ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இவ்வார இறுதிக்குள்... அவசரகால சட்டத்தை, நீக்க முடியும்- ஜனாதிபதி நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022 விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கைக்கு... பெரும் வர்த்தகச் சலுகையை, வழங்கியது பிரித்தானியா !! 2023 ஆம் ஆண்டிலிருந்து வளரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டத்தில் (DCTS) இலங்கையையும் இணைத்துக்கொள்ள பிரித்தானியா தீர்மானித்துள்ளது. இதன்மூலம் பிரித்தானிய சந்தைகளுக்கு அதிக அணுகலை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு நன்மை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 80%க்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்களை இங்கிலாந்து சந்தையில் வரியின்றி பெற்றுக்கொள்ள முடியும் இது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அதேவேளை வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கூறியுள்ளார். இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிசலுகையை போன்ற திட்டம் என்பதும் க…
-
- 0 replies
- 219 views
-
-
மூன்றாம் தரப்பிற்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென்ற உறுதிப்பாட்டின் பின்னரே சீன கப்பல் அனுமதிக்கப்பட்டது - பந்துல By T. SARANYA 16 AUG, 2022 | 08:32 PM (எம்.மனோசித்ரா) சீன கண்காணிப்பு கப்பலால் மூன்றாம் தரப்பிற்கு எவ்வித பாதிப்புக்களோ அல்லது பிரச்சினைகளோ ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, அதன் வருகைக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையான்மைக்கு மதிப்பளித்து சீனா மற்றும் இந்தியாவுடனான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கமும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் செய்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பிராந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்…
-
- 0 replies
- 151 views
-
-
விமானங்களுக்கான எரிபொருளை... தனியாரிடமிருந்து, கொள்வனவு செய்ய நடவடிக்கை? பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாவிட்டால், தனியார் துறையினருக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், அமைச்சும் தேவையான அனுமதி மற்றும் வசதிகளை வழங்கினால் விமான எரிபொருளை தமது சொந்த செலவில் இலங்கைக்கு கொண்டு வந்து விநியோகிக்க தயார் என விமானத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை இரண்…
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கை மக்களின் மக்களாணைக்கு மதிப்பளித்து சீனா இலங்கையுடன் இணக்கமாக செயற்படுகிறது - விமல் By T. SARANYA 16 AUG, 2022 | 04:07 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை. அத்துடன் இலங்கைக்குள் தொண்டு நிறுவனங்களை நிறுவி, நிதியுதவி வழங்கி ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் முயற்சிகளை சீனா ஒருபோதும் முன்னெடுக்கவில்லை. இலங்கை மக்களின் மக்களாணைக்கு மதிப்பளித்து சீனா இலங்கையுடன் இணக்கமாக செயற்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்த சீனாவின் யுவான் வான் -05 கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரைய…
-
- 0 replies
- 147 views
-
-
22 ஆவது திருத்தம் பிரிவினைவாத அரசியலமைப்பு சதித்திட்டம் - குணதாச அமரசேகர சபாநாயகருக்கு கடிதம் By DIGITAL DESK 5 16 AUG, 2022 | 03:26 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல நடவடிக்கை ஊடாக பாராளுமன்றத்துக்குள் பிரிவினைவாத அரசியலமைப்பு சதித்திட்டம் இடம்பெறும் அபாயம் இருக்கின்றது. அதனால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலம் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்த இடமளிக்கப்படவேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 22 ஆவது அரசியலமைப்ப…
-
- 0 replies
- 181 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷவிற்கான சிறப்புரிமைகளை வழங்கும் பொறுப்பு எமக்குள்ளது - பந்துல By T. SARANYA 16 AUG, 2022 | 09:25 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி தேர்தல் சட்டங்களுக்கமைய முன்னாள் ஜனாதிபதிக்கும், நிகழ்கால ஜனாதிபதிக்கும் காணப்படும் சிறப்புரிமைகள் தொடர்பில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்திய பிரத்தியேக விமானத்திற்கு இலங்கை அரசாங்கமே பணம் செல…
-
- 0 replies
- 162 views
-
-
பொது மக்கள்... தமக்குத் தேவையான, கடலுணவுகளை... "ஒன் – லைன்" மூலம், பெற்றுக் கொள்ளவதற்கான வசதி. -டக்ளஸ் தேவானந்தா.- பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன்விற்பனை நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். அதனடிப்படையில் PICME ஊடாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து தேவையான கடலுணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. htt…
-
- 5 replies
- 446 views
-
-
By T. SARANYA 16 AUG, 2022 | 12:12 PM யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனுக்கு நெற்றியில் காய…
-
- 2 replies
- 613 views
-
-
தாமரை கோபுரத்தை... அடுத்த மாதம், 15 ஆம் திகதி முதல்... திறந்து வைக்க தீர்மானம்! கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வ…
-
- 7 replies
- 930 views
-
-
ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட…
-
- 15 replies
- 1.3k views
-
-
By DIGITAL DESK 5 16 AUG, 2022 | 03:16 PM (எம்.மனோசித்ரா) தமிழ் மற்றும் சிங்களம் என்பன அரச மொழிகளாகும். எனவே அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இவ்விரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும். அதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பில் எந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை. இதற்கு முன்னரும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள…
-
- 4 replies
- 334 views
-
-
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு 14 August 2022, 9:58 am தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அழை…
-
- 17 replies
- 1.3k views
-
-
By RAJEEBAN 16 AUG, 2022 | 04:06 PM புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. ஆயினும் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார விளைவுகள் மேம்படும் வகையில் புதிய இலங்கை அரசாங்கத்தால் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. எவ்வாறாயினும், ஓகஸ்ற் 1, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள்…
-
- 4 replies
- 562 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் பொறியியல்பீட வளாகத்தின் முதலாவது பொறியியல் மாநாடு நடைபெறவுள்ளது என பொறியியல்பீட பேராசிரியர் அ.அற்புதராஜா தெரிவித்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா,கனடா, சீனா, கொங்கொங் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதன்போது தங்களது ஆய்வுகளையும் அவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர். இந்த மாநாடு மாணவர்களது கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு களமாக அமையும் என பொறியியல்பீட பேராசிரியர் மேலும் தெரிவித்தார். அறிவியல்நகர் வளாகத்தில் முதலாவது பொறியியல் மாநாடு | உதயன் …
-
- 0 replies
- 187 views
-
-
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யொமுரி சிம்புன் நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கப்பல் போர்க்கப்பல் என்ற பிரிவிற்குள் வரவில்லை,அது ஆராய்ச்சி கப்பல் என்ற பிரிவிற்குள் வருகின்றது அந்த கப்பல் அம்பாந்தோட்டை வருவதற்கு நாங்கள் அவ்வாறே அனுமதி வழங்கினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை- ஜனாதிபதி | Virakesar…
-
- 0 replies
- 243 views
-
-
பவித்ரா, ஜோன்ஸ்டன், ரோஹித அபேகுணவர்தன, நாமலுக்கு... அமைச்சு பதவிகளை, வழங்குமாறு பரிந்துரை! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்திற்குள் இணையாத காரணத்தினாலேயே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு தற்போதைய அமைச்சரவையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர எஸ்.எம்.சந்ரசேன, பவித…
-
- 2 replies
- 338 views
-
-
ஜனாதிபதியின் தீர்மானத்தினால்... அரசியல் களத்தில், பெரும் சர்ச்சை? பல மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சில பிரமுகர்களை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளமையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது. அரசியலில் இருந்து ஒய்வு பெற்று, அரசியலில் ஈடுபடாத மரியாதைக்குரிய நபருக்கு ஆளுநர் பதவி வழங்குவதுதான் இதுவரை பொது மரபாக காணப்படுகின்றது. எனினும், இம்முறை பாரம்பரியத்தை மீறி அரசியலில் தீவிரம் காட்டிவரும் சில பிரமுகர்களுக்கு ஆளுநர் பதவி வழங்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்…
-
- 0 replies
- 309 views
-
-
அவசரகால சட்டம், தொடர்ந்தும் நீடிக்கப்படாது? அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடையும் குறித்த சட்டத்தை நீடிக்க வேண்டுமெனில் மீண்டும் நாடாளுமன்றின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமானது. எனினும் தற்போது 27ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்பது தெரியவந்துள்ளது. எனவே, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் இந்த சட்டம் தானாக இரத்தாகும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://a…
-
- 0 replies
- 136 views
-
-
அரசாங்கத்தின் செயற்பாடுகள்... நாட்டின் பன்மைத்துவத்தினை, வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் – டக்ளஸ் நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ண வெளிப்பாடாக சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் அந்த நடைமுறை…
-
- 0 replies
- 130 views
-
-
பல புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என கலாநிதி குணதாச அமரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள தருணம் எங்களிற்கு கவலையளிக்கின்றது என அவர் தேசிய அமைப்புகளின் சம்மேளனங்களின் சார்பில் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது எனகலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சில புலம்பெயர் அமைப்புகள் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்காக பின்பற்றப…
-
- 6 replies
- 516 views
-
-
யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில்... இந்தியாவின், 75 ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டங்கள்! இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியத் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார். இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார். இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். https://…
-
- 7 replies
- 658 views
-
-
இந்தியாவால்... அன்பளிப்பாக வழங்கப்பட்ட, "டோனியர்-228" கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது. இந்திய சுதந்திர தினமான... இன்றைய தினம், குறித்த விமானம்... இலங்கைக்கு வழங்கப்படுகின்றது. விமான நிலை ஊழியர்கள்.. தரையிறங்கிய விமானத்தை, நீர் பீச்சியடித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1294793
-
- 15 replies
- 682 views
- 1 follower
-
-
By RAJEEBAN 15 AUG, 2022 | 12:48 PM 2014 முதல் தடையும் தடைநீக்கமும் தொடர்கின்றது நாங்கள் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார் 2014 இல் என்னையும் உலக தமிழர் பேரவையையும் தடை செய்தார்கள்,2015இல் தடையை நீக்கினார்கள் 2021 இல் மீண்டும் தடை விதித்தார்கள் 2022 இல் தடையை நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும் தாங்கள் தொடர்ந்தும் அர்…
-
- 1 reply
- 668 views
-
-
கோட்டாபய... சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில், "67 மில்லியன் ரூபாவை" ஹோட்டல் கட்டணமாக... செலுத்தியதாக தகவல்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, எவ்வாறாயின…
-
- 6 replies
- 586 views
-