ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
தாயகத்தில் சோபையிழந்த தைத்திருநாள். தமிழர் தாயகம் எங்கும் இன்று தைத் திருநாள் கலகலப்பில்லாமல் நிகழ்கிறது. சமீபகாலமாக தாயகத்தில் ஸ்ரீலங்கா அரசால் ஏற்ப்படுத்தப்படும் மானிட அவலத்தால் மக்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் கழிகிறது. நேற்றும்கூட வாகரையில் எறிகணைவீச்சுக்களும் விமானத்தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் மக்கள் தமது ஜீவனோபாயம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் களையிழந்து பொங்கல் பொழுது கழிகிறது. இவ்வருடத்தின் சோகங்கள் கலைத்து தேசத்தின் புதிய விடியலோடு அடுத்த வருடம் பொங்கலை புத்துணர்வுடன் கொண்டாடுவதற்கு தாயகத்து மக்கள் எழுச்சி கொண்டுள்ளனர். -Sankathi-
-
- 0 replies
- 726 views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவினரின் வன்முறைகள்: சிறிலங்கா காவல்துறையினரின் நிர்வாகம் சீர்குலைவு. மட்டக்களப்பின் சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆயுதங்களுடன் வலம் வருவதாகவும் பொதுமக்களை மிரட்டுவதுடன் அவர்களின் பிரச்சினைகளை காவல்துறையினரிடம் முறையிடாது தமது அலுவலகங்களில் வந்து முறையிடுமாறு கட்டளையிட்டுள்ளதுடன் அங்கு பொது நிர்வாகத்தையும் சீர்குலைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கருணா குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் படி நடந்து கொண்டால் தக்க நட…
-
- 0 replies
- 627 views
-
-
விடுதலைப் புலிகளையும் அரசையும் தனித்தனியாக சந்திக்கிறது கண்காணிப்புக்குழு. தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பினரையும் சிறிலங்கா அரச தரப்பினரையும் தனித்தனியாக இவ்வாரம் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் லார் ஜோன் சொல்பேர்க் சந்திக்கவுள்ளார். இருதரப்பினரையும் சந்தித்து கண்காணிப்புக்குழுவின் செயற்பாட்டில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தொர்ஃபினூர் ஓமர்சன் தெரிவித்துள்ளார். ஒருவார காலமாக நடைபெற்ற கலந்துரையாடல் பட்டறையின் போது கண்காணிப்புக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களே இச்சந்திப்பில் ஆராயப்படவுள்ளன. கண்காணிப்புக்குழுவின் பேச்சா…
-
- 1 reply
- 1k views
-
-
அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த அரசு தன்பக்கம் இழுப்பதால் அரசுக்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடையலாம் என்பதனால் இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த மூன்று உறுப்பினர்களும் இது தொடர்பாக இந்த வாரம் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாங்கள் அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதிக நம்பிக்கை வைத்திருந்தோம். அதன்மூலம் இனப்பிரச்சனைக்கும், தோட்டத் தொழிலாளர் பிரச்சனைக…
-
- 0 replies
- 805 views
-
-
இடப் பெயர்வுகள் மூலம் உடைந்து போகாத மக்கள் விடுதலைக்காகப் போராடி வருகின்ற எந்தவொரு இனமும் தனது விடுதலையை பெற்றுக் கொள்வதற்கு நெடிய பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்த நீண்ட வரலாற்றின் போது விடுதலையை வேண்டிப் போராடுகின்ற இனமும் அவ்விடுதலைக்கான இயக்கமும் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகிறது. இச்சவால்களிற்குள் இடப் பெயர்வு என்பது மிகப் பெரிய சவலாகும். தமது பூர்வீக தாயகத்தை விட்டு அந்நியப்படாது பாதுகாப்பான இடத்தை நோக்கி சுதந்திர உணர்வு கொண்ட மக்கள் அனைவரும் நடப்பார்கள். இது மாபெரும் வரலாற்று வெற்றிக்கு வித்திடும். உலகில் விடுதலைப் போராட்டங்கள் நடை பெற்ற நாடுகளில் எல்லாம் விடுதலைக்காக பாரிய இடப் பெ…
-
- 0 replies
- 863 views
-
-
துணை இராணுவக்குழுவினரின் சதி: தமிழ் - முஸ்லிம் மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் [திங்கட்கிழமை, 15 சனவரி 2007, 03:44 ஈழம்] [க.திருக்குமார்] {புதினம்} காத்தான்குடி முஸ்லிம் மக்களையும் ஆரையம்பதி தமிழ்மக்களையும் சிறிலங்காப் படையினரின் சதிவலையில் வீழ்ந்து விடாமல் அமைதி காக்கும்படி பள்ளிவாசல்கள் சம்மேளனக் குழுவின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆரையம்பதி சிறப்பு அதிரடிப்படையினருடன் கூட்டுச்சேர்ந்து முகாம் அமைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர், கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் பயணிகளை தாக்கியது தொடர்பாக அங்கு முறுகல்நிலை தோன்றியுள்ளது. தாக்குதல் அச்சத்தில் முஸ்லிம் மக்கள் காத்தான்குடி பள்ளிவாசலில் அ…
-
- 0 replies
- 719 views
-
-
[14 - January - 2007] [Font Size - A - A - A] தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கின் நிலைமை பற்றி ஒரு விவாதத்தை நடத்திற்று. அந்த விவாதத்தில் அந்த இணைவின் அவசியம் பற்றி சம்பந்தன் பேசினார். அன்றோ அடுத்த நாளோ இதே விடயம் பற்றிப் பேசிய ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் பற்றிய சில நிபந்தனைகளை தமிழர்கள் ஏற்காத வரை தாங்கள் வடக்கு, கிழக்கு மீள் இணைப்புக்கு உதவப் போவதில்லையென அறிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இதுபற்றி பேசியிருப்பாரென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய தரவுகள் அதிகமில்லை. பிரதானமாக வடபகுதியைக் கொண்ட முஸ்லிம்களைக் கொண்ட ஒரு இயக்கம் வடக்கு, கிழக்குப் பகுதியை தங்கள் தாயகப் பிரதேசமாக பிரகடனப்படுத்தி த…
-
- 0 replies
- 1k views
-
-
18 ஜ.தே.க.எம்.பி.க்கள் அரசுடன் இணைவர் மு.கா., ஹெலௌறுமயவும் சேரும் சாத்தியம் வீரகேசரி நாளேடு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் அதிருபதியாளர்கள் 18 பேர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும்அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்துடன் பலம்பொருந்திய அரசாங்கம் அமையும். இதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். தற்போது அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யைத் தவிர்த்து 88 உறுப்பினர்கள் உள்ளனர். இதேவேளை…
-
- 0 replies
- 722 views
-
-
யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை வீரகேசரி நாளேடு யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பஸ்தர்கள் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இணுவில் கிழக்கு புகையிரத கடவைக்கு அருகில் நேற்று முன்தினமிரவு ஒருவர் சுட்டுக ்கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் உடுவிலைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவசுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இணுவில் கந்தசாமி கோவிலுக்கு அருகில் நேற்று முன்தினம் இன்னுமொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் இணுவில் மேற்கைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குமாரசாமி தயாபரன் (வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேற்படி இரு சம்பவ இடங்களுக்கும் நேரி…
-
- 0 replies
- 700 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 19:49 ஈழம் (தாயக செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்டம் வாகரை, கதிரவெளி, மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான் படையினரின் கிபீர் விமானங்கள் இன்று ஆறு தடவைகள் தாக்குதலை நடத்தியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாகரை, கதிரவெளி வான்பரப்பில் சிறிலங்கா வான் படையினரின் வேவு விமானம் வட்டமிட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி தொடக்கம் 1.30 மணிவரை கதிரவெளி மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து கிபீர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் கதிரவெளி மக்களின் குடியிருப்புக்கள் முற்று முழுதாக சேதடைந்துள்ளன. கிபீர் விமானங்களின் தாக்குதலால் மக்கள் அச்சமடைந்து அல்லலுற்றனர். தொடர்ந்து வேவு விமானம் வானில் பறப்பதால் மக்கள் அச…
-
- 0 replies
- 711 views
-
-
சிறிலங்கா கடற்படையில் மகனை சேர்த்து மகிந்த ஆடும் நாடகம். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 2 ஆவது மகன் ஜோசித ராஜபக்ச அண்மையில் கடற்படையில் இணைந்ததும், திருமலை கடற்படைத்தளத்திற்கு திடீரெனச் சென்ற மகிந்தவை அவர் மரியாதை செலுத்தி வரவேற்றதையும் தென்பகுதி சிங்கள, ஆங்கில ஊடகங்கள் படங்களுடன் பெரிய தலைப்பு செய்திகளாக வெளியிட்டிருந்தது. அந்த ஊடகங்களின் பார்வையில் நாட்டிற்காக மகிந்த தானம் செய்தது போலவும் தியாகம் செய்தது போலவும் எழுதப்பட்டிருந்தன. ஆனால் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட விடயம் ஒன்று இரகசியமாக அரங்கேறியுள்ளது. கடற்படையில் சேர்ந்து பயிற்சி பெற்ற மகிந்தவின் மகன் இருவாரங்கள் பெற்ற பயிற்சியுடன் பிரித்தானியாவுக்கு புலமைப்பரிசில் பெற்று இருவருட பய…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஸ்ரீலங்கா பெற்றுவரும் சர்வதேச இராணுவ உதவிகள்… எழுதியவர் சுவிசிலிருந்து ஆய்வாளர் நிலவன் Saturday, 13 January 2007 ஸ்ரீலங்கா தேசம் தமிழ் மக்களுடனான ஒரு யுத்தத்திற்குத் தயாராகிவிட்டது. அதுவும் முழு அளவிலான ஒரு யுத்தத்திற்கு அது தன்னைத் தயார்படுத்தி விட்டது. அரசாங்கமும், அரசாங்கத்திற்குத் துணை நிற்கும் பேரினவாதக் கட்சிகளும், யுத்தத்தை உடனடியாக ஆரம்பித்து விடவேண்டும் என்பதில் அதிகம் முனைப்புக் காண்பிக்க ஆரம்பித்துள்ளன. புலிகள் மீது யுத்தத்தை ஆரம்பிக்கும் பட்சத்தில், நாங்களும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்கின்ற தொனியில் எதிர்க்கட்சிகளும் பேசி வருகின்றன. கட்டுரையை மேலும் வாசிக்க.... http://tamilnews24.com//index.php?option=c...99&Itemid=2
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரானுக்கு அணுவாயுத விற்பனை: சிறிலங்காவிற்கு தொடர்பு [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 13:29 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உயர்ந்த தொழிலதிபர் ஹரி ஜெயவர்த்தனா சர்வதேச அரங்கில் அணுவாயுத பேரத்தில் ஈடுபட்டு தற்போது சிறையில் உள்ள சிறிலங்காவை சேர்ந்த தொழிலதிபரான புகாரி சயீட் அபு தகீர் என்பவரிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தானின் அணுகுண்டின் தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி அப்துல் காடீர் கான் எழுதிய கடிதத்தின் மூலம் முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவிற்கும் ரணிலுக்கும் இந்த விடயம் தெரிந்திருந்தது எனவும் கூறப்படுகின்றது. கானும் தகீரும் ஈரான், லிபியா, வடகொரியா பேன்றவற்றிற்கு அணுவாயுத தொழில்நுட்பத்தை வழங…
-
- 0 replies
- 1.1k views
-
-
சமாதான செயலகப் பணிப்பாளராக மீண்டும் ஜயந்த தனபால [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 13:20 ஈழம்] [அ.அருணாசலம்] ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற ஜயந்த தனபாலாவிற்கு மீண்டும் சிறிலங்காவின் சமாதான செயலகப் பணிப்பாளர் பதவியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. இதுவரை சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவி வகித்து வந்த பாலித கோகன்ன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவியை ஏற்றதனால் அவரின் இடத்திற்கு தனபால நியமிக்கப்பட உள்ளார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சமாதான செயலகப் பணிப்பாளராக ஜயந்த தனபால இருந்துள்ளார். http://www.eelampage.com/?cn=30483
-
- 0 replies
- 831 views
-
-
யாழ். செல்லவிருந்த கப்பலில் விமானத்தின் உதிரிப்பாகங்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 16:24 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்திற்கு செல்லவிருந்த தென்னாபிரிக்காவிற்கு சொந்தமான கப்பலில் இருந்து விமானங்களின் உதிரிப்பாகங்களை மீட்டுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்கா டேர்பன் துறைமுகத்திலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னார் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்துக்குச் சென்றது. கப்பலின் கப்டனான நெதர்லாந்து நாட்டவரும் மீனவர்களாக வியட்நாமனாமியர்களும் இருந்துள்ளனர். பின்ரன் பனாமா என்ற பெயருடைய இந்த கப்பல் சிறிலங்கா அத்தியாவசிய தேவைகள் ஆணையாளரால் யாழ். தேவைக்காக குத்தகைக்கு அமர்த்தப்பட்டது. கொழும்புத்துறைமுகத்திலிருந
-
- 0 replies
- 1.2k views
-
-
வாகரையில் படையினர் மீது எறிகணைத் தாக்குதல்: 4 பேர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 15:55 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வாகரை மாங்கேணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்திய போது பதிலுக்கு விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குலின் போதே நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக, விடுதலைப் புலிகள் முற்பகல் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். …
-
- 34 replies
- 4.9k views
-
-
தற்போதைய வெளிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீர வெளிவிகார அமைச்சினை தொடாந்தும் தக்கவைப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார்.வெளிவிவாகர அமைச்சு பதவி பறிக்கப்படுமானால் அரசில் இருந்து வெளியேறப் போவதாக கடும் எச்சரிக்கையினையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் இந்த நிலையில் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் வெளிவிவகார அமைச்சு பதவிக்கு ஆர்வம் காட்டி வருகின்றார் அரசாங்கத்துடன் இணையவுள்ள ஐக்கிய தேசிய கட்;சியின் மாற்றுக் குழுவினருக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பிற்கும் இணைப்பு பாலமாக திகழும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொரொகொட வெளிவிவாகர அமைச்சினை பெறுவதில் அதிக அக்…
-
- 0 replies
- 815 views
-
-
புரிந்துணர்வு ஒப்பந்தமா? கட்சித்தாவலா? மகிந்த முடிவு எடுக்கட்டும்: ஐ.தே.க அரசின் பக்கம் எமது உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டால் அரசிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடைந்து போகும் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நடைபெறவுள்ள சந்திப்பில் தெரிவிக்கவுள்ளதாக அறியப்படுகின்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசின் பக்கம் உள்வாங்குவது தொடர்பாக மகிந்த, தனது அமைச்சர்களுடன் ஆராய்ந்தாக வெளிவந்த தகவல்களை அடுத்து, கடந்த 11 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் செயற்குழுத்தலைவர் ருக்மன் சேனநாயக்க, பொதுச்ச…
-
- 0 replies
- 868 views
-
-
இலங்கை அரசு தொடர்ச்சியாக அம்பாறை சம்பந்தமாக பல செய்திகளை வெளியிட்டி வருகிறது. உண்மையில் என்ன நடக்கிறது அம்பாறையில்? ஏன் தமிழர் தரப்பு அம்பாறை சம்பந்தமாக ஒரு செய்திகளையும் வெளியிடவில்லை? தமிழ் இணையத்தளங்களும் ஏன் அம்பாறை சம்பந்தமாக இருட்டடிப்புச் செய்கிறது? அம்பாறை தமிழர் மாவட்டம் இல்லையா? எமக்கெதிராக ஐ.நா. செயலாளர் நாயகமும் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில், ஏன் தமிழர் தரப்பு "5 வருடம் கட்டுப்பாடு" என்ற பொய்மையான சர்வதேச மாயையில் கட்டுப்பட்டிருக்கிறது? நாளுக்கு நாள் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டும், கடத்தி காணாமல் போவதும் தொடரும் போது "கையைக் கட்டி வாயை மூடு செயலற்றவரர்களாக போய் விட்டோமா? நாளுக்கு நாள் எமது பிரதேசங்களை தொடர்ந்து சிங்களத்திடம் இழக்…
-
- 24 replies
- 7.4k views
-
-
ஈரானுக்கு அணுவாயுத விற்பனை: சிறிலங்காவிற்கு தொடர்பு [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 13:29 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உயர்ந்த தொழிலதிபர் ஹரி ஜெயவர்த்தனா சர்வதேச அரங்கில் அணுவாயுத பேரத்தில் ஈடுபட்டு தற்போது சிறையில் உள்ள சிறிலங்காவை சேர்ந்த தொழிலதிபரான புகாரி சயீட் அபு தகீர் என்பவரிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தானின் அணுகுண்டின் தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி அப்துல் காடீர் கான் எழுதிய கடிதத்தின் மூலம் முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவிற்கும் ரணிலுக்கும் இந்த விடயம் தெரிந்திருந்தது எனவும் கூறப்படுகின்றது. கானும் தகீரும் ஈரான், லிபியா, வடகொரியா பேன்றவற்றிற்கு அணுவாயுத தொழில்நுட்பத்தை …
-
- 0 replies
- 937 views
-
-
காத்தான்குடி ஆரையம்பதி ஐந்தாம் கட்டையில் நேற்றுக் காலை ஏற்பட்ட முறுகல் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பிரிவினரக்கும் இடையிலான மோதல் ஒன்றின் போது கருணா அணியினர் முஸ்லிம் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயொகம் செய்துள்ளனர் அத்துடன் ஈருருளிகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தியதாக மட்டக்களப்பு சிரேஸ்ட காவல்துறை அதிகாரி மெக்சி புரக்டர் தெரிவித்தார் இதனையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் எனினும் காத்தான்குடி நகரில் வியாபார தளங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. பிரதேசத்தில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். pathivu.com http://www.pathivu.com/inde…
-
- 0 replies
- 1.3k views
-
-
இனமோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்: இத்தாலி அமைச்சர். இத்தாலி அரசின் வெளிவிவகாரப் பிரதியமைச்சர் கியாணி வெனாட்டி அண்மையில் சிறிலங்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இதன்போது சிறிலங்காவில் மீண்டும் நல்லதொரு சூழ்நிலை ஏற்பட தமிழீழ விடுதலைப் புலிகளோடு சிறிலங்காஅரசு பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாக சர்வதேச ஜக்கிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த 20 வருடகால இனமோதல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் வலியுருத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு இத்தாலி அதியுச்ச மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவும் வடக்கு கிழக…
-
- 0 replies
- 951 views
-
-
ஸ்கொட்லண்ட் யார்ட் காவல்துறையினர் விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் படுகொலையை குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை ஸ்கொலண்ட் யார்ட் காவல்துறையினர் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். இதுதொடர்பில் பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கொழும்பில் சிறீலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கடந்த 10 நாட்களுக்கு ஸ்கொட்லண்ட்யார்ட் காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்த நிலையில் நாடு திரும்பும் ஸ்கொட்லண்ட் யார்ட் காவல்துறை அணியினர் சிலதடயங்களை இலண்டனிற்கு எடுத்து வந்து ஆய்வுக்கு உட்படுத்துவார்கள் என பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. -Pathivu-
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்துடன் இணைவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பூரண இணக்கத்தை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ உள்ளடங்கிய அரச தரப்பு குழுவினருக்கும் இடையில் இதற்கான பேச்சுவார்த்தை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. வெள்ளியிரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்தது. பேச்சுவார்த்தையின் இறுதியில் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அரச தரப்பி…
-
- 0 replies
- 776 views
-
-
யாழ் வேம்படியில் விசாரணைக்காகச் சென்ற இளைஞன் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் வேம்படி சிறிலங்காப் படையினரின் முகாமிற்கு விசாரணைக்காகச் சென்ற இரு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் முகாமிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டதற்கிணங்க இரு இளைஞர்கள் நேற்று காலை 11.00மணியளவில் சென்றிருந்தனர். இவ்வாறு விசாரணைக்காகச் சென்ற இவ்விரு இளைஞர்கள் படை முகாமிற்குச் சென்ற சிறிது நேரத்தில் இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொண்டார். நேற்று இராணுவ முகாமிற…
-
- 0 replies
- 854 views
-