Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வருட இறுதிக்குள்... அமெரிக்க டொலர், 500 ஐ தாண்டும் – காமினி விஜேசிங்க அமெரிக்க டொலரின் மதிப்பு வருட இறுதிக்குள் 500 ஆக அதிகரரிக்கும் என முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க எச்சரித்துள்ளார். தற்போதைய நெருக்கடியை சீர்செய்வதற்கான பாதையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய கடன் நிலை, அரசாங்கம் தனது கடமைகளில் தவறியிருப்பதையே காட்டுகிறது எனவும் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப புதிய வேலைத்திட்டத்தின் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். நாடு என்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்து கொள்வது மிகவ…

  2. கடும் மழைக்கு மத்தியிலும்... கோட்டா கோ கமவில், தொடரும்... போராட்டம் – இன்றுடன் 20 நாட்கள் நிறைவு! ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் 20ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைத் தரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு கடும் மழைக்கு மத்தியிலும் கோட்டா கோ கமவில் தொடர்ச்சியாக பல கோசங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https:/…

  3. யாழ். குருநகரை சேர்ந்த இருவர்... தமிழகத்தில் தஞ்சம்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய தினம் புதன்கிழமை குருநகர் பகுதியில் இருந்து படகொன்றின் மூலம் சென்று, இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் கரையிறங்கிய வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாழ்ப்பாணம் , மன்னார் கடற்பரப்புக்கள் ஊடாக தமிழகம…

  4. அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்... ஜனாதிபதிக்கும், இடையில்... இன்று கலந்துரையாடல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் அறியப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278855

  5. விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று – உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணியளவில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பான யோசனையை அண்மையில் சபாநாயகரிடம் கையளித்தன என்பது …

  6. மக்கள் ஆணையுடனேயே.. நாட்டை, பொறுப்பேற்பேன் – சஜித்! மக்கள் ஆணையுடனேயே நாட்டை பொறுப்பேற்பேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பிற்கான பேரணி இன்று(புதன்கிழமை) இரண்டாவது நாளாக மாவனெல்லையில் ஆரம்பமானது. இதன் போது மாவனெல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பஷில் ராஜபக்ஷவுடன் இணைந்த கொள்ளை கூட்டத்திலுள்ள 70 பேருடன் எனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ எவ்வித இரகசிய ஒப்பந்தமும் கிடையாது. அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாட்டை மறை…

  7. ரம்புக்கனையில்... உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று, இரங்கல் தெரிவித்தார் செந்தில் தொண்டமான்! ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சமிந்த லக்ஷானின் வீட்டுக்கு நேரில் சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அன்னாரது குடும்பத்துக்கு இ.தொ.கா சார்பிலும் மலையக மக்கள் சார்பிலும் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு இ.தொ.கா சார்பாகத் தமது கடுமையான கண்டனத்தையும் வெளிப்படுத்தினார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் பக்கபலமாக இருக்கும் என்றும் உறுதியளித்தார். இதன்போ…

  8. ஆயிரத்திற்கும்... மேற்பட்ட, தொழிற்சங்கங்கள்... இன்று, வேலை நிறுத்தப் போராட்டம்! அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (UTUMO) அறிவித்துள்ளன. ‘வாக்கெடுப்புக்கு தலைவணங்கும் – அரசாங்கம் வீட்டுக்குச் செல்கிறது’ என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி, போக்குவ…

  9. முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில்... சிங்கள மக்களும், கலந்துகொள்ள வேண்டும் – செல்வம் நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவர் இன்று (புதன்கிழமை ) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல் என காலிமுகத்திடல் தொடக்கம் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெறுகின்றது. இந்த போராட்டங்கள் ஜனநாய…

    • 2 replies
    • 300 views
  10. ரம்புக்கனை துப்பாக்கி பிரயோகம் – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும், கைது செய்யுமாறு உத்தரவு! ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று(புதன்கிழமை) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள…

    • 2 replies
    • 325 views
  11. அமெரிக்க தூதுவர், யாழ். பொதுநூலகத்திற்கு விஜயம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார். இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டார். வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278823

    • 7 replies
    • 715 views
  12. அரசாங்கத்திற்கு... எதிர்ப்புத் தெரிவித்து, நாளை... பொது வேலைநிறுத்தம்! அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம்(வியாழக்கிழமை) ´ பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது. எனவே இந்த நாட்டின் உழைக்கும் மக்களாகிய நாங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கத்திடம் கூறுகின்றோம். …

  13. சாய்ந்தமருது... வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை... தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்கும் பணி அம்பாறை பொது மயானத்தில் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை நீதவான் துஷாக தர்மகீர்த்தி முன்னிலையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் தலைமையிலான தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுக்கு இணையாக, சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான மொஹமட் ரில்வான், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்தார். இதன்போது, சிறுவர்கள் உள்ளடங்களாக…

  14. உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு? சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், ச…

    • 27 replies
    • 1.1k views
  15. இலங்கை போராட்டத்தில் கண்ணீர்க் குரல்கள்: 'சோற்றுக்கு வழியில்லை; பட்டினி கிடக்கிறோம்' 42 நிமிடங்களுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது கொழும்பு காலி முகத் திடலில் நடக்கும் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம். அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை போராட்டத்தில் பரவலாகக் கேட்கிறது. விலைவாசி உயர்ந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் சிரமப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். கொழும்பு நகருக்கு வெளியே இருக்கும் நீர்க் கொழும்பு பகுதியில் இருந்து போராட்டத்துக்கு வந்திருக்கும் பிலோமினாளுக்கு தனது நிலையைச் சொல்லும்போதே கண்ணீர் வந்த…

  16. இலங்கை பொருளாதார நெருக்கடி: "யாரோ இருவரால் மொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது" - அர்ஜூன ரணதுங்க எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம்? தவறு எங்கே நடந்தது? என்பது குறித்து பிபிசியுடன் விரிவாக கலந்துரையாடினார், இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிரிக்கெட் முன்னாள் கேப்டனுமான அர்ஜூன ரணதுங்க. அவரின் பேட்டியிலிருந்து: கேள்வி: இந்த நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு காரணமான தவறு எங்கு நேர்ந்தது? பதில்: அது ஒரு நீண்ட கதை. ஆனால், 2019-ல் புதிய அதிபர், அறுதிப் பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த போது, …

  17. அனைத்துக் கொடுப்பனவுகளையும்... டொலரில் மாத்திரம், செலுத்துமாறு ஆலோசனை! துறைமுக அதிகார சபைக்கு கப்பல் நிறுவனங்களினால் செலுத்தப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும் டொலரில் மாத்திரம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னகோனினால் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து இவ்வதறு டொலரில் மாத்திரம் அனைத்துக் கொடுப்பனவுகளையும் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278752

  18. இலங்கையின் கடன் நெருக்கடியை போக்க வரிகள் உயர்த்தப்பட வேண்டும் - ஆன் மாரி தெரிவிப்பு இலங்கை தனது நாணயக்கொள்கை நடவடிக்கைகளை கடுமையாக்குமாறும் அதன் கடன் நெருக்கடிகளை சமாளிக்க வரிகளை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் துறைகளின் இயக்குனர் ஆன் மாரி வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதி இயக்குனர் ஆன் மாரி தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தனது கடன் நெருக்கடியை சமாளிக்க பணவியல் கொள்கைகளை கடுமையாக்க வேண்டும், வரிகளை உயர்த்த வேண்டும், நெகிழ்வான நாணய மாற்று வீதங்களை பின்பற்ற வேண்டும் என்றும் ஆன் மாரி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அதிகாரிகளுடன…

  19. அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு... இணக்கம் வெளியிட்டார், ஜனாதிபதி – மஹிந்தவின்... பிரதமர் பதவியும், பறிக்கப்படுகின்றது? நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளார். கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு வ…

  20. மஹிந்த ராஜபக்ஷவினை... பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தரப்பிற்கு, தலைமை தாங்குகின்றார்... மஹிந்தானந்த அளுத்கமகே? பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவினை நீக்குவதற்கான அணியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திற்குள் உருவாகியுள்ள புதிய அணிக்கு அவரே தலைமை தாங்குவதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே அவர் செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது அரசு பதவி விலக வேண்டும் என்ற யோசனை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ளது. …

  21. முஸ்லீம் பிரதிநிதிகளையும்... அமெரிக்க தூதுவர், சந்தித்தார்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.சுபியானுடன் சந்திப்பில் ஈடுபட்டார். நாவாந்துறை வீதியில் அமைந்துள்ள மக்கள் பணிமனை அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கான காணி இல்லாத பிரச்சினை, காணி இருந்தும் வீட்டுத்திட்டம் இல்லாத பிரச்சினை, வாழ்வாதாரம் இல்லாத நிலை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னர் உள்ள அரசாங்கமோ தற்போதுள்ள அரசாங்கமோ கருத்திற்கொள்ளவில்லை. இது தொடர்பாக ம…

  22. வடமாகாண... அபிவிருத்தி உத்தியோத்தர்கள், நாளை... சுகயீன விடுமுறைப் போராட்டம்! நாடுதழுவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நாளை சுகவீன விடுமுறையை அறிவித்து இப்போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மேற்படி சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணிப் பகிஸ்கரிப்புத் தொடர்பாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுதழுவிய ரீதியில் 2022.04.28 வியாழக்கிழமை பல்வேறு தொழிற்சங்கங்களால், பல்வேறு கோரிக…

  23. இலங்கைக்கு... "600 மில்லியன் டொலர்" நிதி உதவியை, வழங்க... உலக வங்கி இணக்கம்! தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று(செவ்வாய்கிழமை) கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மருந்து, சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்த…

  24. ஆளும் தரப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களை... சந்திக்கின்றார் ஜனாதிபதி! 31 SHARES 1k VIEWS Share on FacebookShare on Twitter ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று(புதன்கிழமை) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும். ஜனாதிபதியின் விருப்பத்துக்கமைய இடைக்கால அரசு அமைய வேண்டும். அதற்கு வழிவிடும…

  25. அரச ஊழியர்களின்... சம்பளம், குறைக்கப்பட மாட்டாது என அறிவிப்பு! அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278730

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.