ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஜனாதிபதியின் அழைப்பை... கூட்டமைப்பு, நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்து! ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டு எமக்காக பேச வேண்டும். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஜனாதிபதியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்…
-
- 0 replies
- 164 views
-
-
மின் கட்டணம்... 500 வீதத்தால், அதிகரிக்கும் அறிகுறி? மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2 ஆயிரத்து 180 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை, 4 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பார்க்கும்போது தலை சுற்றுகின்றது. இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படலாம். எமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 30 அலகுகளுக்கான மின் கட்டணத்தை தற்போதுள்ள விலையைவிடவும் 500 மடங்களால் அதிகரிக்குமாறு மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது. எனவே, மின்குமிழ்களை வெறுமனே பார்த்துகொண்டிருக்க வேண்…
-
- 0 replies
- 143 views
-
-
இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து... நிமல் லன்சா இராஜினாமா!! கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நிமல் லன்சா இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா தொடர்பான கடிதத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் கையளித்துள்ளார். கடந்த சில வாரங்களாக சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்மீது குற்றம் சாட்டி வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் சில விடயங்களை சுட்டிக்காட்டிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். நாடு மிகவும் பாரதூரமான விடயங்களை எதிர்நோக்கி வருவதனால் தான் தனது அமைச்சில் உள்ள பிரச்சினைகள் …
-
- 0 replies
- 149 views
-
-
யாழில்... 3ஆயிரம், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3000 சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். https://athavannews.com/2022/1272854
-
- 0 replies
- 135 views
-
-
2009 பின்னர்... மக்கள் இழந்த உயிர்களை தவிர, அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் – பிரதமர் 2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் என பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். தொடர்து உரையாற்றிய அவர் “ யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன். 1970களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது யாழ் மக்களுக…
-
- 6 replies
- 700 views
-
-
(இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட 30 வருடகால இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம். வடக்கிற்கும்,தெற்கிற்கும் இடையிலான பாலமாக யாழ்தேவி புகையிரதத்தை கருதுகிறேன். எமது ஆட்சியில் இரு மாகாணங்களுக்குமிடையிலான நல்லுறவு அபிவிருத்தி ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப…
-
- 7 replies
- 543 views
-
-
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நல்ல தேசபக்தர் மற்றும் தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார், பிரச்சினை என்னவென்றால், அவரது நாடு இலங்கை அல்ல அமெரிக்கா என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மஹரகம ஜனசபையில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. நிதியமைச்சரின் சகோதரர் ஜனாதிபதி மற்றும் மற்றொரு சகோதரர் பிரதமர். நிதியமைச்சர் வேண்டுமென்றே இந்த நாட்டை ஏன் வீழ்த்துகிறார்? தன் சகோதரர்களை சிக்கலில் தள்ளுகிறார்? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. “இலங்கையில் சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமெரிக்கா முயற்சித்தது. சாலையில் சென்று நின்றோம். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்…
-
- 0 replies
- 333 views
-
-
இறைமை... பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை, சர்வகட்சி மாநாட்டில் வலியுறுத்தப்போவதாக சம்பந்தன் தெரிவிப்பு ! நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் எனில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை சர்வகட்சிகளின் மாநாட்டில் வலியுறுத்துவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பது குறித்தும் வெளிப்படுத்தவுள்ள விடயங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாவும் அதற்காக இரு பிரதிநிதிகளின் பெயர் கோ…
-
- 4 replies
- 378 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் எரிபொருளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் வரிசையில் காத்திருக்கின்றனர். சில பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகிலும், சமையல் எரிவாயு விற்பனை நிலைய வளாகங்களிலும் இரவிரவாக மக்கள் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு இன்று கொழும்பு - ஒருகொடாவத்தை பிரதேசத்திலுள்ள லாஃப் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் மண்ணெய்ணெய் மற்றும் பெற்றோல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக பல மணித்தியாலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போதிலும் , அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாமையால் வரிசையில் காத்திருந்த மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் …
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 42 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னரான சந்தர்ப்பத்தில், இலங்கையில் தங்கத்தின் விலை அதிக பட்சமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவிற்கு சென்றதாக கொழும்பு - செட்டியார் தெரு தங்காபரண வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், …
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் குறியீடாக இந்திய கடற்படை கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளது - இந்திய உயர்ஸ்தானிகராலயம் (செய்திப்பிரிவு) இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைவாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றின் குறியீடாக இந்திய கடற்படை கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நட்புறவு பாலங்களை கட்டியெழுப்பும் இந்திய கடற்படையின் பெரு முயற்சியின் தொடர்ச்சியாக கடந்த 10 - 19 ஆம் திகதி வரையில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 5 பாய்மரக்கப்பல்கள் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தன. சுதேசிய முறையிலான இப்பாய்மரக்கப்பல்களில…
-
- 2 replies
- 281 views
-
-
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்... வரிசையில் காத்திருந்த, மற்றுமொருவர் உயிரிழப்பு ! கடவத்தையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது பதிவாகிய இரண்டாவது மரணம் இதுவாகும். கண்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரிசையில் நின்றிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1272595
-
- 1 reply
- 411 views
-
-
ஒரு இலட்சம் என்ற அறிவிப்பு... உறவுகளின் உணர்வுகளை, கொச்சப்படுத்தும் நோக்கிற்கானது அல்ல – அலி சப்ரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான அடிப்படையிலான நிவாரணமே ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதென்ற அறிவிப்பு என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். அதனை உயிர்களின் விலையாகவோ, போராட்டத்தனை மலினப்படுத்தும் செயற்பாடாகவோ உறவுகளின் உணர்வுகளை கொச்சப்படுத்தும் நோக்கமாகவோ கொண்டுவரப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார். காணாமலாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் ஒரு இலட்சம் ரூபாயை வழங்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது, இந்நிலையில், குறித்த அமைச்சரவை …
-
- 1 reply
- 231 views
-
-
முகநுால் காதலால் விபரீதம்- இரு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் March 19, 2022 முகநுால் காதலால் ஏற்பட்ட விபரீதத்தில் காணாமல் போயிருந்த முல்லைத்தீவு சிறுமிகள் இருவரும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிகள் இருவரும் கடந்த 16ம் திகதி அன்று மாலைநேர வகுப்பிற்கு என புறப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர்கள் அவர்களை தேடிய நிலையில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். குடும்பத்தினர் மற்றும் கிரமத்தவர்கள், காவல்துறையினர் இணைந்து தேடிய நிலையில் நேற்று(18) மாலை புதுக்குடியிருப…
-
- 4 replies
- 883 views
-
-
சர்வகட்சி மாநாட்டில்... பிரதான எதிர்க்கட்சிகள், பங்கேற்காது என அறிவித்துள்ளன ! மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கப்போவதில்லை என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் சர்வகட்சி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆளும்கட்சியின் பங்காளி கட்சிகளான பிவிதுறு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என அறிவித்துள்ளன. அரசாங்கத்தின் பங்காளி காட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.…
-
- 2 replies
- 279 views
-
-
சீனாவிடம் இருந்து... "1.5 பில்லியன் டொலர் நிதி" உதவியை, கோரியது அரசாங்கம் ! சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2.8 பில்லியன் டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்கும் கடன் கோரப்பட்டதாக கடந்த வாரம் ஆதவன் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டு சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கடனை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1272692…
-
- 0 replies
- 151 views
-
-
எரிபொருள், எரிவாயுக்காக... இன்றும் வரிசையில் காத்திருக்கும் மக்கள் !! எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால், அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் காத்திருப்பதை இன்றும் அவதானிக்க முடிந்தது. அதேநேரம், பீப்பாய்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற இருப்புக்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் இன்றும் பல இடங்களில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது. நேற்றையதினம் உத்தியோகபூர்வ அ…
-
- 0 replies
- 322 views
-
-
தற்போதய பிரச்சினைகளை, அரசியல் மயமாக்கக் கூடாது – ஐ.தே.க. நாட்டின் தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கும் செயற்பாடுகளை நிராகரிப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விரிவான வேலைத் திட்டத்தின் மூலமே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் பட்சத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும் என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் அரசியலில் ஈடுபடும் தரப்பினர் மக்களின் சுமையை குறை…
-
- 0 replies
- 138 views
-
-
போத்தலில் அடைக்கப்பட்ட... குடிநீரின் விலையும், அதிகரிப்பு – விலை விபரம் இதோ! போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒன்று அரை லீட்டர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 120 ரூபாயாகவும் 5 லீட்டர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் வெற்று போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1272682
-
- 0 replies
- 119 views
-
-
35,000 மெட்ரிக் தொன் டீசலுடன், கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது ! 35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 500 மில்லியன் டொலர் இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த டீசல் கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இறக்கும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது. https://athavannews.com/2022/1272687 ############# ############## ################# ஏலே... சண்முகம், வுட்றா வண்டிய... கொழும்பு துறைமுகத்துக்கு. 🤣
-
- 0 replies
- 188 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில்... வாய்த்தர்க்கம், கத்திக்குத்தாக மாறியது – 29 வயதுடைய நபர் உயிரிழப்பு! நிட்டம்புவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து 29 வயதுடைய ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் எடுக்க வந்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வெளியே எரிபொருள் நிரப்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி, கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த நப…
-
- 0 replies
- 126 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை லாஃப் நிறுவனம் 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,680 ரூபாவாக நிர்ணயித்துள்ளதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சமையல் எரிவாயுவிற…
-
- 1 reply
- 551 views
-
-
(ஆர்.ராம்) சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று ஒட்டுமொத்தமான மக்களின் வெறுப்பினைச் சந்தித்து வீழ்ச்சி கண்டுள்ள ராஜபக்ஷக்களுக்கு உயிர்கொடுக்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பினை கையிலெடுத்து இரண்டு ஆண்டுகளாகின்றபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்கே தயக்கம் காண்பிக்கின்றார்கள். அதுமட்டுமன்றி நாட்டில் இனப்பிரச்சினையே இல்லையென்று கூறியும் வருகின்றார். இதனைவிடவும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் …
-
- 2 replies
- 419 views
-
-
மருந்துப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார். கண் சத்திர சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார். ’மருந்துப் பொருள்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சில மருந்துப் பொருள்கள் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. மருந்துப் பொருள்கள் இல்லாமையால் கண் சத்திர சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் மருந்துப் பொருள்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது’ என்றார் மருத்துவர் நந்தகுமார். மருந்துப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 269 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான உயர் மட்ட இராஜதந்திர அதிகாரிகள் மூவர் திங்கட்கிழமை (21) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட், பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலர் அமண்டா ஜே. டோரி மற்றும் தெற்கு , மத்திய ஆசிய விவகாரங்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ ஆகியோரே இவ்வாறு விஜயம் செய்யவுள்ளனர். அரசியல் விவகாரங்களுக்கான செயலர் விக்டோரியா நுலண்ட் தலைமையிலான உயர் மட்ட குழு பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை சனிக்கிழமை ஆரம்பித்துள்ளது. இந்தோ - பசிபிக் பங்காளிகளுக்கான அ…
-
- 0 replies
- 286 views
-