விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி முடிவதையொட்டி, அடுத்த பயிற்சியாளராகப் போவது யார் என்ற மாபெரும் கேள்வி எழுந்துள்ளது. கங்குலி, சச்சின் மற்றும் லக்ஷ்மன் அடங்கிய ஆலோசனைக் குழுவே அடுத்த பயிற்சியாளரை முடிவு செய்யும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலாளர் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் அமர்த்தப்படலாம் என்று சில தகவல்கள் கூறினாலும் டிராவிட், வார்னே, ஸ்டீவ் வாக் என்ற சில பெயர்களும் அடிபடுகின்றன. கிரிக்கெட் உலகின் கௌரவமிக்க பதவியான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது? யார் நியமிக்கப்பட்டால் அணி மேம்…
-
- 0 replies
- 512 views
-
-
கையிலிருந்து நழுவியது கோப்பை தோல்வி அதிர்ச்சியில் இந்திய அணி வீரர்கள். லெண்டில் சிம்மன்ஸ் இந்தியா வுக்கு வந்து இறங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. பெரிய அளவில் பயிற்சியோ முன்தயாரிப்போ இல்லாமல் அவர் களம் இறங்கி னார். அவர் இறங்கிய களம் ஒரு விதத்தில் அவரது ‘சொந்த’ஊர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் அவருக்கு மும்பையின் ஆடுகளம் மிகவும் பரிச்சயமானது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்லும் மார்லன் சாமுவேல்ஸும் விரைவிலேயே ஆட்டமிழந்த பிறகு அணியின் நம்பிக்கையை ஜான்சன் சார்லஸுடன் இணைந்து புதுப்பித்தார் சிம்மன்ஸ். தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே அணியை வெற்றிபெறச்செய்து இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அஜிங்க…
-
- 1 reply
- 650 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு! நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அரை இறுதியில் தோல்வி கண்ட சில தினங்களுக்குள் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான கிரான்ட் எலியாட் தனது ஒருநாள் போட்டி வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மற்ற வகையான (டெஸ்ட், 20 ஓவர்) போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருநாள் உலக கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணி…
-
- 0 replies
- 429 views
-
-
மத்தியின் வர்ண இரவு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் வழங்கப்படவுள்ள வர்ண இரவு விருதிற்கான விண்ணப்பங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வேந்தன் அறிவித்துள்ளார். மத்திய கல்லூரியில் கல்வி கற்று விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வியமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு, ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட தேசிய மட்ட சங்கங்கள் போன்றன நடத்திய தொடர்களில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய, தேசிய அணியில் இடம் பெற்ற, சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்ட, சர்வதேச போட்டிகளில் வெற்றியீட்டிய பழைய மாணவர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவங்களையும் ச…
-
- 0 replies
- 297 views
-
-
ஜடேஜா உலகத்தர ஸ்பின்னர் இல்லை... ஏன்? - ஒரு பார்வை ஜடேஜா, தோனி, பின்னால் அஸ்வின். | கோப்புப் படம். உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் இந்திய அணியில் ஜடேஜாவின் பங்களிப்பு குறிப்பிடும்படி அமையவில்லை. நேற்று அரையிறுதியில் அவர் 4 ஓவர்களில் 48 ரன்களை வாரி வழங்கினார். இதில் ரன் இல்லாத 5 பந்துகள் போக 4 பவுண்டரி 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஆக, 12 பந்துகளில் 34 ரன்கள், சரியாகக் கூறுவதென்றால் 7 பந்துகளில் 34 ரன்கள், ஆனால் டாட் பந்துகளையும் சேர்த்துதான் ஆகவேண்டும் எனவே கிட்டத்தட்ட ஒரு பந்துக்கு 3 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் கொடுத்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில், இவர் அளவுக்கு மூன்று வடிவங்களிலும் விளையாடும் மற்ற இடது கை சுழற்…
-
- 0 replies
- 874 views
-
-
மறக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
-
- 1 reply
- 557 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்ன் விருப்பம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக தன்னை அழைத்தால் நிச்சயம் அந்தப் பணியை ஏற்றுக் கொள்வேன் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அணியுடன் பணியாற்ற எனக்கு மிகவும் விருப்பம். இந்த அணி திறமை மிக்க அணி, பணியாற்ற மகிழ்ச்சியளிக்கும் அணி. இந்திய வீர்ர்களுக்கு நெருக்கடி அதிகம், கோடிக்கணக்கானோர் இந்திய அணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே வாய்ப்பு வந்தால் நான் நிச்சயம் இது பற்றி பரிசீலிப்பேன். என் வாழ்க்கையில் நான் எதையும் இதுவரை மறுத்ததில்லை. இந்திய அணியை பயிற்சி செய்வதிலாகட்டும் அல்லது ஐபிஎல் அணியை பயிற்சி செய்வதிலாகட்டும்…
-
- 0 replies
- 440 views
-
-
நான் நல்லா ஓடுறேனா? அடுத்த உலகக் கோப்பைல ஆடுவேனா? நிருபரை கலாய்த்த தோனி! உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தவுடன் நிருபர்களை சந்தித்தார் தோனி. முதல் கேள்வியே நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியாக தான் வந்தது. சட்டென்று நிருபரை அழைத்த தோனி "வாங்க வாங்க வாங்க.. இங்க வந்து உட்காருங்க.." தன் அருகில் இருக்கிற நாற்காலியை இழுத்து அந்த நிருபரை அமர சொன்னார். அவரது தோளில் கை போட்டு நான் இந்திய ஊடகத்திலிருந்து ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார் என்று நினைத்தேன். ஏனென்றால் அவர் சகோதரனோ, உறவினரோ இந்தியாவுக்காக விளையாட ரெடியாக இருப்பாங்க அதனால் தான் இந்த கேல்வியை கெட்டிருப்பார் என நினைத்தேன் என் ஆரம்பித்தார் கேப்டன் கூல். பின்பு கேள்வி கேட்க …
-
- 0 replies
- 523 views
-
-
கெய்லை சமாளிக்க தயாராகும் ஜெயவர்த்தனே March 31, 2016 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே இங்கிலாந்தின் கிளப் அணியான சோமர்செட்டில் விளையாட முடிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயவர்த்தனே பிற நாடுகளில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ், நாட்வெஸ்ட் தொடரில் விளையாடிய ஜெயவர்த்தனே தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ரோஜர்ஸ் (அவுஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார் ஜெயவர்த்…
-
- 0 replies
- 562 views
-
-
'இரகசிய அறிக்கை கசிந்தது எவ்வாறு?' பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலப் பெறுபேறுகள் தொடர்பாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட இரகசியமானதும் தனிப்பட்டதுமான அறிக்கை, ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என, வக்கார் யுனிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த அறிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது எனவும் இது குறித்து பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப், கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை விட அதிகமாக அரசியல…
-
- 0 replies
- 560 views
-
-
அப்போ புறக்கணிச்சாங்க.. இப்போ ஃபீல் பண்றாங்க! ரஹானே, ஷான் மார்ஷ், அஷ்வின், மோரிஸ், பூம்ரா என எண்ணற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு பெரும் பங்குண்டு. ஒவ்வொரு தொடரிலும் இந்திய வீரர்கள் மட்டுமின்றி மோரிஸ், போலிங்கர் போன்று அதிகம் அறியப்படாத வெளிநாட்டு வீரர்களின் வாழ்க்கையும் ஐ.பி.எல் லிற்குப் பிறகு மாறியுள்ளது. ஆனால் வெளிச்சத்திலிருந்த எத்தனையோ வீரர்கள், ஐ.பி.எல் அணிகளால் புறக்கணிக்கப்பட்ட சோகமும் நிகழ்ந்துள்ளது. தொடக்கத்தில் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்கள், பின்னர் போன ஏலத்தில் இலங்கை வீரர்கள் என இரு நாடுகளே ஏறக்குறையப் புறக்கணிக்கப்பட்டன. தமீம் இக்பால், பிரெண்டன் டெய்லர், கெவின் ஓ பிரையன…
-
- 0 replies
- 452 views
-
-
ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பு உலகக் கிண்ண இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வரலாற்று வெற்றிகொண்டு தாயகம் திரும்பிய ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆப்கான் ரசிகர்கள் வீதியிலிறங்கி நாட்டுக் கொடிகளை ஏந்தியவாறு நடனமாடி தமது வரவேற்பை வீரர்களுக்கு அளித்தனர். http://www.virakesari.lk/article/4720
-
- 0 replies
- 610 views
-
-
அனுஷ்கா ஷர்மாவை திட்டுபவர்கள் அசிங்கமானவர்கள்: விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடி இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட் கோலியை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் சிலர் அவரது காதலியான அனுஷ்கா ஷர்மாவை திட்டி தீர்த்தனர். அதற்கு கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அனுஷ்கா ஷர்மா தான் என் பாசிட்டிவ். அவரை திட்டுபவர்களை கண்டு நான் வெட்கப்படுகிறேன். ஏன் இது போன்ற அசிங்கமான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள் என ட்விட்டியுள்ளார். சமீபத்தில் கோலிக்கும் அனுஷ்காவுக்கு காதல் முறிந்தது என்ற செய்தி பரவி வந்தது. Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity சுல்தான் பட…
-
- 3 replies
- 506 views
-
-
ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி நம்பர் 1 இடம்பிடித்தார் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் அபாரமான முறையில் ஆடி தொடர்ந்து வெற்றி பெற்றுத் தரும் விராட் கோலி ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியும் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ளது. விராட் கோலி நடப்பு ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடரில் 4 போட்டிகளில் 184 ரன்களை 92 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார் என்பதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் 132க்கு சற்று கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் இவர…
-
- 0 replies
- 534 views
-
-
தோனி ஏன் சிறந்த கேப்டன் ? ஜிலீர் திரில்லுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது சூப்பர் 10 சுற்று. இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மல்லுகட்டவுள்ளன. சூப்பர் 10 சுற்றில் பல போட்டிகளில் பிபி எகிறவைத்தன. அரையிறுதி போட்டிகள் வரும் புதன் கிழமை முதல் தொடங்கவுள்ளது. சூப்பர் 10 இல் என்ன நடந்தது என ஒரு ஷார்ட் அலசல் பார்வை இங்கே! சோடை போன பாகிஸ்தான் - இலங்கை : - டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் இவ்விரண்டும் தான். இரண்டு அணிகளும் சுழற்பந்தை சிறப்பாக கையாளகூடியவர்கள். ஆனால் பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு இம்முறை தகுதி பெறவில்லை. வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்திய பாக…
-
- 0 replies
- 612 views
-
-
ஆஸி சிங்கம் வாட்சனை ஏன் மிஸ் செய்கிறோம்? இன்றைய சூழலில் ஷேன் வாட்சன் – சுமார் 14 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கம் வகித்த இப்பெயர் இன்று முன்னாள் வீரர்கள் வரிசையில் இணைந்துள்ளது. பேட்டிங், ஸ்பீட் பவுலிங் என இரண்டிலும் சரிசமமாக அசத்தும் ஆல்ரவுன்டர்கள் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட கருதப்படுகின்றனர். கபில் தேவ், இயான் போதம், காலிஸ் வரிசையில் தன்னையும் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக நிலைநிருத்திக் கொண்ட வாட்சனின் கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே தொடங்கியது. ஜாம்பவான்கள் நிறைந்த ஆஸி அணியில் இடம்பிடித்து, அதை நிலைனிறுத்தி, பின்னர் தானும் ஒரு ஜாம்பவனாய் ஓய்வு பெற்ற வாட்சனின் கிரிக்கெட் பயணம் அபாரமானது. எல்லா கிரிக்கெட் வீரர்களும் ஓய்…
-
- 0 replies
- 683 views
-
-
'கைகள் இல்லாத கிரிக்கெட் வீரன்': அமீர் ஹுசைனின் கதை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால் கைகளே இல்லாமல், ஒரு கிரிக்கெட்அணியின் தலைவராக பரிமளிப்பவர் தான் அமீர் ஹுசைன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிர்க்கெட் அணிக்குத் தான் அவர் தலைவர். எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் அமீர் ஹுசைன் இழந்தாலும் உறுதியை இழக்கவில்லை. கைகள் இல்லாமல் அண்டை-அயலாரின் பரிகாசங்களுக்கு ஆளான அ…
-
- 0 replies
- 531 views
-
-
ஓய்வுக்கு தயாராகும் ஹேரத் March 26, 2016 டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்த உடன் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால் தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் இரு தூண்களாக விளங்கிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வையே இன்னும் சரிகட்டவில்லை. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான ரங்கண ஹேரத் (38 வயது) ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு சில விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எனது முழுகவனமும் டி20 உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே. அதேசமயம் இந்த தொடர் முடிந…
-
- 0 replies
- 1.2k views
-
-
கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம் நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று தனது 68 ஆவது வயதிதில் மரணம் அடைந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 3 முறை பெற்றவர் ஜோஹன் கிரப். இவரது தலைமையிலான நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தது. http://www.virakesari.lk/article/4540
-
- 1 reply
- 639 views
-
-
மாடல் அழகியை துரத்தும் ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா. பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரை பாண்ட்யா அற்புதமாக வீசினார். இதனால் இந்தியா ஒரு ஓட்டத்தால் ‘திரில்’ வெற்றி பெற்றது. நாங்கள் வகுத்த திட்டத்தை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி இறுதி பந்தை வீசினார் டோனியும் பாண்ட்யாவை பாராட்டினார். அந்த நெருக்கடியான நேரத்திலும் சிரித்த முகத்தோடு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் சிறப்பாக பந்துவீசியதை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் கிரிக்கெட் மூலம் பிரபலமாகத் தொடங்கிவிட்டதால், பாண்ட்யா கொ…
-
- 0 replies
- 711 views
-
-
ஓய்வை அறிவித்தார் ஷேன் வொற்சன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷோன் வொற்சன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இடம்பெறும் உலக இருபதுக்கு-20 தொடரின் முடிவிலேயே ஓய்வுபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கடந்தாண்டு இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் முடிவில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வொற்சன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர், அவர் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிலையிலேயே, உலக இருபதுக்கு-20 …
-
- 0 replies
- 409 views
-
-
பூரண அங்கத்துவ நாடுகளுடன் கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் தரவேண்டும் என்கிறார் ஆப்கான் அணித்தலைவர் 2016-03-24 09:45:58 இணை உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கூடுதல் வாய்ப்பு வழங்குமாறு கிரிக்கெட் விற்பனர்களான சச்சின் டெண்டுல்கர், பிறையன் லாரா, மைக்கல் வோன் ஆகியோர் குரல் கொடுத்திருப்பது தங்களை நெகிழ வைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்து வகிக்கும் எந்தவொரு நாட்டையும் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆப்…
-
- 0 replies
- 359 views
-
-
தஸ்கீன் அஹ்மதுக்கு தொடர்ந்தும் தடை! சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு (டெல்லியிலிருந்து நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் சுழல்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹமத்துக்கு பந்துவீச விதிக்கப்பட்டுள்ள தடை அவ்வாறே அமுலில் இருக்கும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று அறிவித்தது. தஸ்கின் அஹ்மத் மீதான பந்துவீச்சுப் பாணி தொடர்பாக தொலைபேசி மூலம் விசாரணை ஆணையாளர் நடத்திய விசாரணையின் மூலம் தஸ்கினின் பந்துவீச்சுப்பாணி (பெரும்பாலானவை) தவறானது என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்தது.…
-
- 0 replies
- 350 views
-
-
தோனியின் தலை வெட்டப்பட்டது - ரசிகர்களின் பதிலடி! (காணொளி) சமீபத்தில் நடந்த ஆசிய கிண்ண இறுதி போட்டிக்கு முன்பாக இந்திய அணி தலைவர் தோனியின் வெட்டப்பட்ட தலையுடன் பங்காளதேஷ் பந்துவீச்சாளர் தஸ்கின் ஓடிவருவது போன்று ஒரு போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டார்கள் பங்காளதேஷ் ரசிகர்கள். இந்த மார்பிங் போட்டோ இந்திய ரசிகர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடந்துவரும் டி20 உலக கிண்ண தொடரில் இன்று பங்காளதேஷூம் இந்தியாவும் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு முன்பாக பங்களதேஷ் ரசிகர்களை கலாய்த்து இந்திய ரசிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவனாது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் போட்டோஷாப் வைத்திருக்கும் இந்திய …
-
- 0 replies
- 519 views
-
-
அதிக விக்கெட்டுக்களை பெற்று அப்ரிடி சாதனை! கடந்த போட்டியில் பாகிஸ்தான் தலைவனும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அவரது விக்கெட் எண்ணிக்கை 39-ஆக (33 போட்டி) உயர்ந்தது. இதையடுத்து 20 ஓவர் உலக கிணண கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் மலிங்கவிடம் இருந்து (38 விக்கெட், 31 போட்டி) தட்டிப்பறித்தார். 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 போட்டி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=78297
-
- 0 replies
- 428 views
-