Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவது என்றால் விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த முடியாது என்றும் இலங்கை அரசுடன் கலந்தாலோசிக்காமல் பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  2. [வியாழக்கிழமை, 14 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [காவலூர் கவிதன்] 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும், அதன் அடிப்படையிலான ஜெனீவா இணக்கப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் கோரியுள்ளதை வரவேற்றுள்ள விடுதலைப் புலிகள், மகிந்த ராஜபக்ச அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நெட் இணையத்தளத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது: இவ்வருடம் பெப்ரவரியில் ஜெனீவாவில் சி…

    • 0 replies
    • 905 views
  3. யாழ்.குடாவிலிருந்து 600 பயணிகளுடன் திருமலை நோக்கி கடற்படைக் கப்பல் யாழ்.குடாநாட்டிலிருந்து 600 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று வியாழக்கிழமை அதிகாலை திருகோணமலை நோக்கி கடற்படைக் கப்பலொன்று புறப்பட்டுள்ளது. கடந்த வாரம் இவ்வாறு கடற்படைக் கப்பல் மூலம் சுமார் 900 பயணிகள் திருமலை சென்ற நிலையில் இன்று அதிகாலை 600 பயணிகளுடன் கடற்படைக் கப்பலொன்று திருமலைக்கு புறப்பட்டுள்ளது. வானொலி மற்றும் பத்திரிகை மூலம் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து நேற்று அதிகாலை முதல் யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். யாழ்ப்பாணம் கச்சேரி மற்றும் பிரதேச செயலகங்களில், குடாநாட்டை விட்டு வெளியே செல்வதற்காக பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே கப்பல் பயணிகள் தெரிவு இடம்பெறு…

  4. இணைத்தலைமைகளின் அறிவிப்புக்கு அரச பேச்சாளரின் பதில் குழப்பமாக இருப்பதாக கூறுகிறார் பிரிட்டிஷ் தூதுவர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் பேச்சு நடத்த அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இணங்கியுள்ளதாக இணைத்தலைமை நாடுகள் தெரிவித்திருப்பதும், அதற்கு அரசாங்கத்தின் இராணுவ விவகாரப் பேச்சாளர் அளித்துள்ள பதிலும் குழப்பமாக இருப்பதாக இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பை இறுகப்பற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி கண்காணிப்பு அறிக்கை 2006 இணை வெளியிடும் நிகழ்வு கொழும்பு இலங்கை வெளிவிவகார உறவுகளுக்கான நிறுவகத்தில் இடம்பெற்றவேளை, அதில் கலந்துகொண்டு உரையாற்றி…

  5. விடுதலைப்புலிகளுடன் இனிமேலும் பேச்சுவார்த்தைக்கு செல்வதை ஏற்க முடியாதென அறிவித்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) புலிகளுடன் பேச்சுக்கு செல்வதென்றால் அவர்கள் "ஆயுதங்களை கீழே போட வேண்டும்" என்ற கடுமையான நிபந்தனையுடனேயே சம்மதம் தெரிவிக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை ஜே.வி.பி.யினர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் பிரசாரச் செயலாளரான விமல் வீரவன்ச எம்.பி. இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்; இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் இறுதியில் செவ்வாய்க்…

  6. இணைத் தலைமை நாடுகள் மற்றும் டோக்கியோ அறிக்கை ஜே.வி.பியால் நிராகரிப்பு.டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை நிராகரிப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இதனை தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளையும் இறையாண்மை உள்ள இலங்கை அரசாங்கத்தையும் சமனாக மதிப்பிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையானது இலங்கையின் இறையாண்மையில் இணைத்தலைமை நாடுகளின் வீணான தலையிடாகும் எனவும் அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளுக்கான திகதி நிர்ணயம் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் இடங்களை தெரிவு செய்யும் அதிகாரம் எந்த நாடுகளுக்கு இல்லை. ஜே.வி.பி இந்த நடவடிக்கைக…

    • 2 replies
    • 1.5k views
  7. [செவ்வாய்க்கிழமை, 12 செப்ரெம்பர் 2006, 18:59 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை ஒக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று இணைத் தலைமை நாடுகள் அறிவித்துள்ளது. பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் பெனிடா பெரிரோ வால்ட்னெர் கூறியதாவது: ஒக்டோபர் தொடக்கத்தில் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வையை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகளுக்கு உள்ளது. ஒக்டோபர் இறுதியில்…

  8. இலங்கையரச பயங்கரவாதத்திற்கு எதிராக லண்டனை முடக்கத் தயா இடைக்காடர் தலைமையில் கவன்சிலெஸ் அமைப்பு முடிவு. பிரித்தானியாவின் வரலாற்றில் முதல் தடவையாக பிரித்தானியாவின் லண்டன் பகுதியினை முற்று முழுதாக முடக்குவதற்குத் தயா இடைக்காடர் தலைமையிலான கவன்சிலெஸ் மற்றும் கவுன்சில் தேர்தலில் பங்கு பற்றியவர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில் பிரித்தானியாவில் லண்டன் மாநகரம் சுமார் 32 உள்ளுராட்சி சபைகளால் இயக்கப்படுகிறது. இந்த 32 உள்ளுராட்சி சபைகளையும் முடக்குவதன் ஊடாக லண்டன் மாநகரத்தை ஸ்தம்பிதமடையச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 திகதி உலக ஜ.நா சமாதான தினமாக பிரகடனப்படுத்தபட்டுள்ளது. அன்றைய தினம் பிரித்தானியாவின் 32 உள்ளுராட்சி சபைகளுக்கு முன்பா…

    • 1 reply
    • 1.2k views
  9. புதன்கிழமை, 13 செப்ரெம்பர் 2006, 00:24 ஈழம்] [ம.சேரமான்] :arrow: நிபந்தனையற்ற பேச்சா?: சிறிலங்கா அரசாங்கம் நிரகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது குறித்து அசோசியேற்றட் பிரஸ் எனும் சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: நாம் எமது நிபந்தனைகளை தெரிவிக்க உள்ளோம். பேச்சுக்கான நாள் மற்றும் இடம் குறித்து எம்மிடம் நோர்வே அனுசரணையாளர்கள் ஆலோசிக்கவில்லை. எதுவித பேச்சுக்கள் குறித்தும் அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. நோர்வேயோ இதர தரப்பினரோ பேச்சுக்கான நாளையோ இடத்தையோ அறிவிக்க இ…

    • 7 replies
    • 1.9k views
  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17.09.06) சந்திக்கவுள்ளனர். சந்திப்புக்கான அழைப்புக்கடிதம் இந்தியப் பிரதமரின் அலுவலகத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சென்னையில் தற்போது தங்கியிருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வெள்ளிக்கிழமையளவில் புதுடில்லிக்கு செல்லவுள்ளனர். புதுடில்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. அதேவேளை…

  11. கதறித்துடிக்கும் அகதிப் பெண்கள் -யூனியர் விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/refu..._2006_09_13.pdf

  12. தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உறவினர்களோடு தொடர்பு கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கென இணையத்தளம் ஒன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்துள்ளது. ஆங்கில மொழியிலான இந்த இணையத் தளத்தின் முகவரி www.familylinks.icrc.orc என்பதாகும். மோதல் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள மக்கள் இந்த இணையத்தளம் ஊடாக தமது நிலையை உறவினர்களுக்குத் தெரியப்படுத்தலாம். அத்துடன், பதிவு செய்து கொள்வதன் மூலம் தமது உறவினர்கள் பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. http://www.thinakkural.com/news/2006/9/13/...s_page10659.htm

  13. கல்லாறிலிருந்து மட்டக்களப்புக்கு சென்ற 2 பொலிஸார் பஸ்ஸுக்குள் சுட்டுக்கொலை தேற்றாத்தீவில் சம்பவம் மட்டக்களப்பு தேற்றாத்தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பஸ் ஒன்றினுள் வைத்து பொலிஸ் அதிகாரியொருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கல்முனை- மட்டக்களப்பு வீதியில் கல்லாறு பொலிஸ் நிலையத்திலிருந்து நேற்றுக்காலை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இ.போ.ச. பஸ்ஸில் வந்த பொலிஸாரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விருவரும் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தேற்றாத்தீவு கோயிலடிப் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. பஸ்ஸினுள் இவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் திடீரென எழுந்து இவ்விருவர் மீத…

  14. புதன் 13-09-2006 17:54 மணி தமிழீழம் [செந்தமிழ்] இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் தலைவர் லான்ஸ் சொஹான் சொல்பேக் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சிக்கு செல்லவுள்ளார். இதன் போது அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். போர் நிறுத்தக்கண்காணிப்பு பணிகளுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் நேரடியான சந்திப்புக்கு உட்படுத்துவது என்ற நிலையின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelampress.com/index.php?subact...t_from=&ucat=1&

    • 0 replies
    • 1.1k views
  15. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவை விட்டுக் கொடுத்தால் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது. என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். முகமாலையில் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அவ்விடத்தில் பாதுகாப்பாக நிலை கொள்வதற்கு முடியாவிட்டால் அடுத்த கட்ட முன்னோக்கிய நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொ…

    • 0 replies
    • 1.3k views
  16. முகமாலைப் பகுதியில் தொடரும் தாக்குதல்கள். 150 இராணுவம் பலி நேற்றிரவு முதல் முகமாலை முன்னரங்கினூடாக கடும் தாக்குதல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரின் இவ்வலிந்த தாக்குதல்களையும் நகர்வையும் தடுக்கும் முகமாக விடுதலைப்புலிகள் நடாத்தும் எதிர்ப்பு தாக்குதல்களில் இதுவரையும் சுமார் 150 படையினர் பலியாகியுள்ளனர். 200 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் இறந்த இராணுவத்தினரது உடல்களை அவ்விடங்களிலேயே எரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?option=...id=431&Itemid=1

  17. இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் ஈழப் பிரச்சனை தொடர்பில் அவர் கூறியதாவது: கேள்வி: விடுதலைப் புலிகளை நீங்கள் எதிர்க்கிறீர்களா? பதில்: இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை அ.தி.மு.க. எதிர்க்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். அதை இப்போதும் நாங்கள் எதிர்க்க…

    • 2 replies
    • 1.3k views
  18. ஆனையிறவிலிருந்து விடுதலைப்புலிகளை விலகிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவிப்பு. இல்லையேல் பாரிய அழிவை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கை.திருகோணமலை சம்பூர் பிரதேசத்தைவிட்டு விலகிக்கொண்தைப் போல முகாமாலையிலிருந்து ஆனையிறவு வரையிலான பகுதியைவிட்டு விடுதலைப் புலிகள் தமது நிலைகளை விலக்கிக்கொண்டால் பாரிய அழிவை தவிர்த்துக் கொள்ளமுடியும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தகவல் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரச பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கேஹேலிய ரம்புக்வெல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சம்பூரைவிட்டு விலகிக்கொண்ட விடுதலைப் புலிகள் ஆணையிறவு வரையிலான பகுதியிலிருந்தும் விலகிக்கொள்வதே அவர்களுக்கு நல்லது என்று தெரிவித்த அமைச்சர் கே…

  19. துரோகிகள் எரிக்கப்பட வேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர் சிறிலங்கா அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு துரோகிகளாக உள்ளோர் எரிக்கப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: இந்த நாட்டினது நிதியை சார்ந்துள்ள சிலர், அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு துரோகிகளாக உள்ளனர். அத்தகைய துரோகிகள் எரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் படுகொலைக்கும் புரட்சிக்கும் பிக்குகள் காரணம் என்று பயங்கரவாதிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் படுகொலை நிறைந்த பயங்கரமான போரை நிகழ்த்துகிறார். சிங்களவர் இப்போது தாக்குதல் நடத்துவது தற்காப்புக்கான…

  20. முல்லைத்தீவு படுகொலைக்கு இணைத் தலைமை நாடுகள் கண்டனம் முல்லைத்தீவு செஞ்சோலைப் படுகொலை உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் இணைத் தலைமை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பெல்ஜியத்தின் பிரசெல்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: - டோக்கியா உதவி வழங்கும் மாநாட்டின் இணைத் தலைமை நாடுகளான நோர்வேஇ ஐரோப்பிய ஒன்றியம்இ அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை பிரசெல்சில் செப்ரெம்பர் 12 ஆம் நாள் கூடின. - சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனையற்ற பேச்சுக்கு நோர்வே அனுசரணையாளர்களிடம் இணக்கம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். அனைத்து வன்முறைகளையும் இருதரப்பினரும் உடனே கைவிட வ…

  21. கடல்வழிப் போக்குவரத்து: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு புலிகள் பதில் கடல்வழிப் போக்குவரத்து தொடர்பிலான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கடிதத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் அளித்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வதிவிடப் பிரதிநிதி ரூன் வாண்டென்ஹொவ்வுக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த ஒரு மாத காலமாக யாழ்ப்பாண குடாநாட்டில் 5 இலட்சம் மக்கள் முடக்கப்பட்டுள்ளமையை நீங்கள் அறிவீர்கள். அங்குள்ள நெருக்கடியான நிலைமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யாழ். அரச அதிபர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இது தொடர்பிலான எமது கவலையையும் விளக்கி கடந்த ஓகஸ்ட் 31 ஆம் நாள் தங்கள…

  22. Continue offensives against LTTE - JHU The Jathika Hela Urumaya (JHU) yesterday urged President Mahinda Rajapkse and defence authorities that control of Elephant Pass and Poonaryn was essential for the security of the Jaffna peninsula The government should not give in to pressure by certain sections of the international community and ease its counter attacks on the LTTE. `We praise the soldiers who fought bravely to capture Sampur to ensure the security of Trincomalee and we appreciate President Rajapakse, Defence Secretary and commanders of the three forces who never departed from the main aim and did not give into pressure from the peace merchants and thei…

  23. தமிழர் பகுதிக்குச் செல்வதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தடுக்கிறது: உலக உணவுத் திட்டம் குற்றச்சாட்டு [செவ்வாய்க்கிழமை, 12 செப்ரெம்பர் 2006, 20:10 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்வதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தடுக்கிறது என்று உலக உணவுத் திட்ட அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஜெனீவாவில் ஊடகவியலாளர்களிடம் உலக உணவுத் திட்டப் பேச்சாளர் கிறிஸ்டினெ பெர்தியம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் தரைவழிப் போக்குவரத்தின் ஊடாக நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதாக கூறுகின்றனர். கடல்வழிப் பயணத்துக்கான பாதுகாப்பு உத்திரவாதத்தை அளிப்பது சாத்தியமில்லை என்றும் கூறிவிட்டனர். ஒருபக்கம் தமிழர் தரப்பினர் கடல்வழிப் போக்குவரத்…

    • 0 replies
    • 945 views
  24. சம்பூரை இராணுவத்தினர் மீட்ட வெற்றியை `கேக்' வெட்டி கொண்டாடிய ஜனாதிபதி சம்பூரை இராணுவத்தினர் கைப்பற்றிய வெற்றியை மகிந்த ராஜபக்ஷ கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றின் பாதுகாப்பு விவகார ஆய்வாளரின் கட்டுரையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஹில்டன் ஹோட்டலில் இருந்து 4 கிலோ எடையுள்ள கேக்கை ஜனாதிபதி வாங்கியுள்ளார். எனினும் அந்தக் கேக்கை சாதாரணமாக பரிமாற அவர் அனுமதிக்கவில்லை. இக் கேக்கை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை அழைத்து வெட்டச் சொல்லியுள்ளார். அதன்பின்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவையும் அவரைத் தொடர்ந்து விமானப்படைத் தளபத…

    • 8 replies
    • 3.1k views
  25. ஐ.தே.கவுடன் சேர்ந்து அமைக்கும் தேசிய அரசில் ஜே.வி.பியையும் உள்வாங்க ஜனாதிபதி விருப்பம் மிலிந்த மொறகொடவிடம் அவரே நேரில் வெளியிட்ட தகவல் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றி ணைந்து தேசிய அரசாங்கமொன்று அமையுமானால் அதில் ஜே.வி.பி யின ரையும் உள்வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத் தேசித்திருக்கிறாரென நம்பகரமாக அறியமுடிகிறது. கடந்த வார இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் மிலிந்த மொறகொடவைச் சந் தித்த போது ஜனாதிபதி இவ்வாறான அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கி றாரெனத் தெரியவருகிறது. தேசிய அரசு ஒன்றிற்குள் ஜே.பி.பியினருக்கு இடமளிக்காமல் அவர்களைத் தனியே விட்டால் வெளியில் இருந்து கொண்டு அவர்கள் அரசுக்குத் தொல்லைதரலாம் என்பதால் ஜனாதி பதி இவ்வாறான விரு…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.