விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
தோனியை ‘மிஸ்’ பண்ணுகிறேன் * கோஹ்லி உருக்கம் தாகா: ‘‘வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’ தோனி இல்லாதது புதுமையான உணர்வை தந்தது. இவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. இப்போட்டியில் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகளை முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் பாராட்டினர். கோஹ்லியை பொறுத்தவரை தோனி மீதான தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாதவராக உள்ளார். இது குறித்து கோஹ்லி கூறியது: வங்கதேசத்துக்கு எத…
-
- 0 replies
- 295 views
-
-
எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எனது சாதனைகள் குறித்து நான் திருப்தியடையவில்லை என அஞ்சலோ மத்தியுஸ் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உங்களது சாதனைகள் குறித்து நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு மத்தியுஸ் நேர்மையாக பதில் அளிப்பது என்றால் நான் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். நான் என்னால் முடிந்ததை விட குறைவாகவே சாதித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். 2013 முதல் 2016 வரை நான் அதிகளவு போட்டிகளில் விளையாடினேன் அது எனது உடலிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என குறிப்பிட்டுள்ள மத்தியுஸ் நான் காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டேன் 2016 முதல் 2018 வரை அணியில் முழுமை…
-
- 0 replies
- 337 views
-
-
ஏலத்தில் என்ன நடந்தது?- ஐ.பி.எல் 'லக்கிமேன்' முருகன் அஸ்வின் பேட்டி வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முருகன் அஸ்வின் புனே அணிக்காக ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம்தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐ.பி.எல். என்ட்ரி குறித்து அவர் அளித்த பேட்டி இங்கே... ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடந்தது? பிப்ரவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கே டி.வி. முன்னாள் உட்கார்ந்துட்டேன். லஞ்சுக்கு மட்டும்தான் எழுந்துருச்சேன். மாலை 4 மணிக்குதான் எனது பெயர் ஸ்கிரீன்ல தெரிஞ்சது. ரொம்ப நெர்வசா இருந்தது. எனக்கு ஐ.பி.எல்.ல விளையாடனும்னுதான் ஆசை…
-
- 0 replies
- 647 views
-
-
'முடி கொட்டியதால் சரியாக விளையாட முடியவில்லை!' அச்சச்சோ மோஹித் சர்மா ஆடுகளம் சரியாக அமையவில்லை, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது, வெளிச்சம் குறைவு என்று பல காரணங்களை கிரிக்கெட் வீரர்கள் சரியாக விளையாடாததற்கு கூறியுள்ளார்கள். இந்த வரிசையில் இப்போது புது விதமான காரணத்துடன் மோஹித் சர்மா இணைந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோஹித். எட்டு போட்டிகளில் பதிமூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சச்சினின் கடைசி ரஞ்சி போட்டியில் அவரின் விக்கெட்டை வீழ்த்தியவர் மோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த வருடம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் அணியில் இருந்து கூட ஒரு போட்டியில் …
-
- 0 replies
- 486 views
-
-
21 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக்கி இந்திய மகளிர் அணி உலக சாதனை! #AsiaT20 பேங்காக்கில் ஆசிய மகளிர் டி20 கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, ஒரு போட்டியைக் கூடத் தோற்காமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹர்மன் பீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொண்டுள்ளது. மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, மன்ஸி ஜோஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆசிய கோப்பையைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், தாய்லாந்து உள்ளிட்ட ஆறு அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மொத வேண்டும். இம்முறையில் ஒவ்வொரு அணியும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடு…
-
- 0 replies
- 404 views
-
-
சனத் ஜயசூரிய இராஜினாமா? இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் தலைவர் பதவியில் இருந்து, சனத் ஜயசூரிய, இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் கொடுத்துள்ளதாகவும், தென்னாபிரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்புவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கேட்டபோது, இவ்வாறான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/191279/சனத-ஜயச-ர-ய-இர-ஜ-ன-ம-#sthash.tvokm652.dpuf
-
- 0 replies
- 789 views
-
-
‘கிரிக்கெட் நிர்வாகத்தில் இணையத் தயாரில்லை’ தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென, டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். கிரிக்கெட் நிர்வாகத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணைந்துக்கொள்ள வேண்டுமென, இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக இந்நாட்டில் என்ன நடந்ததென, அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை. எவ்வாறான…
-
- 0 replies
- 355 views
-
-
சங்கா அபார சதம் இங்கிலாந்துக் கழகங்களுக்கு இடையிலான தொடரில் சர்ரேயைப் பிரதிநிதித்துவம் செய்துவரும் சங்கா, நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டமொன்றில் சதம் கடந்தார். சர்ரேயை எதிர்த்து ஹாம்சயர் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஹாம்சயர் முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 பந்துப்பரிமாற்றங்களில் அந்த அணி 8 இலக்குகள் இழப்புக்கு 271 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக பெய்லி ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் ராம்போல் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். பதிலுக்குக் களமிறங்கிய சர்ரே 38 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை இழந்து 238 ஓட்டங்களைக் குவித்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணத்தால் ட்க்வேர்த்லூயிஸ் விதிப்படி 66…
-
- 0 replies
- 476 views
-
-
அவுஸ்திரேலியாவின் City West Falcons அணியை இறுதிக் போட்டிக்கு எடுத்துச்சென்றுள்ள தர்ஜினி இலங்கையின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி, உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும். ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ள…
-
- 0 replies
- 348 views
-
-
124 பந்துகளில் 138 ரன்கள்: அஸ்வினைப் பதம் பார்த்த ஷ்ரேயஸ் ஐயர் பந்தை ஷ்ரேயஸ் ஐயர் லாங் ஆன் திசையில் விளாசும் காட்சி. - படம். | விவேக் பெந்த்ரே. மும்பையில் நடைபெற்ற குரூப் சி, ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்சில் 450 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றதால் 3 புள்ளிகளைப் பெற்றாலும், இந்திய அணியின் முக்கிய வீச்சாளரான அஸ்வினை, மும்பை வளரும் நட்சத்திரம் ஷ்ரேயஸ் ஐயர் பதம் பார்த்த விதம் கிரிக்கெட் பண்டிதர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசிய ஷ்ரேயஸ் ஐயர், 2-வது இன்னிங்சில் 124 பந்…
-
- 0 replies
- 793 views
-
-
ஆல்வஸ் விளையாடும்போது ரசிகர்கள் பாராட்டாமல், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவேன் என்று டேனி ஆல்வஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரேசில் தேசிய அணியைச் சேர்ந்த ஆல்வஸ், பார்சிலோனா கிளப் அணிக்காவும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின்போது ரசிகர் ஒருவர் அவர் மீது வாழைப்பழம் ஒன்றை வீசினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விளையாட்டின்போது தனது செயல்பாட்டை ரசிகர்கள் பாராட்டத் தவறினால் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவேன் என்று ஆல்வெஸ் எச்சரித்துள்ளார். "கால்பந்து விளையாட்டுக்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றி வரும் வீரர்களை எப்படி ரசிகர்கள் மறக்கின்றனர்? அது …
-
- 0 replies
- 471 views
-
-
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி வெலிங்டன் நகரில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.#NZvPAK வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி இன்று வெலிங்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவருக்கு 7 விக்கெட் இழ…
-
- 0 replies
- 176 views
-
-
முத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து அ-அ+ துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. துபாய்: துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. …
-
- 0 replies
- 224 views
-
-
கபில்ராஜ் சகலதுறைகளிலும் அசத்த சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு இலகு வெற்றி சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறுகின்ற 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் டிவிஷன் – II பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியொன்றில் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி தெல்லிப்பளை மஹாஜன கல்லூரிய்யை 287 ஓட்டங்களால் தோற்கடித்து அதிரடி வெற்றியொன்றை பதிவு செய்திருக்கின்றது. நேற்று (6) மஹாஜன கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி கனகரத்தினம் கபில்ராஜ் அரைச்சதம…
-
- 0 replies
- 313 views
-
-
தொடரை வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு எதிராகக் களமிறங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தாக, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறியது போல் “ஒருநாள் கிரிக்கெட் பாடம் எடுத்தது”. இந்த நிலையில் நாளை 4வது ஒருநாள் போட்டியில் வென்று ஒருநாள் தொடரை இங்கிலாந்தில் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அணி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடியதோ அதேபோல் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நாம் மொயீன் அ…
-
- 0 replies
- 465 views
-
-
“நான் நன்றாக பேட் செய்தும் என்னை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள்”: ஸ்ரேயாஸ் அய்யர் ஆதங்கம் ஸ்ரேயாஸ் அய்யர் : கோப்புப்படம் - படம்: ஏஃஎப்பி நான் சிறப்பாக பேட்செய்தபோதிலும்கூட என்னை ஏன் இந்திய சீனியர் அணியில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள், இது என்னுடைய ஆட்டத்திறனைப் பாதிக்கிறது என்று இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றிருந்தார். கம்பீர் தலைமையில் டெல்லி அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், கேப்டன்ஷிப் ஸ்ரேயாஸ் அய்யருக்கு மாற்றப்பட்டது. அதன்பின் டெல்லி அணி, அனைத்து அணிகளுக்கும் சி…
-
- 0 replies
- 299 views
-
-
10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி ஜார்கண்ட் வீரர் ஷபாஸ் நதீம் உலக சாதனை அ-அ+ விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் வீரர் ஷாபாஸ் நதீம் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். #VijayHazareTrophy #ShahbazNadeem சென்னை : விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை முருகப்பா மைதானத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான்- ஜார்கண்ட் அணிகள் மோதின. …
-
- 0 replies
- 441 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் தோள்மூட்டில் காயமடைந்த மேற்கிந்திய அணிக் கப்டன் சர்வான் எஞ்சிய தொடர் முழுவதும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இங்கு இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட், இரண்டு 20/20 ஓவர்கள் கிரிக்கெட் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் `டிரா'வில் முடிந்த நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கப்டன் சர்வான் காயமடைந்தார். இங்கிலாந்து வீரர் கொலிங்வூட் பவுண்டரிக்கு அடித்த பந்தை பாய்ந்து தடுத்தபோது அவருக்கு வலது தோள் மூட்டில் காயமேற்பட்டது. இதன் பின்னர், நடந்த மருத்துவ பரிசோதனையில் அவரது தோள்மூட்டில் தசைநார் கிழிந…
-
- 0 replies
- 765 views
-
-
இது ஆரம்பம் தான் *மனம் திறக்கிறார் மோகித் சர்மா புதுடில்லி: ‘‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளேன். மற்றபடி சமீபத்திய வெற்றிகள் சென்னை அணி கேப்டன் தோனி கொடுத்த வாய்ப்புகளால் கிடைத்தவை,’’ என மோகித் சர்மா தெரிவித்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா, 26. பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுபவர். கடந்த 2013 ஆக., 1ல் அறிமுகமான இவர், இதுவரை இந்திய அணிக்காக 20 ஒருநாள், 4 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். வரும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள இவர் தனது திறமை குறித்து கூறியது: சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகி 2 ஆண்டுகள் ஆகவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் எனது பவுலிங் மற்றும் உடற்தகு…
-
- 0 replies
- 339 views
-
-
என்னுடனான வாக்குவாதத்திற்குப் பிறகு லாரா தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்தார்: கர்ட்லி ஆம்புரோஸ் லாராவுக்கும் தனக்குமான வேறுபாடுகளையும் நட்பையும் விளக்கும் ஆம்புரோஸ். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் அதிகம் பேசாதவர், ஆனால் அவர் ‘டைம் டு டாக்’ என்ற சுயசரிதை நூலுக்குப் பிறகே நிறைய பேசத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கூரியர் மெயில் ஊடகத்துக்கு அவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கும் பிரையன் லாராவுக்கும் இடையேயான முரண்பட்ட உறவுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியில் பிரையன் லாரா கேப்டன் ஆனது உங்களுக்கு பிடித்தமானதாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆம்புரோஸ், “லாரா எவ்வளவு பெரிய பேட்ஸ்மென் என்பது எங…
-
- 0 replies
- 216 views
-
-
ஐரோப்பிய உதைபந்தாட்டக் கழகம் ஐரோப்பாவில் உள்ள 55 நாடுகளையும் வரிசைப்படுத்தி நான்கு லீக் குகளை உருவாக்கி ஒவ்வொரு லீக்கிலும் 4குழுக்களை உருவாக்கினர்லீக் Dயில் மட்டும் இரு குழுக்கள். லீக் ABCD என்பன அவை A யில் திறமை வாய்ந்த அணிகள் B அதற்கு அடுத்த திறமை வாய்ந்த அணிகள் பின்னர் C என Dயில் மிகவும் பலம் குறைந்த நாடுகளின் அணிகள் உள்வாங்கப்பட்டன இதை UEFA Nations League என அழைக்கின்றார்கள் இந்த லீக் விளையாட்டுக்களில் பலமாக விளையாடும் அணிகள் ஒரு லீக் ( B;C;D ) மேலேயும் பலம் குறைந்த அணிகள் ஒரு லீக்( ABC)கீழேயும் இறக்கி ஏற்றப்படுவார்கள். பின்னர் ஐரோப்பிய அணிகள் இந்த விளையாட்டுக்களின் அடிப்படையில் 1இலிருந்து…
-
- 0 replies
- 248 views
-
-
மூன்று வீரர்கள் சதங்களைக் குவிக்க அவுஸ்திரேலியாவுக்கு 563 ஓட்டங்கள் [28 - January - 2008] [Font Size - A - A - A] * வெற்றி தோல்வியின்றி போட்டி முடிவுறும் நிலை அடிலெய்ட் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர்கள் மூவர் சதம் அடித்ததால் அவுஸ்திரேலிய அணி 563 ஓட்டங்களைக் குவித்தது. இதனால், இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கிச் செல்கிறது. அடிலெய்டில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நாலாம் நாளில் தனது முதல் இனிங்ஸில் அவுஸ்திரேலியா மேலும் சிறப்பாக ஆடியது. கப்டன் ரிக்கி பொண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் சிறப்பாக ஆடி ச…
-
- 0 replies
- 752 views
-
-
நட்சத்திர வீரர்கள் இல்லாதது வெறுப்பாக உள்ளது: மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஆதங்கம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பய ணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஹோபர்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அனுபவம் இல்லாத மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சரண்டர் ஆனது. அதேவேளையில் கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, டேரரன் சமி, ஆந்த்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேசிய அணிக் கான போட்டிகளில் பங்கேற்காமல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இ…
-
- 0 replies
- 453 views
-
-
முதல் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதற்தடவையாக முதற் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி நுழைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (25), சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே, பத்தாவது இடத்திலுள்ள சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் பிரதீயீடு செய்துள்ளது. எனினும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிம்பாப்வேக்கு எதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் பத்தாவது இடத்தில் நீடிக்க முடியும். இந்தத் தொடரில் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில்…
-
- 0 replies
- 519 views
-
-
இதயங்களை வென்ற மேரி கோம்! அரையிறுதியில் தோல்வியுற்றாலும், தன் அர்ப்பணிப்பாலும் முயற்சியாலும் இந்தியர்களின் ஒட்டுமொத்த இதயங்களை வென்றிருக்கிறார், மேரி கோம். ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள மேரி கோம் கடந்து வந்த பாதை வியக்கத்தக்கது. குத்துச்சண்டை 48 கிலோ பிரிவில் நிகரற்ற வீராங்கனையாகத் திகழ்ந்த மேரி கோம், ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்ட... த்தைக் கைப்பற்றி, இந்திய மகளிர் குத்துச்சண்டை விளையாட்டுக்கு கௌரவம் சேர்த்தவர். ஒலிம்பிக்கில் முதன் முதலாக மகளிர் குத்துச்சண்டை போட்டி சேர்க்கப்பட்டதுஎன்ற அறிவிப்பு வெளியானதில் தொடங்கி, அதற்காக தன்னை முழு அர்ப்பணிப்புடன் தயார் செய்துகொண்டவர். லண்டன் ஒலிம்பிக…
-
- 0 replies
- 687 views
-