Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்! விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தல…

  2. திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா ஆரம்பம்! திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்பாளின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தொடங்கினார்கள். ஆண்கள் அங்கப்பிரதட்ஷனையும் பெண்கள் அடிஅழித்தல் நிகழ்வும் நடைபெற்றது. கற்பூரச்சட்டி எடுத்தல், அடிஅழித்தல், அங்கப்பிரதட்ஷணம் செய்யும் விரத அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை கோபுர வாசலில் இருந்து ஆரம்பித்து கோபுர வாசலிலேயே நிறைவு செய்வதை காணக்கூடியதாக அமைந்தது. மேலும், விசேட பூஜை நடைபெற்…

  3. ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு! முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினர். செயிட் அப்துல்லா செஹீத் மௌலவி “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வில்சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23…

  4. மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி adminMarch 13, 2025 இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை( 13)மன்னாரில் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் வயல் வீதி, சின்னக்கடை என்ற இடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணி வரை குறித்த கண்காட்சி இடம்பெறும். மாற்கு அவர்களின் மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்து குறித்த காண்பியக் காட்சியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் மாற்கு அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கு அதிகமான கலைப்படைப்புக்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே குறித்த கண்காட்சி யை அனைவரும் வருக…

  5. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்! கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இன்னிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர் என்றும் இருநாட்டு பக்தர்கள் 8 ஆயிரம் பக்தர்களும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர், அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபை யாழ் மாவட்ட செயலகம் கடற்படை இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் சனிக்கிழமை அதிகாலை 4:30 குறிகட்டுவானுக்கான பேருந்து சேவைகள் இடம் பெறும் குறிகாட்டுவானிலிருந்து படகு சேவைகள் இடம்ப…

  6. இன்று மகா சிவராத்திரி விரதமாகும்! சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி இன்று பெப்ரவரி 26 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதத்தில் தேய்பிறை அன்று வரும் வரும் மகா சிவராத்திரி சிவபெருமானுக்கான முக்கிய விரத நாள் ஆகும். சிவராத்திரி நாளில் சிவனுக்கு 4 கால பூஜை நடைபெறும். முதல் காலம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும், இரண்டாம் காலம் இரவு 10.30 மணிக்கு தொடங்கும், மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும், நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். இந்த 4 பூஜைகளிலும் பங்கேற்று சிவனை மனமுருகி தரிசித்தால் அவரின் அருளை பெற்று உங்…

  7. "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]] சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய் சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய் ! மாடு இரத்ததைப் பாலாய்க் கொடுக்கும் மாமனிதன் நீயோ இரத்தத்தை பாசமாக மாறாத அன்பை வியர்வை உழைப்பாக மாட்சிமை கொண்ட வாழ்வு தந்தாய்! நல்லூரில் பிறந்து அத்தியடியில் வாழ்ந்தாய் நட்பு உலகில் 'க க' என்று பெயரெடுத்தாய் நம்பிக்கை ஒன்றே உன் ஆயுதம் நன்மை ஒன்றே உன் நோக்கம்! மானம் பெரிதென எமக்கு போதித்தாய் மாதா பிதா இருவருமே கடவுளென்றாய் மாலுமியாய் எமக்கு வலி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது எனோ? சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரக்‌ஷனா.ரா பதவி, பிபிசி தமிழுக்காக 11 பிப்ரவரி 2025, 08:47 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் காதல்.... உலகெங்கும் உள்ள புராண, இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களில் வெவ்வேறு பெயர்களில் விரவிக் கிடக்கிறது. காதலின் தொடக்கம் என்னவென்பதை அறுதியிட்டு கூற முடியாது. சங்க கால 'தலைவன் தலைவிக்கு விடும் தூது' முதல் இந்த காதல் கதைகள் காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளன. ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் இந்த அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் ஒவ்வோர்…

  9. “On the day of this Independence Day (04/02/2025)" On this day of freedom bright, I searched for truth in morning light. Independence—what does it mean? A land unchained, a soul serene? Self-rule, they say, self-sufficiency, Freedom, liberty—words of potency. Yet echoes rise in silent air, Are we truly free and fair? Seventy-seven long years have passed, Since colonial chains were cast. Yet do our women walk unafraid, From cruelty’s grasp and justice delayed? Do our children laugh and play, Safe from shadows where dangers lay? Do scholars climb the heights they dream, Or sink beneath a broken scheme? Cast…

  10. "இந்த சுதந்திர தினத்தன்று (04/02/2025)" காலைக் கதிரவன் பொற் கதிரில் உண்மைச் சுதந்திரம் தேடிச் சென்றேன் வெளிச்சத்தில் மிளிரும் இலங்கை மண்ணில் விடுதலையின் முகம் நான் கண்டேனா? உண்மைச் சுதந்திரம் நியாயமாக இல்லையே தன்னாட்சி தன்னிறைவு கொண்ட நாட்டில் விடுதலை ஓங்கும் சுதந்திரம் மலருமென்று அமைதியான காற்றில் எதிரொலி கேட்கிறதே? காலனித்துவ சங்கிலிகளை அறுத்து எறிந்து எழுபத்தேழு நீண்ட ஆண்டுகள் இன்று நீதியின் வெளிச்சம் சமமாக வீசுகிறதா பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வது எப்போ? மழலைகள் சிரித்து ஓடி விளையாட ஆபத்து நிழல்கள் மறைய வேண்டுமே அறிவியல் சிறகுகளால் எதிர்காலம் உறுதியாக சமத்துவ கல்விவாய்ப்பு என்று வருமோ? சாத…

  11. "இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025] "பெப்ரவரி இரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய இளையமகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "அன்னை வளர்ப்பில் அறிவோடு வளர்ந்து இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்து உன்னை அறிந்து பிறரை உணர்ந்து இன்று கொண்டாடுகிறாய் அகவை நாளை!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும், மகிழ்வான புன்னகை ஆறுதல் தருகிறதே! கணவரும் மூன்று மழலைகளும் வாழ்த்த அன்பிலும் சிரிப்பிலும் நீங்கள் செழிப்பீர்களே!!" "பிறந்த நாள் இன்று உனக்காம் பிரகாசமாய் வாழ்வு…

  12. 15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" 83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நக…

  13. 'தைப்பொங்கல் 2025' 'புதிய கதிரவன் காலையில் உதிக்க அன்பும் அமைதியும் நெஞ்சில் மலர நெல் விளைந்து செழிப்புத் தர நாடும் நலமும் மகிழ்ந்து கொண்டாட குடும்பம் ஒன்றுகூடி உவகை அடைய தமிழர் திருநாள் பொங்கி இனிக்கட்டும்! 'May this Pongal bring joy anew, Golden harvests and skies so blue. Rice and milk in the pot overflow, Prosperity and love in your life grow. Happy Thaipongal to you and your kin, Let peace and happiness begin!' [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  14. “தங்கம்மா என்றால் தொண்டு தங்கம்மா என்றாற் பண்பு தங்கம்மா என்றாற் சக்தி தங்கம்மா என்றாற் பக்தி தங்கம்மா என்றாற் சைவம் என்றெல்லாந் தரணி காணும் தங்கம்மா தமிழர் பெற்ற தனிப்பெருஞ் செல்வி வாழி.” என்ற கவிஞர் வி.கந்தவனம் ஐயாவின் பாடல் வரிகளை இவ்விடத்தில் நினைவு கூர்கின்றேன். ஆம் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா ஞாபகார்த்தமாக இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். அன்னை சைவசமயத்துக்கும் தமிழ்மொழிக்கும், சமுதாயத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றி சைவத்தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் நீங்காத இடத்தைப் பெற்று மிளிர்கின்றார் என்றால் மிகையில்லை. அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்வு தமிழுக்காகவும் சைவசமயத்துக்காகவும் அம…

  15. "எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025] "பூமியிலிருந்தும் வானத்திலிருந்தும் வாழ்த்துகள் பாட எல்லையற்ற வானத்தின்கீழ் கொண்டாட்டம் நிகழ அன்புஜெயா, மகிழ்ச்சி பெருமை தருபவளே எங்கள் பொக்கிஷமே எங்கள் விண்மீனே!" "மண்ணிலிருந்து தாத்தாவின் பாசம் சூழ உங்கள் நாட்களும் ஆத்மாவும் ஒளிரட்டும் ஒவ்வொரு அடியிலும் அறிவு வழிகாட்டட்டும், அன்பும் மகிழ்வும் உங்களை அணைக்கட்டும்!". "விண்ணிலிருந்து அம்மம்மா ஆசீர்வாதம் பொழிய அவளின் பெயரில் ஆறுதல் வழங்குபவளே நீங்கள் ஒளிர்ந்து கனவுகள் பறக்கட்டும் அரவணைப்பும் வலிமையும் உலகை நிரப்பட்டும்!" "உங்கள் வாழ்க்கை நேசத்தின் பாடலாகட்டும் …

  16. “புத்தாண்டே 2025!” "இழிவூட்டும் இன்னல்களை நேற்றோடு அகற்றி இதயத்தோடு நிம்மதியை எல்லோருக்கும் அளித்து இதழோடு முத்தமிட்டு அன்பாக அணைத்து இனிதாய் வாராயோ மலரும் புத்தாண்டே !" “மலரும் 2024 இல் மகிழ்வாக இருக்க அலறும் இன்னல்களே விலகி போகாயோ ? நிலவின் ஒளியில் இன்பம் பொழிய புலரும் புத்தாண்டே மகிழ்வாக வாராயோ ?” "கழனி எங்கும் கதிர்கள் ஆட கயவர் கூட்டம் உளறுவதை நிறுத்த கருத்து சுதந்திரம் பாது காக்க கடந்த ஆண்டு அனுபவமாக மாறட்டும்!" "பட்டிதொட்டி எங்கும் மங்களம் ஒலிக்க மட்டு மரியாதை மேள தாளத்துடன் வாட்டசாட்டமாக புது ஆடை ஜொலிக்க …

  17. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் விடைபெற்றது 2024! பிறந்தது புத்தாண்டு! Published By: VISHNU 31 DEC, 2024 | 08:48 PM உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள். …

  18. "Jesus refulsit omnium" ("Jesus, light of all the nations" / "உலக நாடுகளின், அன்பு இரட்சகர்" [25/12/2024] கி பி 340 இல் இருந்து நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டாலும், உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றும், ஏறக்குறைய நான்காம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பாடல். பரவலாக பலரால் இன்றும் அறியப்படவில்லை என்பது வருத்தத்திற் குரியதே. இதன் மூல 'லத்தீன்' பாடலும், அதை தொடர்ந்து, கேவின் கவ்தொர்னின் [Kevin Hawthorne] ஆங்கில மொழிபெயர்ப்பும், என் தமிழ் மொழி பெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. Though, Christians have been celebrating Christmas since at least AD 340, that’s supposedly when the Church first recognised December 25 as Christ…

  19. "புத்தாண்டுப் பரிசு" [ 26, டிசம்பர் 2004 சுனாமியின் நினைவாக] ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் க…

  20. தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா! தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது இதனையோட்டி வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம் கொண்டுவரப்பட்டது. இதன்போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, தென்னாடு முதல்வர் குணரத்தினம் பார்த்தீபன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் அம்…

  21. "Historical truth of New Year / புத்தாண்டு வரலாற்று உண்மை" [ஆங்கிலத்திலும் தமிழிலும்] One of the earliest recorded New Year celebrations dates back around 4,000 years ago in ancient Babylon, where the Babylonians celebrated the New Year during the spring equinox began with the new moon (mid-March). They held a festival called Akitu, which lasted 11 days and involved various religious rituals and ceremonies to ensure a prosperous new year and in Assyria with the new moon nearest the autumn equinox (mid-September). The practice of celebrating the New Year has evolved over time and varied among different cultures. The ancient Egyptians, for instance, celebra…

  22. "கனவு மெய்ப்படும்" / பாரதியாரின் நினைவாக, அவர் விரும்பிய தலையங்கத்தில் ஒரு சிறுகதை [நினைவிடத்தில் உள்ள கல் பலகை மற்றும் அவரது இறப்புச் சான்றிதழில் உள்ள தகவல்களின்படி, தமிழ்க் கவிஞர் செப்டம்பர் 12 ஆம் தேதி காலமானார். ஆனால், மாநில அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியை 'மகாகவி தினமாக' அறிவித்தது.] "மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;" [பாரதியார்] கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு [Sigmund Freud] என்பாரின் கரு…

  23. ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா! December 9, 2024 பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வுநிலை அதிபர் த. கலைச்செல்வனிடம் கற்ற மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியற்றுறை சிரேஷ்ட பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய த. கல…

  24. 27/11/2024: "திருமண நாளில் ஒரு நினைவுகூரல்" [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம்] "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டறக் கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதைக் கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி…

  25. "அன்பால் ஆள்வோம்” [27/11/2024] "அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம் பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்! இன்பம் துன்பம் சமமாக மதித்து கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோமே!" "உரிமை உள்ள மனிதனாக பெருமை கொள்ளும் இனமாக வறுமை அற்ற குடியாக சிறுமை போக்கி நகருவோமே!" "ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும் ஆக்கம் கொண்ட சமூகமும் ஈவிரக்கம் காட்டும் அரசும் தரமான உலகைத் தருமே!" "பாசம் உலாவும் கண்களாய் மோசம் செய்யா இதயமாய் எங்களை நாங்கள் ஆக்கினால் தேசம் ஓங்கிச் சிறக்குமே!" "எங்களுக்காக உயிர்க்கொடுத்த தியாகிகளையும் தன்னலமற்று தாய்நாட்டுக்காக வாழ்ந்தவர்களையும் மனத்திலேற்றி தீபமேற்றி வணங்குவோமே ஒருகனமாவது அவர்களைச் சிந்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.