விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா By PRIYATHARSHAN 16 SEP, 2022 | 12:11 PM இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 - 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில், தற…
-
- 6 replies
- 439 views
- 1 follower
-
-
எலி, முள்ளம்பன்றி, கார்.. விநோத காரணங்களுக்காக தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள்! இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது. நேற்று மதியம் களத்தில் அதிக மாசு இருப்பதாகக் கூறி இலங்கை வீரர்கள் முகமுடி அணிந்து ஆடினர். லக்மல் உள்ளிட்ட சில இலங்கை வீரர்கள் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறி டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினர். இதனால், அவ்வப்போது ஆட்டம் தடைபட்டது. இதேபோல கிரிக்கெட் வரலாற்றில் பல விநோத காரணங்களுக்காக ஆட்டம் தடைபட்டிருக்கிறது. அதன் விவரம்... * 1957 ஜூலை: இங்கிலாந்தில் நடந்த கவுன்டி கிரிக்கெட் போட்டியின் இடையே முள்ளம்பன்றி ஒன்று மைதானத்துக்குள் நுழைந்…
-
- 0 replies
- 439 views
-
-
2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்! ``2019 உலகக்கோப்பை வரை நான் சர்வைவ் ஆவேன் என நினைக்கிறீர்களா?'' என்று தோனி மீண்டும் கேட்க, ``ஆமாம்... நிச்சயமாக'' என்றார் பத்திரிகையாளர். ``நீங்களே சொல்லிவிட்டீர்கள். நான் இனி எதுவும் சொல்வதற்கில்லை'' என்று ஓய்வுபற்றி எழுந்த கேள்வியை மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு, ஓய்வுபற்றிய கேள்விகளுக்கு அப்போது முற்றுப்புள்ளிவைத்தார் தோனி. ஆனால், கடந்த ஓராண்டாகவே தோனியின் பர்ஃபாமென்ஸ் கேள்விக்குள்ளாகிவருகிறது. ``2019 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் தோனி தன்னுடைய ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். அவர் இன்னிங்ஸை பில்ட் செய்ய வேண்டும். ஆனால்…
-
- 0 replies
- 439 views
-
-
உலகின் நம்பர் 1 அணி என்று ஆஸி. நிரூபித்து விட்டது: பிரியாவிடை பேச்சில் பிரெண்டன் மெக்கல்லம் கடைசி முறையாக நியூஸிலாந்து அணியை வழிநடத்திச் செல்லும் மெக்கல்லம். | படம்: ஏ.பி. நியூஸிலாந்து கேப்டனும் அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கல்லம்மின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ரன்களை 38.64 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ள மெக்கல்லம், அதிகபட்ச ஸ்கோராக 302 ரன்களை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். இதில் 12 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். இந்த ரன்களில் 776 பவுண்டரிகளையும் 107 சிக்சர்களையும் சாதித்துள்ளார் மெக்கல்லம். 198 கேட்ச்களை பிடித்ததோடு 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 2004-ம் ஆண…
-
- 1 reply
- 439 views
-
-
ஒரு காலை இழந்தும் ஃபீல்டிங் செய்த கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மாற்றுத் திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் தாமஸ் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரது செயற்கை கால் தனியாக விழுந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ச்சியாக பந்தை தடுத்து கீப்பரிடம் த்ரோ செய்தார். செயற்கை கால் இழந்தாலும், விளையாட்டில் முழு ஈடுபாடு காண்பித்த அவரது செயல் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. இது பற்றி முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் பால் காலிங்வுட்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில், பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். http://www.vikatan…
-
- 0 replies
- 439 views
-
-
கிரிக்கெட் வீரர்களை காவிமயமாக்கிய உத்திரபிரதேச யோகி அரசு இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர்களுக்கு காவி துண்டு அணிவித்து, யோகி ஆதித்யநாத் அரசு வரவேற்பு கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டீ20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முன்னதாக நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஆளுக்கொரு முறை வெற்றி பெற்றதால் தொடர் சம நிலையில் உள்ளது. இதனால் 3 வது போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2 ஒரு நாள் தொடர் முடிந்து 3-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணிகளும் கான்பூர் மைதானத்துக்கு வந்தடைந்தது. அங்கு வந்த வீரர்கள் தீபாவளி முடிந்து வந்ததால், அவர்க…
-
- 0 replies
- 439 views
-
-
என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா?: ரசிகர் கேள்விக்கு மரியா ஷரபோவாவின் ரியாக்சன் துருக்கியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் என்னை திருமணம் கொள்வீர்களா? என்று கேட்டதற்கு அவரது ரியாக்சனைப் பார்ப்போம். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. உலகளவில கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். டென்னிஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதா…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை ப்ளெமின் ஆகிய இருவருரே வட பகுதியிலிருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளவர்களாவர். வட பகுதியிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் நிறு…
-
- 0 replies
- 438 views
-
-
இந்திய-அஸ்திரேலிய வீரர்களுக்கு ஆஸி. பிரதமர் டோனி அபாட் புத்தாண்டு தேநீர் விருந்து ஆஸி.பிரதமர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள். | படம்: சிறப்பு ஏற்பாடு. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது சிட்னி இல்லத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு தினமான இன்று தேநீர் விருந்து அளித்தார். இரு அணி வீரர்களும் பிறகு பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் டீம் இந்தியா டி-சர்ட் மற்றும் கால்சட்டைகளுடன் இந்திய வீரர்கள் சாதாரண உடையில் பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அணி வீரர்களுடன் புகைப்படம் எடு…
-
- 0 replies
- 438 views
-
-
40 நிமிடங்களில் ஆட்டம் முடிந்தது; காட்டடி பேட்டிங் செய்த கப்தில்: 38 பந்துகளில் 108 ரன்கள் விளாசல் மார்ட்டின் கப்தில் சதம் அடித்த மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட காட்சி இங்கிலாந்தில் நடந்த கவுண்டி அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் பொளந்து கட்டிய நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து 40 நிமிடங்களில் வோர்செஸ்டர்ஷையர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நார்த்தாம்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று வோர்செஸ்டர்ஷையர் அணிக்கும், நார்த்தாம்டன்ஷையர் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணி, 188 ரன்கள் குவித்தது. …
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை October 4, 2018 இலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு இலங்கையில் நடத்தி வருகின்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் சில காலமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அவர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை, இங்கிலாந்து தொடருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற போதிலும் எதிர்வரும் …
-
- 1 reply
- 438 views
-
-
பிராட் ஹாட்டின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் பிராட் ஹாட்டின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார். பி.ஜே. என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் ஹாட்டின் இடது கை துடுப்பாட்ட வீரராவார். இதுவரை 126 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 115 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். 2 சதங்களையும், 16 அரை சதங்களையும் அடித்துள்ள இவர், இதுவரை 3122 ஓட்டங்களை குவித்துள்ளார். அதே போல் விக்கெட் காப்பாளர் பொறுப்பில் 170 பிடிகளை எடுத்துள்ளதுடன் 11 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். htt…
-
- 0 replies
- 438 views
-
-
மட்டையிலும் பந்திலும் மனிதத்தை இழக்கக்கூடாது -கப்டன் கூல் அட்வைஸ் October 03, 2015 ஆக்ரோசமாக விளையாடலாம். ஆனால், அந்த ஆக்ரோசம் தவறான நடத்தைக்குக் கொண்டு சென்று விடக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் டோனி. இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோக்லி, இயக்குநர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் வீரர்கள் எனப்பலரும் ஆக்ரோசம் தொடர்பாக எதிர்மாறான கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி-20 தொடர் ஆரம்ப மாகும் முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து டோனி ஆக்ரோசம் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். டோனி மேலும் தெரிவித்ததாவது – ஆக்ரோசம் என்பதற்கு சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், உடலளவில் இடித்துத்தள்ளுவதும் என்று அர்த்தம் கிடையாது. மிகச் சிறந்த வ…
-
- 0 replies
- 438 views
-
-
ரிச்சர்ட்ஸ் சாதனையைத் தாண்டுவாரா கோலி? மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்! தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது. தெ…
-
- 2 replies
- 438 views
-
-
கிரிக்கெட் மைதானத்தை ரெஸ்லிங் மேடையாக்கியவருக்கு வாழ்நாள் தடை! (வீடியா) பெர்முடாவில் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதி ஆட்டத்தில் கிளைவ்லேண்ட் அணியுடன் வில்லோ கட் அணி மோதியது. பெர்முடா அணிக்காக 14 சர்வதேச போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், கிளைவ்லேண்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியின் போது, கிளைவ்லேண்ட் அணியின் விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சனுக்கும் வில்லோ கட் அணியின் பேட்ஸ்மேன், ஜார்ஜ் ஓ பிரையனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், ஓ பிரையன் முகத்தில் கையால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஓ பிரையனும் பதிலுக்கு ஜேசன் ஆண்டர்சனை பேட்டால் தாக்கினார். பின்னர் இருவரும் …
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பங்களாதேஷ் பயிற்சியாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக்க ஹத்துருசிங்கவிடமும், நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளமிங்குடனும், அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் சிம்பாப்வே அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி விளையா…
-
- 1 reply
- 438 views
-
-
பெண்களுக்கான டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுதிரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், குழு 'A' யில் இந்திய அணியுடன் கலமிறங்கிய இலங்கை மகளிர் அணியை, 33 பந்துகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணியின் கெப்டன் சாமரி 33 ஓட்டங்களை குவித்தார். தில்ஹரி ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றார். இதே வேளை இந்திய அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 114 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி, 32…
-
- 1 reply
- 438 views
- 1 follower
-
-
செய்தித்துளிகள்: வார்னருக்கு அனுமதி கொரியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் குர்ஜித் கவுர், வந்தனா கட்டாரியா, லால்ரெம்ஷியாமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி ஜப்பானையும், சீனாவையும் வீழ்த்தியிருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. போட்டியை நட…
-
- 0 replies
- 438 views
-
-
விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி - ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். #Wimbledon2018 #JohnIsner #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.…
-
- 0 replies
- 438 views
-
-
சிங்கப்பூரில் சாதித்து பதக்கம் வென்ற இலங்கை கராத்தே வீரர்கள் கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கையைச் சேரந்த சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2016 சிங்கப்பூர் பெடோக் (Bedok ) உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்களான எஸ்.அமித்தேஷா குமித்தேவில் வெண்கலம், காட்டாவில் வெள்ளிப் பதக்கங்களையும் எஸ்.ஆதேஷா குமித்தேயில் வெள்ளிப் பதக்கத்தையும் காட…
-
- 0 replies
- 438 views
-
-
ஐ.பி.எல்., சூதாட்டம்: மவுனம் கலைத்தார் தோனி ஜனவரி 25, 2015. சிட்னி: ‘‘ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார். ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்தது. இதில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 வீரர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதில், சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதே நேரம், சென்னை அல்லது பி.சி.சி.ஐ., தலைவர் பதவி என ஏதாவது ஒன்றில் மட்டுமே நீ…
-
- 2 replies
- 438 views
-
-
செய்தித் துளிகள்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல் தீபிகா | கோப்புப் படம் கிரானைட் ஓபன் ஸ்குவாஸ் போட்டி டொரான்டோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், எகிப்தின் சல்மா ஹனி இப்ராஹிமை எதிர்த்து விளையாடினார். இதில் 27வது இடத்தில் உள்ள சல்மாவை 12-10, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் தீபிகா பல்லிகல் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது. அரையிறுதியில் 6ம் நிலை வீராங்கனையான கயானாவின் நிக்கோலேடி பெர்ணான்டஸை சந்திக்கிறார் தீபிகா. ------------------------------------------------------------- இந்தியா-இலங்கை டி 20-ல் மோதல் ஆசிய கோப்ப…
-
- 0 replies
- 438 views
-
-
பிரபல கிரிக்கெட் வீரருக்குத் தடை சிம்பாபே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் பங்களாதேஷூக்கு எதிரான 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதிக்கப்பட்டது. இதில் விதிமுறைக்கு புறம்பாக, பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடோரி, தனது பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்த …
-
- 0 replies
- 438 views
-
-
கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணியினை 10 ஓட்டங்களால் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணி. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு 2இன் (டிவிஷன் ll) குழு D அணிகளுக்கான ஒரு போட்டியாக இவ்விரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் நணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோ…
-
- 0 replies
- 438 views
-
-
செய்தித் துளிகள்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு நியமிக்கப் பட்டுள்ளார். --------------------------------- ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் காயம் காரணமாக விலகிய மலிங்காவுக்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். --------------------------------- ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு இம்முறை வைல்டுகார்டு கிடையாது என இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் தங்களது தரவரிசை அடிப்படையில் தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. --------------------------------- …
-
- 0 replies
- 438 views
-