விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஓய்விலிருந்து மீண்டு தென் ஆப்பிரிக்காவுக்காக மீண்டும் ஆட கிரேம் ஸ்மித் விருப்பம் முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா சரணடைந்ததையடுத்து முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். 33 வயதிலேயே கிரேம் ஸ்மித் ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் (எம்.சி.எல்) கிரிக்கெட்டுக்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது: "சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப எம்.சி.எல். ஒரு சிறந்த வழியாக அமையலாம். நான் மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆட வேண…
-
- 0 replies
- 511 views
-
-
ஓய்வு அறிவித்தார் பிர்லோ ! இத்தாலி சூப்பர்ஸ்டார் ஆன்ட்ரூ பிர்லோ, கால்பந்து விளையாட்டுக்கு விடைகொடுத்துள்ளார். அவருக்கு வயது 38. இத்தாலி மிட்ஃபீல்டர் ஆன்ட்ரூ பிர்லோ, இரண்டு ஆண்டுகளாக நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடிவந்தார். முன்னதாக ஏ.சி.மிலன், இன்டர்மிலன், ஜூவான்டஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதில், ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடியபோது, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றினார். 2006-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணியிலும் பிர்லோ இடம் பிடித்திருந்தார். பிர்லோ ஃப்ரீகிக் மற்றும் பெனால்டி ஸ்பெஷலிஸ்ட். நடுக்களத்தில் அபாரமாக விளையாடக்கூடியவர். மிக நேர்த்தியான பாஸ்களையும் கோல் வாய்ப்புகளையும் உருவாக்கித்…
-
- 1 reply
- 521 views
-
-
ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி?: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு! இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் இங்கிலாந்து அணி வ…
-
- 3 replies
- 660 views
-
-
ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் குக்: மீண்டும் ஷேன் வார்ன் கடும் விமர்சனம் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் மீது ஷேன் வார்ன் கடும் விமர்சனம் வைத்தார். இம்முறை அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார். டெலிகிராப் பத்திரிகையில் பத்தி எழுதி வரும் ஷேன் வார்ன் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது சர்ச்சைக்குரியதாகி விட்டது. குக், சமீபத்தில் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று கூறியதோடு தனது கேப்டன்சி வெற்றி சுயபுராணத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இலங்கை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருப்பதையடுத்து மேலும் கடுமையான விமர்சனங்களை தனது பத்தியில் எழுப்பியுள்ளார் ஷேன் வார்ன்…
-
- 0 replies
- 456 views
-
-
ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது. அணியின் தலைவர் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3 வது டெஸ்டில் 44 ஓட்டங்கள் தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20 ஐ விடவும் குறைவு. 24 ஆம் திகதி தொடங்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கிண்ணம் வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
ஓய்வு காலத்தை நெருங்கியுள்ளேன் - ரொஜர் பெடரர் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக டென்னிஸ் ஜாம்பவானான ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக திகழும் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் பட்டங்கள் அடங்கும். டென்னிஸ் தரவரிசையில் 310 வாரங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை அலங்கரித்த சாதனையாளராகவும் திகழ்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது வலது முழங்கால் முட்டியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெடரர், இவ்வாண்டு எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன் என்றும், அடுத்த ஆண்டில் புத்துணர்ச…
-
- 0 replies
- 922 views
-
-
ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் ஆடி வரும் 1990 காலகட்ட கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் 1990 காலகட்டத்தில் அறிமுகமான 4 வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜென்டில்மேன் ஆட்டம் எனப்படும் கிரிக்கெட் உலகம் முழுவதும் சொற்ப நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வருகிறது. டெஸ்ட், 50 ஓவர் ஒரு நாள் ஆட்டம் போன்றவை மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட டி 20 ஆட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக பெரிய அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டங்களைத் தவிர ஏனைய ஆட்டங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில்…
-
- 0 replies
- 489 views
-
-
ஓய்வு குறித்து ஆலோசித்தது உண்மை தான்: மனம் திறந்தார் டி வில்லியர்ஸ் டி வில்லியர்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக தொடருவேன். அதேவேளையில் நான் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்தது உண்மை தான் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிவடைந்ததும் கேப்டன் ஆம்லா தனது பதவியை ராஜினா செய்தார். இதற்கிடையே வேலைப்பளு காரணமாக டி வில்லியர்ஸ் ஓய…
-
- 0 replies
- 396 views
-
-
ஓய்வு குறித்து சரியான நேரத்தில் சிந்திப்பேன்: தோனி திட்டவட்டம் ஆஸ்திரேலிய பயணத்துக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தோனி. | படம்: விவேக் பெந்த்ரே. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக வெற்றிகளை கொண்டு வந்து கொண்டிருப்பதினால் தோனியிடம் மீண்டும் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர் தனக்கேயுரிய புன்னகையுடன் நிதானமாக அக்கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி புறப்படும் தருணத்தில் தோனியிடத்தில் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, “இந்தக் கணத்தில் வாழும் நபர் நான். இப்போது எனது கவனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர…
-
- 0 replies
- 417 views
-
-
ஓய்வு தினத்தை அறிவித்த சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, தான் இந்த வருடம் ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றிற்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள குமார் சங்ககார - ஜூலை, ஓகஸ்ட் காலப்பகுதியில் நடைபெறவுள்ள இரண்டு அல்லது ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரே குமார் சங்ககாரவின் இறுதி டெஸ்ட் தொடராக அமையவுள்ளது. உலகக் கிண்ண தொடரில் இன்று அடித்த சத்தத்துடன் மூன்று சதங்களை தொ…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஓய்வு நேரத்தில் ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற 'லெப்டினன்ட்' தோனி முடிவு! ஓய்வு நேரத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அஜிங்கிய ரஹானே தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதனால் ஒருநாள் அணியின் கேப்டன் தோனிக்கு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. தற்போது ராஞ்சியில் குடும்பத்தினரு…
-
- 0 replies
- 192 views
-
-
ஓய்வு பற்றி மனம் திறக்கும் மிஸ்பா உல் ஹக் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் 13-ம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு, 41 வயதான மிஸ்பா உல் ஹக் தலைவராக இருந்து வருகிறார். இவர் இந்தியாவுடன் ஒரு தொடர் விளையாடிய பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இநதியாவுடன் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கும் தன்னுடைய தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்ப…
-
- 0 replies
- 382 views
-
-
ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப்பட்டேன்’ – சந்தர்போல் 2016-02-04 12:30:48 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நரேன் சந்தர்போல், உள்ளூர் கிரிக்ெகட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை எனக் கூறியுள்ளார். கயானா கிரிக்கெட் அணிக்காக இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் விளையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் கிரிக்ெகட் போட்டிகளில் விளையாடும் பொருட்டு ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை பெறுவதற்காகவே சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவிக்க நிர்ப்…
-
- 0 replies
- 415 views
-
-
ஓய்வு பெறுகிறார் 'கம்-பேக்' மன்னன் நெஹ்ரா! தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வரும் நவம்பர் 1-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா. வரும் நவம்பர் 1-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பை-பை சொல்கிறார் நெஹ்ரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1999-ம் ஆண்டு அறிமுகமான நெஹ்ரா, தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால், அவருக்கு இந்த காலகட்டத்தில் 12 சர்ஜரிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் அவர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியில் ஒருவராக இருந்தார். 2003-ம் ஆண்டு இங்கிலா…
-
- 0 replies
- 388 views
-
-
ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட் இந்த ஆண்டு தடகள விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற நான் எடுத்த முடிவால் எனக்கு ஒரு கவலையும் இல்லை . காரணம் சாதிக்க வேண்டியதை எல்லாம் சாதித்து விட்டேன் என்கிறார் உசைன் போல்ட் . எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலண்டனில் இடம்பெறவுள்ள தடகள சம்பியன் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் , தான் ஓய்வு பெறப்போகிறேன் என்பதைத் தீர்மானமாக அறிவித்துள்ளார் 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரான இந்த அற்புத வீரர். மொனாக்கோவில் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் இவர் கலந்து கொண்டபோதே பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் . முன்னாள் சிறந்த தடகள வீரரான மிச்சேல் ஜோன்சனை இதே கேள்வியை நான் முன்பு கேட்டிருந்தேன் . …
-
- 0 replies
- 427 views
-
-
ஓய்வு பெறுகிறார் சங்ககரா மார்ச் 16, 2014. கொழும்பு: சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்ககரா. இலங்கை அணியின் ‘சீனியர்’ வீரர் சங்ககரா, 36. கடந்த 2000ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (1311) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து சங்ககரா கூறியது: வங்கதேசத்தில் நடக்கும் உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இது, என் கடைசி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர். இம்முடிவு வருத்தமானது என்றாலும், உண்மையானது. இதன்ம…
-
- 9 replies
- 1.7k views
-
-
ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென பிரத்யேக இடம் பிடித்தவர் மிஸ்பா உல் ஹக். தன் நேர்த்தியான ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மிஸ்பா, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா. 43 வயதாகும் மிஸ்பா, 2011-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார். டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்திய மிஸ்பா, ஐசிசி பட்டியலில் பாகிஸ்தான் அணி சிறந்த இடத்துக்கு முன்னேற காரணமாக இருந்தவர். இந்நிலையில், மேற்கிந்திய தீவ…
-
- 0 replies
- 292 views
-
-
ஓய்வு பெறும் திட்டம் இல்லை- ஷரபோவா உறுதி ஓய்வுக்கு என்று காலக்கெடு எதுவும் நான் நிர்ணயித்து கொள்ளவில்லை என உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா கூறியுள்ளார்.#MariaSharapova மாஸ்கோ: உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத தடைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் களம் திரும்பினார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 31 வயதான ஷரபோவாவின் ஆட்டம் முன்பு போல் சிறப்பாக இல்லாததால் அவர் ஓய்வு பெறக்கூடும் என்று பேச்சு எழுந்த…
-
- 0 replies
- 387 views
-
-
ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து திருப்தியடைகின்றேன்: – குமார் சங்கக்கார 2014-12-15 09:54:48 ''இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரானது இலங்கையில் எனது கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பது நிச்சயம். உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சிந்திப்பேன்'' என இலங்கையின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரும் முன்னாள் அணித் தலைவருமான குமார் சங்கக்கார குறிப்பிட்டார். இங்கிலாந்துக்கு எதிராக கண்டி பல்லேகலையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆறாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சங்கக்கார 112 ஓட்டங்களைக் குவித்ததன் பலனாக 90 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. இந்தப் போட்டி முடிவடைந்த …
-
- 0 replies
- 456 views
-
-
ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை: டில்சான் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திலகரட்ண டில்சான் தெரிவித்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று கொழும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது தொடரை 5-2 என கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் 101 ஓட்டங்களை பெற்ற டில்சான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த டில்சான் தனது ஓய்வு குறித்து கருத்து கருத்து தெரிவிக்கையில். இந…
-
- 0 replies
- 317 views
-
-
ஓய்வு பெற்றார் இந்திய அணியின் பறக்கும் வீரர் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொத்த 37 வயதாகும் முகம்மது கைப், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒரு நாள் போட்டிகள், முதல் தரப் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்தவர் முகம்மது கைப். 2000 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவராக இருந்தவர். 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு மிகப் பெரிய பலமாக இருந்தவர் கைப். அந்தப் போட்டியில் 87 ஓட்டங்களை எடுத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நாட்வ…
-
- 0 replies
- 645 views
-
-
ஓய்வு பெற்றார் இந்தியாவின் ''தங்க மகன்'' அபினவ் பிந்த்ரா ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 கோடி மக்களைக் கொண்ட நாடு ஒரு தங்கப்பதக்கமாவது வெல்லாதா..? என்ற எதிர்பார்ப்பு அனைவரது கண்களிலும் இருக்கும். சிறிய நாடுகள் கூட இரட்டை இலக்கத்தில் தங்கம் அள்ளும். அப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் தனி நபர் பிரிவில் ஒரு இந்தியர் தங்கப்பதக்கம் வென்றார். அதுவும் ஒலிம்பிக் போட்டியில் என்ற செய்தி அனைவரையுமே மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது என்பதில் சந்தேகமே இல்லை! ஆம், அபினவ் பிந்த்ரா எனும் துபாக்கி சுடும் வீரர்தான் இந்தியாவிற்காகத் தங்கம் வெல்லும் முதல் தனிநபர். ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இவர். தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இருந்து ஓய்வை …
-
- 0 replies
- 604 views
-
-
ஓய்வு பெற்றார் ஜெர்மன் கால்பந்து நட்சத்திர வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஷ்வெய்ன்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார். | படம்: கெட்டி இமேஜஸ். ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடுகள வீரரான இவர் தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஜெர்மனி வென்றது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அரையிறுதியில் பிரான்ஸிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஜெர்மனி அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் …
-
- 0 replies
- 368 views
-
-
ஓய்வு பெற்றோம் என்பதற்காக மீண்டும் மட்டையை எடுக்கக் கூடாதா?- இயன் சாப்பலுக்கு சச்சின் பதில் சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்ன். | கோப்புப் படம். அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டித் தொடர் குறித்து இயன் சாப்பல் கூறிய கருத்தை மறுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். நியூயார்க்கில் நடைபெறும் டி20 காட்சிப் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடுவதை மக்கள் ஒருபோதும் பார்க்க விரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். அது பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட போது, “அனைவரும் எப்போதும் ஏதாவது கருத்துடனேயே இருப்பார்கள், ஆனால் அந்தக் கருத்து சரியானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் ஒரு உயர்ந்த மட்டத்தில் சவாலாக இனி திகழ முடியாது என்ற நிலை…
-
- 0 replies
- 298 views
-
-
ஓய்வுக்கு தயாராகும் ஹேரத் March 26, 2016 டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்த உடன் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால் தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் இரு தூண்களாக விளங்கிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வையே இன்னும் சரிகட்டவில்லை. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான ரங்கண ஹேரத் (38 வயது) ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு சில விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எனது முழுகவனமும் டி20 உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே. அதேசமயம் இந்த தொடர் முடிந…
-
- 0 replies
- 1.2k views
-