ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... ஜெனீவாவில், ஆர்ப்பாட்டம்! இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2022/1298743
-
- 0 replies
- 186 views
-
-
கருத்துச்சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் மட்டுப்பாடுகள் அதிகார இருப்பை தக்கவைக்க முன்படுவதை காண்பிக்கிறது - கரு By T. SARANYA 09 SEP, 2022 | 11:05 PM (நா.தனுஜா) சுதந்திர, ஜனநாயக நாடொன்றில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமை என்பது இன்றியமையாததாகும். அவ்வாறிருக்கையில் அரசாங்கமொன்று அந்த உரிமையை மட்டுப்படுத்துமேயானால், அதன்மூலம் மக்களின் அபிலாஷைகளைவிடுத்து வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படுகின்ற ஆட்சியாளர்களின் தன்மையே வெளிப்படுகின்றது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய ச…
-
- 6 replies
- 332 views
- 1 follower
-
-
அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முக்கிய ஆவணம் அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய பத்திரத்தை கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) அல்லது எதிர்வரும் அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 65 வயதாக இருந்த அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 253 views
-
-
இடைக்கால அதிகாரத்தை நிறுவி அரசியல் தீர்வை அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. திறமையான அதிகார வரம்பைக் கொண்ட ஐ.நா. உறுப்பு நாடுகளை, தங்கள் நீதிமன்றங்களில் பயனுள்ள மற்றும் சுதந்திரமான குற்றவியல் மற்றும் பிற நடவடிக்கைகளை எடுக்க தாம் கோரவுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.ரவி குமார் தெரிவித்தார். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஏற்கனவே நிறுவப்பட்ட சாட்சியங்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் பரிந்துரை பொறிமுறைகளை …
-
- 0 replies
- 126 views
-
-
”இது சிங்கள-பெளத்த நாடு என்ற நிலை மாற வேண்டும்”: சமந்தா பவரிடம் மனோ! அமெரிக்க யூஎஸ்எய்ட் நிர்வாகி சமந்தா பவருக்கும், இலங்கையின் ஏழு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், “இன்று இந்நாட்டில் ஏற்பட்டிருப்பது பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல. அதையும் மீறிய அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடி ஆகும். இதற்கு மூல காரணம், இந்நாட்டில், இன்னமும் தீராமல் இருக்கும், தேசிய இனப்பிரச்சினை ஆகும். இதற்கு பிரதான காரணம், இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்ற நிலைப்பாடு மாறாமல் இருப்பதே ஆகும். பல மொழி, பல இனம், பல கலாச்சாரம் என்ற கொள்கை முற்று முழுதாக ஏற்கப்படும் வரை உள்நாட்டில் நிலைமாற்றம் ஏற்பட…
-
- 2 replies
- 198 views
-
-
நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஐவர் இவர்கள் தான் ! By Shayithan.S September 12, 2022 நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக திட்டமிட்டு பொருளாதார குற்றங்களை இழைத்த குழுவை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அணியை சேர்ந்த சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் சரிது ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நாட்டு மக்களுக்கு வேண்டுமென்றே குற்றம் செய்ததால்தான் இவ்வளவு கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட கூறுகிறது. இந்த நெருக்கடியை உருவாக்கியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். குறித்த அறிக்கையில், ஐவரின் பெயர்கள் தெளிவாக எழுப்பப்பட்டுள்ளன. டா…
-
- 0 replies
- 308 views
-
-
4 எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர்கள் இல்லை! 150 மில்லியன் டொலர்கள் திரட்ட திண்டாடும் அரசு Digital News Team 2022-09-11T10:08:25 இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது. இந்த நான்கு எரிபொருள் கப்பல்களில் ஒரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவின் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்களை அரசாங்கம் திரட்ட வேண்டிள்ளது. செலுத்த வேண்டிய மீதிப் பணத்தை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்…
-
- 5 replies
- 350 views
- 1 follower
-
-
முன்பள்ளிக் குழந்தைகளுக்கான... "மதிய உணவு" வழங்கும் நடவடிக்கை, இம்மாதம் முதல் ஆரம்பம்! உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு வழங்கும் நடவடிக்கை இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 35,000 தோட்டப் பிள்ளைகள் உட்பட போசாக்கு குறைபாடுள்ள பிரதேசங்களில் உள்ள 155,000 முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி.சில்வா தெரிவித்தார். தற்போது, 90,000 போசாக்கு குறைபாடுள்ள முன்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதோடு, வழங்குநர்களுக்கு ஒவ்வொரு உணவுக்கும் 30 ரூபாய் வழங்கப்படுகிறது. எனினும் அந்…
-
- 0 replies
- 143 views
-
-
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து 12 SEP, 2022 | 12:19 AM மகத்தான வெற்றியுடன் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்! 2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்து எமது கிரிக்கெட் அணி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் உயர்த்தி வைத்துள்ளது. அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – வர்த்தமானி 30ஆம் திகதிக்கு பின்னர், வெளியிடப்படும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தி அதன் உறுப்பினர்களுக்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான சூழலை தயார்படுத்த வேண்டும். இதன்படி, நீடிக்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்க…
-
- 0 replies
- 117 views
-
-
மே 9 வன்முறை : நடவடிக்கைகளை எடுக்கவில்லை - கோட்டா நியமித்த விசாரணை குழு ரணிலுக்கு அறிக்கை By T Yuwaraj 11 Sep, 2022 | 09:57 PM (எம்.எப்.எம்.பஸீர்) நாடெங்கும் கடந்த மே 9 ஆம் திகதி பதிவான வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு முப்படையினரும் பொலிஸாரும் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குறித்த தினம் தாக்கி தீ வைக்கப்பட்ட 74 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மீது, அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறப்போவதாக உளவுத் துறையினர் தகவல் அளித்தும் அதனை தடுக்க பொலிசாரும், முப்படையினரும் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது. கீழ் …
-
- 0 replies
- 248 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுகள் இடம்பெறுவதால் நாம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் - சுமந்திரன் By Vishnu 11 Sep, 2022 | 08:18 PM அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 10 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போதே எம்.ஏ.சுமந்திரன் இ…
-
- 0 replies
- 160 views
-
-
ரணில் 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாகி ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து மக்களை நசுக்குகின்றார் - ஜோசப் ஸ்டாலின் By Vishnu 11 Sep, 2022 | 08:23 PM ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை 10 ஆம் திகதி சனிக்க…
-
- 0 replies
- 159 views
-
-
இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 32 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்த காலப் பகுதி மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க 4 வருடங்களின் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு இன்று (செப்டெம்பர் - 11) வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு - மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 29 கைதிகளை சந்திப்பதற்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டதாக 'குரலற்ற…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தாது ஜெனிவா செல்வது நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் By VISHNU 11 SEP, 2022 | 10:51 AM K.B.சதீஸ் தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி முன் பிரச்சாரம் செய்யாமல் ஜெனிவா செல்வது, நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து, அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரி…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
திருகோணமலையில் யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு By T YUWARAJ 11 SEP, 2022 | 04:12 PM திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கை சேர்ந்த 39 வயதான பியதிஸ்ஸ பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விறகு எடுக்கச் சென்றவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால் அவரை தேடிச் சென்ற வேலையிலேயே ஈச்சக்குளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 85 பேர் மட்டக்களப்பு கடலில் கைது! சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் மட்டக்களப்பு கடல் பகுதியில் கைதாகியுள்ளனர். படகுகளுடன் இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ரணவிக்ரம கடற்படைக் கப்பலானது மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதில் 18 வயது…
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு! - தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறது இ.தொ. கா By T YUWARAJ 11 SEP, 2022 | 07:14 PM பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு நடத்திய மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை பெருந்தோட்டங்களில் பணியாற்றும் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமான ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்களின் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுப்பப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
இரண்டு நாள் பயணமாக... இலங்கைக்கு வந்தார், சமந்தா பவர்! சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கவுள்ளார். மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் சமந்த…
-
- 3 replies
- 523 views
- 1 follower
-
-
காரைநகர் - ஊர்காவற்றுறை இடையேயான பாதைச் சேவையை சீராக்குமாறு வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை! By VISHNU 11 SEP, 2022 | 02:19 PM காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இப்பாதைச் சேவை இடம்பெறாமையால் தாங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுந…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளை பார்வையிடச் செல்லும் உறவுகளுக்கு வவுனியாவில் உணர்வு பூர்வமான வரவேற்பு. By T YUWARAJ 10 SEP, 2022 | 09:10 PM K.B.சதீஸ் நீண்ட நாட்களுக்கு பின்னர் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக கொழும்பு நோக்கி பயணிக்கும் அரசியல் கைதிகளின் உறவுகளை வவுனியாவில் வரவேற்று உணவளித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக உறவுகளை சந்திக்காமல் சிறையில் வாடும் வடமாகாணத்தை சேர்ந்த அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக யாழ்ப்ப…
-
- 1 reply
- 268 views
- 1 follower
-
-
மகாராணியின்... இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாக, ஜனாதிபதி ரணில் அறிவிப்பு ! பிரித்தானியாவில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2022/1298573
-
- 2 replies
- 177 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல் : இராஜாங்க செயலர் அன்ரனி ஜே.பிளின்கெனுக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வர் கடிதம் By VISHNU 10 SEP, 2022 | 09:10 PM (நா.தனுஜா) ராஜபக்ஷ அரசாங்கம் கலைக்கப்பட்டமையானது மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தொடர்பில் புதுப்பிக்கப்பட்டதொரு கோணத்தில் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கின்றது. எனவே தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் இலங்கையுடன் பேணப்படும் அனைத்துவிதமான இராஜதந்திரத்தொடர்புகளின்போதும் தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி என்பன உறுதிப்படுத்தப்படுவதை அமெரிக்கா மையப்புள்ளியி…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்தது சீனா By VISHNU 10 SEP, 2022 | 09:12 PM (நா.தனுஜா) இலங்கையிலுள்ள ஊடகங்களின்மீது செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில், இலங்கையின் ஊடகங்கள்மீது சீனா செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாகக் கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலடி வழங்கியுள்ள இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், மேற்படி 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற அமெரிக்க நிறுவனமானத…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
விரட்டியடிக்கப்பட்ட... கால்நடைக், கூட்டம் – அனுர. தற்போதைய அமைச்சரவையானது குறுக்கு வழியில் நிற்கும் விரட்டியடிக்கப்பட்ட கால்நடைக் கூட்டம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தொலைபேசிக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அரச நிதியில் அவர்கள் சுகபோகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவது பொறுப்பு…
-
- 0 replies
- 554 views
-