விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
நடுவர்களால் அல்ல; சிறந்த ஆட்டத்தால் முதல் இடத்தில் உள்ளோம்- ஷினேடின் ஷிடேன் சிறந்த ஆட்டத்தால் லா லிகா தொடரில் முதல் இடத்தில் உள்ளதாகவும் நடுவர்களால் அல்ல என்றும் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கால்பந்து தொடரில் முக்கியமான லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் போன்ற முன்னணி அணிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - வில்லாரியல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் வில்லாரியல் அணி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் அணி ஒரு கோல் அட…
-
- 0 replies
- 384 views
-
-
என்னை ஏன் இப்படி இம்சை பண்ணுறீங்க...வீட்டுக்கு போய் தூங்குங்க: கதறிய டோனி டோனியை விடாமல் பத்திரிக்கையாளர்கள் விரட்டியதால், வீட்டுக்கு போய் தூங்குங்க என்று டோனி பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக கூறியுள்ளார். இந்திய அணியின் மூன்று வித போட்டிகளிலும் தலைவராக இருந்த டோனி, சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லின் புனே அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் உள்ளூரில் நடக்கும் விஜய் ஹசாரே தொடருக்காக ஜார்கண்ட் அணிக்கு தலைவராக பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இவர் தலைமையிலான ஜார்கண்ட் அணி நேற்று அபார வெற்றி பெற்றது. இந…
-
- 0 replies
- 1.2k views
-
-
ரிவியூ வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் திணறும் இந்தியா: 55-ல் 17 மட்டுமே வெற்றி ரிவியூ வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இந்தியா திணறி வருகிறது. 55-ல் 17 மட்டுமே அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டி.ஆர்.எஸ். என்ற ரிவியூ முறை பயன்படுத்தப்படுகிறது. நடுவர் கொடுக்கும் எல்.பி.டபிள்யூ. மற்றும் கேட்ச் போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். டோனி இருக்கும் வரை இந்த டி.ஆர்.எஸ். முறைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டனாக வந்த பின்னர் டி.ஆர்.எஸ். முறைக…
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார! பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தலைமை பொறுப்பேற்று, குறித்த தொடரை இலங்கைக்கு வென்றுக்கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் இவர் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார முதல் தடைவையாக இலங்கை தேசிய டெஸ்ட் அணிக்குழாமுக்குள் அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை ஏ அணிக்காக விளையாடிவரும் புஷ்பகுமார இங்கிலாந்து ஏ அணியுடனான தொடரில் விளையாடி வருகின்றார்.…
-
- 0 replies
- 368 views
-
-
1 பந்தில் 6 ஓட்டம் அடித்த பொல்லார்டு : அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சங்ககாரா! பிஎஸ்எல் பிரீமியர் லீக் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கிரன் பொல்லார்டு சிக்ஸர் அடித்து கராச்சி கிங்ஸ் அணிக்கு திரில் வெற்றிக்கு வழிவகுத்தார். பிஎஸ்எல் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18 வது ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியும், லாகூர் குவலாண்டர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் குவலாண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. லாகூர் குவலாண்டர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்குல்லம் 31 ஓட்டங்களும், மொகமத்ரிஷ்வான் 32 ஓட்டங்களும் எடுத்தனர். கராச்சி கிங்ஸ் அணி …
-
- 1 reply
- 516 views
-
-
லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா? ஜோஸ் மவுரினோ தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்றிரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- சவுதாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக ஜோஸ் மவுரினோ உள்ளார். மான்செஸ்டர்…
-
- 2 replies
- 440 views
-
-
டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவேண்டும் மலிங்க -கிரஹம் போர்ட் வலியுறுத்து டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கையி்ன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் சேவை அவசியம் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் தெரிவித்துள்ள துடன் , இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் எனவும் கோரியு ள்ளார். உபாதை காரணமாக ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் மலிங்க வின் வருகை வரையறுக்கப்பட்ட ஒவர் கி…
-
- 0 replies
- 264 views
-
-
ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 54 ரன்னுக்கு ஆல் அவுட்! ஆஃப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-2 என இரண்டு அணிகளும் சமமாக இருந்த நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 253 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே பேட்டிங் செய்ய வந்தபோது மழை பெய்யவே, போட்டி தடைப்பட்டது. இதையடுத்து, டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓவர்களில் 161 ரன்கள் இலக்காக ஜிம்பாப்வேக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெறும் 13.5 ஓவர்களில் 54 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்வே. 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 எனத் தொடரை வென்றது ஆஃப்…
-
- 0 replies
- 312 views
-
-
தோனியால் மீண்டும் ‘பினிஷிங்’ செய்ய முடியவில்லை: கர்நாடகாவிடம் தோற்றது ஜார்கண்ட் கோப்புப் படம்.| ராய்ட்டர்ஸ். விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டியில் கர்நாடக அணி தோனி தலைமை ஜார்கண்ட் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பிரிவு டி ஆட்டமொன்றில் வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் கர்நாடக அணி 266 ரன்களை எடுத்தது, கேப்டன் மணிஷ் பாண்டே அதிகபட்சமகா 77 ரன்களையும், ரவிகுமார் சமர்த் என்ற வீரர் அதிரடி 71 ரன்களையும் எடுத்தனர், ஜார்கண்ட் தரப்பில் ராகுல் ஷுக்லா 4 விக்கெட்டுகளையும் வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ரினர். தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணி 49.5 ஓவர்களில் 261 ரன்களை எடுத்து 5 ரன்கள் …
-
- 2 replies
- 648 views
-
-
9005 பந்துகளில் 9000 ரன்கள்... கங்குலி சாதனை முறியடிப்பு... அதிர ‘டி’ வில்லியர்ஸ்! ஒருநாள் கிரிக்கெட்டில் 9005 பந்துகளில் 9 ஆயிரம் ரன்கள் அடித்து தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். கங்குலியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 271 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 112 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தென்ஆப்ரிக்க அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ், 80 பந்துகளை சந்தித்து 85 ரன்களை எடுத்தார…
-
- 0 replies
- 303 views
-
-
தென்னாபிரிக்காவிடம் படுதோல்வியடைந்த நியுஸிலாந்து (படங்கள்) தென்னாபிரிக்கா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 159 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8 விக்கட்டுகளை இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பில் டிவில்லியர்ஸ் 85 ஓட்டங்களையும், டி கொக் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 272 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 32.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நியுஸிலாந்து அணி சார்பில் கிரேன்ட்ஹோம் அதிகபட்சமாக 3…
-
- 0 replies
- 361 views
-
-
பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் பங்களதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் அணியின் தலைவராக ஹேரத் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸ் உபாதைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17065
-
- 0 replies
- 287 views
-
-
விமானநிலையத்தில் கப்புகெதரவுக்கு நடந்த அதிர்ச்சி ( காணொளி இணைப்பு ) இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான சாமர கப்புகெதரவுக்கு நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி நேற்று இரவு நாடு திரும்பியிருந்தது. இந்நிலையி்ல் நேற்று இரவு நாடுதிரும்பிய இலங்கை அணியினருடன் விமான நிலையத்தில் கப்புகெதர தனது 30 ஆவது பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். http://www.virakesari.lk/article/17007
-
- 0 replies
- 463 views
-
-
ஆஸிக்கெதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது இலங்கை இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகின்றது. தென்னாபிரிக்க அணியுடனான தொடரை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பாமல் அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றடைந்தது இலங்கை அணி. பெரும் நம்பிக்கையுடன் இருக்கும் இளம் இலங்கை அணி,…
-
- 14 replies
- 1.1k views
-
-
தென்னாபிரிக்காவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட நியுஸிலாந்து : திரில் வெற்றி தென்னாபிரிக்கா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 6 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றது. தொடர் வெற்றிகளை குவித்துவந்த தென்னாபிரிக்க அணி, இந்த போட்டியில் போராடி தோற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 4 விக்கட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நியுஸிலாந்து அணி சார்பில் டெய்லர் ஆட்டமிழக்கால் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 290 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 283 ஓட்டங…
-
- 1 reply
- 323 views
-
-
புனே தூக்கினால் என்ன?: டோனியை கேப்டனாக்கியது ஜார்கண்ட் அணி மாநில அணிகளுக்கு இடையில் நடைபெறும் விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இங்கிலாந்து தொடரின்போது தனது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும், ஐ.பி.எல். போன்ற அணிகளில் கேப்டனாக நீடிப்பேன் என்று கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கும்வரை தொடர்ந்து கேப்…
-
- 0 replies
- 667 views
-
-
மஹேல, சங்கா மற்றும் கெயில் பாகிஸ்தான் செல்ல மறுப்பு! பாகிஸ்தான் சுப்பர் லீக் தற்சமயம் டுபாயில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாக். சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டியை பாகிஸ்தானின் லாஹுர் மைதானத்தில் நடத்துவதற்கு பாக். சுப்பர் லீக் நிர்வாகம் மற்றும் அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாகிஸ்தான் செல்வதற்கு பல வீரர்கள் ஆதரவளித்துள்ள போதும், முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் செல்வதற்கு இவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 422 views
-
-
கோலியை, இந்தியாவை எப்படி சமாளிக்கவிருக்கிறது ஆஸ்திரேலியா..? #IndVsAus #AustraliaSketch #VikatanExclusive இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 23-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், நான்கு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக அந்த அணி ‛அவுட் ஆஃப் ஃபார்ம்’ல் உள்ளது. கடைசியாக, ஆசிய நாடுகளில் பங்கேற்ற ஒன்பது டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதுவே அணியில் கணிசமான மாற்றம் செய்யக் காரணம். இந்தியா, ஆஸ்திரேலியா தவிர்த்து, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் …
-
- 0 replies
- 405 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷாகித் அப்ரிடி ஓய்வு அஃப்ரிடி | கோப்புப் படம் பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான ஷாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் அவரின் 21 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 36 வயதான அப்ரிடி, முன்னதாக 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் 20-20 கிரிக்கெட்டில் விளையாடிய அப்ரிடி, 2016 உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தார். அதைத் தொடர்ந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார் என்று எல்லோரும் நினைத்த வேளையில், அப்ரிடி தன்னுடைய கேப்…
-
- 0 replies
- 273 views
-
-
நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடிய ஸ்மித் : இறுதி பந்தில் திரில் வெற்றிபெற்றது இஸ்லாமாபாத் (Highlights) டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பேஸ்வர் சல்மி அணியை எதிர்கொண்ட இஸ்லாமாபாத் யுணைட்டட் இறுதி பந்துவரை போராடி திரில் வெற்றிபெற்றது. 137 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுணைட்டட் அணி கடைசிவரை போராடி இறுதி பந்தில் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பேஸ்வர் சல்மி அணி 9 விக்கட்டுளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹபீஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இலகுவான இலக்கை…
-
- 0 replies
- 258 views
-
-
பீட்டர்சன் அதிரடி ; பாரிய இலக்கை எட்டி வெற்றிபெற்றது கட்டார் கிலாடியேட்டர்ஸ் (Highlights) டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இன்றைய முதல் போட்டியில் லாஹுர் கெலண்டர்ஸ் அணியை எதிர்கொண்ட கட்டார் கிலாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றிபெற்ற 201 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய கிலாடியேட்டர்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்தது. முதலில் போட்டியில் லாஹுர் கெலண்டர்ஸ் அணி 3 விக்கட்டுளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜேசன் ரோய் 51 ஓட்டங்களையும, பஹ்க்கர் ஷமான் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிலாடியேட…
-
- 0 replies
- 263 views
-
-
பாக். சுப்பர் லீக் : முதல் வெற்றியை பதிவுசெய்தது கராச்சி (Highlights) டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய போட்டியில் சங்கக்காரவின் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியினை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியை எதிர்கொண்ட கராச்சி அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டி மழைக்காரணமாக 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுனைட்டட் அணி 8 விக்கட்டுளை இழந்து 90 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கராச்சி அணி 9.4 ஓவர்களில் 75 ஓட்டங்களை…
-
- 0 replies
- 314 views
-
-
88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு தடைவிதித்தது ஜெர்மன் கால்பந்து பெடரேஷன் கால்பந்து மைதானத்தில் கலவரத்தை ஏற்படுத்த இருந்த 88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு ஜெர்மன் கால்பந்து பெடரேஷன் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் பிரிமீயர் லீக், ஸ்பெயினில் லா லிகா, பிரான்சில் லீக் -1 கால்பந்து தொடர் நடைபெறுவது போல் ஜெர்மனியில் பண்டேஸ்லிகா தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை பொருஷியா டோர்ட்மண்ட் - டார்ம்ஸ்டாட் அணிகள் மோதின. இந்த போட்டியைக் காண இரண்டு பேருந்துகளில் பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வந்தனர். அப்போது போலீசார் அந்த வாகனங்களை மறித்து சோதனை செய…
-
- 0 replies
- 322 views
-
-
ஒரே டி20: நியூஸிலாந்தை நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்தை நொறுக்கிய தென் ஆப்பிரிக்க அணி. | படம்| ஏ.எப்.பி. ஆக்லாந்து, ஈடன்பார்க்கில் நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை தென் ஆப்பிரிக்க அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்த தவறைச் செய்தவர் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். தென் ஆப்பிரிக்கா ஹஷிம் ஆம்லா அதிரடி அரைசதத்துடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 14.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, கிறிஸ் மோரிஸ் அற்புதமான தொடக்க ஓவர்களில்…
-
- 0 replies
- 342 views
-
-
பாக். சுப்பர் லீக்கில் கலக்கும் குமார் சங்கக்கார (Highlights) இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் , அணித்தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் கராச்சி கிங்ஸ் அணித் தலைவராக செயற்படும் சங்கக்கார நேற்றைய லாஹுர் கெலண்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 45 பந்துகளுக்கு முகங்கொடுத்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஒரு ஆறு ஓட்டம் மற்றும் 8 நான்கு ஓட்டம் அடங்கலாகவே இவர் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனினும் குறித்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை…
-
- 0 replies
- 307 views
-