Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் சீனாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும். நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும் வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இலங்கையின் உள்ளுர…

    • 3 replies
    • 339 views
  2. கடனுக்கான இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை, மூன்று வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் – பசில் இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடனை மூன்று வருடங்களின் பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டுமே தவிர எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் நேற்று நாடு திரும்பியதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் அண்டை நாடான இந்தியா இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கைக்கு துணை நிற்கிறது என்பதை நிரூபித்துள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இயற்கை விவசா…

    • 1 reply
    • 198 views
  3. பிரதமர் மஹிந்த கலந்து கொள்ளும் நிகழ்வில்... செய்தி சேகரிக்க, ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் யாழுக்கு வருகைதந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள புத்த விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அந்நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1272492

  4. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்... மீண்டும் மூடல் !! சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் மூடப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. சுத்திகரித்தல் செயற்பாட்டுக்கான கச்சா எண்ணெய் இல்லாததால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில மாதங்களாக பல தடவைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1272453

  5. மகிந்த யாழ் வருகை – பௌத்த ஆக்கிரமிப்பைக் கண்டித்து யாழ் மாவட்டச் செயலகத்தை முடக்கிப் போராட்டம் March 19, 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை எதிர்த்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், பயங்கரவாதச் சடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், வடக்கு – கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களைக் கண்டித்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் மேற்கொண்டனர். இதன் போது போராட்டத்தில்…

  6. இந்தியாவுடனான ஒப்பந்த இரகசியங்களை வெளிப்படுத்துங்கள் - முஜிபுர் ரஹ்மான் (எம்.மனோசித்ரா) இந்தியாவிடம் ஒரு பில்லியன் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவை என்பதை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். மத்தள விமான நிலையம், சம்பூர் அல்லது யாழ் தீவுகள் என இந்தியாவிற்கு எதனை வழங்க திட்டமிட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் , உரிய தீர்மானங்களை பொறுத்தமான நேரத்தில் எடுக்காமைக்க…

  7. வடக்கில் இருந்து... பனங் கள்ளு, ஏற்றுமதி செய்ய முயற்சி! பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஒரு ஏற்றுமதியினை செயற்படுத்துவதற்கான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்த தயாராக உள்ள…

  8. (எம்.நியூட்டன்) யாழ். கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுகின்றது என அப்பகுதி இளைஞர்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அழைத்துச்சென்று இன்று வெள்ளிக்கிழமை நிலைமைகளை அவதானித்துள்ளார் குறிப்பாக அங்கு நின்றிருந்த பொளத்த மதகுருவிடம் வினவியிருந்தார். குறித்த சந்திப்பின் போது அதிகளவான இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்ததாக அங்கிருந்தவர்களால் அவதானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். கந்தரோடையில் …

  9. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான... கடதாசிக்கு தட்டுப்பாடு – பாடசாலைகளில், பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் மாற்றம்! மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ஏனைய பொருள்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 6ஆம், 7ஆம், 8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 4ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு…

  10. சாரதி அனுமதிப்பத்திரத்தை... அச்சிடும், அட்டைகளுக்கு தட்டுப்பாடு – முக்கிய தீர்மானம் வெளியானது! ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரத்தினை அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட…

  11. எரிபொருள், எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – மாலைதீவில் நீர் விளையாட்டில் குதூகலிக்கும் நாமல்? இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. மாலைத்தீவிலுள்ள நீர்விளையாட்டுகளின் பயிற்றுவிப்பாளர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அந்நிய செலாவண…

    • 1 reply
    • 316 views
  12. இலங்கையுடன், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கின்றது... சர்வதேச நாணய நிதியம்! சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது பேசப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணத்துக்காக இலங்கை இன்னும் விண்ணப்பிக்கவில்லை என த…

  13. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – அதிசக்தி வாய்ந்த, சொகுசு வாகனங்களின்.. அணிவகுப்பில் அமைச்சர்? அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவோ அல்லது அவரது சகோதரர்களோ ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளரும், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது தனியார் வாகன அணிவகுப்பு எனவும், சிலர் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருளினையும், எரிவாயுவினையும் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்…

    • 2 replies
    • 371 views
  14. ஜனாதிபதியை முகநூலில் விமர்சித்த ரூபவாஹினியின் பெண் ஊடகவியலாளர் அவரது நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கப்பட்டார்- சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்த ரூபவாஹினி ஊடகவியலாளர் பரமி நிலப்த ரணசிங்க அவரது நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கப்பட்டமை அரசாங்கம் ஊடகவியலாளர்களை கண்காணிக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை குறித்த தனது உணர்வுகளை முகநூல் ஊடாக வெளிப்படுத்தியமைக்காக என்னை ரூபவாஹினியிலிருந்து தடை செய்துள்;ளனர் என பெண் ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். …

  15. இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்கள் இறக்குமதி இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருள், மருந்துகள், சீமெந்து, துணி வகைகள், விலங்குணவுகள், விசேட உர வகைகள், தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை இறக்குமதியாளர்கள் இதன் போது பதிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய விரும்பும் இறக்குமதியாளர்கள் www.trade.g…

    • 0 replies
    • 298 views
  16. மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்! மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பாக காலியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மிக விசேடமாக சொன்ன விடயங்களைப் பார்த்தால், தன்னை மக்கள் ஜனாதிபதியாக வர…

    • 0 replies
    • 183 views
  17. இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த ஒப்பந்தத்தில், எரிபொருளுக்கான தொகையை, 750 மில்லியன் டொலராக அதிகரிக்குமாறு, இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதேவேளை மருந்து உணவு எரிபொருள் உட்பட அத்தியாவசியப்பொருட்களிற்கு மோசமான பற்றாக்குறை நிலவுவதை முடிவ…

    • 5 replies
    • 456 views
  18. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்... ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல – நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன…

    • 23 replies
    • 1.3k views
  19. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை - சீ.வை.பி.ராம் (எம்.ஆர்.எம்.வசீம்) நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தையே மக்கள் ஜனாதிபதியின் உரையில் எதிர்பார்த்தனர். அவ்வாறான எந்த விடயங்களையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. அதனால் மக்களை சமாளிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அத்துடன் அரசாங்கத்திடமும் எந்த வேலைத்திட்டமும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் பொருளாதார முகாமைத்துவ ஆலாேசகருமான சீ.வை.பி.ராம் தெரிவித்தார். நாடு பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய…

  20. சாவகச்சேரி 'சதோச' விற்பனை நிலையத்துக்கு வர்த்தக அமைச்சர் திடீர் விஜயம் யாழ் மாவட்டத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் கையிருப்புகள் தொடர்பாக ஆராய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள், சாவகச்சேரி சதோச விற்பனை நிலையத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர், குடாநாட்டின் வர்த்தக நிலவரங்களை ஆராயும் சந்திப்புகள் மற்றும் விஜயங்களில் இன்று (18) ஈடுபடவுள்ளார். இவ்விஜயத்தின்போது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்,…

  21. எரிபொருள், எரிவாயுவிற்கு தட்டுப்பாடு – ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம்? இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் உள்ள இந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு வழங்காமல் அரசு செயலற்ற கொள்கையை பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன…

  22. சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு – அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள் : பலரும் தொழில் வாய்ப்பினை இழக்கும் அபாயம்! நாட்டில் அடுத்தடுத்து சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுவருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்திலும் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஹோட்டல் தொழில் துறையிலுள்ள சுமார் 5 லட்சம்பேர் பாதிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில் பலர் தொழில்களை இழந்துள்ளனர் எனவும், ஹோட்டல்களுக்கான வாடகைப் பணத்தைகூட செலுத்த முடியாமல், உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்…

  23. நாட்டிலுள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய தகவல்! நாட்டிலுள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டிருந்தால் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் பிரதம நிபுணரான வைத்தியர் சமிந்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1272371

  24. சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களின் தவணைகளை இம்முறை செலுத்த முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 21ம் திகதி செலுத்த வேண்டிய கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலையில் இலங்கை உள்ளதாக தெரிவித்து, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை சீனா அபிவிருத்தி வங்கிக்கு 53.596 மில்லியன் டொலர்களும், சீனா எக்சிம் வங்கிக்கு 17 மில்லியன் டொலர்களும், அன்றைய திகதியின்படி 386.19 மில்லியன் யுவான்களும் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/sri-lanka-unable-to-repay-loan-1647541390

  25. பசில் மோடியை சந்திக்கிறார் – 1 பில்லியன் வாங்கவுள்ளார்! March 16, 2022 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று(16.03.22) சந்திக்க உள்ளார். அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதியமைச்சர் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபஸ, நேற்றுப் பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2022/174197

    • 14 replies
    • 739 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.