விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
-
ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 49.4 ஓவரில் 331 ரன்கள் எடுத்து 330 ரன்னை சேஸிங் செய்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச சேஸிங் இதுவாகும். இதனிடையே ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிட்னியில் உள்ள ராயல் பிரின்ஸ் ஆல்பர்ட் மருத…
-
- 0 replies
- 343 views
-
-
சென்.ஜோன்ஸ் கல்லூரி விளையாட்டுப் போட்டி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி, கடந்த வாரம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணக் கல்வி வலயப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா கலந்துகொண்டார். இல்ல மெய்வன்மைப் போட்டியில் 307 புள்ளிகளைப் பெற்ற பெடே இல்லம் முதலிடத்தையும், 217 புள்ளிகள் பெற்ற ஜோன்ஸ்ரன் இல்லம் 2 ஆம் இடத்தையும், 216 புள்ளிகள் பெற்ற பர்ஹிற்றர் இல்லம் மூன்றாமிடத்தையும், 171 புள்ளிகள் பெற்ற தோம்ஸன் இல்லம் நான்காமிடத்தையும், 157 புள்ளிகளைப் பெற்ற ஹண்டி இல்லம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.…
-
- 0 replies
- 557 views
-
-
இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் ரூ.30 லட்சம் செலவு செய்தார்: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் தகவல் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தேசிய கீதம் பாடிய அமிதாப் பச்சன். கொல்கத்தாவில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் பச்சன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.30 லட்சம் செலவு செய்ததாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் போது அமிதாப் தேசிய கீதம் பாட ரூ.4 கோடி வாங்கியதாக எழுந்த புகாரையும் கங்குலி திட்டவட்டமாக மறுத்தார். டி 20 உலகக் கோப்பையில் கடந்த 19ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்க…
-
- 0 replies
- 273 views
-
-
Published By: Vishnu 02 Sep, 2025 | 09:08 PM (நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 49ஆவது தேசிய விளையாட்டு விழா காலி தடெல்ல மைதானத்தில் கடந்த வார இறுதியில் நிறைவடைந்தது. விளையாட்டு விழாவில் மிகவும் முக்கியமானதும் கடைசியுமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தனர். கோலூன்றிப் பாய்தலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரனும் நேசராசா டக்சிதாவும் தத்தமது சொந்த சாதனைகளை முறியடித்து புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதங்கங்களை சுவீகரித்து பலத்த பாராட்டுதல்களைப் பெற்றனர். மெய்வல்லுநர் போட…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முகுருசாவுக்கு சாம்பியன் பட்டம் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் கோப்பையை பெறும் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முருகுஸா. அருகில் செரீனா. | படம்: ஏ.பி. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கார்பைன் முகுருசாவும், முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்சும் மோதினர். கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆடிவரும் செரினா வில்லியம்ஸ், இப்போட்டியில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு …
-
- 0 replies
- 357 views
-
-
சாதனை படைத்த சாம்பியன்கள்: 2025-ல் கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டோம். கிரிக்கெட் அரங்கை திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்கில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருசில உலகக் கோப்பைகள், இன்னும் சில பிரதான ஐசிசி தொடர்கள் நடந்திருக்கின்றன. டி20 லீகுகளில் வழக்கம்போல் எதிர்பார்ப்புகளை மிஞ்சிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதேபோல். டெஸ்ட் போட்டிகளிலும் கூட பல முக்கியமான தொடர்கள் பெரும் கவனம் ஈர்த்தன. ஒட்டுமொத்தமாகவே இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. பெரும் வெற்றிகள், சா…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
புரட்டி எடுத்த கோல்டுபர்க்... இரண்டே நிமிடங்களில் முடிந்த மல்யுத்தம் - வீடியோ இணைப்பு #Survivorseries மல்யுத்த வீரர் கோல்டுபர்க் கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு நேற்று சண்டையிட்டார். கடந்த சில மாதங்களாக எதிரில் உள்ள வீரர்களைப் போட்டு புரட்டி எடுத்து, டபிள்யு.டபிள்யு.இ அரங்கையே கதிகலங்க வைத்த பிராக் லெஸ்னர்தான் கோல்டுபர்க்கை எதிர்த்து நின்றது. உண்மையில் அவர் எதிர்த்து நிற்க மட்டுமே செய்தார், அடித்தது எல்லாம் கோல்டுபர்க்தான். இந்தப் போட்டி அறிவிக்கபட்டபோதே இரு பெரும் ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டி, மிகவும் கடுமையானதாக, சுவாரஸ்யமானதாக இருக்கும் என உலகம் முழுவதும் உள்ள ரெஸ்லிங் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், கோல்டுபர்க்கோ …
-
- 0 replies
- 518 views
-
-
எதிர்கால பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 16 குழுக்கள், 48 அணிகள் - ஜியானி யோசனை எதிர்கால உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் 16 குழுக்களில் 48 நாடுகள் பங்குபற்றவேண்டும் என்பது பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டீனோவின் விருப்பமாகும். ஜியானி இன்ஃபன்டீனோ உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 32 இலிருந்து 40 ஆக அதிகரிக்க வேண்டும் என பீபாவின் தலைவராக கடந்த பெப்ரவரி மாதம் தெரிவான இன்ஃபன்டீனோ முன்னர் தெரிவித்திருந்தார். அவரது புதிய விருப்பமான 16 குழுக்களில் 3 நாடுகள் வீதம் பங்குபற்றினால் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இட…
-
- 0 replies
- 228 views
-
-
விராட் கோலியின் ஆக்ரோஷம் அஸ்வினை ஒட்டிக் கொண்டது: எரபள்ளி பிரசன்னா விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் அஸ்வின் தொடர்ந்து விக்கெட்டுக்கள் கைப்பற்ற உதவும் வகையில் அவரையும் ஒட்டிக் கொண்டது என்று முன்னாள் சுழற்பந்து வீசசாளர் எரபள்ளி பிரசன்னா கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 19 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. இதற்கு அஸ்வினின் சுழற்பந்து வீச்சு முதுகெலும்பாக உள்ளது. அவர் கடைசி 9 போட்டிகளில் 61 விக்கெட்டுக்கள் கைப்பற்றியு…
-
- 0 replies
- 502 views
-
-
ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம், மனு சாவ்னியை உடன் அமுலாகும் வகையில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே தலைமையில் வியாழக்கிழமை நடந்த அவசர கூட்டத்தில் வாரியம் இந்த முடிவை எடுத்தது. இந்த முடிவு முறையான வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவில்லை, ஆனால் குழுவில் உள்ள எந்தவொரு பணிப்பாளரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையில், ஐ.சி.சி வாரியத்துடன் நெருக்கமாக பணியாற்றும் தலைமைக் குழுவின் ஆதரவுடன் செயல்படும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் கடமைகளை பெறுப்பேற்பார் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது. சக ஊழியர்களுட…
-
- 0 replies
- 392 views
-
-
கால்பந்து, கிரிக்கெட் இரண்டிலும் கலக்கும் லே‛டி’ வில்லியர்ஸ்... எல்லிஸ் பெர்ரி! கிரிக்கெட் விளையாடுவது ஈஸி. கால்பந்து விளையாடுவது கஷ்டம். இதை, இந்திய கிரிக்கெட் அணியினர் பங்கேற்ற செலிபிரிட்டி கிளாசிகோ கால்பந்துப் போட்டியை உன்னிப்பாக கவனித்திருந்தாலே தெரியும். கால்பந்தில் 90 நிமிடமும் கால்கள் பம்பரமாக சுழல வேண்டும். ப்ரபொஷனல் பிளேயர்களுக்கே எக்ஸ்ட்ரா டைமில் மூச்சு வாங்கும். வியர்த்து ஊத்தும். தலை சுற்றும். சின்ன வயதில் இருந்தே உடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவரால் மட்டுமே, இந்த இரண்டு விளையாட்டிலும் ஜொலிக்க முடியும், எல்லிஸ் பெர்ரியைப் போல... இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்…
-
- 0 replies
- 424 views
-
-
இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் விருது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதுக்கு தேர்வு பெற்றதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுக்கான கதாயுதத்தை கேப்டன் விராட் கோலியிடம் வழங்கும் (இடமிருந்து) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிரீம் பொல்லாக். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐசிசி-யின் டெஸ்ட் சாம்பியன் ஷிப் விருது வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட்…
-
- 0 replies
- 360 views
-
-
‘விராட் கோலியை சதம் அடிக்க விட்டுவிடுவோமா?’- ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ், மெக்ரா சவால் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் : கோப்புப்படம் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் தொடருக்காக வரும் இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்போம். கேப்டன் விராட் கோலியை சதம் அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராவும் கம்மின்ஸ் சவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது.…
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை ப்ளெமின் ஆகிய இருவருரே வட பகுதியிலிருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளவர்களாவர். வட பகுதியிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் நிறு…
-
- 0 replies
- 438 views
-
-
ஆசிய கிண்ண உதைபந்தாட்டம் இறுதியாட்டத்தில் ஈராக் - சவூதி அணிகள் இன்று மோதுகின்றன ஆசிய நாடுகளின் உதைபந்தாட்ட அணிகளிடையே நடத்தப்பட்டு வரும் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈராக் சவூதி அரேபிய அணிகளிடையே நடைபெறவுள்ளது. ஈராக்- தென்கொரியா அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஈராக் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆரம்பத்தில் கொரிய அணியே வெற்றிபெறுமென்று அவதானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். போட்டி ஆரம்பமாகி இடைவேளை வரை இரு அணிகளும் கோல்கள் எதனையும் போடவில்லை. இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பமானதும் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றபோதிலும், இரு அணிகளும் பல கோல்கள் போடும் கட்டங்களை அடுத்தடுத்து தவறவ…
-
- 0 replies
- 792 views
-
-
மிட்செல் ஜான்சன் வேகத்தில் நிலைகுலைந்த ஸ்டீவ் ஸ்மித், அடிபட்ட ஷான் மார்ஷ் மிட்செல் ஜான்சன். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடருக்காக முழு மூச்சில் பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஜான்சனின் ஆக்ரோஷத்துக்கு ஸ்டீவ் ஸ்மித் நிலைகுலைய, ஷான் மார்ஷ் விரலைப் பெயர்த்தது மற்றொரு பந்து. எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், ஜான்சன் ஆகியோர் விளையாடவில்லை. இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடுபிட்சில் மார்ஷ், ஸ்மித், ஜான்சன் பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி தன்னிடமிருந்து ஆஷஸ் தொடரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காட்டும் விதமாக ஜான்சன் கடும் வேகமும் ஆக்ரோஷமும் காட்டினார். அதில்தான் உலகின…
-
- 0 replies
- 488 views
-
-
பீபா அதிகாரிகள் கைது மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உயர்மட்ட பீபா அதிகாரிகள் சுவிஸ் ஹொட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் சில பீபா அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த சொகுசு போர் உ லக் ஹொட்டலிலேயே பொலிஸார், திடீரெனப் புகுந்து கைது செய்திருந்தனர். பீபாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பாக வாக்கெடுப்புக்கு செல்வதற்கான பீபாவினது நிறைவேற்றுச் சபையின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சூரிச்சில் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படிக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனமெடுப்பதாக தெரிவி…
-
- 0 replies
- 1k views
-
-
பார்சிலோனாவுக்காக 500 போட்டிகளில் பங்கேற்று லயனல் மெஸ்சி சாதனை! பார்சிலோனா அணிக்காக நேற்று தனது 500வது போட்டியில் களமிறங்கினார் லயனல் மெஸ்சி. ஸ்பானீஷ் லீக்கில், ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக 425 கோல் அடித்தும் அவர் சாதனை புரிந்தார். பார்சிலோனாவின் கேம்ப்நியூ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் 29வது நிமிடத்தில், ரியல் பெடிஸ் அணி ஒரு சேம்சைட் கோல் அடித்தது. தொடர்ந்து 33-வது நிமிடத்தில் லயனல் மெஸ்சி அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடிக்கும் 425 -வது கோல் இதுவாகும். தொடர்ந்து சவுரஸ் 46 மற்றும் 83- வது நிமிடத்தில் இரு கோல்கள் அடித்தார். இறுதியில் பார்சிலோனா அணி, 4-0 என்ற கோல் கணக்கில…
-
- 0 replies
- 554 views
-
-
மெஸ்ஸிக்கு சிறுநீரக சோதனை பார்சிலோனா அணியின் வீரர் லியனல் மெஸ்ஸிக்கு, சிறுநீரகக் கல் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், நாளை இடம்பெறவுள்ள கிங்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில், வலென்சியா அணிக்கெதிராக அவர் விளையாடுவார் என, பார்சிலோனா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு டிசெம்பரில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகம் தொடர்பாக பிரச்சினைகளை ஆராய்வதற்கான சோதனைகள், நேற்றும் இடம்பெற்றதோடு, நேற்று இடம்பெற்ற பயிற்சிகளிலும், மெஸ்ஸி பங்கேற்றிருக்கவில்லை. எனினும் கருத்துத் தெரிவித்த பார்சிலோனா, 'முதலணிக்கான வழக்கமான பணிகளுக்கு, புதன்கிழமையன்று மெஸ்ஸி திரும்புவார்" எனத் தெரிவித்தது. ஆர்ஜென்டின அணியின் தலைவரான மெஸ்ஸி, கடந்தாண்டு இடம்பெற்ற …
-
- 0 replies
- 555 views
-
-
டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை படைத்த ரொஸ் டெய்லர் By Mohammed Rishad - ©AFP டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை, அவ்வணியின் சிரேஷ்ட வீரர் ரொஸ் டெய்லர் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (06) சிட்னியில் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் 22 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற ஸ்டீபன் பிளெமிங்கின் சாதனையை டெய்லர் முறியடித்துள…
-
- 0 replies
- 728 views
-
-
’’ஸ்டெம்பை வைத்து வீட்டை சுற்றி வேலி அமைத்துக் கொள்வேன்’’ டோனி March 12, 2016 இந்திய அணி வெற்றி பெறும் போட்டியில் ஸ்டம்பை கையோடு எடுத்துச் செல்வது பற்றி அணித்தலைவர் டோனி மனம் திறந்து பேசியுள்ளார். பலப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் போது அந்த அணியின் தலைவரான டோனி ஓடி வந்து முதலில் ஸ்டெம்பை பிடுங்கி கையோடு எடுத்துச் செல்வதை பார்த்திருக்கலாம். அது எதற்கு என்று நமக்கு தெரியாது. தற்போது அதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார். இது குறித்து டோனி கூறுகையில், ”அது ஒரு சிறந்த விடயத்திற்காக தான் செய்கிறேன். அந்த ஸ்டம்பில் நான் ஏதும் எழுதி வைக்கவில்லை. நான் ஓய்வு பெற்ற பிறகு வீடியோவில் பார்த்து இது எந்தப் போட்டியின் ஸ்டம்ப் என கண்டுபிடிப்பேன். இதற…
-
- 0 replies
- 344 views
-
-
ஆசிய கிண்ண மகளிர் இ 20 கிரிக்கெட்: 75 ஓட்டங்களால் இலங்கை வெற்றி 2016-12-01 10:25:30 தாய்லாந்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டி ஒன்றில் தாய்லாந்து மகளிர் அணியை 75 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஹசினி பெரேரா (அணித் தலைவி) 55 ஓட்டங்களையும் சமரி அத்தப்பத்து (முன்னாள் இலங்கை அணித் தலைவி) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ச…
-
- 0 replies
- 233 views
-
-
தோனி தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து, விஜய் ஹசாரே அரை இறுதி போட்டி ஒத்திவைப்பு!! விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தோனி உள்ளிட்ட ஜார்கண்ட் அணி வீரர்கள் டெல்லியில் துவாரகா என்னும் ஹோட்டலில் தங்கி இருந்தனர். இன்று காலை அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தோனி மற்றும் கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் இன்று நடைபெறவிருந்த விஜய் ஹசாரே இரண்டாவது அரை இறுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Delhi: Fire had broken out in store in Dwarka's Welcome hotel complex. MS Dhoni and Jharkhand team who were staying there evacuated safely pic.twitter.com/8OIbd7x3Cl — ANI (@ANI…
-
- 0 replies
- 324 views
-
-
தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive ‘கிளம்பு, கிளம்பு... இங்க எல்லாம் நிக்கக் கூடாது...’ ‘சார்... ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’ ‘பாஸ்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா? இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை...!’ குரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை. இடம்: பட்டாபிராமன் கேட், சேப்பாக்கம் மைதானம். நேரம்: ஞாயிறு மதியம் 12.30. வழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிரு…
-
- 0 replies
- 730 views
-