விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
விராட் கோலி படத்தை விலங்குகளுடன் வைத்து போலிங் நடத்திய ஆஸி. மீடியா இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் படத்தை விலங்குகள் படத்துடன் வைத்து ஆஸ்திரேலியா மீடியா ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. 11 பேர் பீல்டிங் செய்ய, இரண்டு பேர் பேட்டிங் செய்யும் கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அழைப்பார்கள். இந்த விளையாட்டில் சில நேரங்களில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் போட்டியின் உற்சாகத்தைப் பாதிக்காத வகையில் இருக்கும். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையில் அதிக அளிவில்…
-
- 0 replies
- 491 views
-
-
விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- பெரெட்டினி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த, ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும். ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன்படி தற்போது ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம், 1.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பிய…
-
- 0 replies
- 448 views
-
-
மகளிர் யுரோ கால்பந்து: ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி; 43 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து மகளிருக்கான யுரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்றில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் தலையால் முட்டி கோல் அடிக்கிறார் டென்மார்க் வீராங்கனை நதியா நதிம். - படம்: ஏஎப்பி நெதர்லாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான யுரோ கால்பந்து தொடரின் அரை இறுதிக்கு டென்மார்க், இங்கிலாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி - டென்மார்க் அணிகள் மோதின. இதில் டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் 9-வது முறையாக பட்டம் வெல்லும…
-
- 0 replies
- 342 views
-
-
Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/BCCI WOMEN இன்று நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.இந்திய அணி பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், பாகிஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் விளையாடிய சினேகா ராணா, பூஜா வஸ்த்ரகர் ஜோடி அதிக ரன்களை எடுத்தது. பூஜா வஸ்த்ரகர் 58 பந்…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சர்வதேச கிரிக்கெட்டை சீரழிக்கின்றது : அர்ஜுண ரணதுங்க இலங்கை உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அபகரித்து வருகின்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேசக் கிரிக்கெட்டை சீரழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை …
-
- 0 replies
- 361 views
-
-
சங்கக்காரவின் வரலாற்று சாதனையை நெருங்கும் கோஹ்லி இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தனது வாழ்நாள் அதிகூடிய புள்ளிகளுடன் (937) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 97 மற்றும் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டியின் நிறைவில், டெஸ்ட் துடுப்பாட்ட வரி…
-
- 0 replies
- 416 views
-
-
திமுத் காருணாரத்னவுக்கு காயம் அவுஸ்திரேலியவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு துடுப்பாட்டத்தின் போது காயமேற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையிலேயே அவருக்கு காயமேற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கும்மின்ஸ் வீசிய பந்து அவர் மீது பட்டதிலேயே திமுத் காருணாரத்ன காயமடைந்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=111022
-
- 0 replies
- 832 views
-
-
பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் ரோஸ்பெர்க் வெற்றி மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜெர்மனியின் ரோஸ்பெர்க். படம்:ஏஎஃப்பி. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயத்தின் 17வது சுற்று மெக்ஸிகோவில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் ஹேமில்டன் 2 வது இடத்தை பிடித்தார். இந்த சீசனில் ரோஸ் பெர்க் பெற்ற 4வது வெற்றி இது வாகும். ஏற்கெனவே அவர் ஸ்பெயின், மொனாக்கோ, ஆஸ்தி ரியா போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 போட்டியில் ரோஸ் பெர்க் வெற்றி பெற்றுள்ளார். அவர் 272 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கார் பந்தயம் மொத்தம்…
-
- 0 replies
- 277 views
-
-
பீபாவுக்கு இவ்வாண்டில் $ 187 மில். நட்டம் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் (பீபா), இவ்வாண்டில் மாத்திரம் 187 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (87 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்) அதிகமான நட்டம் ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது. பல்வேறுபட்ட ஊழல், மோசடி, முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பீபா, அனுசரணையாளர்களிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. பல அனுசரணையாளர்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்தனர். முதல்நிலை அனுசரணையாளர்களான எமிரேட்ஸ், சொனி இரண்டும், இரண்டாம் நிலை அனுசரணையாளர்களான கஸ்ட்ரோல், கொன்டினென்டல், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்ததோடு, அவர்கள…
-
- 0 replies
- 818 views
-
-
ஓய்வு குறித்து சரியான நேரத்தில் சிந்திப்பேன்: தோனி திட்டவட்டம் ஆஸ்திரேலிய பயணத்துக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தோனி. | படம்: விவேக் பெந்த்ரே. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக வெற்றிகளை கொண்டு வந்து கொண்டிருப்பதினால் தோனியிடம் மீண்டும் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர் தனக்கேயுரிய புன்னகையுடன் நிதானமாக அக்கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி புறப்படும் தருணத்தில் தோனியிடத்தில் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, “இந்தக் கணத்தில் வாழும் நபர் நான். இப்போது எனது கவனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர…
-
- 0 replies
- 405 views
-
-
13 வருட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது – கார்லி லாய்டு! உலக கால்பந்து அமைப்பான FIFA, ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் வீராங்கனையை அறிவிக்கும். இந்த முறை இந்த நிகழ்ச்சி கோலாகலமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது. இதில் 2௦15-ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த வீரராக மெஸ்ஸியும் மிகச்சிறந்த வீராங்கனையாக கார்லி லாய்டும் அறிவிக்கப்பட்டனர். மெஸ்ஸியை அனைவருக்குமே தெரியும். யார் இந்த கார்லி லாய்டு? அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் இந்த 33 வயது வீராங்கனை. அணிக்காக கிட்டத்தட்ட 2௦௦ போட்டிகளில் பங்கேற்று, 70 கோல்களை அடித்துள்ளார் இவர். இதில் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவையும் அடங்கும். 2008, 20…
-
- 0 replies
- 580 views
-
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இத் தாக்குதலுக்கு விளையாட்டுப் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடப் போவதில்லை என பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவி…
-
- 0 replies
- 212 views
-
-
T20 ல் இலங்கையின் நிலை என்ன? March 08, 2016 இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலத்தில் நம்ப முடியாத அளவு சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து வந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியிடம் (2-0) ஒயிட் வாஷ், இந்தியாவிடம் 2-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக இலங்கை தொடரை இழந்தது. தற்போது நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியிலும் விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் கத்துக்குட்டி அணியான எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இதனால் நடப்பு சாம்பியனான இலங்கை அணி முதலிடத்தில் இருந்து 8வது இடத்திற்கு தள்ளப்பட்டு…
-
- 0 replies
- 563 views
-
-
கும்ப்ளேவின் ஒரு மணி நேர புதிய சவாலை சமாளித்த ஒரே வீரர்? முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அணியின் பயிற்சியாளராக தன்னை தேர்ந்தெடுக்காதது ஏன் என இன்னமும் மீடியாக்களின் மூலம் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி. இது ஒருபுறமிருக்க, பெங்களூருவுக்கு அருகாமையில் இருக்கும் அலூர் மைதானத்தில், இந்திய அணி வீரர்களை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தி இருக்கிறார் அனில் கும்ப்ளே. ஒரு மணி நேர சவால்: கும்ப்ளே, வீரர்களுக்கு 1 மணி நேர சவால் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி பேட்ஸ்மேன் அனைவரும் 1 மணி நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். அரை மணி நேரம் வேகப்பந்து வ…
-
- 0 replies
- 420 views
-
-
ராகுல் அவுட், கம்பீர் இன்... ஒருநாள் அணியில் யுவராஜ்?... #SportsBytes கே.எல்.ராகுல் அவுட், கம்பீர் இன்... கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் ஃபீல்டிங் செய்தார். அநேகமாக ராகுல் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கப்படலாம் என்றும், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று ஃபிட்னஸ் தேர்வில் தேறி விட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ராகுல் விலகல் குறித்தும், கம்பீர் வருகை குறித்தும் பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை…
-
- 0 replies
- 484 views
-
-
கொண்டாட்ட பாணியை மாற்றுங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு எதிராக வெற்றிபெற்றபோது வெற்றியைக் கொண்டாடிய விதம் குறித்து கருத்துக்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்திற்குள்ளேயே பாகிஸ்தான் வீரர்கள் ‘உடற்பயிற்சி’ எடுக்கும் வித்தியாசமான பாணியை அவ்வப்போது கடைப்பிடிக்கிறார்கள். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்த பாணியில் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தானின் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி. ராணா அப்சல் கான், ‘இது போல் நடந்து கொள்வது பாகிஸ்தான் மீது எதிர்மறை எண்ணத்தை உர…
-
- 0 replies
- 310 views
-
-
ஆடவந்த அணி ஆட்டங்கண்டதேனோ? உற்சாகமாகத்தான் இங்கிலாந்து அணி இந்திய அணியை அதன் மண்ணில் எதிர்கொண்டது. புது உத்வேகத்துடன் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தம்மால் இந்திய அணியை மண்கவ்வ வைக்க முடியும் என்ற நம்பிக்கை முழுக்க முழுக்க இருந்தது. ஐந்து டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் தொடங்கியபோது, இங்கிலாந்து அணி தன் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 3 சதங்களுடன் இங்கிலாந்து அணி 500 ஓட்டங்களைத் தாண்டியபோது, இந்தியாவின் சுழல் பந்து வீச்சுக்கு என்ன ஆயிற்று?அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று சதங்கள் தம் மண்ணில் அடித்து நொருக்கும் அளவுக்கு இந்தியாவின் அசத்தும் பந்து வீச்சுக்கு கண்திருஷ்டி விழுந்து விட்டதா என்ற கேள்வியையே பலரும் தமக்குள் கேட்டுக் கொண்டார்கள். இங்கிலாந்…
-
- 0 replies
- 360 views
-
-
கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்? சார்லஸ் ``கோஹ்லி போன்ற ஒரு தெருச்சண்டைக்காரனை கேப்டனாக நியமித்தால், இதுபோன்ற அசிங்கமான கிரிக்கெட்டைப் பார்த்துதான் ஆக வேண்டும்.'' ``ஸ்டீவன் ஸ்மித் கிரிஸுக்கு வந்ததுமே, கோஹ்லி ஏதோ அவரைச் சிறைக்குள் வைப்பது போல ஃபீல்டிங்கை மாற்றினார். பேட்ஸ்மேனின் அருகில் நின்றுகொண்டு திட்டித் திட்டிப் பேசிக்கொண்டே இருந்தார்.'' ``கோஹ்லி தன்னுடைய செயல்களால் அல்ல, தன்னுடைய கெட்ட வார்த்தைகளால் தனது அணியினரை மோட்டிவேட் செய்ய முயல்கிறார். அவர் ஒரு தலைவனே அல்ல.'' -இப்படியெல்லாம் வீராட் கோஹ்லியை வசைபாடுவதும், அவர் மீது சேற்றை வாரி இறைப்பதும் யார் தெரியுமா? ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் இந்நாள் வீரர்களும் ஆஸ்திரே…
-
- 0 replies
- 706 views
-
-
பேட்டிங்கை அலசி ஆராய்ந்து மெருகேற்ற மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட பேட்கள்: ரோஹித் சர்மா, ரஹானே பயன்படுத்துகின்றனர் ரோஹித் சர்மா, ரஹானே. | படம்.| ஏ.எஃப்.பி. வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கணினிமயமாக்கப்பட்ட சிப்களை தங்கள் மட்டைகளில் பொருத்தி இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே ஆகியோர் விளையாடவிருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு அணியிலும் 3 பேட்ஸ்மென்கள் இத்தகைய சிப் பேட்களை பயன்படுத்துவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எதற்காக சிப் பொருத்தப்பட்ட பேட் என்றால், மட்டையின் இயக்கம், மட்டையாளரின் நகர்தல் ஆகியவை பற்றிய தரவுகளை சிப்கள் மூலம் சேகரித்து தங்கள் பேட்டிங்கை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம், தவறுகளை திருத்திக் க…
-
- 0 replies
- 275 views
-
-
இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி 15 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான “சிங்கர் கிண்ண” மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றில் மொரட்டுவ ஸ்ரீ சந்திரசேகர மஹா வித்தியாலய அணி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றது. கண்டி பல்லேகல சிறைச்சாலை மைதானத்தில் திங்கட்கிழமை (11) தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ சந்திரசேகர வித்தியாலய அணி யாழ்ப்பாண இளம் வீரர்களுக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியது. இதன்படி களமிறங்கிய யாழ்ப்பாண சென் ஜோன்ஸ் கல்லூரி அணியி…
-
- 0 replies
- 656 views
-
-
இலங்கை அணியுடன் சச்சரவுகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு வீரர்கள் இலங்கை அணியுடன் சச்சரவுகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு வீரர்கள் சுதந்திரக் கிண்ண T-20 தொடரின் ஆறாவது போட்டியில் பங்களாதேஷ் அணியினர் இலங்கை அணியினை கிண்டல் செய்யும் விதமாக பாம்பு நடனம் ஆடியது, இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தினை விட்டு வெளியேறுவது போன்று அச்சுறுத்தல் விடுத்தது, ஓய்வறைக் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டது போன்றவை கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. இது மாதிரியாக கடந்த காலங்களிலும் இலங்கை அணியுடனும், இலங்கை வீரர்களுடனும் ஏனைய நாட்டு அணிகளும், வீரர்களும் முறுகல் நிலையினை தோற்றுவித்த சம்பவங்கள்…
-
- 0 replies
- 436 views
-
-
அடுத்த உலகக்கிண்ணத்தின் துருப்புச்சீட்டு மெத்திவ்ஸ் – சங்கா இங்கிலாந்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில், அஞ்செலோ மெத்திவ்ஸ் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய சாதனையை, தன்னகத்தே கொண்டுள்ள குமார் சங்கக்கார, அஞ்செலோ மெத்திவ்சின் சகலதுறை திறமையானது 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணிக்கு அதீத நம்பிக்கை அளிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் எவ்வி…
-
- 0 replies
- 385 views
-
-
அத்தபத்து இராஜினாமா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்வன் அத்தப்பத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அண்மைய சில தொடர்களாக இலங்கையணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காததையடுத்து, அவர் மீதான அழுத்தங்கள் காணப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, அவர் சமர்ப்பித்த இராஜினாமாக் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக சபை ஏற்றுக்கொண்டுள்ளது. http://tamil.wisdensrilanka.lk/article/1930
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கை ஏ அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே இலங்கை ஏ மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி நாளை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டிக்கான இலங்கை ஏ குழாம் பின்வருமாறு; 1.லஹிரு திரிமான்னே (அணித்தலைவர்) 2. குசால் ஜனித் பெரேரா (உபத்தலைவர்) 3.ரொஷான் சில்வா 4. சரித் அசலங்க 5. அசேல குணரத்ன 6. அவிஷ்க பெர்னாண்டோ 7. அனுக் பெர்னாண்டோ 8. லக்ஷான் …
-
- 0 replies
- 339 views
-
-
பாகிஸ்தானுக்கு வரவேண்டாம்! தற்போது பாதுகாப்பு இல்லை என்கிறார் சொய்ப் அக்தர் பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகளுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள பொலிஸ் அகாடமியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் சமீபத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 62 பொலிஸார் மற்றும் 2 இராணுவ வீரர்கள் பலியானார்கள். 170 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிநாட்டு அணிகளுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கூறியுள்ளார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்படும் சொய்ப் அக்த…
-
- 0 replies
- 241 views
-