ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
இலங்கை நிலைமை குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் துண்டிப்பு ஆகியவை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆழிப்பேரலை மீளமைப்பு பணிகளுக்கான சிறப்பு துணைப் பிரதிநிதி எரிக் ஸ்வார்ட்ஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் கடந்த இரு மாத காலங்களில் 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்திருப்பது எம்மை மிகவும் பாதித்துள்ளது. ஆழிப்பேரலை மீளக் கட்டமைப்பு பணிகளில் சர்வதேச சமூகத்தினரால் குறிப்பிடத்தகுந்த அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது அது பா…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐநா சிறுவர் மையத்தின் தெற்காசிய பணிப்பாளராக சந்திரிகா நியமனம். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் மையத்தின் தெற்காசியப் பணிப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தமது முதல் கட்ட உத்தியோகபூர்வ விஜயத்தை பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தானில் அவர் அவசர முகாமைத்துவம் தொடர்பில் சொற்பொழிவை நடத்தவுள்ளார். இதன் பின்னர் இந்தியாவுக்குச் செல்லும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பவுள்ளார். pathivu.com/
-
- 7 replies
- 1.8k views
-
-
யாழில் இராணுவத்தினர் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் வாகனங்கள் பறிப்பு யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் நூற்றுக்கும் மேற்பட்ட லொறிகள், சிறு வான்கள், உந்துருளிகளை இராணுவத்தினர் அபகரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் அரச அதிபர் செயலகத்தில் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். அரச அதிபர் கே.கணேஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். 106 லொறிகள் உட்பட பல சிறு வான்கள் மற்றும் பெருந்தொகையான உந்துருளிகளை பறித்துச் சென்று தற்போதைய மோதல் நடவடிக்கைகளின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தம் ரூ. 300 மில்லியன் மதிப்பிலான லொறிகளை சிறிலங்கா இராணுவத்தினர் அபகரித்துச் சென…
-
- 2 replies
- 1k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிலிருந்து எதிர்வரும் வாரம் சிறிலங்கா நீக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்காவை நீக்குவது தொடர்பான முயற்சிகள் தீவிரமான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் மாநாட்டில் மிக அதிகமான விமர்சனங்களுக்குள்ளான ஒரே நாடு சிறிலங்கா. எதிர்வரும் வாரம் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறிலங்கா நீடிப்பது குறித்த முடிவு மேற்கொள்ளப்பட உள்ளதால் அதனைத் தடுக்கும் இராஜதந்திர செயற்பாடுகளில் சிறிலங்கா கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு - கிழக்கில் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரபாகரனுக்கு வெண்ணிறச் சால்வை குரு ரவிசங்கர் பரிசாகக் கொடுத்தார் புதுடில்லி, செப். 29 "வாழும்கலை' நிறுவுநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த வாரம் கிளி நொச்சிக்கு விஜயம் செய்திருந்த சமயம் வெண்ணிறச் சால்வை ஒன் றைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக் குப் பரிசாகக் கொடுத்தார். குரு ரவிசங்கரின் பேச்சாளர் ஒருவர் இத்தகவலை "ஐ.ஏ.என்.எஸ்.' செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்திருக்கிறார். இலங்கை உட்பட உலகெங்கும் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் சுவாமி குரு ரவிசங்கர் தாம் விஜயம் செய்யும் இடங்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வெண்ணிறச் சால்வைகளைத் தமது ஆசீர்வாதத் தின் ஆடையாளமாக வழங்குவது வழக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி சென்றி ருந்த சமயம் அங்க…
-
- 11 replies
- 3.2k views
-
-
பொத்துவில் படுகொலையும் பொய் பரப்புரையும்: பாதுகாப்பு அமைச்சின் செய்தியே அம்பலப்படுத்துகிறது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் பொத்துவிலில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசை திருப்பவும் அது தொடர்பில் பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட கபட வேலையானது அந்த அமைச்சின் செய்தி வெளியீட்டினாலாயே அம்பலமாகியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் நேற்று வெள்ளிக்கிழமையன்று "பொத்துவில் படுகொலை, தெளிவாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுதான் - கிழக்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள்" என்ற தலைப்பில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு, - அ…
-
- 1 reply
- 833 views
-
-
வள்ளிபுனத்தில் உயிர்பிழைத்த மாணவியையும் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம்: மருத்துவ அறிக்கையில் அம்பலம் முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப் படை நடத்திய கோரத் தாக்குதலில் உயிர்பிழைத்த மாணவியரில் ஒருவரை தடுப்புக் காவலில் வைத்து எதுவித சிகிச்சையும் அளிக்காமலே சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்துள்ளமையானது வவுனியா மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளது. வான்படைத்தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் கண்டிக்கு 3 மாணவிகள் கொண்டு செல்லப்பட்டனர். அம்மாணவிகள் சிறிய அளவில் தேறிய நிலையிலேயே அவர்களை சிறிலங்கா காவல்துறையினர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தனர். அவர்களில் ஒ…
-
- 4 replies
- 1.1k views
-
-
வவுனியா கிளைமோரில் மூன்று காவல்துறையினர் பலி வவுனியாவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா சலம்பைக்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஜே.எம். புஞ்சி பண்டா, ஆர்.எம்.சி. பிரியதர்சன மற்றும் ஜி.ஜயரத்ன ஆகியோர் கொல்லப்பட்டனர். http://www.eelampage.com/?cn=29044
-
- 0 replies
- 793 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் போட்டியிலிருந்து சிறிலங்காவின் ஜயந்த தனபால விலகி விட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பிரசாத் கரியவசம், பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் இதனை அறிவித்துள்ளார். ஜயந்த தனபாலவின் முழு ஒத்துழைப்புடன் போட்டியிலிருந்து தனது வேட்பாளரை விலக்கிக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். செயலாளர் நாயகம் தேர்தலுக்கு முன்னைய உத்தேச வாக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட இந்த உத்தேச வாக்கெடுப்பிலும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் பன் கி மூன் வெற்றி பெற்றதையடுத்து புதி…
-
- 1 reply
- 892 views
-
-
அம்பாறையில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொலை [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 13:57 ஈழம்] [ம.சேரமான்] அம்பாறை மாவட்டத்தில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. அம்பாறை பனாமா நகருக்கு அருகே இக்கொலைச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று நடந்திருக்கக் கூடும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ( Puthinam)
-
- 53 replies
- 9k views
-
-
அனுசரணையாளர்களின்றி நேரடிப் பேச்சுக்கு வர வேண்டும்: பிரபாகரனுக்கு சிறிலங்கா பிரதமர் அழைப்பு அனுசரணையாளர்கள் எவருமின்றி நேரடிப் பேச்சு நடத்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் முன்வர வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம். பேச்சுக்களின் மூலமாகத்தான் அவர்கள் பலமடைகின்றனர். தற்போதைய அரசாங்கமானது இந்த நாட்டுக்கும் மக்…
-
- 0 replies
- 961 views
-
-
நாடாளுமன்றில் எம்.பியின் கேள்விக்கு பதிலளிக்க மேர்வின் சில்வா மறுப்பு! தொண்டையில் மீன்முள்ளு குத்தியதாகக் காரணம் நாடாளுமன்றத்தில் நேற்று தொழிற் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவைப் பார்த்து ஐ.தே.கட்சியின் எம்.பி யான தயாசிறி விஜேசேகர கேள்வி ஒன்றை எழுப்பினார் அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் மேர்வின் சில்வா. ""எனது தொண்டையில் மீன் முள் சிக்கியிருப்பதால் என்னால் பதிலளிக்க முடியாது'' என்று கூறிவிட்டு பேசா மல் இருந்துவிட்டார் அவர். நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்ப்பே கிடைக்காததால் கேள்வி நேரத்தின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி.தயாசிறி விஜேசேகர மலேஷியாவுக்கு தொழில் வாய்ப்பு…
-
- 10 replies
- 3.3k views
-
-
இனவெறிபிடித்தலையும் மகிந்த ராஜபக்ஷவின் கொலைவெறிக்கு, ஒவ்வொரு நாளும் ஐந்து -த்துஎனதமிழர்கள் பலியாகிவருகின்றனர்.சிங்களப் படைகளின் கட்டுப் பாட்டிலுள்ள தமிழர் தாயகப் பகுதியெங்கும் இந்தக் கொலைச்செயல்களைச் சிங்களப் படைகள் நடாத்திவருகின்றன. தினம் தினம் நடாத்தப்படும் இந்தத் தமிழர் படுகொலை மகிந்த அரசின் உத்தரவின் பேரில்தான் நடாத்தப்படுகின்றது என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இவ்விதம் அறுநூறு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமற்போயுள்ளனர். கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர் கள் பெரும் சித்திரவதைக்குப் பின்னரே கொல்லப்பட்டுள்ள னர். வீசியெறியப்பட்டுக் கிடந்த அவர்களின் உடல…
-
- 0 replies
- 793 views
-
-
கொழும்பில் கடத்தப்பட்ட மூவர் வாழைச்சேனையில் படுகொலை- ஒருவர் தலை துண்டிப்பு கொழும்பில் கடத்தப்பட்ட மூவர் வாழைச்சேனையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட மூவரில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொருவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. தலை துண்டிக்கப்பட்ட நபர் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.யில் முன்னர் இணைந்திருந்தவர் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிருப்தியினால் விலகியவர் என்றும் தெரியவந்துள்ளது. புதுக்குடியிருப்பு யூனியன் கொலனியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சக்தி என்றழைக்கப்படும் செல்லையா நவரட்ணராஜா (வயது 30) என்பவரது தலை துண்டிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கல்குடா மத்திய வீதியைச் சேர்ந்த சந்திரலிங்கம் தேவந…
-
- 0 replies
- 1k views
-
-
ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினர் நந்தன குலதிலக கட்சியிலிருந்து விலகல். ஜே.வி.பியின் சிரேஸ்ர உறுப்பினரும், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான நந்தன குணதிலக தாம் ஜே.வி.பி. மத்திய குழுவில் இருந்தும், ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்தும் விலகியுள்ளதாக அறிவித்திருந்தார். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக தாம் அந்த கட்சியில் தொடர்ந்தும் இருக்க முடியாது எனவும், ஒரு சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு கட்சி நடவடிக்கைகள் இருக்கக்கூடாது என்றும், மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாம் அவர்களின் விருப்புகளுக்கு மாறான நடவடிக்கைகளை சுயநலங்களுக்காக செயற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் தாம் தொடர்ந்தும் நாடாளுமன்ற பதவியில் இர…
-
- 1 reply
- 944 views
-
-
தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும்: நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன் இலங்கையில் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஆற்றிய உரை: இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தமும் அமைதி முயற்சிகளும் சீர்குலைந்து முழு அளவிலான போரின் விளிம்பில் உள்ளது. தொடரும் வன்முறைகளால் ஆயிரக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய மாதங்களில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். வடக்கு கிழக்கு பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் மட்டும் 2 மாதங்களில் 131 பேர் படுகொலை: சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் யாழ்ப்பாணத்தில் மட்டும் 2 மாதங்களில் 131 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கொழும்பு தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில் யுத்தம் சார் நடவடிக்கைகளுக்கு அப்பால் 131 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மற்றும் செப்ரெம்பரில் 87 பேர் (ஓகஸ்ட்டில் 50. செப்ரெம்பரில் 37) கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த இரு மாதங்களில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் 44 பேர் (ஓகஸ்டில் 26 செப்ரெம்பரில் 18 ) காணமல் போயுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சி…
-
- 0 replies
- 829 views
-
-
[செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 15:41 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணகைளில் முழுமையான ஈடுபட்டுடன் செயற்படவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிற வன்முறையின் தன்மை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். இந்த வன்முறையின் அளவு குறைவதாகத் தெரியவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் முழு மனதுடன் செயற்படவில்லை. எமக்கு வருத்தமளிக்கிறது. இது புத்திசாலித்தனமானது அல்ல. ஏனெனில் சி…
-
- 7 replies
- 2k views
-
-
இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா இராணுவமும் விடுதலைப் புலிகளும் மீறுவதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருப்பது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். யாழ். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதலும் யுத்த நிறுத்த மீறலே. இருதரப்பினரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு அனுமதி மறுக்கின்றனர். இது பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். கடந்த யூலை 22 ஆம் நாள் முதல் செப்ரெம்பர் 25 ஆம் நாள் வரையிலான இருதரப்பினரது நடவடிக்கைகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குரிய ஏதுவான சூ…
-
- 0 replies
- 805 views
-
-
மூதூர் அர்ஷா நகர் பிரதேசத்தில் காட்டு பகுதியில் இருந்து ஆயுத தொகை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கிளைமோர் ஒன்று, ஜீ.பி.எம்.ஜீ ரக துப்பாக்கிகள், 90 தோட்டக்கள், 40 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தும் தோட்டக்கள் மற்றும் மேலும் 30 ரவைகள் என்வற்றை இன்று முற்பகல் 9.25 அளவில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் 10 கிளைமோர் குண்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கிளைமோர் குண்டு ஒன்றின் எடை 7 கிலோ கிராம் என காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் தொலைத் தொடர்பு கருவி, 43 உலர் உணவு பொதிகள் , 2 மைக்ரோ கைதுப்பாக்கிகள், இரண்டு மெகசின் , கைக்குண்டுகள் இரண்டு, மற்றும் செய்மதி தொலைத் தொடர்பு கரு உள்ளிட பொரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை அரசாங்கத்தை கொண்டு நடத்துவது படையினரா? அன்றோல் படையினரை கொண்டு நடத்துவது அரசாங்கமா ? என்ற கேள்வி தற்போது குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்ஸீம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் உள்ள இரத்தல் அடி என்னும் இடத்தில் இடம் பெற்ற பத்து முஸ்ஸீம் இளைஞர்கள் படுகொலையை விசேட அதிரடிப் படையினரே மேற் கொண்டார்கள் என்பதில் முஸ்ஸீம் மக்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். இந்த நிலமையில் அரச தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் சரி இராணுவ ஊடகப் பேச்சாளரும் சமரசிங்கவும் இந்தக் கொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தான் மேற் கொண்டார்கள் என்று கூறி தம்மாலும் படையினராலும் செய்யப்பட்ட அப்ப…
-
- 0 replies
- 749 views
-
-
http://news.yahoo.com/s/afp/20060927/wl_st...gersnorwaytalks
-
- 12 replies
- 4.8k views
-
-
ரெஹெல்கா வில் வந்த கட்டுரையின் தமிழ் வடிவம் தினக்குரல் பத்திரிகையில் வந்தது. தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியளித்து வருகிறது" "இந்தியா தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்" தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு வழங்குவதாகவும் யாழ். மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி என்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ரெஹெல்கா இணையத்தளத்திற்கு இது தொடர்பாக விரிவான பேட்டியொன்றை அவர் வழங்கியுள்ளார். அப்பேட்டி விபரம்: கேள்வி: இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு எந…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜோசப் எம்.பியின் இடத்துக்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் ஆலையடிவேம்பு, செப். 26 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் அரியநாயகம் சந் திரநேருவின் மகனான சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட் டுள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சந்திரகாந்தன் நாடாளு மன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கிறார். இவரைக் கொழும்பில் வரவேற்று அழைத்து வருவதற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விசேட பஸ் ஒன்று மூலம் கொழும்பு சென்றுள்ளார்கள் -உதயன்
-
- 3 replies
- 1.4k views
-
-
இராணுவ `ஆட்சியின் கொடூரத்தை' தாங்க முடியாமல் தவிக்கும் குடாநாட்டு மக்கள் எண்பதுக்கு முந்தைய காலத்தில் யாழ்ப்பாணச் சமூகம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது. இம்மக்களை வந்தாரை வாழவைக்கும் பண்பாட்டுச் சிறப்புமிக்க சமூகமாகவே உலக மக்கள் போற்றியதுண்டு. இன்றோ அவர்களின் நிலைமை கவலைதருவதாக பலரும் கூறுவதில் நியாயமில்லாமல் இல்லை. போர்ச்சூழலினால் அவன் இழப்பதற்கு எதுவுமில்லாமல் நடைப்பிணமாக சொந்த மண்ணில் வாழ்கின்றான். தேச விடுதலைக்காக அவன் சந்திக்கும் கொடூரங்கள், இழப்புகள் அக்கிரமங்கள் சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கோடிட்டுக் காட்டப்படுகின்ற போதும் நிம்மதியான வாழ்வுக்காக மூன்று சகாப்தமாகக் போராடி வருகின்றான். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்ப…
-
- 2 replies
- 1.5k views
-