ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
கொழும்பு திரும்ப முடியாமல் யாழில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்கள் தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளவும் -வீரகேசரி நாளேடு வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து யாழ். சென்றவர்களும், தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து கொழும்பு வரமுடியாமல் சிக்குண்டிருக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்களும் தத்தமது தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். தற்பொழுது ஏ9 பாதை மூடப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு யாழ். விமான சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு வர முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு அந்நாட்டு தூதுவராலயங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்…
-
- 20 replies
- 4.6k views
-
-
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அடுத்த தலைவராக நோர்வேயின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோஹான் சொல்பேர்க் பதவியேற்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய கண்காணிப்புக் குழுத் தலைவரான சுவீடன் நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் இம்மாத இறுதியுடன் அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார். 54 வயதான மேஜர் ஜெனரல் சொல்பேர்க் நோர்வேஜிய இராணுவத் தளபதிப் பதவிலியிலிருந்து கடந்தாண்டு ஓய்வுப் பெற்றார். அதற்கு முன்னர் இராணுவத்தின் ஆறாம் படைப்பிரிவுத் தலைவராக 4 வருடங்கள் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 10 வருட காலத்தில் இராணுவ இடமாற்றங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய பொறுப்பினை வகித்து வந்த அவர், இராணுவ காலாட்படைப் ப…
-
- 0 replies
- 864 views
-
-
வடபோர்முனை சண்டைக்காட்சிகள். 17.08.2006 http://www.pathivu.com/?ucat=videonews
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியா பகுதியில் இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்படுகின் றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கையில் பல பகுதிகளிலிருந் தும் ஒன்று சேர்க்கப்பட்ட துருப்பினர் கட்டம் கட்டமாக வவுனியாவுக்கு நகர்த்தப்பட்டு வரு கின்றனர் இவ்வாறு நகர்த்தப்படும் படையினரில் கணிசமானோர் வவுனியாவில் உள்ள படை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அதே வேளை, குறிப்பிடத்தக்க அளவிலான படை யினர் முன்னரங்க நிலைகளுக்கு அனுப்பப் பட்டு வருகின்றனர் என்று தகவல்கள் கூறு கின்றன. வடக்கில் முகமாலை, கிளாலி பகுதிகளில் குவிந்துள்ள புலிகளின் பலத்தை உடைப்பதற் காக தெற்கே வவுனியாவில் புலிகளின் கட் டுப்பாட்டுப் பகுதியினுள் அர சுப் படைகள் புதிய போர்முனை ஒன்றை திறக்கக்கூடும் என்று இரா ணுவ ஆய்வாளர்கள் …
-
- 0 replies
- 945 views
-
-
வடபோர்முனையில் தற்காப்புத் தாக்குதல்களே நடத்தப்பட்டன. சர்வதேச சமூகத்திடம் விடுதலைப்புலிகள் எடுத்துரைப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திடம் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் நோர்வே தரப்பினர் ஊடாக இந்த தகவலை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளில் மாவிலாறு மற்றும் மண்டைதீவுப் பகுதிகளில் தற்காப்புக் கருதிய தாக்குதல்களே தம்மால் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், அரசாங்கம் வான்தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் நிறுத்தினால் தாமும் தாக்குதல்களை நிறுத்த தயார் என தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவருகி…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைக்கு மேலும் 05 கிபிர் விமானங்கள் கடந்த வருடம் வந்தடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இலங்கைக்கு முதன் முதல் 1995-1996ம் ஆண்டு காலப்பகுதியில் கிபிர் விமாங்களை அமரிக்காவின் இராணுவ தளபாட வர்த்தக உடன்படிக்கையின்படி விற்றிருந்தது. 1995ம் ஆண்டில் விற்கப்பட்டிருந்த கிபிர் விமாங்கள் சி.2 தரத்திலானவை. ஏனினும் 2005ம் ஆண்டு சி.7 தரத்திலான மேலும் 5 நவீன கிபிர் விமாங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்துள்ளது. தற்போது இலங்கையில் 9 கிபிர் விமானங்கள் சேவையில் இருப்பதாக அறியமுடிகிறது. 2006ம் ஆண்டு தமிழ் மக்கள்மீது குண்டு போடுவதற்கு 1995ம் ஆண்டு மற்றும் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட பழைய கிபிர் விமாங்களையே இலங்கை அரசு பயன்படுத்தி இருந்தது. உலகத்தில் 04நாடுகளில் மட்டும் இந்த நா…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோட்டைப் படைமுகாமிலிருந்து பொதுமக்களின் குடிமனைகள் நோக்கி எறிகணைத் தாக்குதல். பொதுமக்களின் குடிமனைகளை இலக்கு வைத்து, கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. நேற்று மாலை தொடக்கம், யாழ் கோட்டை - பலாலி படைத் தளங்களில் இருந்து, பொதுமக்களின் குடிமனைகளை இலக்கு வைத்து, சிங்களப் பயங்கரவாதப் படைகளால் கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கோட்டைப் படைத் தளத்தில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி, சிங்களப் பயங்கரவாதப் படைகளால் பல்குழல் உந்துகணைகள் ஏவப்படுகின்றன. சிங்களப் பயங்கரவாதப் படைகளால் ஏவப்படும் எறிகணைகள், தென்மராட்சி மந்துவில், மிருசுவில், கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாக, தமிழீழ வ…
-
- 0 replies
- 818 views
-
-
வலிகாமத்தின் வடமேற்கேயுள்ள சித்தங்கேணி, சுழிபுரம் காளவன் சந்தி, மாவடி, வடலியடைப்பு ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த சிறீலங்கா படை முகாம்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நான்கு படை முகாம்களிலும் நிலைகொண்டிருந்த சிறீலங்கா படையினர், காரைநகர், பொன்னாலை, பண்டத்தரிப்பு ஆகிய பகுதிகளில் உள்ள படை முகாம்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். எனினும் மாலை வேளைகளில் சித்தங்கேணி, வழக்கம்பிராய், காளவன் சந்தி, மாவடி, வடலியடைப்பு ஆகிய பகுதிகளுக்கு உந்துருளிகளில் செல்லும் சிறீலங்கா படையினர், வீதிகளில் நிற்போரை கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர். நாளாந்தம் பத்து உந்துருளிகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் இருபது வரையான சிறீலங்கா படையினர், பிரதான வீதிகளிலும், குச்சொழுங்கைகளிலும் மக்களை…
-
- 0 replies
- 978 views
-
-
சனி 19-08-2006 13:52 மணி தமிழீழம் [மகான்] தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினர் இன்று சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்-தமிழ்மதி எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் விமானக்குண்டு வீச்சுக்களை தொடர் ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களது தாக்குதல்களை முறியடி த்த நிலையில் தமிழீழ விடுதலைப்பு லிகளின் வான்படையினர் முப்படை களின் பெரும் படையாக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. இவ் வாறு மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்மதி தெரிவித்தார். மட்.முனைக்காடு விவேகனந்தா வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற லெப்டினன் புயலவன் அவர்களது வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்க உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண…
-
- 14 replies
- 5k views
-
-
வங்காலை வெறிச்சோடியது: தமிழகத்துக்கு அகதிகளாக ஒரேநாளில் 543 பேர் மன்னார் வங்காலை கிராம மக்கள் அங்கிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறி தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். தனுஸ்கோடி அரிச்சல்முனைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைவரும் சென்றடைந்தனர். பிற்பகல் 3.30 மணி வரை 48 படகுகளில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 543 பேர் அகதிகளாக அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றடைந்துள்ளனர். தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி அவர்கள் அனைவரையும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைத்தனர் http://www.eelampage.com/?cn=28335
-
- 0 replies
- 1k views
-
-
ஐரோப்பியத் தடை: நோர்வேக்கு கேகலிய ரம்புக்வெல எதிர்ப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை விமர்சனம் செய்திருந்த நோர்வே சிறப்புத் தூதுவருக்கு சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 25 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த நீண்ட விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சிக்குப் பின்னர் தடை விதிக்கும் முடிவை மேற்கொண்டது. ஐரோப்பியத் தடை குறித்து தொடக்கத்தில் விடுதலைப் புலிகள் கூறி வந்த கருத்தையே நோர்வேத் தரப்பும் தெரிவிக்கிறது. இத்தகைய கருத்தை நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயர் வெளியிட்டமை வருத்தமளிக்கிறது என்றார் கேகலிய ரம்புக்வெல http://www.eelampage.c…
-
- 1 reply
- 950 views
-
-
யாழ் குடாநாட்டில் சிறீலங்கா படைகளுடன் இயங்கி வந்த தமிழ் ஒட்டுக்குழுக்கள், கொழும்பிற்கு ஓட்டமெடுப்பதற்கான பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நாட்களில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலொன்று, தென்னிலங்கையில் இருந்து வடமராட்சி பருத்தித்துறை துறைமுகத்தை சென்றடைய இருக்கின்றது. குறிப்பிட்ட கப்பல் மீளவும் தென்னிலங்கைக்கு புறப்படும் போது, அதில் பல்கலைக் கழக மாணவர்கள், அரசாங்கம் பணியாளர்கள், மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற மக்கள் செல்ல இருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தென்னிலங்கைக்கு தப்பிச் செல்வதற்கான ஆயத்தங்களில், சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி குழு உட்பட, யாழ் குடாநாட்டில் இயங்கும் தமிழ் ஒட்டு…
-
- 0 replies
- 1.6k views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் மத்திய குழு உறுப்பினரும் தந்தை செல்வா அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆகிய சின்னத்தம்பி சிவமகாராஜா (வயது 66) நேற்றிரவு அவரது தற்காலிக வதிவிடமான தெல்லிப்பளையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்றிரவு அந்தப்பகுதியில் வேட்டுச்சத்தங்கள் கேட்டதாகவும், வழமையாக காலையில் துர்க்கையம்மன் ஆலய பூசையில் கலந்துகொள்வார் என்றும் இன்று காலை அவர் பூசைக்கு வராததையடுத்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் சூட்டுக்காயங்களுடன் இறந்து காணப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பளை கொல்லங்கலட்டியை சேர்ந்த இவர் தெல்லிப்பளை பிரதேச சபையின் நூலகத்தில் பணியாற்றினார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
திருமலையில் பிரபல தமிழ் வர்த்தகர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொலை. (ஞாயிற்றுக்கிழமை, 20 ஓகஸ்ட் 2006, 15:45 தமிழீழம்) (உதயகுமார்) இன்று திருமலையில் அருள் என்றழைக்கப்படும் ஜோசப் செபராஜா என்ற பிரபல வர்த்தகர் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மதியம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லண்டனில் நீண்ட காலமாக வாழ்ந்து, சமாதான காலத்தில் திருமலை திரும்பி பிரபல வர்த்தக நிறுவனத்தை இவர் நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதி "கேணல்" சொர்ணத்தின் சகோதரரான இவர், சில மாதங்களாக இலங்கை புலனாய்வுத் துறையினரின் கொலை அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தவரென்று குடும்பத்தினர் தெரிவித்தார்கள். இன்றைய சூழலில் சிறீலங்கா அரசு தம…
-
- 4 replies
- 2.2k views
-
-
இந்தக் கேள்விக்கான விடையை அறிவதற்கு முன்னர் இந்த இராஜதந்திரி மீதான சில அடிப்படை விளக்கங்களை அறிந்துகொள்ள வேணடும். யார் இந்த இராஜதந்திரி ? இவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டார்? இவரது பின்னணி என்ன? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் மீதான குறி யாரால் வைக்கப்பட்டது ? பாக்கிஸதானின் இராணுவப் புலனாய்வுத்துறையின் ஓய்வுபெற்ற கேர்ணல் தரத்திலாலான இந்த பஷீர் வாலி மொகமட் 4 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவுக்கான பாக்கிஸதானின் தூதுவராக கடமையாற்றுகின்றார். இவரது ஸ்ரீலங்காவக்கான தூதுவர் நியமனம் கடந்த 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. இவரது நியமனம் தொடர்பாக இந்தியா அப்போது தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஸ்ரீலங்கா அரசக்கு தெரியப்படுத்தியிருந்து. இருந்தும், தமிழர்கள் வ…
-
- 8 replies
- 1.8k views
-
-
-
வடபோர்முனையில் படுகாயமடைந்த 1200க்கும் அதிகமான படையினர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதி. வடபோர்முனையில் படுகாயமடைந்த ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர், ராகம, சிறீஜெயவர்த்தனபுர மற்றும் கொழும்பு படைத்துறை தலைமையகம் ஆகியவற்றில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அனுராதபுரம் மருத்துவமனையில் மேலும் முந்நூறு சிறீலங்கா படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இடநெ
-
- 0 replies
- 1k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 20 ஓகஸ்ட் 2006, 20:36 தமிழீழம்] [ஜோன்] முகமாலைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இன்று அதிகாலையில் இருந்து காலை வரை நடைபெற்ற யுத்தத்தில் சுமார் 32 படையினர் பலியானதாக அறியமுடிகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று அதிகாலையில் இருந்து இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேற முற்பட்டனர் இதனை முறியடித்து விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் உக்கிர தாக்குதலை தொடுத்தனர். இந்தத் தாக்குதலில் சுமார் 10 படையினர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 216 படையினர் படுகாயமடைந்தனர். மேலும் காயமடைந்த படையினரில் 22 படையினர் பலாலிக்கு கொண்டு செல்லமுதல் பலியாகியுள்ளனர். இன்று நடந்த 6 மணித்தியால யுத்தத்தில் மட்டும் சுமார் 32 படையினர் கொ…
-
- 0 replies
- 1.1k views
-
-
துரோகியும் திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்.பி திரு. தங்கத்துரையில் தம்பியே திரு.குமாரதுரை அவர்கள். டென்மார்க் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் புலம்பெயர் கட்டுமானங்களை உடைத்து பல காட்டிக்கொடுப்புக் நடத்தி ஐரோப்பிய தேசத்தில் இருகும் துரோகிகள் வரிசையில் இவரது 5 பிள்ளைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நோய்கள் கூட பரம்பரையாக கூர்ப்பின் அடிப்படையில் தொடர்ந்து வருவது வழங்கம். இதில் என்ன வேடிக்கை என்றால் துரோகிகள் கூட பரம்பரையில் தாக்கத்தைச் செலுத்துவதை நாம் இன்று நேரில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக திருவாளர் மதிகுமாரதுரையின் குடும்பத்தையே எடுத்து நோக்கலாம். இவரது சகோதரன் திருவாளர் தக்கத்த…
-
- 14 replies
- 3k views
-
-
முகமாலையில் இண்று நடந்த சண்டையில் 32 இராணுவத்தினர் பலி. - 216 படையினர் படுகாயம். முகமாலைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இன்று அதிகாலையில் இருந்து காலை வரை நடைபெற்ற யுத்தத்தில் சுமார் 32 படையினர் பலியானதாக அறியமுடிகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று அதிகாலையில் இருந்து இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேற முற்பட்டனர் இதனை முறியடித்து விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் உக்கிர தாக்குதலை தொடுத்தனர். இந்தத் தாக்குதலில் சுமார் 10 படையினர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 216 படையினர் படுகாயமடைந்தனர். மேலும் காயமடைந்த படையினரில் 22 படையினர் பலாலிக்கு கொண்டு செல்லமுதல் பலியாகியுள்ளனர். இன்று நடந்த 6 மணித்தியால யுத்தத்தில் மட…
-
- 2 replies
- 1.7k views
-
-
களமுனையில் போராடும் போராளிகளிற்கு மக்கள் உலர்உணவுகளையும்,குளிர் பானங்களையும் வழங்கி வருகின்றனர். வன்னியில் பல பகுதிகளில் இருந்தும் ஆர்வத்துடன் மக்கள் இப்பொருட்களை களமுனைக்கு அனுப்பி வருகின்றனர். கள முனையில் ஏற்கனவே பல உதவிகளை மக்கள் ஆற்றிவருவது குறிப்பிடத்தக்காது. மக்களின் உதவி மனதை குளிரவைக்கும்.
-
- 9 replies
- 1.8k views
-
-
ஓய்ந்திருந்த எறிகணைத்தாக்குதல்கள் இன்று மாலை மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாக ரி.ரி.என் செய்திகள் தெரிவிக்கின்றன. கொடிகாமம் வரணிப்பகுதியை நோக்கி தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் புலிகளும் பதில் தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் பலாலி முகாமில் கடுஞ்சேதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிகிறது.
-
- 3 replies
- 2.2k views
-
-
ஞாயிறு 20-08-2006 21:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வடபோர்முனையிருந்து இராணுவத்தின் 53வது படைப்பிரிவு அகற்றப்பட்டுள்ளது - இளந்திரையன் வடபோர்முனையில் இருந்து, பலத்த சேதங்களுடன் ஐம்பத்து மூன்றாவது படைப் பிரிவு அகற்றப்பட்டுள்ள நிலையில், சிறீலங்கா படைகளின் பாரிய அளவிலான வலிந்த படைநகர்வுகள் தணிந்திருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். யாழ் களநிலவரங்கள் குறித்து இன்று எம்மிடம் கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் இருந்து ஐம்பது மூன்றாவது படைப் பிரிவு முற்றாக அகற்றப்பட்டுள்ள நிலையில், ஒன்பது நாள் சமர்களில் ஏற்பட்ட சேதாரங்களை சீர் செய்யும் முயற்சியில், தற்போது சிறீலங்கா படைகள் ஈடுபட்டிருப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருள்களே கைவசம் உள்ளதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடந்த சந்திப்பிலேயே வணிகர் கழகப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். யாழ்ப்பாண அரச அதிபர் கே.கணேஷின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அசாதாரண சூழலில் பொருள்கள் கூடிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், அவை பதுக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அரச அதிபர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்திப்பில் கலந்துகொண்ட வணிகர் கழகப் பிரதிநிதிகள், அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருள்களைப் பதுக்கவோ, கூடுதல் விலைக்கு விற்கவோ வேண்டாம் என வர்த்தகர்களிடம் கோருவதாகத…
-
- 7 replies
- 2.8k views
-
-
போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகித்த ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் இரண்டு பிரிவாக இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளனர் என்று தெரியவருகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி ஒரு பகுதியினரும் எதிர்வரும் 31 ஆம் திகதி இரண்டாவது பகுதியினரும் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் நோர்வேயும் ஐஸ்லாந்தும் மேலதிகமாக தலா நான்கு கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. தற்போது நோர்வேயின் 16 கண்காணிப்பாளர்கள் இலங்கையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் முதலாம் திகதி முதல் மேலும் நான்கு நோர்வே நாட்டு பிரஜைகள் கண்காணிப்…
-
- 1 reply
- 943 views
-