ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு : அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி 14 SEP, 2022 | 03:50 PM இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) உள்ளிட்ட முதலீட்டாளர்கள் குழுவொன்று கலந்துகொ…
-
- 2 replies
- 276 views
- 1 follower
-
-
பேராட்டக் காரர்களை... ஒடுக்கும் செயல்பாடுகளை, அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும்- ஜாட்சன் பிகிராடோ வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவது மற்றும் அவர்களின் அலுவலகங்களை உடைத்து சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார். வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரியும் குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று காலை யாழ்ப்பாணத்தில் க…
-
- 0 replies
- 127 views
-
-
"தமிழ் உணர்வாளர்" அமைப்பின் தலைவர், மோகன்... சாகும் வரையிலான உண்ணாவிரதம்! மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியருகே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். காணி மாபியாக்களுக்கு சாதகமாக சட்டத்தினை காய்நகர்த்தும் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி,காணி மாபியாக்களின் கைக்கூலி ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி,ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி மீது …
-
- 0 replies
- 150 views
-
-
அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது - உலக தமிழர் பேரவை By RAJEEBAN 14 SEP, 2022 | 11:32 AM வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து மாகாணங்களிற்கும் ஆகக்கூடியளவு அதிகாரப்பகிர்வுடன் தமிழ்தேசிய பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைத்தால் மாத்திரமே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. மாகாணங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வுடன் 70 வருடகால தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை இலங்கை சாத்தியமாக்கும் என்றால் புலம்பெயர்ந்த வர்த்தக சமூகமும் தமிழ்நாடு வர்த்தக சமூகமும் இணைந்து இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்ப…
-
- 10 replies
- 910 views
- 1 follower
-
-
பளையில் காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவில்லை என்கிறார் டக்ளஸ் பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் இவ்வாறான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுமபோது ஊடக நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பளை பச்சிமலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணி சீர்திருத்த ஆணைக…
-
- 3 replies
- 380 views
-
-
மஹிந்தவை கொல்ல திட்டம் தீட்டியமை : முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பகிர்வு பத்திரம் By VISHNU 14 SEP, 2022 | 01:32 PM ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைச் செய்ய சதி செய்ததாக கூறி முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் முன்னிலையில் இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ள…
-
- 2 replies
- 252 views
- 1 follower
-
-
இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவிப்பு By T. SARANYA 14 SEP, 2022 | 03:04 PM மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர் மசூட் அஹமட்டுடான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய மூன்று நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இ…
-
- 2 replies
- 254 views
- 1 follower
-
-
சிவில் அமைப்புகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் By T. SARANYA 14 SEP, 2022 | 04:22 PM இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு செல்லுகின்ற வேளையில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளார்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பிற்குள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமன்றி சிவ…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
அழுதுபுலம்புவதை தவிர பாதிக்கப்பட்டவர்களிற்கு வேறு வழியில்லை- ஜெனீவாவில் சந்தியா By RAJEEBAN 14 SEP, 2022 | 04:15 PM இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து விலக்களிப்பதை மனித உரிமைகள் தொடர்பான அதன் உத்தியோகபூர்வ கொள்கையாக பின்பற்றுகின்றது என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வில் தெரிவித்துள்ளார். வறுமை மற்றும் தொடர்ச்சியாக பின்தொடரப்படுதல் துன்புறுத்தல்கள் மெதுவான மற்றும் பின்தங்கியசட்ட அமைப்பை கொண்ட நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் என்பது அதிகாரபூர்வமற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக காணப்படுகின்றது என சந்தியா எக்னலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். அவ்வாறானஒர…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிராக அணி திரளும் நாடுகள் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆரம்ப பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க பல நாடுகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசடோனியா மற்றும் மென்டிநிட்ரோ ஆகியவை இந்த நாடுகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=165621
-
- 0 replies
- 480 views
-
-
அலிசப்ரி அலட்டுகிறார் Posted on September 14, 2022 by தென்னவள் 12 0 ஜநாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பிதற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். சிங்களத்தில் ஒரு முது மொழி உண்டு “கொஹட யன்னே. மல்லே பொல்” என்பார்கள். அதாவது எங்கே போகின்றாய் என்று கேட்டால் பையிலே தேங்காய் என்று மறு மொழி சொல்வது போல் 46/1 பிரேரணையை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாகவும் பொருளாதார ரீதியாக அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்றும் கூறியுள்ளார். எனினும் நடைமுறைப்படுத்தாமைக்கு ஒரேயொரு காரணம் அவரின் பேச்சில் தென்படுகிறது. அதாவது சர்வதேச நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையை நடத்துவது நாட்டின்…
-
- 0 replies
- 359 views
-
-
நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்தில் 960,000 மெட்றிக் டொன் நிலக்கரி தட்டுப்பாடு - இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் By T. SARANYA 14 SEP, 2022 | 09:53 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்திக்கு தேவையான 960,000 மெட்றிக் டொன் நிலக்கரி தட்டுப்பாடு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்படவுள்ளதால், எதிர்வரும் காலத்தில் நாளாந்தம் 10 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 38 கப்பல்களில் நிலக்கரியை இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 14 கப்பல்களுக்கான …
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
கோழைத்தனமான அரசியல்வாதிகளே நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்-மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் கோழைத்தனமான செயல் எனவும் அதற்கு ஆதரவளித்தவர்கள் கோழைகள் எனவும் மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் நீங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகள்? தமிதா போன்ற ஒருவரை சிறையில் அடைத்த கோழைகளே! போராட்டத்தை நிறுத்த மாட்டோம்! போராட்டங்களை நடத்துவது தனிமனிதனின் உரிமை எனவும், போராட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/207592
-
- 9 replies
- 953 views
-
-
திருக்கோணேஸ்வர ஆலய, விவகாரம் குறித்து... அமைச்சரவையில், ஆராய்வு! திருகோணமலை வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசம் மாசுபடும் வகையில் சிலர் செயற்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அசுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அறிந்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமய விவகார அ…
-
- 0 replies
- 200 views
-
-
ஆசிரியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு... ஐந்தாண்டு விடுமுறை பொருந்தாது: அதிகாரி. அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சம்பளமற்ற விடுமுறை வழங்கும் அரசாங்கத்தின் சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, இந்த நீண்ட கால விடுமுறைக்கான சுற்றறிக்கையை அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களின் மேலதிகமான ஊழியர்களை விடுவிப்பதற்காகவே அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்…
-
- 0 replies
- 132 views
-
-
மூலப்பொருள் பற்றாக்குறை – சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு. ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறையால் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த பற்றாக்குறையால் அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் பாதியளவு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நிகழ்வுகளுக்கான கேட்டரிங் சேவைகளும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1298944
-
- 0 replies
- 180 views
-
-
இலங்கையில் நிலவும்... இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, தமது அபிலாஷைகளை நிறைவேற்ற சிலர் முயற்சி – சீனா இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் ஜு இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தமிழ் சிறுபான்மை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காமை குறித்து தான் கவலையடைவதாக விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி இந்திரன் மணிபா…
-
- 0 replies
- 208 views
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டா இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து By T. SARANYA 12 SEP, 2022 | 04:31 PM அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக கடந்த ஜூலை மாதம் இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மீண்டும் சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசியக்கிண்ண 2022 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற…
-
- 3 replies
- 327 views
- 1 follower
-
-
மூதூரில் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் போராட்டம் Posted on September 12, 2022 by தென்னவள் 14 0 கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் 43ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் – மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமக்கு நிரந்த…
-
- 0 replies
- 198 views
-
-
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் - கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் By RAJEEBAN 13 SEP, 2022 | 03:30 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கனடாவின் தமிழ் அமைப்புகளும் ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் கூட்டாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதமொன்றை எழுதியுள்ளனர். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்க…
-
- 3 replies
- 257 views
- 1 follower
-
-
இலங்கைக்கு... பலமான, ஆதரவை வழங்குவோம் – ஐ. நா. வில்... சீனா. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்கும் என ஐ.நா.விற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என கூறியுள்ளார். https://athavannews.com/2022/1298841
-
- 5 replies
- 621 views
-
-
யாழ்.கச்சேரி பகுதியில் 20 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்களுடன் போதைப்பொருள் வியாபரி கைது By VISHNU 13 SEP, 2022 | 03:21 PM யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் போதைப்பொருள் வியாபாரியான 24 வயது இளைஞனை நேற்று திங்கட்கிழமை (12) இரவு 10 மணியவில் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் ரி. மேனன் தலையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் கச்சேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்ய தீர்மானம் By T. SARANYA 13 SEP, 2022 | 04:59 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச துறைகளில் அநாவசிய நியமனங்களை வழங்காமலிருப்பதற்கும், பணியாளர் வெற்றிடம் காணப்படும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் ஊழியர் சமநிலைப்படுத்தலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் இவ்வாரம் அமைச்சரவையில் பிர…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் அறிவிப்பு ! By Shayithan.S September 13, 2022 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும். அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்…
-
- 4 replies
- 294 views
- 1 follower
-
-
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத…
-
- 0 replies
- 244 views
-