புகளைவைத்துள்ளார்களா?ஏன் திருடினார்கள்? என்று குழப்பத்துடன் பொலிஸ் விசாரணை ஒரு புறம்?தலைமைபீடம் மறுத்தாலும் எப்படியாவது அரசில் இணையவேண்டும் என்ரு கங்கணம் கட்டிய புத்தளம் பகுதி முஸ்லீம்காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?(news from puththalam by phone)
-
- 0 replies
- 882 views
-
-
இருவாரத்தில் 57 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், 27பேர் காணாமற் போயுள்ளனர். 2007ஆம் ஆண்டின் இருவாரங்களுக்குள் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதல்களில் 57 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27பேர் கடத்தப்பட்டு காணாமற் போயுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 14பேர் -மட்டக்களப்பு 17பேர் -மன்னார் 5பேர் -திருகோணமலை 8பேர் -வவுனியா 13பேர் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டவர்களில் 22பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள், (1)பரஞ்சோதி தனஞ்சேயன், (2) முருகானந்தன் பரமநாதன், ஆகிய இருவரும் பாடசாலைய மாணவர்கள். படையினரும் துணை இராணுவக் குழுவினரும் தமிழர் தாயகப் பகுதிகளில் வெளிப்படையாகவும் மறைவாகவும்…
-
- 1 reply
- 951 views
-
-
மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன 105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல் மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது. இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து …
-
- 6 replies
- 1.7k views
-
-
கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகங்களும் அரசியல் இராணுவ யதார்த்த நிலைகளும்(சிறப்பு அரசியல் பார்வை) எழுதியவர் நமது செய்தியாளர் Thursday, 18 January 2007 இணைந்திருந்த வடகிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய கையோடு கிழக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை தனியாகவும் திருகோணமலை மாவட்டத்தை தனியாகவும் பிரித்த போது கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பலைகள் எழாதவாறு மரண அச்சுறுத்தல்களுக்குள் தள்ளி மௌனிகளாக்கி விட்டு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக ஸ்ர…
-
- 4 replies
- 2.2k views
-
-
சனி 20-01-2007 14:31 மணி தமிழீழம் [மோகன்] பாதிரியார் கொலையையிட்டு சி.எஸ்.டபிள்யு கேள்வி யாழ் குடாநாட்டில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சிறீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்தை தளமாக கொண்டுள்ள சி.எஸ.டபிள்யு எனும் அமைப்பு தெரிவித்துள்ளது கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் சப்பல் ஒழுங்கையில் வைத்து இவர் மீது சிறீலங்கா படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விதமான அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளை கொண்டிராதவரான கிறிஸ்தவ பாதிரியாரான நல்லதம்பி ஞானசீலனை சிறீலங்கா படைகள் எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது யாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமான ம…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்காவின் புதிய அமைச்சரவை இம்மாதம் 29ம் திகதி சிறீலங்காவின் புதிய அமைச்சரவை இம்மாதம் 29ம் திகதி பதவி ஏற்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 52 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரே ஒரு அமைச்சினை மட்டுமே வழங்குவதற்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் மாற்றுக் குழுவினரக்கு 8 அமைச்சு பதவிகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 848 views
-
-
ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு. கடந்த ஒரு மாத காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தினால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை சிறிலங்காவின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவினர் அவரை விடுதலை செய்யலாம் என பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அக் கடிதத்ததை ஏற்றுக்கொண்டதாக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்தவினால் வழங்கப்பட்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
இனப் பதட்டத்தின் மூலம் வவுனியாவில் இருந்து தமிழர்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு நடத்துவது திட்டமா? வடமாகாணத்தின் தலைநகராமாக மாற்றப்பட்டுள்ள வவுனியாவில் தமிழர் விகிதாசாரம் குறைக்கப்பட்டு ஒரு பொம்மை மாகாணசபை ஆட்சி?
-
- 4 replies
- 2.2k views
-
-
வாழைச்சேனை ஓட்டமாவடியில் நான்கு முஸ்லிம்களைக் காணோம்! வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒமடியாமடு பகுதியில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த எம்.ஐ. தாஜுதீன் (வயது32), என்.எம். சுபைர் (வயது35), ஏ.எல். ஹலால்தீன் (வயது27), யூ.எல். முஹைதீன் (வயது32) ஆகிய நால்வருமே காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 15 ஆம் திகதி ஓட்டமாவடியில் இருந்து 11 பேர் விறகு வெட்டுவதற்காக ஒமடியாமடுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதி ஒன்றுக்குச் சென்றுள்ளனர். மூன்று குழுக்களாகப் பிரிந்து சென்ற இவர்களில் இரண்டு குழுவினர் வீடு வந்து சேர்ந்துள்ளனர். ஏனைய குழுவை…
-
- 0 replies
- 844 views
-
-
இரட்டை வேட அணுகுமுறையால் அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு. "சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது'' இப்படி ஒரு பேச்சு மொழி வழக்கு, நம் மத்தியில் உள்ளது. அமைதி முயற்சிகளை அரசு கையா ளும் விடயத்தைப் பார்க்கும்போது இந்த மொழித் தொடர்தான் நினை வுக்கு வருகின்றது. ஒரு புறம் இராணுவப் போர்வெறித் திட்டம். மறு பக்கத்தில் அமைதி முயற்சிகள் குறித்து சர்வதேச மட்டத்தில் ஆரவாரப் பிரசாரம். இந்த இரட்டைவேட அணுகுமுறை, நாட்டை எங்கே கொண்டுபோய் நிறுத் தப் போகின்றது? மட்டக்களப்பு, வாகரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள பிரதேசங்களைக் கைப்பற்றும் இறுதித் தாக்குதலை இலங்கை அரசின் இராணுவம் முடுக்கி விட்டுள்ளது என்று கொழும் பில் அறிவிக்கப்படுகின்றது. அதாவது, யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்ப…
-
- 0 replies
- 845 views
-
-
யாரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையலாம் - விலகலாம்: மகிந்த ராஐபக்ஸ. ஒவ்வொருவருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவும், விலகவும் உரிமையுண்டு. யாரும் கட்சியில் இணைவதையும் விலகுவதையும் நான் எதிர்க்கமாட்டேன் என மகிந்த ராஐபக்ஸ சிறீலங்கா சுதந்திரக்கட்சி உயர் குழு கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். தனது அரசு தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுதலையடையச் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலராக மைத்திரிபால சிறீசேன மீள தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மங்கள சமரவீர பொருளாளராகவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்தை ரத்வத்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். -Pathi…
-
- 2 replies
- 867 views
-
-
யாழில் மாவீரர், போராளி குடும்பங்களின் விபரங்களை திரட்டும் படையினர். யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றவத்தை நவிண்டில் பகுதியில் சிறிலங்காப் படையினராலும் அவர்ளுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று சோதனை என்ற பெயரில் கெடுபிடிகளை மேற்கொள்வதுடன் அங்கு உள்ள மாவீரர், போராளி குடும்பங்களின் பெயர் விபரங்களையும் தருமாறு மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வருவதாக அங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-
-
- 0 replies
- 660 views
-
-
ஈச்சிலம்பற்று பகுதியில் எறிகணை வீச்சில் நான்கு படையினர் பலி. ஈச்சிலம்பற்று பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்துள்ளதாக சிங்கள அரச தரப்பு அறிவித்துள்ளது. இச்சம்பவம் நேற்று பகல் 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் அனைவரும் கந்தளாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். -Sankathi-
-
- 0 replies
- 866 views
-
-
மன நோயாளியை தாக்கிய துணைஇராணுவக்குழுவினர். - பண்டார வன்னியன் Friday, 19 January 2007 12:31 {சங்கதி} சாவகச்சேரிச் சந்தையில் நின்ற மன நோயாளியை கடத்திச் சென்ற சிறிலங்காப் படையினரின் துணைஇராணுவக்குழுவினர் நான்கு நாட்களின் பின்னர் ஆட்கள் இல்லாத வீட்டில்கடும் சித்திரவதையின் பின்னர் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த நான்காம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியில் நின்ற இவரை ஆயுதங்களுடன் வந்த பத்துக்கும் மேற்பட்ட சிறிலங்காப்படையினரின் துணைஇராணுவக்குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் பார்த்து நிற்க்கக் கூடியதாக வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் பொலிசில் முறையிட்ட போதிலும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை கடந்த இரண்டு நாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
வெள்ளி 19-01-2007 23:46 மணி தமிழீழம் [நிலாமகன்] வடமராச்சியில் நவிண்டில் முகாம்மீது தாக்குதல் 6 படையினர் காயம் யாழ்ப்பாணம் வடமராச்சி நவிண்டில் பகுதயில் இன்று காலை 7 மணியளவில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 6 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளனர். இம் மோதல் சம்பவமானது 15 நிமிட நேரம் நீடித்துள்ளதாக இதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் உடனடியாக தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் இப்பிரதேச மக்கள் மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/
-
- 0 replies
- 884 views
-
-
சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகளிற்கு பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்: அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துவருகின்றது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அவுஸ்ரேலிய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ வாதத்தினால் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவதும் குறிப்பாக பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள், வைத்தியசாலைகள் மீது எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் மேற்கொண்டு மனிதப்படுகொலைக…
-
- 9 replies
- 2.7k views
-